Tuesday, July 26, 2016

ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.

நண்பரிடம் இருந்து வந்த பதிவு. நமது நண்பர்களுக்கு பயன்படும் என்று பகிர்கிறேன்.

கார்த்திகேயன்.

=================
ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.
*******   ******   *****  *****
நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.

உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ
இது அவசியம் பயன் படும்.

சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.

ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.
அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன்.
ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது.
ஆனால் பையன் உணவு சாப்பிடவில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தான்.தண்ணீர் குடித்தாலும் வாந்தி எடுத்தான்.
சந்தேகப்பட்டு கண்ணைப் பார்த்ததில் மஞ்சள் நிறம் தெரிந்தது.

எனவே இரத்தம்.,சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தேன்.

அவர் பரிசோதனை செய்துப் பார்த்து விட்டு,மஞ்சள் காமாலை அதிகமாக உள்ளது.ஆஸ்பிட்டலில் தங்கவேண்டும்.தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.ஆறுமாதமாவது மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.என பயமுறுத்திவிட்டார்.

மருத்துவம் குறித்த புரிதல் உள்ளவனாதலால்,சரி நாளை வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன்.
கிராமப்புரங்களில் மூலிகை மருந்துக் கொடுத்து அதை எளிதில் குணப்படுத்திவிடுவார்கள்.

மேலும்,மஞ்சள் கரிசலாங்கண்ணி  ,கீழாநெல்லி  இரண்டும் சிறந்த மருந்து என்பதும் தெரியும்.இரண்டு மூலிகையும் எங்கள் கிராமப்புறங்களில் எளிதில் கிடைப்பதுதான்.
இரண்டுநாளாக தண்ணீர் கூட வயிற்றில் நிற்காததால் பையன் மிகவும் சோர்ந்துவிட்டான்.

அப்போது ஒரு நண்பர்,விழுப்புரம் அருகே கெங்கராயம் பாளையம் என்ற ஊரில்,இதற்கு ஒரேவேளை மருந்தில் குணமாக்குகிறார்கள் எனச் சொன்னார்.
பின்னும் இரண்டு நபர்கள் அதை உறுதிப் படுத்தினர்.

அன்றே பையனை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்றேன்.
மனசுக்கு மிகவும் கவலையாக இருந்தது.எதுவும் சாப்பிட முடியாதநிலையில் பையன்.

அங்குச் சென்றவுடன்,அந்த மருத்தவர் வீட்டை அடைந்தால் நூறு பேருக்கு மேல் அமர்ந்துள்ளார்கள்.தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.ஒரு சிலர் பெங்களூரிலிருந்தும் வந்திருந்தனர்.அந்தளவு அந்த மருத்துவரின் பேர் பரவியுள்ளது.
மஞ்சள் காமாலை க்கு மட்டும் மருத்துவம் பார்க்கிறார்.

நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.எல்லோர் முகத்திலும் நம்பிக்கை.

எல்லோரையும் வரிசையாக அமரவைத்துவிட்டு,சாதம் பொங்கி அதில் வெல்லம் கலந்து.,ஒரு சிட்டிகை  மருந்தும் கலந்து கையில் ஒரு உருண்டை தந்து விழுங்கச் சொல்கிறார்கள்.அது இனிப்பாக இருப்பதால் எல்லோரும்  விருப்பமுடன் உண்டு விடுகின்றனர்.

நாளையிலிந்து நோய் இறங்க ஆரம்பித்துவிடும்.ஐந்து நாளில் நார்மலாகிவிடுவார்.அதுவரை கீரைவகைகளை மட்டும் தினம் உணவில் சேர்க்கவும்,எனவும்
இதிலேயே சரியாகிவிடும் மீண்டும் வரவேண்டாம் எனச் சொல்லி அனுப்பி
விடுகின்றனர்.பெரியவர்களுக்கு மட்டும் சாராயம் அருந்தக்கூடாது என்றக் கண்டிப்பு.வேறு பத்தியமில்லை
வழக்கமான உணவு உண்ணலாம்.

என் பையனுக்கு மருந்தைக் கொடுத்துவிட்டு,அழைத்து வந்தேன் அடுத்த அரைமணிநேரத்தில் தண்ணீர்
வேண்டும் எனக்கேட்டான்.பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன் கால் பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டான்.வாந்தி எடுக்கவில்லை.வீடு வருவதற்குள் பசிக்கிறது என்றான்.ஓட்டலில் இரண்டு இட்லி வாங்கித் தந்தேன்.சாப்பிட்டுவிட்டான்.நான்கு நாளாக சரியாக சாப்பிடாதப் பிள்ளை சாப்பிட்டதும் எனக்கு சந்தோசம்.
பையன் முகத்தில் ஒருத் தெளிவு.
மருந்  துக் கொடுத்த மூன்று மணிநேரத்திற்குள் இவ்வளவு மாற்றம்.
அன்று இரவு,மறுநாள் என பையன் உணவினை சாப்பிட ஆரம்பித்தான்.மூன்றாவது நாள் சிறுநீரின் நிறம் மாறி,ஒரு வாரத்தில் பூரணகுணமாகிவிட்டடான்.

எனக்கு ஆச்சர்யம் இன்றுவரைத்தீரவில்லை.சித்தமருந்திற்கு இவ்வளவு சக்தியா.எவ்வளவோ அபூர்வமான மருத்துவத்தை மறைத்துவைத்தே பழகிவிட்டனர்.

மருந்திற்கு வாங்கிக் கொண்டது 30ரூபாய் மட்டுமே.

பல்லாயிரம் கணக்கானோர் இன்றும் ஓரே   வே  ளை மருந்தில் குணமாகிச் செல்கின்றனர்.

விழுப்புரம் நகரிலிருந்து பாண்டிச் செல்லும் வழியில் 16கிமீ தூரம்
கெங்கராயம்பாளையம் உள்ளது. Forwarded msg
மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?

நாம் மது (இனி ஆல்கஹால் அல்லது சாராயம் என்று சொல்வோம்) அருந்தும்பொழுது சிறிது அளவினை நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். பெரும்பாலான அளவை சிறுகுடல் உறிஞ்சிக்கொள்ளும். அதனால்தான் உணவு உண்டபின்னர் மது அருந்தினால் போதை ஏற சற்று நேரமாகின்றது.

சாராயத்தின் செறிவினைப் பொறுத்து அது எத்தனை வேகத்தில் நம் உடல் உறிஞ்சிக்கொள்கின்றது என்பது மாறுபடும். உதாரணமாக பீரை விட விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்றவைகள் அதிவேகமாக உறிஞ்சிக்கொள்ளப்படும்.

உறிஞ்சப்பட்ட சாராயம் உடனடியாக நம் ரத்தத்தில் கலந்து உடலெங்கும் ஓடத் துவங்கும். அதே சமயத்தில் நம் உடலும் அதனை வெளியேற்ற சற்று பிரயத்தனப்பட்டு வேலை செய்யத் துவங்கும். சிறுநீரகம் தன் பங்கிற்கு ஓரளவைச் சிறுநீரில் கலந்து வெளியேற்றும். நுரையீரல் தன் பங்கிற்குச் சில அளவை மூச்சுக்காற்றில் வெளியேற்றும். (அதனால்தான் Breath Analyserல் கண்டு பிடிக்கின்றார்கள்)

கல்லீரல் தன் பங்கிற்கு பெரும்பாலான அளவை ஆல்கஹாலை உடைத்து அசிட்டிக் அமிலமாக மாற்றும். இத்தனை பேர் சேர்ந்து அந்த ஆல்கஹாலை வெளியேற்றப் போராடிக்கொண்டிருக்கையில் நாம் அதனை விட வேகமாக அதிக அளவில் மது அருந்தினால்... என்னாகும்?

