Thursday, November 29, 2018

உங்க நாக்குல வெள்ளையா இருக்கா? அது ஆபத்தா? எப்படி சுத்தப்படுத்தலாம்?*

*உங்க நாக்குல வெள்ளையா இருக்கா? அது ஆபத்தா? எப்படி சுத்தப்படுத்தலாம்?*

நாக்கில் வெள்ளைப்படலம் தென்படுவது பாக்டீரியா பெருக்கத்தால் ஏற்படுகிறது. இதை சில இயற்கை முறைகளை கொண்டு நாம் போக்கலாம். நாக்கு நமது உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பும் கூட. இது தான் உணவின் சுவையை உணர்வதற்கு நமக்கு உதவுகிறது. எனவே அதை சுத்தமாக வைப்பது என்பது நமது கடமை. இந்த பாக்டீரியாக்கள் பெருகி அந்த இடத்தில் இறந்த செல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த வெள்ளைப்படலம் தோன்றுகிறது.

இதை அப்படியே விட்டு விட்டால் நாக்கு முழுவதும் படர்ந்து பின்னாளில் பற்சொத்தை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடிடும். எனவே இதை இயற்கை முறைகளைக் கொண்டு போக்கி பயன் பெறலாம்.

   

புரோபயோடிக்ஸ்

புரோபயோடிக்ஸ் உணவுகள் நாக்கில் இருக்கும் இந்த கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடுகிறது. இது அழற்சியை போக்கி வெள்ளைபடலத்தை உருவாக்கும் மைக்ரோபஸ்யை அழிக்கிறது.

உணவுகள்

புரோபயோடிக் உணவான யோகார்ட் (தயிர்) போன்றவற்றை தினமு‌ம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புரோபயோடிக் மாத்திரைகளை கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

   

கிளிசரின்

உங்கள் நாக்கு இந்த வெள்ளை படலத்தால் அதிகமாக பாதிகுகப்பட்டு இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு முறை கிளிசரின் அப்ளே செய்து கொள்ளுங்கள்.
ஒரு சினன டூத் பேஸ்ட்டை கொண்டு கிளிசரினை அப்ளே செய்யுங்கள்.
2 நிமிடங்கள் பல் துலக்கவும், பிறகு வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு நாக்கை சுத்தம் செய்யுங்கள்.

   

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யில் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. இது வாயில் பெருகி உள்ள கெட்ட பாக்டீரியாக்களை கொல்லும். எனவே உங்கள் நாக்கை சுத்தம் செய்ய தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
1 டீ தேங்காய் எண்ணெய் (5 கிராம்)
ஒரு சின்ன பிரஷ்
பயன்படுத்தும் முறை
காலையில் எழுந்ததும் உங்கள் வாயை தேங்காய் எண்ணெய் கொண்டு கொப்பளியுங்கள்.
நாக்கையும், பற்களையும் சுத்தம் செய்ய 3-4 நிமிடங்கள் பிரஷ் செய்யுங்கள்.
பிறகு குளிர்ந்த நீரில் கழுவி பற்பசையை கொண்டு எப்பொழுதும் போல பல் துலக்குங்கள்.

   

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸில் பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சியை எதிர்ப்பு பொருள் உள்ளது. இது நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்குகிறது.
பயன்படுத்தும் முறை
2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜூஸைக் கொண்டு வாயை சுத்தப் படுத்தி கொள்ளுங்கள்.
பிறகு எப்பொழுதும் போல் பற்பசையை கொண்டு பல் துலக்கி கொள்ளுங்கள்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்க உதவுகிறது. இது நாக்கின் pH அளவை நடுநிலையாக்குகிறது.
இதனால் பாக்டீரியா மேற்கொண்டு வளர்வது தடுக்கப்படுகிறது.
இதனுடன் லெமன் ஜூஸ் உங்கள் நாக்கில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது.
தேவையான பொருட்கள்
1 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா (5 கிராம்)

   

லெமன் ஜூஸ்

பயன்படுத்தும் முறை
பேக்கிங் சோடா மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து குழைத்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை பிரஷ்ஷில் வைத்து 2 நிமிடங்கள் நாக்கை சுத்தம் செய்யுங்கள்.
பிறகு குளிர்ந்த நீரில் கழுவி டூத் பேஸ்ட் கொண்டு எப்பொழுதும் போல் பிரஷ் செய்யுங்கள்.

