Thursday, September 6, 2018

நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரியவரும், அதிர்ச்சி..?

நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரியவரும், அதிர்ச்சி..?

பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.

சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது.

அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.

நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்

அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும்.

இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணபடுத்தி உள்ளனர்

எவ்வாறு செய்யலாம்..?

காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பாருங்கள். அறிவியல் ரீதியாக என்ன நடக்கிறது..?

அந்த எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருள்..அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அதை குணபடுத்த பார்க்க வேண்டும்..

அதுவே மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் உங்களுக்கு பித்த நோய் இருப்பதாக பொருள்..

சிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப்போல் அங்கொன்று இங்கொன்றாக நின்றுகொண்டிருந்தால் கபம் அதிகமாக இருக்கிறதென்று பொருள்.

அதேபோல் எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் நோய் விரைவில் குணமடையும் என்பதாக பொருள்

எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாத் தாமதமாகும்.உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுப்பது நல்லது

அதுவே எண்ணெய்த்துளி சிதறினாலோ சிறுநீருக்குள் அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த முடியாது.மிகவும் சிரமமான நிலை என்று அர்த்தம்..

🚶🏽‍♂HAROON SB

மஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்

மஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்

மஞ்சள் உலகின் மிகச்சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் (அதாவது கீல்வாதம்) சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவதில்லை.

மேலும் மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டி-பயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம். அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இது சுற்றுச்சூழலிலுள்ள அபாயகரமான நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளுடன் போராட ஒரு பயனுள்ள தீர்வாகவும் உள்ளது.

மஞ்சள் பால் செய்முறை:

1 அங்குல மஞ்சள் துண்டை எடுத்துக் கொள்ளவும். அதை பாலில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் பாலை வடிகட்டி மஞ்சளை எடுத்துவிடவும். பின்பு குளிர வைத்து, இந்த பாலைக் குடிக்கவும்.

இப்போது இயற்கை நமக்கு தந்த இந்த அற்புதமான அன்பளிப்பின் முக்கியமான 15 நன்மைகளைப் பார்ப்போம்.

சுவாசக் கோளாறு

மஞ்சள் பால், பாக்டீரியா நோய்த்தொற்றுகள் மற்றும் நச்சுயிரி சார்ந்த நோய்த்தொற்றுகளைத் தாக்கும் நுண்ணுயிர் ஆகும். இந்த மசாலாப் பொருள் உடலை வெப்பப்படுத்தும் என்பதால் நுரையீரலின் சளித் தேக்கம் மற்றும் சைனஸ் பிரச்சனைக்கு விரைவான நிவாரணம் வழங்குகிறது. அதுமட்டுமின்றி சுவாச அமைப்பு தொடர்பான நோய்களான ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் அழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

புற்றுநோய்

மஞ்சள் பால் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளதால், இது மார்பகம், சரும, நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கிறது மற்றும் நிறுத்தவும் செய்கிறது.

தூக்கமின்மை

வெதுவெதுப்பான மஞ்சள் பால் அமினோ அமிலம், டிரிப்தோபன் போன்றவற்றை உற்பத்தி செய்து அமைதியான மற்றும் பேரின்ப தூக்கத்தைத் தூண்டும் என்று கூறப்படுகிறது.


ஜலதோஷம் மற்றும் இருமல்

மஞ்சள் பால் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படக் காரணம், அதன் நச்சுயிரிக்கு எதிரான குணமும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் ஆகும். இது தொண்டைப் புண், இருமல் மற்றும் சளிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.

கீல்வாதம்

மஞ்சள் பால், கீல்வாதத்தை குணப்படுத்த மற்றும் நாள்பட்ட மூட்டு வலிகளின் காரணமாக ஏற்படும் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது வலியை குறைத்து நெகிழ்தன்மையுள்ள மூட்டுக்கள் மற்றும் தசைகள் உருவாக்க உதவுகிறது.