அதனால்தான் அவைகள் விரைவில் தம் இயல்பில் குன்றி வலுவிழந்து செயலிழந்து போகின்றன. இதுவே ஒரு வகையில் மெதுவான தற்கொலை முயற்சி மாதிரிதான்.

சரி, இனி ஆல்கஹாலின் செயல்பாடு மூளையினை எப்படிப் பாதிக்கின்றது. இரத்தத்தில் கலந்து உடலில் பயணிக்கும் ஆல்கஹால் நம் மூளைக்கும் ஒரு பயணம் போகும்.

அதன் அளவை BAC என்பார்கள். அதாவது Blood Alcohol Concentration. இரத்தத்தில் ஆல்கஹாலின் செறிவு.

BAC 0.03ல் இருந்து 0.12 சதவீதம் இருக்கையில், தான் ஒரு பெரிய பலசாலி, தன்னால் எதுவும் முடியும் என்று ஒரு எண்ணம் வரும். உலகில் எது வந்தாலும் சமாளிக்கும் தைரியம் தன்னிடம் உள்ளது என்று தோன்றும். இந்நிலையில் சரியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது. ஏனெனில், மனதில் முதலில் எது படுகின்றதோ அதுவே சரியானதாகத் தெரியும். அந்தச் சூழ்நிலையில் யாராவது எதாவது சொன்னாலும், அதற்கேற்றவாறே மனம் செயல்படத் தோன்றும்.

BAC 0.9ல் இருந்து 0.25 சதவீதம் இருக்கையில், தூக்கம் தூக்கமாக வரும். நினைவுகள் மழுங்கும். சற்று முன் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்காது. வேகமாக இயங்க முடியாது. கையில் இருக்கும் மதுவைத் தடுமாறிக் கொட்டிவிட்டு அதனை வெறித்துப் பார்ப்பார்கள். உடல் ஒத்திசையாது. நிலை தடுமாறும். நடக்கையில் உடல் தள்ளாடும். கண் பார்வை மங்கும். கேட்கும் திறன், சுவை உணர்தல், தொடுதல் போன்ற உணர்வுகளில் தடுமாற்றம் அல்லது இல்லாமல் போய்விடும்.

BAC 0.18ல் இருந்து 0.30 சதவீதம் இருக்கையில், தான் என்ன செய்கின்றோம் என்று அவருக்கே தெரியாது. குழப்பமாக இருக்கும். ஒன்று அதீத பாசக்காரராக மாறி விடுவார் அல்லது அதீத கோபக்காரராக மாறிவிடுவார். அதிகம் உணர்ச்சிவசப்படுவார். பார்வை தெளிவாக இருக்காது. பேச்சுக் குளறும். உடலின் Reflex செயல்படாது. தொடு உணர்வு நன்கு மழுங்கிவிடும். எதையேனும் எடுக்க வேண்டும் என்றால் கை அந்தப் பொருளின் பக்கத்தில் போய்த் துழாவிக்கொண்டிருக்கும். காரணம் பார்வை, மூளை, கை இவற்றிற்கிடையேயான ஒத்திசைவு இல்லாமல் போயிருக்கும். வலி தெரியாது.

BAC 0.25ல் இருந்து 0.4 சதவீதம் இருக்கையில், மட்டையாகி விடுவார். எந்தவொரு வெளித்தூண்டல்களும் அவரைப் பாதிக்காது. எழுந்து நிற்க முடியாது, நடக்க முடியாது. வாந்தி எடுக்கலாம். நினைவு தப்பிவிடலாம்.

BAC 0.35ல் இருந்து 0.50 சதவீதம் இருக்கையில், நினைவு முழுவதும் தப்பிவிடும். Reflex சுத்தமாகப் போய்விடும். கருவிழிகூட வெளிச்சத்தில் சுருங்காது விரியாது. உடல் சில்லிட்டுப் போகும். மூச்சு விடுதல் குறைந்து போகும். இதயத் துடிப்பு குறைந்து விடும். இறந்து போக அதிக வாய்ப்புள்ளது

whatsapp மற்றும் Facebook-ல் share, செய்யுங்கள்.

மதுவை ஒழிப்போம். Please don't try to suicide
சிறுதானியத்தில் பெரும் பலன்கள்!

🔴ஆறுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம்.

🔴ஒவ்வொரு சிறு தானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன. 

🔴எந்தெந்த சிறு தானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்து கொண்டால் அவற்றைப் பயன் படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

🔴🎀கம்பு - ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.

🔵🎀தினை - இதயத்தைப் பலப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.

⚫🎀சாமை - ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

🔴🎀சோளம் - உணவுக் குழாய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும். ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யும். செரிமான சக்தி மேம்படும். வாயுத்தொல்லை நீங்கும். உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது.

🔵🎀கேழ்வரகு - எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.

⚫🎀வரகு -
 உடல் எடையைக் குறைக்கும். மாத விடாய்க் கோளாறு களைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்லது.

🔴🎀குதிரைவாலி - சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச் சிக்கலைத் தடுக்கும்.
🙏🌻
ஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா !!!.


ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.

பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

 அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.

இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.

ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. 

மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. 

திரு மணங்களில் ‘ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. 

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேக மாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. 

இது ஒரு நல்ல பயிற்சி.

கம்ப்யூட்டரில் மணிகணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற் சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குண மடைய வழி செய்கிறது.

தோட்டத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. 

மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.

இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். 

தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. 

சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். 

கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். 

வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.

வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. 

சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. 

இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.

ஊஞ்சல்கள் பலவகை:

சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய பலகைகளை கொண்ட ஊஞ்சல். இது பழையகால ஊஞ்சல் என்றாலும் இதில் ஆடும்போது திரில் அதிகம்.

நவீன வகை ஊஞ்சல்கள் “சோபா” வகையை சேர்ந்தது. அமர்ந்து ஆட வசதியாக இருக்கும்.

தோட்டம் திறந்த வெளிகளுக்கு மெட்டல் ஊஞ்சல்கள் ஏற்றது.

மூங்கில் ஊஞ்சல்கள் பால்கனி படுக்கை அறைகளுக்கு ஏற்றது. 

மூங்கில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் அதனால் வெயில் காலங்களில் குளிர்ச்சியை உடலுக்கு தர வல்லது. 

குறுகலான இடத்தில் ஊஞ்சல்கள் அமைக்கக் கூடாது. 

காற்றோட்டமான இடத்தில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் ஊஞ்சல்கள் அமைப்பதே நல்லது.

கூடுமானவரை ஜன்னல்கள் அருகே ஊஞ்சல் அமைப்பது நல்லது. 

ரம்மியமான சூழ்நிலையில் ஊஞ்சல் அமைத்தால் இளைப்பாற வசதியாக இருக்கும்.

"இயற்கையே மருந்து" !
ஆங்கில மருத்துவத்தின் உண்மை முகம் !
------------------------------------------

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 ( 1945, 1995 ல் திருத்தப்பட்டுள்ளது ) 

இந்த சட்டத்தில் ஷெட்யூல் 'ஜெ' என்ற பிரிவின் கீழ் 51 வகை வியாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வியாதிகளை ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும் !  என்றோ, குணப்படுத்தி காட்டுகிறேன் ! என்றோ, கூறுவது சட்டப்படி குற்றம் என்று எச்சரிக்கிறது. 

ஆங்கில மருத்துவத்தின் மருந்துகள் எதுவும் இந்த 51 வகை நோய்களையும் குணப்படுத்த முடியாது என்று விஞ்ஞான ஆராய்ச்சியின் வாயிலாக விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. 

எனவே ஆங்கில மருத்துவத் தொழில் நடத்தும் எவரும் இந்த 51 நோய்களை மருந்துகளால் கட்டுப்படுத்துகிறேன் என்றோ, குணப்படுத்துகிறேன் என்றோ, மேலும் இந்த நோய்களை வராமல் தடுத்து விடுவேன் என்றோ கூறுவது சட்டப்படி குற்றம்.