கடல் உப்பு

கடல் உப்பும் இதற்கு ஒரு சிறந்த தீர்வை தருகிறது. கடல் உப்பு நாக்கில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது.
கடல் உப்பில் உள்ள ஆன்டி செப்டிக் பொருள் பாக்டீரியாவை கொல்லுகிறது.
சிறுதளவு கடல் உப்பை எடுத்து உங்கள் நாக்கில் தடவிக் கொள்ளுங்கள். 3 நிமிடங்கள் நாக்கை நன்றாக சுத்தம் செய்யுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

   

மஞ்சள்

மஞ்சளில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருள் நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்குகிறது.
இதனுடன் சிறுதளவு லெமன் ஜூஸ் கூட சேர்த்து கொள்ளலாம். இது உங்களுக்கு ப்ரஷ் பண்ண எளிதாக இருக்கும்.
பயன்படுத்தும் முறை
1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறுதளவு லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3 நிமிடங்கள் ப்ரஷ் செய்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

டிப்ஸ்கள்

ஒரு நாளைக்கு 3 முறை ப்ரஷ் செய்யும் வழக்கத்தை வைத்து கொள்ளுங்கள். இருந்தாலும் அதிகமாக நீண்ட நேரம் ப்ரஷ் செய்வது அல்லது மதிய வேளைகளில் ப்ரஷ் செய்வதை தவிர்த்து விடுங்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள எதாவது ஒரு இயற்கை முறையைக் கொண்டு பலன் பெறுங்கள்.

அதிகமான தண்ணீர் குடியுங்கள். இது நாக்கில் உள்ள ஈரப்பதத்தை காத்து பாக்டீரியா பெருக்கத்தை குறைக்கும்.

கொழுப்பைக்* *குறைக்கும்* , *புற்றுநோய்* *தடுக்கும்* *சிவப்பு* *அவல்* !

✍ *இயற்கை* *வாழ்வியல்* *முறை* 🌾🌾🌾🥜🥜🥜

*கொழுப்பைக்* *குறைக்கும்* , *புற்றுநோய்* *தடுக்கும்* *சிவப்பு* *அவல்* ! 

அவல்... தமிழர்களின் உணவுப் பட்டியலில் முக்கியமான இடம்பெற்றிருக்கும் ஒன்று. ‘ஹெல்தியான காலை மற்றும் மாலை உணவு’ என்று இதைப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். இது, அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நெல்லை ஊறவைத்து, இடித்து, அதிலிருந்து உமியை நீக்கி அவலாகப் பயன்படுத்துகிறோம். கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் அவலில் ஊட்டச்சத்துகள் ஏராளம். அரிசியின் நிறம், வகையைப் பொறுத்து அவலின் நிறத்திலும் ஊட்டச்சத்திலும் மாற்றங்கள் ஏற்படும். வெள்ளை மற்றும் சிவப்பு அவலைத்தான் நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இரண்டில் எது பெஸ்ட், அவல் தரும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன, எப்படிச் சாப்பிடலாம் என்பதையெல்லாம் விளக்குகிறார் உணவியலாளர் கற்பகம்.
🍏🍏🍏

வெள்ளை அவல்

இது, தூயமல்லி போன்ற வெள்ளை நிற அரிசி ரகங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
🍎🍎🍎
பலன்கள்...

* எளிதில் செரிமானமாகும்.

* உடனடி எனர்ஜி தரும்.

* சமைப்பதற்கு எளிதானது.

* உடல்சூட்டைத் தணிக்கும்.

* செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும்.
🍇🍇🍇
* உடல் எடையைக் குறைக்கும்.

* இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
🍐🍐🍐
சிவப்பு அவல்

இது, பிசினி போன்ற சிவப்பு அரிசி ரகங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஆந்தோசயனின் (Anthocyanin) என்னும் நிறமி அவலின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. இதற்குக் காரணம், பட்டை தீட்டப்படாத சிவப்பரிசியில் இது தயாரிக்கப்படுவதுதான்.
🍋🍋🍋
பலன்கள்...

* நீண்ட நேரத்துக்குப் பசிக்காது.

* உடலை உறுதியாக்கும்.

* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

* குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

* பசியைப் போக்கும்.

* ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

* உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமான உடல் எடையைப் பெற உதவும்.
🍒🍒🍒
* ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக்கு உதவும். ரத்தச்சோகை வராமல் காக்கும்.

* மூளைச் செல்களைப் புத்துணர்ச்சியாக்கும்.

* புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களைக் குடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும்.

*🥒🥒🥒 வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.

* பட்டை தீட்டப்படாத அரிசியில் தயாரிக்கப்படுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது. 

நேரமும் வாய்ப்பும் இருப்பவர்கள், நெல்லை வாங்கி, 2 மணி நேரம் ஊறவைத்து, இடித்து அவலாக்கிப் பயன்படுத்தலாம். சத்துகள் சேதாரமில்லாமல் அப்படியே கிடைக்கும். இன்று சிறுதானியங்களின் அவல்கூட கடைகளில் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம். நெல் அவலை விட தானிய அவலில் சத்துகள் அதிகம். சுவையும் வித்தியாசமாக இருக்கும். 
🍉🍉🍉
சிவப்பு அவல்

எப்படிச் சாப்பிடலாம்?

* பச்சையாக அப்படியே சாப்பிடலாம்.

* வேர்க்கடலை, காய்கறிகளுடன் சேர்த்து வேகவைத்து உண்ணலாம்.

* வெந்நீர், பால், ஜூஸ், தயிரில் ஊறவைத்து சாப்பிடலாம்.

* நெய் அல்லது வெண்ணெயுடன் கலந்து, சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம்.

* பாயசம், புட்டு, கஞ்சி, உப்புமா... என சமைத்துச் சாப்பிடலாம்.

*  நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து உருண்டை செய்து குழந்தைகளுக்குத் தரலாம்.
இந்த உணவு ஒவ்வொரு உடல் அமைப்புக்கு ஏற்றதுபோல் மாறுபடும் மருத்துவர் ஆலோசனை பெற்று பின்பற்றவும்

அபார சக்தி வாய்ந்த* *தோப்புகரணம்* *போடுங்க*

☝🏼 *அபார சக்தி வாய்ந்த* *தோப்புகரணம்* *போடுங்க*

மற்ற உடற்பயிற்சிக்கு விடுதலை கொடுங்க...!!!!!

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.

நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.

தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.

காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.

தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.

உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.

இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் - சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.

நிலக்கடலை மருத்துவ பயன்கள்*

*நிலக்கடலை மருத்துவ பயன்கள்*

நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல் படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாததுமட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.

*பித்தப் பை கல்லைக் கரைக்கும்:*

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்கமுடியும்.

*இதயம் காக்கும்:*

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம்.

இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

*இளமையை பராமரிக்கும்*

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.

நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

*ஞாபக சக்தி அதிகரிக்கும்:*

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.

மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது.

ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

கடலை மிட்டாய் 9488909136

*மன அழுத்தம் போக்கும்:*

மூளையை உற்சாகப்படுத்தும்.

மூளை நரம்புகளை தூண்டுகிறது.

மன அழுத்தத்தை போக்குகிறது.

*கொழுப்பை குறைக்கும்:*

நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புசத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்குநன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது.

நமது உடலின் நோய்எதிர்ப்பு சக்தி மற்றும் ஆண்மையை அதிகரிக்கிறது.

*கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:*

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில்குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள்,நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:*

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு.நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியைஉருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

சர்க்கரை, எய்ட்ஸ் உள்ளிட்ட 51 நோய்களுக்கு மருந்தில்லை: மருந்து கட்டுப்பாட்டு துணை அலுவலர்*

சர்க்கரை, எய்ட்ஸ் உள்ளிட்ட 51 நோய்களுக்கு மருந்தில்லை: மருந்து கட்டுப்பாட்டு துணை அலுவலர்*

*சர்க்கரை, எய்ட்ஸ் உள்ளிட்ட 51 நோய்களுக்கு மருத்துவர்கள் மருந்து அளிப்பது சட்டப்படி தவறு என்று மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு துணை அலுவலர் மணிவண்ணன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். மருந்து, ஒப்பனை பொருள் சட்ட விதிப்படி 51 நோய்களுக்கு அலோபதி மருத்துவத்தில் மருந்தில்லை என்று மணிவண்ணன் கூறியுள்ளார்*. 

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்💊* 🥒பீ

*♨ இன்றைய மருத்துவ குறிப்பு♨*

*📆22/11/2018📆*

*🥒பீன்ஸின் மருத்துவப் பயன்கள்💊*

🥒பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

🥒100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோயைக் குணப்படுத்துவதில், பீன்ஸ்க்கு அதிக பங்கு உண்டு

🥒பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

🥒பீன்ஸில் உள்ள இசோபிளவோன்ஸ் எனப்படும் உயிர்த்தாது உடலுக்கு வலுவைக் கொடுக்கும் தன்மை கொண்டது. மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும்.

🥒பீன்ஸில் உள்ள மக்னீசியம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக்குகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

*◆━━━🌻வசந்தம்🌤━━━◆*

இருதய அடைப்பினை நீக்க வேண்டாம்..! ---

இருதய அடைப்பினை நீக்க வேண்டாம்..! ---

மருத்துவர் பி.எம்.ஹெக்டே , வயது 80 #மருத்துவத்துறையை_தோலுரிக்கிறார்.

கர்நாடக மாநிலம், உடுப்பியை சேர்ந்த திரு.பெல்ல மோனப்ப ஹெக்டே, இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு இருதய மருத்துவர் (Cardiologist) , இந்திய அரசின் பத்பவிபூஷன் விருது பெற்றவர். மருத்துவர் தவிர அவர் சிறந்த கல்வியாளரும் மருந்தியல் ஆராய்ச்சியாளருமாவார்.

இவர் , கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த கருந்தரங்கில் பேசியபோது கூறியதே கீழுள்ள காணொளி. அதாவது 2017 முதல் , மருத்துவ உலகிலும் மற்றும் மருத்துவமனையே கதி என கிடந்த சாமான்ய மனிதருக்கும் பெரும் அதிர்வலைகளை கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கும் விஷயமாக பரவி வருகிறது.

அதாவது , அவர் கூறுவது என்னவென்றால், " இருதயத்தில் அடைப்பு இருந்தால் தயவு செய்து அதனை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம். Blocks அகற்றுகிறோம் என்கிற பெயரில் stent உதவியுடன் ஆஞ்சியோபிளாஸ்டி மூலமும் பைபாஸ் மூலமும் அடைப்புகளை நீக்குவது ஒரு பித்தலாட்டம்" என போட்டு உடைத்துள்ளார்.

மேலும் அவர் கூறுவதாவது, இயற்கையாக இருதயத்தில் ஒரு அடைப்பு உண்டாகுமாயின், நரம்பு தனக்குத்தானே வேற ஒரு பாதையை கண்டுபிடித்து ரத்த ஓட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்கிறதாம்..இறைவன் நமக்கு கொடுத்த வரம் அது என்கிறார். ஆக்ஸிஜன் குறைந்த அளவு உள்ளிழுக்கப்படுவது இருதயத்திற்கு நன்மையை தான் தரும் என கூறும் அவர். அதிகாலையில் வெற்று வயிற்றுடன் செய்ய வேண்டிய ஒரு உடற்பயிற்சியையும் கற்றுத்தருகிறார். அது தினசரி நாம் அனைவரும் எளிதாக செய்யக்கூடிய பிராணாயாமமத்தை ஒத்ததே.