வேதனை மற்றும் வலிகள்

மஞ்சள் தூள் கலந்த பொன்னான பால், வேதனை மற்றும் வலிகளிலிருந்து சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதனால் உடலில் உள்ள முதுகெலும்பு மற்றும் மூட்டுகளையும் வலுப்படுத்த முடியும்.


ஆன்டி-ஆக்ஸிடன்ட்

மஞ்சள் பால் ஒரு தடையற்ற முழுமையான எதிர் ஆக்ஸிகரணிகளுக்கு ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது. இதனால் பல வியாதிகளை குணப்படுத்தவும் முடியும்.


இரத்தத்தை சுத்தப்படுத்தும்

மஞ்சள் பால் ஆயுர்வேத பாரம்பரியத்தில் இரத்தத்தை தூய்மைப்படுத்தும் ஒரு சிறந்த பொருளாகவும் மற்றும் சுத்தப்படுத்தியாகவும் கருதப்படுகிறது. இது உடலில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு உயிர்ப்பூட்டு பொருளாகவும் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது. மேலும் இது நிணநீர் அமைப்பு மற்றும் இரத்த குழாய்களில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் நீக்கி, இரத்த மெலிவூட்டியாக வேலை செய்கிறது

கல்லீரல் நச்சு நீக்கி

மஞ்சள் பால் ஒரு இயற்கையான கல்லீரல் நச்சு நீக்கியாக விளங்குகிறது. இது இரத்தத்தை தூய்மைப்படுத்தி, இதனால் கல்லீரல் நன்றாக செயல்பட உதவும் ஒரு ஊக்கியாகவும் இருக்கிறது. இதன் தூய்மைப்படுத்தும் குணத்தினால், இது கல்லீரலுக்கு ஆதரவாகவும் மற்றும் நிணநீர் மண்டலத்தையும் சுத்தமாக்குகிறது.


எலும்பு சுகாதாரம்

மஞ்சள் பாலில் கால்சியம் நிறைந்து காணப்படுவதால், அவை எலும்புகள் ஆரோக்கியமாக மற்றும் வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது. இந்தியாவில் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், நல்ல ஆரோக்கியமான எலும்பைப் பெற, இந்த மஞ்சள் பாலை தினசரி குடிக்கிறார். மஞ்சள் பால் எலும்பு தேய்மானத்தையும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸையும் குறைக்கிறது.


செரிமான நலம்

இது ஒரு சக்தி வாய்ந்த கிருமி நாசினியாக இருப்பதால், குடல் சுகாதாரத்தை ஊக்குவிக்கிறது. மேலும் வயிற்று புண்களையும் மற்றும் பெருங்குடல் அழற்சியையும் கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி இது சிறந்த செரிமான சுகாதாரத்திற்கும் மற்றும் வயிற்றுப்புண்கள், வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணத்தையும் தடுக்கிறது.



மாதவிடாய் தசைப்பிடிப்புகள்

இது வலிப்பு நோயைக் குறைக்கும் மருந்தாக இருப்பதால், மாதவிடாய் காலத்தில் உண்டாகும் தசைப்பிடிப்புகள் மற்றும் வலியையும் போக்குகின்றது. கர்ப்பிணிப் பெண்களுக்கு எளிதாக பிரசவம் நடைப்பெற, குழந்தைப் பேற்றுக்குப் பின் நலம் பெற, அதிகமான தாய்ப்பால் சுரத்தலுக்கு மற்றும் கருப்பைகள் வேகமாக சுருங்குதலுக்கும் மஞ்சள் தூள் கலந்த பொன்னான பாலை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.


சொறி மற்றும் சருமம் சிவத்தல்

கிளியோபாட்ரா, மென்மையான மிருதுவான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெற மஞ்சள் பாலில் குளித்தார். இதே போல், ஒளிரும் சருமத்தைப் பெற வேண்டுமானால் மஞ்சள் பாலை குடிக்க வேண்டும். மேலும் சருமம் சிவத்தல் மற்றும் கரும்புள்ளிகளின் தோற்றத்தைக் குறைக்க, ஒரு பஞ்சுருண்டையை மஞ்சள் பாலில் ஊற வைத்து, பின் அந்த பாலில் நனைத்த பஞ்சினைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் சருமமானது முன்பை விட இன்னும் பிரகாசமாகவும் மற்றும் ஜொலிக்கவும் செய்யும்.