இதோ அந்த 51 வகை வியாதிகளின் பட்டியல்.

1. எய்ட்ஸ்

2. நெஞ்சு வல

3. அப்பெண்டிஸைட்டிஸ்

4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு.

5. தலை வழுக்கை

6. கண்பார்வை அற்ற நிலை

7. ஆஸ்த்துமா

8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்று நோய் வரை

9. கண்புரை

10. தலைமுடி வளர, நரையை அகற்ற

11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது

12. பிறவிக் கோளாறுகள்

13. காது கேளாமை

14. நீரிழிவு நோய்

15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்

16. வலிப்பு நோய், மன நோய்கள் அனைத்தும்.

17. மூளைக்காய்ச்சல்

18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்

19. மார்பக வளர்ச்சிக்கு

20. புரையோடிய புண்

21. மரபணு நோய்கள்

22. க்ளுகோமா எனும் கண்வலி நோய்

23. கழுத்து வீக்கம் ( தைராய்டு )

24. ஹெர்னியா 

25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம் ( Bp )

26. விரை வீக்கம்

27. பைத்தியம்

28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய

29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட

30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள், கிட்ட பார்வை, தூரப்பார்வை

31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்

32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.

33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் ( ஹிபடைட்டிஸ் ), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும்

34. இரத்தப் புற்று நோய்

35. வெண்குஷ்டம்

36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்

37. மூளை வளர்ச்சிக்குறைவு

38. மாரடைப்பு நோய்

39. குண்டான உடம்பு மெலிய

40. பக்கவாதம்

41. நடுக்குவாதம்

42. மூல நோய் மற்றும் பவுத்திரம்

43. வாலிப சக்தியை மிட்க

44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்

45. இளநரை

46. ரூமாட்டிக் இருதய நோய்

47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்

48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்

49. திக்கு வாய்

50. சிறுநீரகத்தில் கற்கள், பித்தப் பை கற்கள் , சிறுநீர் பை கற்கள்

51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்

                    
                 இந்த 51 நோய்களை ஆங்கில மருத்துவம் குணப்படுத்த முடியும் என்று கூறுவதே சட்டப்படி குற்றம் என்று உள்ள போது அதனின் பெயரிலேயே ஸ்பெசலிஸ்டுகள் மருந்துகள் கொடுப்பது காலக் கொடுமை.

இப்படி குணப்படுத்த முடியாது என்று தெரிந்தும், நாம் திரும்ப திரும்ப அவர்களிடமே குணம் வேண்டி செல்கிறோம் என்றால், நாம் எவ்வளவு பெரிய முட்டாளாய் இருப்போம். 

போதும் மக்களே திரும்ப திரும்ப ஆலோபதியை நம்பி உங்கள் உயிரையும் உடலையும் அவர்களுக்கு காணிக்கையாக்கி விடாதீர்கள் 

சிந்தித்து செயல்படுங்கள் 

ஒரு போதும் ஆங்கில மருந்துகளால் உங்கள் நோயை குணப்படுத்தவே முடியாது, மாறாக விரைவில் நம் உழைப்பையும்,  உயிரையும் பரிக்க இயலும்

"ஆங்கில மருந்துகளை விழுங்கும் முன் விழித்துக்கொள்ளுங்கள்

இல்லையேல் மருந்துகள் உங்களை விழுங்கிவிடும்"

நன்றி
பாட்டி வைத்தியம்:-

1) முருங்கைகீரையை காம்புடன் சேர்த்து ரசம் வைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அசதி குறையும்.

2) கண்களில் எந்த நோய் தென்பட்டாலும் அண்ணாசிபழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

3) அகத்திக்கீரையை சூப் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண்களில் நீர் வடிதல், கண் நோய்கள் குணமாகும்.

4) ஆவாரம் பூவை இரவு படுக்கும் முன் கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால் கண் நோய்கள் குணமாகும்.

5) வல்லாரை கீரை, தேங்காய் பால், மிளகு, சீரகம், சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

6) முருங்கைக்காய் நசுக்கி சாறெடுத்து அதில் சம அளவு தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் சளி நீங்கும்.

7) இஞ்சி சாற்றை கொதிக்க வைத்து அதே அளவு தேன் ஊற்றி  ஆற வைத்து தினசரி உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் பருத்த உடல் குறையும் 

8) சுக்கு, ஆவாரம் பட்டையும் சம அளவு எடுத்து சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து சாப்பிட்டால் கை, கால்  வலி குணமாகும்.

9) ஏலக்காயைப் போடி செய்து தினமும் காலை, மாலை நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி விரைவில் நீங்கும்

10) பசும்பால், சிறிதளவு ஓமம் போட்டு காய்ச்சி அடிக்கடி காலையில் குடித்து வந்தால் தொண்டை வலி, தொண்டை அடைத்தல் நீங்கும்.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் :- 
ஜப்பானிய நீர் சிகிச்சை' தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் 'உஷை பானம்'என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது) தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ,பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.
காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில், முதல் நாள் இரவுச் சாப்பாட்டை முடித்த பிறகு, படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்புமண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ (மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள்) சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையும் முக்கியமானது. இரவே பல் துலக்கிக்கொள்வது நல்லது.
தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.
🏾இம்முறை ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு சற்று சிரமமாகத் தோன்றலாம். பின்னர் பழக்கமாகிவிடும்.
மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர், பணச் செலவு ஆகிய எதுவுமே இல்லாமல், இம்முறைப்படி நீரைப் பருகுவதால், கீழ்க்கண்ட நோய்கள் குணமாகின்றன:-
தலைவலி
இரத்த அழுத்தம்
 சோகை
 கீல்வாதம்
பொதுவான பக்கவாதம்
ஊளைச்சதை
மூட்டுவலி
காதில் இரைச்சல்
 இருதயப் படபடப்பு
மயக்கம்
இருமல்
 ஆஸ்த்மா
 சளி
 காசநோய்
 மூளைக் காய்ச்சல்
 கல்லீரல் நோய்கள்
 சிறுநீரகக் கோளாறுகள்
 பித்தக் கோளாறுகள்
 வாயுக் கோளாறுகள்
வயிற்றுப் பொருமல்
 இரத்தக் கடுப்பு
 மூலம்
மலச்சிக்கல்
உதிரப்போக்கு
 நீரழிவு
கண் நோய்கள்
கண் சிவப்பு
ஒழுங்கில்லாத மாதவிடாய்
வெள்ளை படுதல்
கர்ப்பப்பை புற்றுநோய்
மார்புப் புற்றுநோய்
தொண்டை சம்பந்தமான நோய்கள்
நம்பவே முடியவில்லையே! சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா? இந்த முறை ஜப்பானில் பரவலாகக் கடைபிடிக்கப்படுகிறது.
சோதனைகள் மூலமாகவும், அனுபவபூர்வமாகவும் கீழ்க்கண்ட நோய்கள் குணமாக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
மலச்சிக்கல் - ஒரே நாளில்
வயிற்றில் பித்தம் மற்றும் வாயுப் பொருமல் - இரண்டு நாட்கள்
சர்க்கரை வியாதி - ஏழு நாட்கள்
இரத்த அழுத்தம் - நான்கு வாரங்கள்
புற்று நோய் - ஆறு மாதங்கள்
காசநோய் - மூன்று மாதங்கள்,.
"நரைமுடி  கருப்பாக மாறுவதற்கு அனுபவமுறை"

கறிவேப்பிலையை  மூன்று கைப்பிடி அளவு எடுத்து அரைத்து அரைலிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணையில்  கலக்கி நன்றாக தைலமாக காய்ச்சி வடித்து வைத்துகொண்டு தினந்தோறும் தலைக்கு தேய்த்துவரவும்.
தாமரை பூவை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு கசாயம் வைத்து காலை மாலை பருகி வரவும்.
நரை,திரை மாறும்.
நன்றி.
"எட்டு" போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.

மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்
அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு
வருகிறது "நோய்". 

நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல், அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை தேடிக் கொள்ளவே விரும்பும்.

சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
தெளிவான விடைகளை தருகிறது.

சித்தர்கள் :

"எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!"

என்கிறார்கள்.

நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்
அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,
மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம். 

எத்தனைதான் மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் போவதால்) மறுபடியும் இவை தாக்கும்.

இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும் நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர் சித்தர்கள். இதிலிருந்து விடுபட்டு, நாம் மனிதர்கள், நலமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த முறையை வகுத்துக்கொடுத்துள்ளனர். 

காலை நேரத்திலோ, அல்லது நேரம்
கிடைக்கும் பொழுதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி நீளம் வேண்டும்) எட்டு போடுகிற
வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள்
நடை பயிற்சி செய்ய வேண்டும். 

முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள் வடக்கிலிருந்து தெற்காக நடக்கவேண்டும். இதை ஒரு நாளைக்கு
இருமுறை செய்ய வேண்டும்.
காலையும், மாலையும் வேளைகள்
மிக வசதியாக இருக்கும்.

இதை செய்வதால் என்ன நடக்கும்!

1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.

2. இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள் சிவந்திருப்பதை காணலாம். அதாவது ரத்தஓட்டத்தை
சமன்படுத்துகிறது என்று அர்த்தம்.

3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).

4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.

5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.

6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.

7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்.

8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.

9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும்.

10. பாத வலி, மூட்டுவலி மறையும்.

11. சுவாசம் சீராகும் அதனால் உள்
உருப்புக்கள் பலம் பெரும்.

சரி! இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும். 

"8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள், 

அந்த வடிவம் "முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சமநிலை படுத்துகிறது. 

இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்தசித்தர்கள், இதையே 
"வாசி யோகத்தில்" (மூச்சு பயிற்சியில்)
உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி
எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?

விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து பலனடையுங்கள்!

"வாழ்க வளமுடன்"

( படித்ததில் பிடித்தது )
நம்முடைய ஆரோக்கியம் நம் கையில்தான் உள்ளது.

நல்ல ஆரோக்கியம் என்பது நல்ல உணவு, நல்ல சுற்றுச்சூழல், நல்ல மனநிலை, முறையான பழக்கவழக்கங்கள் ஆகிய 4 அம்சங்களை சார்ந்துதான் இருக்கிறது. 

எந்த உணவை சாப்பிட வேண்டும், எப்படி உண்ண வேண்டும் என்பதை முறையாக கடைபிடிக்க வேண்டும். 

முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடித்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால் நாம் இதை கடைபிடிப்பதே இல்லை.

உணவில் பாசிட்டிவ் உணவு, நெகட்டிவ் உணவு என்று 2 வகை உண்டு. 

எளிதில் சீரணமாகக்கூடிய, வயிற்றுக்கு பிரச்னை தராத உணவுகள் - பாசிட்டிவ் உணவுகள். 

அதற்கு நேர்மாறானவை நெகட்டிவ் உணவுகள்.

பாசிட்டிவ் உணவுகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, டால்டா போன்ற ஒவ்வாமை பொருட்கள் கலந்த நெகட்டிவ் உணவுகளையே இன்று நாம் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம்.

தண்ணீருக்கு நிகராக வேறு ஒரு பானம் கிடையாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 

ஆனால் தாகம் எடுக்கும் சமயங்களில் எல்லாம் நாம் பெரும்பாலும் ரசாயனம் கலந்த அன்னிய குளிர்பானங்களையே விரும்பி அருந்துகிறோம்.

இதனால் போதிய அளவு தண்ணீர் உடலுக்கு கிடைப்பதில்லை.

இதுபோன்ற காரணங்களால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு இன்னல் அடைகிறோம்.

காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் கூட காபி குடிக்கிறோம். 

மேலும் பன், பிஸ்கட் என்று சாப்பிடுகிறோம். 

நாள் முழுவதும் வடை, பஜ்ஜி என்று நொறுக்குத் தீனிகளை சாப்பிடுகிறோம்.

இன்றைய சூழலில் நம்முடைய உழைப்பு குறைவாகத்தான் இருக்கிறது. 

ஆனால் எடுத்துக்கொள்ளும் உணவோ அதிகமாக இருக்கிறது.

இது ஆரோக்கிய வாழ்க்கைக்கு உகந்ததல்ல. 

இந்த பழக்கம் தொடர்ந்தால் நாம் இறப்பதற்கு முன்பே நம்முடைய உறுப்புகளை சாகடித்துவிடுவோம். 

இதற்கு நம்முடைய நாக்கை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். 

நோய் வந்தால் நாம் சந்தோஷப்பட வேண்டும்.

ஏனென்றால் நம் உடலில் கழிவுத்தன்மையும், நச்சுத்தன்மையும் வெளியேறும் நிகழ்வுதான் நோய்ஆகும்.

நாம் உண்ணும் உணவு கழிவாக மாறிய பிறகு அது வெளியேற்றுகிறது. 

கழிவுகள் அதிகமாக சேரும்போது மலக்குடல் சுத்தமாக இருப்பதில்லை. 

அதுபோல நுரையீரலும் சுத்தமாக இருப்பதில்லை.

அதில் இருக்கின்ற 90,000 சிரைகளில் 60,000 சிரைகளில் கார்பன்-டை-ஆக்சைடு படிந்து விடுகிறது.

சருமத்தில் கூட கழிவுகள் தங்கிவிடுகின்றன.

இவையெல்லாம் வெளியேறுகிற நிகழ்வுதான் நோய்.

கழிவுகள் சேராமல் தற்காத்துக் கொள்வதுதான் ஆரோக்கியம்.

"இதுவே ஆரோக்ய வாழ்வுக்கான வழிகள்"
சுத்தமான, சுவையான, சத்தான பானம் இது. 

குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.
இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.
இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும்.
ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.
சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது
இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.
ஒரே ஒரு நோய் தான் உண்டு.

அதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு.

அதற்கு ஒரே ஒரு சிகிச்சை தான் உண்டு.

அந்த ஒரு நோய்:-
தவறான முறையில் வாழ்வதாகும்.

அந்த ஒரு காரணம்:- 
நீரில் உருவாகும் பொருள்களும், நோயை உண்டாக்கும் மலங்களும், உடம்பில் தேங்குவதாகும்.

அந்த ஒரு சிகிச்சை:-
உண்ணா நோன்பு, எனிமா ஆகியவற்றால் அழுக்குகளையும், மலங்களையும் வெளியேற்றல், விவேகமான உணவுத் திட்டம், நீர், கதி ரொளி,காற்று ஆகியவற்றால் குணம் பெறல் முதலியனவாகும்.

இயற்கை மருத்துவம் எப்போதும் இயற்கையான சிகிச்சை முறைகளையே பின்பற்றுகிறது. நீராடல், வெயில், ஓய்வு, பயிற்சி, எனிமா, பட்டினின், தூய காற்று, நீவி விடல் (மசாஜ்), கவனம் மிகுந்த விவேகத்துடன் கூடிய சரியான உணவு முதலிய இயற்கையான செயல்களின் உதவியையே அது பெறுகிறது. மருந்துகளை அது ஒரு போதும் ஊக்குவிப்பதில்லை.

