#பெருங்காயம்
என்ற மிகப்பெரிய மோசடி ..
நாம் பயன்படுத்தும் பெருங்காயம் -பெருங்காயமே இல்லை
.
அன்புள்ள மக்களே!
.
பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும் என்று நாம் கேள்விப் பட்டிருப்போம்.
.
ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?
.
அந்த கூட்டு பெருங்காயம் ...
இந்த கூட்டு பெருங்காயம் ...
அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம் இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு.
.
ஆனால் இது அந்த கூட்டு அல்ல.
இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக் கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.
.
இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை.
என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம்.
.
அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?
ஒரு வகையான அராபிய பிசின் 60%,
மைதா 30%,
பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10%
.
இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம்.
.
இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!!
.
இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா?
அது தான் இல்லை.
"பெருங்காய டப்பாக்களின் மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க,
.
ஆனால் நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது.
சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன்.
.
அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ......
.
இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?
.
வயிறு புண்ணாகும்....
வயிற்றில் வாயு அதிகமாகும் ..
.
நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..
மயக்கம் வரும் ...
பால்காயம்
என
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்.
🚶🏽♂HAROON SB