எடை குறைப்பு

மஞ்சள் பால் உணவில் இருக்கும் கொழுப்பை முறிக்க உதவுகிறது. இதனால் இது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது.

எக்ஸிமா/சிரங்கு

எக்ஸிமா சிகிச்சைக்கு தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பால் குடிக்க வேண்டும். இதனால் நாளடைவில் அந்த பிரச்சனை குணமாகும்.

ஆட்டிசம் Autism குணமாகும்.

ஆட்டிசம் Autism குணமாகும்.

உங்களுக்கு தெரிந்த சிறப்பு குழந்தைகள் யாரேனும் இருந்தால் தயவுசெய்து அவர்களின் பெற்றோரிடம் இந்த செய்தியை சொல்லுங்கள்.

விரிவான ஆலோசனைக்கு +917373773396 என்ற எண்ணை அழைக்கவும்.

இந்த செய்தியை ஷேர் செய்வதன் மூலமும் நீங்கள் பல குழந்தைகள் குணமாக உதவ முடியும்.

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது விளையாட்டு காரியம் அல்ல, அது அறிவியல்..

#முன்னேர்கள்___மூடர்கள்__அல்ல__________விஞ்ஞானிகள்

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது விளையாட்டு காரியம் அல்ல,
அது அறிவியல்..

குழந்தை கருவில் இருக்கும்போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது. குழந்தை பிறந்து தொப்புள் கொடி உடலில் இருந்து பிரிந்த பின்புதான் உணவு குழலின் விட்டம் விரிய தொடங்குகிறது.. இது முழுமையடைய ஐந்து வருடம் ஆகிறது.

நிலவை காட்டி சோறு ஊட்டும் போது, குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது தொண்டை மற்றும் உணவுக்குழல் விரிவடைகிறது. அப்போது உணவு இலகுவாக இறைப்பையை நோக்கி இறங்குகிறது.

மேலும் தொண்டைக் குழலில் கீழ் நோக்கி இறங்கும் அலைவு இயக்கங்கள் மற்றும் செரிமான ஊக்கிகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கின்றன. இப்பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் உணவு செரிமான மண்டலம் ஆரோக்கியம் பெறுகிறது. மேலும் நிலாவை காட்டி சோறு ஊட்டும்போது குழந்தைகள் உணவில் ஆர்வம் செலுத்துகிறார்கள்..

செல்போனை காண்பித்தும், டிவியை காட்டியும் குழந்தைகளுக்கு உணவூட்டும் இன்றையை தலைமுறை தாய்மார்கள் இனியாவது திருத்தி கொள்ளுங்கள்.

தெ.இரவிச்சந்திரன்🙏

வலி தீர்க்கும் வழி °°°°°°°°°°

வலி தீர்க்கும் வழி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
        அதிகாலையில் ஒரு தொலைபேசி அழைப்பு .கால்கள் நரம்பு இழுப்பதாகவும்,மூட்டுகளில் கடுமையாக வலி இருப்பதாகவும் இதனால் இரவில் நிம்மதியாக தூங்க முடிவதில்லை என்றும் சொன்னார் அந்த நபர் .இதற்கு தீர்வு வேண்டும் என்று கேட்டிருந்தார்,