இவர் தாமாக இதை கூறவில்லை என்றும் science translational Medicine எனும் உலகப்பிரபலமடைந்த மருத்துவ மாத இதழில் 2011ல்  வெளியான ஒரு கட்டுரையை அடிப்படையாக வைத்து, ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஜெர்மன் உள்ளிட்ட நான்கு பல்கலைக்கழக மருத்துவக்குழுக்களை கொண்டு Placebo Effect (volume 3- Page 70) எனப்படும் , ஜெர்மன் மருத்துவர் ஒருவரின் கூற்றை மையமாக வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியின் விளைவினை தாம் விளக்குவதாக கூறினார்.

அதாவது குறிப்பிட்ட ஒரு 30 இருதய நோயாளிகளுக்கு Severe Painkiller எனப்படும் சக்திவாய்ந்த வலிநிவாரணியான Morphine ஐ கொடுத்து, உங்களுக்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று கூறப்பட்டதாம். உடனடியாக அவர்களது வலிகள் குறைந்து, நிதான செயல்பாட்டிற்கு வந்த இருதயத்தின்  துடிப்பை கவனித்த அவர்களுக்கு ஆச்சரியம் பிளாசிபோ எபக்ட் வேலை செய்துள்ளது. ஆனால் மொர்பின் என அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்து சாதாரண விட்டமின் மாத்திரைகளாம். இன்னொரு செட் நோயாளிகளுக்கு வெறும் சலைனை ( உப்புநீர் ) கொடுத்து மோர்பின் என கூறியுள்ளார், அவர்களும் குணமடைந்துள்ளார்கள்.

இருதய அடைப்பை நீக்குவதை விட அதை அப்படியே விட்டுவிடுவது இருதயத்தின் ஆயுளை நீடிக்கும். ஆஞ்சியோ செய்வது இருமடங்கு மீண்டும் இதயவலியை கொண்டாக்கும் என்றும் பைபாஸ் செய்வது நான்குமடங்கு வாதம் அடிக்க வழிவகுக்கும் என்றும்...இருதய செயலிழப்பு , திடீர் மரணித்திற்கு வழிவகுக்கும் என்று கூறி...இருதய அடைப்பு நீக்குதல், ஆஞ்சியோ,பைபாஸ், ஸ்டன்ட் வைப்பது என அத்தனையும் வியாபார நோக்குடன் செய்யப்படும் கயவாணித்தனம் என்கிறார்.

மேலும் திரு.ஹெக்டே ,சென்னை ஸ்டான்லியில் இருந்த சமயத்தில், சுப்ரமணிய சாமி தம்மிடம், இருதய அடைப்பு நீக்கத்திற்காக வந்த்தாகவும் அதற்கு டாக்டர், அதல்லாம் தேவையில்லை போங்க...என்று கூறியவுடன் சு.சாமி கோபமடைந்து டாக்டரை திட்டியதாகவும் கூறி சிரிக்கிறார் பி.எம்.ஹெக்டே.

Placebo Effect : மனிதன் நோயுற்றவுடன் மருந்து என்று எதை கொடுத்தாலும் அதன் மீது நம்பிக்கை வைத்து பயபக்தியுடன் பத்தியத்துடன் உண்கிறான். அந்த மருந்து வேலை செய்வதை விட அவனது மூளை, தமது வலிக்கான மருந்து கிடைத்துவிட்டது என நினைத்து சமாதானமடைந்து, டென்சனை குறைத்து நிவாரணத்தை பரப்ப தொடங்குகிறது. எனவே உடலில் நோய் குணமாக , மருந்தைவிட நம்பிக்கையே கைகொடுக்கிறது.
[10/18, 11:26 PM] misssilecharan19: உண்மையான செய்தி. இந்த செய்தி இந்து ஆங்கில நாளிதழில் வந்துள்ளது.