வேதங்கள் அல்லது இமய மலை போல இயற்கை மருத்துவ முறையும் மிகவும் தொன்மை வாய்ந்தது. உடல் நலம் பேணவும், சிகிச்சை செய்யவும் (தற்போது) உள்ள முறைகள் எல்லாவற்றைக் காட்டிலும் அதுவே மிகவும் தொன்மை வாய்ந்தது. கிறித்துவுக்கு நான்கு நூற்றாண்டுகட்கு முன்பு (460-377 BC) வாழ்ந்த ஹிப்போ க்ரேடஸ் (Hipocrates)என்பார் இயற்கை மருத்துவ முறையின் உறுதி மிக்க ஆதரவாளராக இருந்தார். கதிரொளி, தூய காற்று, தண்ணீர், பயிற்சி, ஓய்வு, சரியான உணவு, நீராடல், நீவுதல் முதலிய இயற்கை நலவாழ்வியல் சிகிச்சை முறைகளை பயன்படுத்தி, மனித குலத்துக்கு நிகரற்ற பயன்களையும், அழியாப் புகழையும் பெற்றார். அவர் இயற்கை மருத்துவ முறையின் தந்தை ஆவார். (இப்போது கூட மருத்துவப் படிப்பினைத் துவங்கும் முன்னர் மருத்துவ மாணவர்கள் ஹிபோக்ரேடஸ் உறுதி மொழி (Hypocrates Oath) என்ற ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்வதை ஒரு மரபாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிகளுக்கும் இப்போதைய மருத்துவ சிகிச்சை முறைகளுக்கும், மருந்துகளுக்கும் இடைவெளி மிகவும் நீண்டு விட்டது என்பதுதான் சோகம்!)

இயற்கை மருத்துவ முறை ஒரு சாதாரண மனிதரை, டாக்டரிடம் சென்று, காத்திருக்கும் அறையில் கடினமும், கவலை மிகுந்த பல மணி நேரங்களைக் கழிப்பதில் இருந்தும், டாக்டருடைய மனிதாபிமானமற்ற கட்டணங்களில் இருந்தும் விடுவிக்கிறது.

இயற்கை மருத்துவம் மிகவும் மலிவானது; அதே நேரத்தில் சிகிச்சை முறைகளில் மிகவும் சிறந்ததும், பாதுகாப்பு மிகுந்ததும் ஆகும்.

இயற்கைக்கு திரும்புக. 
ஊசி, மருந்து வில்லைகள், திரவ மருந்து ஆகியவற்றிகாக காலத்தையும், சக்தியையும், பணத்தையும் வீணாக்க வேண்டாம். 

இயற்கையின் விதிகள் மிகவும் சுலபமானவை. இயற்கை அன்னையிடம் (இயற்கை) மருந்துகள் ஏராளமாக இருக்கின்றன; அவற்றை உட்கொள்வதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவளுக்கு (டாக்டர் ஃ பீஸ்) கட்டணம் எதுவும் தரவேண்டியதில்லை. 

எளிமையான, இயற்கையான வாழ்க்கையை நடத்துக. உடல் நலம் பற்றிய விதிகளையும் பின்பற்றுக. தூய்மையை பேண வேண்டும். தெய்வீகத் தன்மைக்கு அடுத்தபடியாக இருப்பது தூய்மையே. நோய்கள் அணுகாத நிலையைப் பெறுவதுடன், நீங்கள் உயர்ந்த தரம் மிகுந்த உடல் நலத்தையும், வலிமையையும், நீண்ட ஆயுளையும் அனுபவித்து மகிழ்வீர்கள். 

எல்லா நோய்களையும் குணப்படுத்துவது இயற்கைதான் (Doctor treats; Nature cures).ஒரு டாக்டர் தம்முடைய விவேகமற்ற சிகிச்சையினால் ஒரு நோயாளியைக் கொன்று விடக்கூடும்; அல்லது நோயின் உக்கிரத்தை அதிகரித்து விடக்கூடும்.

விவேகமான முறையில் மருந்துகளை பயன்படுத்துவது தான் இயற்கைக்கு உதவியாக இருக்கிறது. உடல் நலத்துடன் இருக்கும் போதும், நோயுற்று இருக்கும்போதும், உயிரின் செயல்களுக்கு தெய்வீக சக்தி ஆதரவாக இருக்கிறது. 

மிகையான உணவாலும், தவறான உணவாலும், விவேகமற்ற உணவாலும், குற்றங்கள் உள்ள உணவாலும், உடம்பில் அழுக்குகளும், மலங்களும் தேங்கி விடுகின்றன. உடம்பில் இருந்து இந்த அழுக்குகளும், மலங்களும் வெளியேற்றப்பட்டால் எல்லா நோய்களும் குணமாகி நிறைவான உடல் நலத்தை மனிதன் அனுபவிக்க முடிகிறது. இதுவே இயற்கை மருத்துவத்தின் நிறைவான கொள்கை.

கதிரொளி சிகிச்சை, நீர் சிகிச்சை, காற்றின் சிகிச்சை, உணவின் சிகிச்சை, பட்டினி கிடத்தல் இவை எல்லாவற்றின் ஒரே நோக்கம் உடம்பில் இருந்து அழுக்குகளையும், நச்சுப் பொருட்களையும் வெளியேற்றி நிறைவான உடல் நலம், வலிமை, சக்தி ஆகியவற்றை நிச்சயப்படுத்துவதே ஆகும்.
மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் (Drugs and Cosmetic Act) 1995-ல் திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை வியாதிகளை குணப்படுத்த முடியாது என்று இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது.
அவ்வாறு ஷெட்யூல்-து 51ல் கூறப்பட்டுள்ள நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம் வைத்தியம் பார்க்க கூடாது.
ஷெட்யூல்-து 51ல் வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் பட்டியல்
பின்வருமாறு:-
1. எய்ட்ஸ் (AIDS)
2. நெஞ்சுவலி (Angina)
3. குடல் வால் நோய் (Appendicitis)
4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood Vessels)
5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)
6. தலை வழுக்கை (Baldness)
7. ஆஸ்துமா (Asthma)
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய்
வரை (Cancer)
9. கண்புரை (Cataract)
10. தலை முடி வளர, நரையை அகற்ற (To Growth of Hair, To removing Grey Hair)
11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்று கூறுவது.
12. பிறவிக் கோளாறு
13. காது கேளாமை (Deafness)
14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)
15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.
16. வலிப்பு நோய் - மனநோய் (Eplilipsy)
17. மூளைக்காய்ச்சல்
18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக மாற்றுதல்.
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண் (Gagerence)
21. மரபணு நோய்கள் (Genetic Diseases)
22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)
23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)
24. ஹெர்னியா (Hernia)
25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (BP)
26. விரைவீக்கம் (Orchitis)
27. பைத்தியம் (Mental Disorder)
28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி
செய்ய (To improve Memory Power)
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்
32. பற்களை உறுதிப்படுத்த
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (Hepatitis)
34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)
35. வெண்குஷ்டம் (Leocoderma)
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்
37. மூளை வளர்ச்சிக் குறைவு
38. மாரடைப்பு நோய் (Heart Attack)
39. குண்டான உடம்பு மெலிய (Obesity)
40. பக்கவாதம் (Paralysis)
41. உடல் நடுக்கம் (Parkinson)
42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. குறைந்த (இள) வயதில் தலைநரை (Greying Hair)
46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotance)
48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும்
அனைத்து வலிகளும் (Spondylosis)
49. திக்குவாய் (Stammering)
50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல் (Varicose Vein).
மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தும் கிடையாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது என இந்தியச்சட்டம் சொல்கிறது.
மக்களே!
இனிமேலாவது விழிப்படையுங்கள்!!!
உங்களையும் உங்கள் சந்ததிகளையும்
காப்பாற்றிக்கொள்ளுங்கள்!...

உங்கள் எடை 3 மாதங்களில் 12 கிலோ குறையும்.