         இதே போன்ற வலி ,வேதனைகளில் அல்லல்படுவோர் ஏராளம் , உச்சியில் இருந்து  ,உள்ளங்கால் வரை வலி எந்தப் பகுதியிலும் ஏற்படும் .இதற்கு எந்த பாரபட்சமும் இல்லை .இது எங்கள் ஏரியா,   எனவே இங்கே மட்டும் தான் இருப்பேன்  என எந்த வலியும் அடம்பிடிப்பதில்லை,
           விடாமல் இருக்கும் வலி,விட்டு விட்டு வரும் வலி மொத்தத்தில் அனைத்தையும்  இரண்டாக பிரிக்கலாம் .செரட்டோனின் மற்றும் சப்ஸ்டைன்ஸ் பி ஆகிய வேதிப்பொருட்கள் வலி உணர்வை மூளைக்கு கடத்துகின்றன. வலி நிவாரணிகளால் நரம்பு முடிச்சுகளில் மரத்துப் போக செய்வனால் தற்காலிகமாக வலி அற்ற உணர்வு ஏற்படுகிறது .ஆனாலும் மீண்டும் வலி ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது, வலிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் ஆயிற்றே?
            எப்படி இரண்டில் அடங்கும்  என கேள்வி இருக்கும் எனில்  நன்றாக யோசித்துப் பாருங்கள் ,
உச்சியில் இருந்து  பாதம் வரை   அந்த இடத்தின் பெயரால் வலி குறிப்பிடப்படுகிறது ,தலையில் ஏற்படுவது தலைவலி,         கால்களில் வருவது கால்வலி,    தோள்பட்டை எனில் தோள்வலி,          இது போன்று வலிகளை பட்டியல் இடலாம்,
        ஆனால் வலி  வலி தானே ?
இதற்கு ஒரு எளிய வழியில் தீர்வு காணலாம் ,
     இந்த வலிகள் அனைத்தும் வாதநோய் சார்ந்து வருகிறது என்பதால் மூன்று மூலிகைகளை இதற்கு *வாதநிவர்த்தி* மருந்தாக பயன்படுத்தி குணம் அடையலாம் ,

   அரசஇலை.
துளசி இலை
அத்தி இலை
இந்த மூன்றும் சம அளவில் எடுத்து பொடி செய்து பால் அல்லது மோர் அல்லது சுடுதண்ணீரில் கலந்து குடித்து வர வலிகள் அகலும்.

வாயுகோளாறு,நரம்பு தளர்ச்சி ,வாதநோய் இருப்போரும் இதைப் பயன்படுத்தலாம் .
      தேவைப்படும் அன்பர்கள் இந்த *வாதநிவர்த்தி*  பொடியை இலவசமாக நேரில் அல்லது கூரியரில் பெற்றுக் கொள்ளலாம் . 
9865287123--(whatsapp only )

https://www.facebook.com/commerce/products/1899854156756343/?notif_id=1522236313193537&notif_t=commerce_product_review&ref=notif/www.facebook.com/Shree-Nandhi-179077666049665/

அக்கி _ HERPES AND ITS TYPES

அக்கி – Herpes

அக்கியின் வகைகள் என்ன என்ன ?

அக்கியில் நிறைய வகைகள் இருந்தாலும் இரண்டு முக்கியமாக காணப்படுகிறது. Herpes Zoaster மற்றும் Herpes Simplex. அக்கி பிரச்னை நரம்புகளை தான் பொதுவாக பாதிக்கும்.

அக்கி யாருக்கு வரும் ?

யாருக்கு வேண்டுமனாலும் வரலாம். சின்ன வயதில் அம்மை போட்டிருந்தால், அதே வைரஸ் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் சமயத்தில் அக்கியாக உருவெடுக்கும்.

என்ன அறிகுறி ?

ஆரம்பத்தில் அதிக உடல் எரிச்சல் இருக்கும். தீப்புண் ஏற்பட்டது போன்ற எரிச்சல். அதன்பின் பாதிக்கப்பட்ட பகுதியில் உடல் வலி ஏற்படும். அதன் பின்னர் தான் அக்கி வெளிப்படும்.

அக்கியின் பாதிப்பு எப்படி இருக்கும்? உடலில் எங்கே தென்படும் ?

அக்கியி்ன் வெளிப்புற பாதிப்பு சருமத்தில் இருக்கும் வியர்குரு அல்லது அம்மை போன்ற சிறுகட்டிகள், நீர் கொப்புளங்கள் உடலில் ஏற்படும். சருமம் சிவக்கும். ஜுரம், உடல் வலி, உடல் எரிச்சல் ஏற்பட்டு, உடல் பலவீனம் அடையும். கழுத்து மற்றும் வாய் போல், முகம் அல்லது உடலின் ஒரு புறத்தில் ஏற்படும். கட்டி உடைந்து புண் ஆனாலும் தழும்புகள் எதுவும் ஏற்படாது ஆறிவிடும். சொறிந்தாலோ கீறினாலோ இன்ஃபெக்ஷனாகி தழும்புகள் ஏற்படும்.