ஆண்மை பலமே* *குடும்ப நலம்*

✍ *இயற்கை* *வாழ்வியல்முறை*
🍏🍏🍓🍓🍋🍋
*ஆண்மை பலமே*
*குடும்ப நலம்*

💝 *அருள்அருள் ஹெர்பல்ஸ்  💙 தயாரிப்பில்*

*அபார தாதுபுஷ்டி லேகியம்*
*செய்முறை விளக்கம்*

*பாதாம் பருப்பு*– *100 கிராம்*
*பிஸ்தா பருப்பு*– *100 கிராம்*
*பாதாம் பிசின்* – *100 கிராம்*
*கசகசா*– *100 கிராம்*
*பூனைக்காலி* *விதை* – *100 கிராம்*
*அமுக்கிரான்* *கிழங்கு* – *100* *கிராம்*
*சாதிக்காய்*- *100 கிராம்*
*சாதிப்பத்திரி* – *100 கிராம்*
*சுக்கு* – *25 கிராம்*
*மிளகு* – *25* *கிராம்*
*வால் மிளகு*– *25 கிராம்*
*அரிசி திப்பிலி* – *25 கிராம்*
*ஏல அரிசி* – *25 கிராம்*
*கோரைக் கிழங்கு* – *25 கிராம்*
*கடுக்காய்த் தோல்*– *25 கிராம்*
*நெல்லிக்காய்* *தோல்*– *25 கிராம்*
*தேன்*– *500 கிராம்*
*குங்குமப்பூ*– *5 மி.கிராம்*
*சர்க்கரை* – *1 கிலோ*
*நெய்* – *1 கிலோ*
*பசும்பால்*
*இளநீர்*
*செய்முறை*
🌤🌤🌤🌤
*அமுக்கிரான்* *கிழங்கை* *உடைத்து மண்* *சட்டியில் 500* *மி.லிட்டர்* *பசும்பாலில்* *அவித்து நிழலில்* *உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். சாதிக்காயை உடைத்து ஒரு* *மண் சட்டியில் போட்டு 500 மி.லிட்டர்* *இளநீரும் 500* *மி.லிட்டர் பசும்பாலையும்* *ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி இடித்துக்* *கொள்ளவேண்டும். சாதிப்பத்திரி* *சுக்கு, மிளகு, வால் மிளகு, அரிசி திப்பிலி*, *ஏல அரிசி, கோரைக் கிழங்கு, கடுக்காய் தோல், நெல்லிக்காய்  தோல் ஆகியவைகளை கல் உரலில் இடித்து வடிகட்டவேண்டும்*.🌻🌻🌻🌻
*அரைத்து பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, பாதாம் பிசின், கசகசா, பூனைக்காலி விதை இவைகளை ஒன்றாக ஆட்டுக் கல்லில் நன்றாக ஆட்டிக் கொள்ளவேண்டும். சர்க்கரையை ஒரு இரும்புக் கடாயில் இடித்துப் போட்டு பாதாம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வெந்நீர் விட்டு மூடி வைத்து 30 நிமிடங்கள் கழித்து தோலை நீக்கி கழுவித் துடைத்து அம்மியில் வெண்ணெய்ப் பதமாக அரைத்துக் கொள்ளவேண்டும்*
*பிஸ்தாப் பருப்பை ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி.லிட்டர் பசும்பாலை ஊற்றி 30* *நிமிடங்கள் மூடி வைத்திருந்து பருப்பை முன்போல் அரைத்துக் கொள்ளவேண்டும்*
*பாதாம் பிசினை ஓர் கண்ணாடி பாத்திரத்தில்* *போட்டு 500 மி.லிட்டர் இளநீர் விட்டு 9 மணி நேரம் அரைத்துக் கொள்ளவேண்டும்*
*கசகசாவை 500 மி.லிட்டர் பசும்பாலில் ஊறவைத்து பாதாம் பிசினையும் கசகசாவையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்*.💑💑💑💑