வாருங்கள்..பழகலாம்
-----------------------------------

தினமும் இன்று முதல் இதுதான் உங்கள் உணவு..

காலை : 100 பாதாம் கொட்டைகள்
மதியம் : 4 முட்டைகள்
இரவு     : சிக்கன்/மட்டன்/மீன்  
                 ( அளவில்லாமல்)

இப்படி உங்களுக்கு சொல்லப்பட்டுவிட்டால் என்ன ஆகும் என்று நினைக்கின்றீர்கள்?

"தினமும் இதுதான் உணவா?

ஆம்..

ஐயோ.. பத்தே நாளில் மாரடைப்பு வந்து செத்தே போய் விடுவோம்.."

இதுதான் நம் ஒவ்வொருவரின் பதிலாக இருக்கும்.

ஆனால்..

..

..

..

ஆனால்?

இந்த உணவை சாப்பிட ஆரம்பித்ததும் எந்த உடற்பயிற்சியுமே செய்யாமல் உங்கள் எடை 3 மாதங்களில் 12 கிலோ குறையும்.

உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவு, குளுகோஸின் அளவு நார்மலுக்கு வந்து விடும்.

ரத்த அழுத்தம் இயல்புநிலைக்கு வந்துவிடும். மாரடைப்பு அபாயம் நீங்கிவிடும்..

இப்படியெல்லாம் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? 

மாட்டோம்.

ஆனால் அதுதான் உண்மை என்று "பேலியோ டயட்" புத்தகம் ஆதாரபூர்வமாகச் சொல்கிறது. 

இப்புத்தகத்தை நண்பர் Babu Veluswamy எனக்கு பரிசளித்த கணம் வரைச் சத்தியமாக இதுபற்றி எதுவும் எனக்குத் தெரியாது.

ஆனால்.. வாசிக்க வாசிக்க.. நாம் எவ்வாறு உணவு வர்த்தகர்களால் ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்கிற உண்மை என் முகத்தில் அடித்தது. 

ஒட்டகப் பால் குடித்தால் சுகர் சரியாகிவிடும்.. புரோட்டின் பவுடர் சாப்பிட்டால் உடல் எடை குறைந்து விடும்.. வெண்டைக்காயை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சுகர்போய்விடும். 

உப்பை நிறுத்தி தினமும் உடற்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தம் சரியாகிவிடும்..

என்றெல்லாம் நம்பப்படுவதெல்லாம் பொய் என்பதை அக்கு வேறு ஆணி வேறாய் கிழித்தெரிகிறது இப்புத்தகம்.

மருத்துவ உலகம் எப்படி கோக் மற்றும் பெப்சி கம்பெனிகளின் கைப்பிடிக்குள் சிக்கி சீரழிகிறது என்பதை ஆதார பூர்வமாக விவரிக்கிறது.

எது நார்மல் சுகர் அளவு என்பதையே அமெரிக்க சுகாதார மையம்தான் தீர்மானிக்கிறது. 

ரத்தத்தில் சுகர் அளவைக் குறைக்கும் மெட்ஃபார்மின் மாத்திரையை இந்தியாவில் அதிகம் விற்பனை செய்ய வேண்டுமா.. ரத்தத்தில் சர்க்கரையின் இயல்பு அளவைக் குறைத்து நிர்ணயம் செய்.. அவர்களை சர்க்கரை நோயாளிகளாக அறிவித்துவிடு.. அவ்வளவுதான்.. அதன்பிறகு அவர்கள் காலமெல்லாம் நீரிழிவு மாத்திரைக்கு அடிமை.. வியாபாரம் ஜேஜே என்று நடக்கும்.

இதன்படிதான் இந்தியர்களுக்கு இப்போது நார்மல் சுகர் அளவு என்பது  80-120 / 140 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 

அதற்கு மேல் இருந்துவிட்டால் அவர் சுகர் நோயாளி.. மாத்திரை சாப்பிட வேண்டும். ஆனால் ரத்தத்தில் அவரின் சுகர் அளவு நார்மல் நிலைக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதானே அவர்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவார்கள்?

அதற்கு என்ன செய்ய வேண்டும்? 

எதைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சுகர் ஏறுமோ அதையே உணவாக எடுக்கச் சொல்..

எதில் சுகர் ஏறும்?

அரிசி மற்றும் கோதுமை..

அப்படியா.. சரி, அரிசி அதிகம் சாப்பிடுகிற தென்னிந்தியர்களை அரிசியை அளவாய் சாப்பிடச் சொல்..கூடவே கோதுமையை அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.

கோதுமை அதிகம் சாப்பிடுகிற வட இந்தியர்களை அரிசி அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.. ரத்தத்தில் சுகர் ஏறிக் கொண்டே இருக்கும். மாத்திரை விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கும். பிரச்சனை சால்வ்ட்..(?!)

எப்படி மருத்துவர்கள் நம்மை வழி நடத்துகிறார்கள் பார்த்தீர்களா? 

சரி.. ரத்தத்தில் கொழுப்பைக் கரைக்கும் ஸ்டாட்டின் மாத்திரை விற்பனையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? 

BMI அளவை மாற்று..

அதென்ன BMI? 

உடல் எடை, பருமன் போன்றவற்றை நமது உயரத்திற்கேற்ப நிர்ணயிக்கும் ஒரு கணக்கீடு. இது 1830 களில் உருவாக்கப்பட்டது. இதன்படி ஆரம்பத்தில் ஒருவரது BMI 30க்கு அதிகம் என்றால் அது அதிக பருமன் என்று வரையறை செய்யப்பட்டது.

ஆனால் 1985ல் அமெரிக்க சுகாதார மையம் ஒருநாள் இரவில் BMI 27.8 தான் இயல்பு என்றும், பின்னர் BMI 25 தான் இயல்பு என்று 1990லும் நிர்ணயம் செய்தது.

இதன்படி என்ன ஆனது? 

168 செமீ உயரமும் 77 கிலோ எடையும் உடையவரின் BMI 27.8 ஆகும்.

1990ல் இவர் தூங்கப் போகும் போது இவரது BMI நார்மல். ஆனால் இரவு அமெரிக்க சுகாதார நிறுவனம் நார்மல் BMI 25 என்று நிர்ணயம் செய்துவிட்டது. எனவே காலையில் அவர் எழும்பும் போது அவர் நோயாளியாக அறிவிக்கப்பட்டுவிட்டார். அவர் படுக்கும் பொழுதும், உறங்கும் பொழுதும் இருந்த உயரமும் எடையும் காலையில் எழும்பும் போதும் அப்படியேதான் இருந்தது.

ஆனால் படுக்கும்பொழுது அவர் நோயற்றவர்.. எழும்பும் பொழுது அவர் நோயாளியாக்கப்பட்டு விட்டார். BMI 25க்கும் அதிகமாக இருப்பதால் அவர் இனி ஸ்டாட்டின் சாப்பிட்டாக வேண்டும்.

புரிகிறதா வியாபார தந்திரம்?

தமிழகத்தில் சுகர்நோயாளிகளுக்கு என்ன உணவு பரிந்துரைக்கப்படுகிறது?

காலையில் 4 இட்லி

மதியம் : அரிசி சாதம், சாம்பார்,ரசம்

இரவு : சப்பாத்தி.

இதைச் சாப்பிடுவதால் என்ன நடக்கிறது? 

ஒரு இட்லியில் 15கி சர்க்கரை இருக்கிறது. 4 இட்லிக்கு 60கி சர்க்கரை ஏறுகிறது. சாம்பாரோடு இட்லி சாப்பிட்டால் ஒரு வேளைக்கு 75 கி சர்க்கரை அதாவது 20 டீ ஸ்பூன் சர்க்கரையை ஒருவேளையில் சாப்பிடுகிறோம். பிறகு எப்படி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்?