சவ்வுப்படலம் சருமத்தில் சேரும் இடத்தில் இது வர வாய்ப்புள்ளது. வாய், மூக்குப் பகுதிகளில் சிலருக்கு அதிக பாதிப்புத் தெரியும். அந்தரங்கப்பகுதியிலும் வரலாம். சருமத்தில் வரலாம். உடலில் வயிற்றில், நெஞ்சில் வரலாம். கிருமி நரம்பில் தங்கி, சருமத்தில் அந்த நரம்புப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். கண்களைக் கூட பாதிக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை

இச்சமயத்தில் உடலுக்கு ஓய்வு தேவை. வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரிடம் உடனடியாகக் காண்பிக்க வேண்டும்.

ஒரு தடவை வந்தால் மீண்டும் வருமா?

ஒரு தடவை வந்துவிட்டால் மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. அவரவர் உடல் தன்மையைப் பொருத்தது அது. ஆனால் வரக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் விரைவில் குணமடையலாம்.

சிகிச்சை

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி வைரஸ் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துறைப்பார்கள். லாக்டோ கேலமைன் லோஷன் தடவலாம். முறையான சிகிச்சையில் இரண்டு வாரத்தில் கட்டுப்படுத்திவிடலாம். தண்ணீர், பழரசம், கஞ்சி, இளநீர் என அதிக திரவ உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி
நட்புடன்
இராம்.கதிர்வேலு...

!* *தும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க, காது சவ்வு கிழியும்!*

*எச்சரிக்கை!* *தும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க, காது சவ்வு கிழியும்!*

‘அச்ச்ச்ச்ச்ச்ச்…’ என சத்தம் போட்டு பொது இடத்தில் தும்முவதை கூட இப்போது அநாகரீகம் என்று கருதுகிறோம். கூட்ட நேரிசல் மிக்க பேருந்திலோ, கம்ப்யூட்டர் கீ போர்டுகளில் டைப் அடிக்கும் சத்தம் மட்டுமே நிறைந்திருக்கும் அமைதியான அலுவலகத்திலோ யாரவது சத்தம் போட்டுத் தும்மி விட்டால் போதும், அவர் ஏதோ கொலை குற்றம் செய்ததைப் போல் அனைவரது பார்வையும் அவர் மீது பாயும்.

ஆனால் சபை நாகரீகம் கருதி பலர் தும்மலை அடக்க முயற்சிக்கிறோம், அதன் ஆபத்து புரியாமல். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தும்மலை அடக்க மூக்கையும், வாயையும் பொத்துவதன் மூலம் காது சவ்வு கிழிந்து விடும் அபாயம் இருப்பதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் இது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களையும் பாதிக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. தும்மலை நாம் அடக்கும்போது நமது நுரையீரல்களுக்குள் அடைபட்டுப் போகும் காற்று வெளியேற வேறு வழியைத் தேடும். அப்போது காது துவாரம் வழியாக வெளியே செல்ல அதீத அழுத்தத்துடன் காற்று முந்தும், அப்படி அழுத்தம் நிறைந்த இந்தக் காற்று ஒன்று Ear drum எனப்படும் நமது காது சவ்வைக் கிழிக்கவோ அல்லது அப்படியே மேலேறி மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களைத் தாக்கவோ அதிக வாய்ப்பு உள்ளது.