*பூனைக்காலி விதை 500 கிராம் வாங்கி ஓட்டைப் போக்கி எடை அளவு பருப்பை எடுத்து ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி. லிட்டர் இளநீர் விட்டு மூடி விறகடுப்பில் வைத்து சிறு *தீயாக எரித்து இளநீர் சுண்டியதும் பருப்பை எடுத்து அரைத்துக் *கொள்ளவேண்டும்* *500* *மி.லிட்டர் தூய நீர்* *விட்டு விறகடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்து கொதி வந்ததும் அரைத்துள்ள பருப்பு வகைகளைப் போட்டு மர* *அகப்பையால் கிண்டவேண்டும்*
*ஒரு நிமிடங்கழித்து மற்ற மருந்துச் சரக்குகளையும் கொட்டி 5 நிமிடங்கள் கிண்டி தேன்* *ஊற்றி 3 நிமிடங்கள் கிண்டவேண்டும். இளகல் பதம் வந்ததும் இறக்கி* *நெய்யை உருக்கி ஊற்றி 10* *நிமிடங்கள் கிண்டவேண்டும்* *கிண்டி முடித்த பின்பு குங்குமப்பூ 5 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும்*
*உபயோகிக்கும் முறை*
💝💝💝💝
*10 வயது முதல் 16 வயது வரை சிறுவர்களுக்கு இரவு உணவு* *சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து 5 கிராம் இளகலுடன் பசும்பாலும் *சேர்த்து கொடுக்க *வேண்டும்*
*15 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்களுக்கு 10 கிராம். 21 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு 15 கிராம். இந்த வயதுக்குள்* *திருமணமானவராக இருந்தால் காலை உணவுக்குப் பின்னும், இரவு உணவுக்குப்* *பின்னும் இரண்டு வேளை வீதம் எண்பது நாட்கள்* *சாப்பிடலாம்*
*26 வயது முதல் *30* *வயது வரை* *உள்ளவர்களுக்கு முன் போல் 80 நாட்கள். 31 வயது முதல் 35 வயது வரை* *உள்ளவர்களுக்கு 15 +15 + 15 * *கிராம் இளகல் 80 நாட்கள். காலை, பகல், இரவு உணவுக்குப் பின் 80 நாட்கள் 36 வயதிற்கு* *மேற்பட்டவர்களுக்கும் இதே கணக்கில் மருந்தை* *சாப்பிட்டு வந்தால் நோய்கள் குறையும்*
*தீரும் நோய்கள்*
💞💞💞💞

*ஆண்மைக் குறைப்பாடு, சிறுவர்களுக்கு உடல் இளைப்பு*, *குழந்தையின்மை ஆகிய நோய்கள் குறையும். உடல் நல்ல பலம் பெறும்*
*பத்தியம்*💖💖💖

*பழஞ்சோறு, மொச்சை, பூசணிக்காய், கோழிக் கறி, கருவாடு ஆகிய உணவு வகைகளை சாப்பிடக் கூடாது*
*குறிப்பு*💞💞💞

*30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருந்துண்ணும் நாட்களில் பசிக் குறைவு* *ஏற்பட்டால் மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். ஒரு வேளைக்கு ஐந்து கிராம் வீதம் குறைத்துக் கொள்ளவேண்டும்*💖💖💖💖💖💖
*தேவைப்படுவோருக்கு கொரியரில்* *அனுப்பி வைக்கப்படும்*  
*மேலும்* *தொடர்புக்கு*  *இயற்கை* *மூலிகை*  *ஆலோசகர்* *பெருசங்கர்*
👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧

*செல்* *நம்பர் 6383487768*

*வாட்ஸ்அப்*
*7598258480*
👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...