நாம் தினமும் ஏற்றுகிற சர்க்கரையைக் குறைக்கத்தான் மாத்திரையை எடுக்கிறோம்.

புரிகிறதா எங்கு பிழை வருகிறது என்று?

சர்க்கரையின் அளவு அதிகரித்ததும் அதைக் கட்டுக்குள் கொண்டுவர நம் கணையம் இன்சுலினை அதிகம் சுரக்கிறது. அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஈரலுக்கு அனுப்புகிறது. ஈரல் அதை கொழுப்பாக மாற்றி நம் தொப்பைக்கு அனுப்பி சேகரித்து வைக்கிறது. 

இன்சுலின் அதிகம் சுரக்க சுரக்க மீண்டும் மீண்டும் கொழுப்பு உடலில் ஏறுகிறது. உடல் பருமன் அதிகரிக்கிறது.

இன்சுலின் தொடர்ந்து அதிகம் சுரக்க சுரக்க பீட்டா செல்கள் பழுதடைந்து கணையம் பழுதடைகிறது. படிப்படியாக இன்சுலின் சுரப்பதே நின்று போகிறது. நாம் நிரந்தர நோயாளிகள் ஆகிறோம்.

ஆக 4 இட்லி சாப்பிடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது புரிகிறதா?

ரத்தத்தில் சுகர் ஏறுகிறது என்றால், சுகரே இல்லாத உணவைத்தானே நாம் சாப்பிட வேண்டும்? அதுதானே முறை?

சுகர் துளியும் இல்லாத உணவு எது?

அதுதான் அசைவ உணவு.

மனிதன் ஆதியில் படைக்கப்படும் பொழுதே விலங்குகளை வேட்டையாடி அதையே உண்டு வந்தான். அதை உண்ணும் வகையில்தான் மனிதனின் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இயல்பான உணவு.

அதில்தான் மனிதனுக்குத் தேவையான அனைத்து விட்டமின்களும், மினரல்களும், கொழுப்புகளும், புரதங்களும் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

காலையில் இட்லிக்குப் பதிலாக 4 ஆம்லெட் சாப்பிட்டால் என்ன ஆகும்?

அதில் துளியும் சுகர் இல்லை. எனவே ரத்தத்தில் சுகர் அளவு கூடாது. உடல் தனக்குத் தேவையான எரிசக்தியை அடைய நேராக நம் தொப்பையில் உள்ள கொழுப்பை எடுத்து எரிக்கத்துவங்கும். தொப்பை கரையும். நம் உடல் கொழுப்பை சேகரிக்காமல் எரிக்கத் தொடங்குவதால் முட்டையில் உள்ள கொழுப்பும் எரியத் தொடங்கும்.

காலை உணவாக முட்டை சாப்பிடும் பொழுது, நான்கு மணிநேரம் பசி எடுக்காது. சுகர் அளவு கூடாது. நொறுக்குத்தீனி திங்க மனசு ஏங்காது.

இதை எப்படி நம்புவது?

பாடி பில்டிங் துறையில் பளு தூக்கும் வீரர்களுக்கு அவர்கள் உடல் எடையைக் குறைப்பதற்காகக் கொடுக்கப்படும் உணவு முறை என்ன?

தினமும் முட்டை, இறைச்சி, வெண்ணெய் மட்டுமே.

இப்பொழுது புரிகிறதா.. கொழுப்பு உணவு உடலுக்கு நன்மையே விளைவிக்கிறது என்று..

சுகர் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் திடீரென சுகரற்ற உணவிற்கு மாறாதீர்கள்.

ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் மாத்திரையினால் சுகர் இன்னும் கீழிறங்கும். 

முதல் ஒருவாரம் உங்கள் சுகர் அளவைக் கண்காணித்து சுகர் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தினமும் கண்காணித்து படிப்படியாக மாத்திரையின் அளவைக் குறைத்து வாருங்கள். பிறகு மாத்திரையே தேவைப்படாது.

முகநூலில் ஆரோக்கியம் & நல்வாழ்வு என்ற பக்கத்தில் இணையுங்கள். 

இதைத்தான் பேலியோ டயட் புத்தகம் அழகாய் எளிய தமிழில் எடுத்துரைக்கிறது.

இப்புத்தகத்தை வாங்கி முழுமையாய் 175 பக்கங்களையும் படியுங்கள். அதன்பிறகு முழுமையாய் தெளிவடையுங்கள்..

ஒருமுறை வாசித்துதான் பாருங்களேன்..
*MEDICAL FITNESS*
((( PREVENTION IS BETTER THAN CURE )))

MEDICAL FITNESS:-
----------------------

       *CHOLESTEROL*
           ------------------
Cholesterol ---   <  200
HDL  ---  40  ---  60
LDL  ---    <  100
VLDL --     <  30
Triglycerides --   <  150
----------------------------

         *CHOLESTEROL*
         ----------------
Borderline --200 -- 239
High ----    >  240
V.High --    >  250
----------------------------

            *LDL*
           ------
Borderline --130 ---159
High ---  160  ---  189
V.High --  > 190
----------------------------

           *TRIGLYCERIDES*
           -----------------
Borderline - 150 -- 199
High --   200  ---  499
V.High --     >   500
----------------------------

        
        *PLATELETS COUNT*
       ----------------------
1.50  Lac  ----  4.50 Lac
----------------------------

              *BLOOD*
             -----------
Vitamin-D --  50   ----  80
Uric Acid --  3.50  ---  7.20
----------------------------

            *KIDNEY*
           ----------
Urea  ---   17   ---   43
Calcium --  8.80  --  10.60
Sodium --  136  ---  146
Protein  --   6.40  ---  8.30
----------------------------


           *HIGH BP*
          ----------
120/80 --  Normal
130/85 --Normal  (Control)
140/90 --  High
150/95 --  V.High
----------------------------

         *LOW BP*
        ---------
120/80 --  Normal
110/75 --  Normal  (Control)
100/70 --  Low
90//65 --   V.Low
----------------------------

              *SUGAR*
             ---------
Glucose (F) --  70  ---  100
(12 hrs Fasting)
Glucose (PP) --  70  --- 140
(2 hrs after eating)
Glucose (R) --  70  ---  140
(After 2 hrs)
----------------------------
     
             *HAEMOGLOBIN*
            -------------------
Male --  13  ---  17
Female --  11 ---  15
RBC Count  -- 4.50 -- 5.50
                           (million)
----------------------------

           *PULSE*
          --------
72  per minute (standard)
60 --- 80 p.m. (Normal)
40 -- 180  p.m.(abnormal)
----------------------------

          *TEMPERATURE*
          -----------------
98.4 F    (Normal)
99.0 F Above  (Fever)

Please help your Relatives, Friends by sharing this information....

*Heart Attacks And Drinking Warm Water:*

This is a very good article. Not only about the warm water after your meal, but about Heart Attack's . The Chinese and Japanese drink hot tea with their meals, not cold water, maybe it is time we adopt their drinking habit while eating. For those who like to drink cold water, this article is applicable to you. It is very Harmful to have Cold Drink/Water during a meal. Because, the cold water will solidify the oily stuff that you have just consumed. It will slow down the digestion. Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine. Very soon, this will turn into fats and lead to cancer . It is best to drink hot soup or warm water after a meal.

*French fries and Burgers*
are the biggest enemy of heart health. A coke after that gives more power to this demon. Avoid them for
your Heart's & Health.

Drink one glass of warm water just when you are about to go to bed to avoid clotting of the blood at night to avoid heart attacks or strokes. 

A cardiologist says if everyone who reads this message sends it to 10 people, you can be sure that we'll save at least one life. ... 

So, please be a true friend and send this article to people you care about.
உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்..!!!!

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கட்டை விரல்

உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.

ஆள்காட்டி விரல்

உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.
உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

நடுவிரல்

நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.

நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.

மோதிரவிரல்

ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.

மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.

சிறுவிரல்

சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.

மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.

உள்ளங்கை

மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.

மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை !!!

காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும்.

சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும்.
ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம்
அருளியுள்ளார்.

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம்,
முசுமுசுக்கை 50 கிராம்,சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக
காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).

இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில்
மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில்
சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும். 

 இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.

நோயை குணமாக்க முடியாது = அலோபதி மருத்துவம்

*WILLAGE*
மீள்: 17.06.2014
உலகில் எந்த நோயையும் குணமாக்க முடியாது என்று அலோபதி மருத்துவம் ஒப்புக்கொண்டது.
சென்னை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்( MMC )ஐ சேர்ந்த மயக்கவியல்(Anesthesiology) மருத்துவர் டாக்டர் ஜானகிராமன் இதை முகநூலில் தெரிவித்து உள்ளார்.
சில நாட்கள் முன்பு இரத்ததானம் பற்றிய சர்ச்சை எழுந்தபோது மேலே சொல்லப்பட்ட மயக்கவியல்(Anesthesiology) மருத்துவர் ஜானகிராமன் ஆங்கில மருத்துவத்தை அறிவியல் மருத்துவம் என்றார். மேலும் அறிவியல் மருத்துவம் எதையும் மறைக்கவில்லை என்றார். அப்போது செட்யூல் J வை மறைத்தது பற்றி கேட்டபோது அதற்கு அவர் செட்யூல் J வை கொடுத்ததே அறிவியல் மருத்துவம் தான் என்றார்.
செட்யூல் J வை பற்றி
இது உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசாங்கம் தயாரித்த விசயம்(மக்கள் கண்களில் மறைக்கப்பட்ட விசயம்)
இன்று பெரும்பாலானவர்களால் நம்பப்படும் ஆங்கில மருத்துவத்திற்கு எந்த ஒரு நோய்க்கும் மூல காரணம் தெரியாது என்றும் , அந்த நோயை குணப்படுத்த முடியாது என்றும் குறிக்கப்பட்டுள்ளது செட்யூல் J வில்.
இன்று நீங்கள் எந்த நோய்க்கு ஆங்கில மருத்துவரிடம் சென்றாலும் அந்த நோய் எவ்வாறு வந்தது என்று அவர்களுக்கு தெரியாது .
அது எவ்வாறு வந்தது என்றூ தெரிந்தால்தானே அந்த நோயை குணப்படுத்த இயலும்.
நீங்கள் எந்த எந்த நோய்களுக்குக்கு எல்லாம் அங்கில மருத்துவம் செல்கிறீர்களோ அந்த நோய்கள் அனைத்தும் செட்யூல் J வில் அடங்கும்.
ஆக எந்த நோய்க்கும் அது எவ்வாறு வந்தது என்று நாம் நம்பிக்கொண்டுள்ள மிகப்பெரிய அறிவியல் பூர்வ மருத்துவம் எனப்படும் ஆங்கில மருத்துவத்திற்கு தெரியாது. மேலும் அந்த நோய்களை குணாப்படுத்த முடியாது .
இதுவே செட்யூல் J ஆகும்.
சென்னை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்(MMC) ஐ சேர்ந்த மயக்கவியல்(Anesthesiology) மருத்துவர் டாக்டர் ஜானகிராமன் செட்யூல் J வை கொடுத்ததே அறிவியல் மருத்துவம் தான் என்றார்.
மேலும் அவரிடம் ஆங்கில மருத்துவத்தால் ஒரு நோயை குணப்படுத்த முடியாது என்றால் எந்த மருத்துவத்தால்லும் குணப்படுத்த முடியாதா என்று கேட்டதற்கும் அவர் , குணாப்படுத்த முடியாது என்றார். இதன் மூலம் செட்யூல் J படி எந்த நோயையும் குண்ணப்படுத்த இயலாது மற்றும் அது எப்படி வந்தது என்றும் தெரியாது என்பதை அவர் தெளிவாக ஒத்துக்கொண்டு உள்ளார்.
ஆக ஒரு நோய் எப்படி வந்தது என்று தெரியாது, அது குணப்படுத்தவும் முடியாது எனும் நிலையில் அதை கட்டுப்படுத்துகிறோம் என்று சிகிச்சை அளித்து மேலும் மக்களுக்கு உடல்ரீதியான தொந்திரவுகள் அதிகமாகி பின் அதே நோய் முற்றி மரணம் அடைவதே நாம் காண்பது.இதற்கு பல லட்சங்கள் வாங்கும் மருத்துவனைகள் இருக்க
சென்னை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்(MMC) ஐ சேர்ந்த மயக்கவியல்(Anesthesiology) மருத்துவர் டாக்டர் ஜானகிராமன் இவ்வளவு தைரியமாக இதை சொல்லியிருப்பது உண்மையில் அவர் மனசாட்டி உள்ளவர் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இன்னும் மனசாட்சியுள்ள மருத்துவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு ஜானகிராமன் ஒரு உதாரணம். அவரை வாழ்த்துவோம்.

சமூக நலனில்...
*WILLAGE*
வீட்டுக்கொரு முருங்கை வளர்த்து தவறாது பூவும், கீரையும், காயும் உண்டுவந்திருந்தால் " ஆண்மை  பிரச்சனையா கவலைப்படாதே வா... அந்தரங்க சந்தேகமா கேள்... " என்று தொலைக்காட்சியில் கூவிக்கூவி வியாபாரம் செய்யும் நிலை வந்திருக்காது.
கூப்பிட்டு வர வைத்து நல்ல மருந்துகளை கொடுத்து அனுப்பினாலும் பரவாயில்லை... கண்ட கண்ட மாத்திரியையும், பெட்டியையும் கொடுத்து குழப்பி மன நோயாளியாகவே மாற்றிவிடுகின்றனர். யாரும் எங்கேயும் போக வேண்டாம்.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் முருங்கை கிடைத்தால் , பூ, கீரை கிடைத்தால் தவறாமல் சாப்பிடவும். இதுபோல இன்னும் நம் வீட்டருகே உதவாத களை என்று ஒதுக்கப்படும் பல மூலிகைகள் உள்ளன. எங்கே? வீட்டை சுற்றி கட்டிடமும், சாக்கடையும், குப்பையும், கூலமும்தான் இருக்கிறது என்கின்றீர்களா?
அதை யார் போட்டது? நாம்தானே? வேறு கிரகத்திலிருந்தா வந்து கொட்டுகிறார்கள்? ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் இங்கே அடிப்படை மாற்றம் நிகழ வேண்டும். குறிப்புகள் இங்கே நிரம்பி உள்ளன. நாம் இனி வாசித்துக்கொண்டே இல்லாமல் வாழ்க்கைக்கு நடைமுறைப்படுத்துவோம்.

முருங்கையின் மகிமையை மேன்மைதாங்கிய மருத்துவ முனிவர், பெருஞ்சித்தர் அகத்தியர் அருளிய பாடலைக் கவனிக்கவும்.

விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புசுட்டி யாகும் - எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
                       - அகத்தியர் குணபாடம்

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*
முதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி

செய்முறை விளக்கம்

கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசி குலாவி
நடப்பானே ...
சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.
சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.
நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்,என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும்,ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப்பதால் நடுவில் உள்ள நீர்,நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்து கின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.
வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு -
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு-
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -
இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறையவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.
வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு - -------- சுக்கு
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு--------- இஞ்சி
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -------- கடுக்காய்
இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,
சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.
சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.
சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் .இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.
கடுக்காய் சுத்தி ;கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.
இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .
இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.
உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.
மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.
இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.மலம் மிதமாக இளகிப் போகும்.
இதன்படி ஒரு மண்டலம் உண்ணவும்


சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...