34-வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் இப்படி தும்மலை அடக்க முயற்சித்து தனது மூக்கையும் வாயையும் ஒரே நேரத்தில் மூடி உள்ளார். உடனே அவரது தொண்டையில் ஏதோ வீக்கம் ஏற்பட்டுள்ளது

அதைத் தொடர்ந்து இருமலும், வாந்தி வருவதைப் போன்ற உணர்வும் இவருக்கு ஏற்பட்டுள்ளது, உடனே மருத்துவரின் உதவியை இவர் நாடியுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் இவருடைய தொண்டையின் பிற்பகுதியில் முறிவு ஒன்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் தன்னுடைய குரலை இழந்து, உணவுப் பொருட்களை கூட இவரால் விழுங்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் டோமோகிராஃபி ஸ்கேன் மூலம் இவர் தும்மலை அடக்கிய போது காற்று குமிழ்கள் இவரது தொண்டை மட்டும் இல்லாமல் விலா எலும்பு வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

உடனே இவரை மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்து தொடர்ந்து 7 நாட்களுக்கு குழாய் மூலமாக உணவை ஊட்டி அந்த வீக்கம் குறைந்த பிறகு இனி தும்மல் வந்தால் அதை அடக்காதீர்கள் என அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது போன்ற எந்த ஆபத்திலும் நீங்கள் சிக்காமல் இருக்க இனியாவது தும்மல் என்பது ஒரு இயற்கையான விஷயம்தான், தும்முவதால் யாருடைய கௌரவத்திற்கும் குறைவு ஏற்படாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அது மட்டுமல்ல நாம் ஒரு தடவை தும்மும்போது பல்லாயிரக் கணக்கில் நோய்க் கிருமிகள் வெளியேறுகிறது.

- அனைவருக்கும் பகிருங்கள்!

ஆயில்_புல்லிங்

ஆயில்_புல்லிங்

பத்து_மில்லி
எண்ணெயில் பறந்து_போகும் நோய்கள்……!!! ??????

*நல்லெண்ணெய்யின் நற்குணம் தெரியுமா உங்களுக்கு? எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை!*

*நல்லெண்ணெய்யின் நற்குணம் தெரியுமா உங்களுக்கு?*

ஆயில்_புல்லிங்
(Oil Pulling)

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்
சுத்தமான நல்லெண்ணெய்
இரண்டு தேக்கரண்டி
(10 மில்லி லிட்டர்)
வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும்
பற்களின் இடைவெளிகளுக்கிடையே
ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க
வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள்
வரை தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும்.

முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று
எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில
நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள்
எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில்
எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய்,
நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது
அதனை உமிழ்ந்து விட வேண்டும்....

#_ஆயில்__புல்லிங் #செய்வதால்
#குணமாகும்_நோய்கள்

1, பல் மற்றும்
ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்ட்ரியா
போன்ற கிருமி தொற்று நோய்களிலிலருந்து முதலில் விடுதலை பெறலாம் .....

2, கண் நோய்கள்

3, காது நோய்கள்

4, மூக்கு நோய்கள்

5, நுரையீரல்
நோய்கள்,

6, வயிறு குடல் நோய்கள்,

7, மலச்சிக்கல்,

8, மூலம்,

9, தும்மல்,

10, சளி,

11, களைப்பு,

12, மூட்டு வலி,

13, முழங்கால் வலி,

14, தூக்கமின்மை,

15, ஆஸ்துமா,

16, வாயுத்தொல்லை,

17, ஒவ்வாமை
(அலர்ஜி)

18, எய்ட்ஸ்,

19, சர்க்கரை வியாதி

20, இரத்த அழுத்தம், 

21, இதயநோய்கள்,

22, பார்க்கின்சன்,

23, கல்லீரல் நோய்,

24, ரத்தபுற்று (அ)
எலும்புமஜ்ஜை புற்றுநோய்,

25, பக்கவாதம்,

26, நரம்பு சம்பந்தமான நோய்கள்,

27, வெரிகோஸ் வெயின்ஸ்,

28, வலிப்பு,

29, மாதவிடாய்
தொல்லைகள்,

30, வயிறு சம்பந்தபட்ட
பிரச்சனைகள்,

31, மார்பக நோய்கள்,

32, கருப்பை
தொடர்பான நோய்கள்,

33, முகப்பருக்கள்,

35, சொறி படை

36, அனைத்து தோல் நோய்கள்.

37, தலைவலி,

38, ஒற்றைத் தலைவலி

போன்ற எண்ணிலடங்கா நோய்களையும் மிக
எளிதான முறையில் குணப்படுத்தும்
முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே நமக்கு தந்துள்ளனர் நம்
முன்னோர்கள்.

‘ஆயில் புல்லிங்' (oil pulling) மூலமாக மிக
எளிமையான முறையில் குணமாக்கியும்
இருக்கிறார்கள் .....

தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்
கொள்பவர்களை
கடுமையான வலியால் அவதிக்குள்ளாக்கும்
நோய்கள் தாக்குவதில்லை என்று
மருத்துவர்களே கூறுகின்றனர் .....

நோயின் தன்மைக்கு ஏற்ப ஒன்றிலிருந்து
மூன்று முறை செய்தால் நோயின் தீவிரம்
குறையும்..

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்“
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்”
என்பது பழமொழி. இதே போல மற்றொரு
அனுபவ உண்மை என்னவெனில், வாயில்
நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால்
நோய்கள் பல நீங்கும்.

#எந்தநேரத்தில் #செய்ய_வேண்டும்?

இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற
நேரம் அதிகாலை. நாம் பல் தேய்த்த பிறகு,
உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல
பலன் கிடைக்கும்.

#எவ்வளவு_காலம்__செய்ய  #_வேண்டும்?

நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல
மனநிலை ஆகியவை வரும் வரைக்கும்
எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய
வேண்டும். ஆனால் 9 மாதம் முதல் ஓர்
ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு
செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல
பாதுகாப்பு கிடைக்கும்.

#நன்மைகள்:

வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான
ஈறுகள். தினமும் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி ,
பற்கள் வெள்ளையாகவும் ,
ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.

#வாய்துர்நாற்றம்

தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும்
வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல்
இருக்கும்.

#ஈறுகளில்_ஏற்படும்  #இரத்தக்கசிவு

ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில்
புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது
தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக
இருக்கும். பல் கூச்சம் நின்று பல் வலி
மறையும்.

#உடலின்_எனர்ஜி #அதிகரிக்கும்

ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால்,
உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள்
முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன்
இருக்கலாம்.

#ஒற்றை
#தலைவலி

ஒற்றை தலை வலியால் அவஸ்தைப்
படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், அந்த தொல்லையில் இருந்து
விடுபடலாம்.

#சைனஸ்_ஆஸ்துமா

சைனஸ் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள்,
தினமும் ஆயில் புல்லிங் செய்தால், இந்த
பிரச்சனைகள் குணமாகும்.

#நிம்மதியான
#தூக்கம்

தூக்கமின்மையால் அவஸ்தைப் படுபவர்கள்
ஆயில் புல்லிங் செய்தால், இரவு நேரத்தில்
நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

#பொலிவான_சருமம்

ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள
நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு
இருக்க உதவும்.

#தைராய்டு

தைராய்டு உள்ளவர்கள், ஆயில் புல்லிங்
செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை
சீராக சுரக்க செய்து, தைராய்டு
பிரச்சனையைக்
கட்டுப்பாட்டுடன்
வைக்கலாம்.

#பார்வைக்கோளாறு

பார்வைக்கோளாறு இருந்தால், ஆயில் புல்லிங்
செய்து வர பார்வைக் கோளாறானது
சரியாகும்.

#மூட்டுபிரச்சனைகள்

மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், தினமும்
ஆயில் புல்லிங் செய்து வந்தால் அது
மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும்
வலியை குணமாக்கும்.

#சிறுநீரக_செயல்பாடு

தினமும் ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக
கோளாறு ஏற்படாமல் , சிறுநீரகமானது சீராக
செயல்படும். தோலின் மீது குழிகளும்
வெடிப்புகளும் மறைந்து தோல்
பளபளப்பாகிறது. கை ,கால், விரல்கள்
மெருகுற்று ரத்த ஓட்டம் பெருகியதற்கான
அறிகுறிகள் தெரியும். தோல் அரிப்புகள்
படிப்படியாக குறைந்து 3 மாதங்களில்
மறையும். பொடுகு தொல்லை தீரும். பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு பெறும்...

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...