DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Tuesday, July 19, 2022
சைக்கிள் ஓட்டுவதினால் ஏற்படும் நன்மைகள்:
சைக்கிள் ஓடுவதினால் ஏற்படும் நன்மைகள்:
--------------------------------------------------------------------------------
நீண்ட துாரங்களுக்கு பிரயாணம் செய்யவும், மேடு பள்ளங்களிலும், குறுகிய பாதைகளிலும் பிரயாணத்திற்கு சைக்கிள் பயன்படுகின்றது. சாதாரண உடல்நிறையுடைய வளர்ந்த ஒருவர் தொடர்ச்சியாக ஒரு மணித்தியாலயத்திற்கு சைக்கிள் ஓடும்போது 500 – 600 கலோரி சக்திகள் எரிக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் சைக்கிள் ஓட விரும்புபவர்கள் வாரத்தில் 2/3 நாட்கள் 20-30 நிமிடகள் வரை மிதமான வேகத்தில் ஓட துவங்கி பின்னர் படிப்படியாக வேகத்தையும் நேரத்தையும் அதிகரித்தால் மேற்கூறிய பலன்களை அடையலாம்.
(1) பைசிக்கிள் ஓடும்போது சூழலுக்கு எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. இங்கு புகையோ, ஒலியோ ஏற்படுவதில்லை. இதனால் சூழலும் மாசுபடுவதில்லை. இதனால் இது ஒரு சுற்றாடலுக்கு நட்பானதும் பாதுகாப்பானதுமான (ENVIONMENT FRIENDLY AND ECO PROTECTIVE) ஒரு முறையாகும்.
(2) தொடர்ச்சியாக சைக்கிள் ஓடுவதால் கட்டுமஸ்த்தான உடம்பை பெற்றுக்கொள்ளலாம். ஜிம்மிற்கு சென்று பல மணி நேரங்களை செலவு செய்வதைவிட, சைக்கிள் ஓடும்போது இலகுவாக விரும்பிய உடலமைப்பு கிடைக்கின்றது.
(3) சைக்கிளோட்டம் ஏரோபிக்ஸ் வகை உடற் பயிற்சிக்குள் வருவதனால், இரத்தக் குழாய்கள், இதயம், நுரையீரல் போன்ற மூன்றையும் ஒன்று சேர இயங்க வைக்கின்றது.
(4) சைக்கிள் ஓடும்போது உடலின் எல்லா பாகங்களும் இயங்குவதால், 30 நிமிடம் ஓடும்போது 300 கலோரி கொழுப்பு எரிக்கப்படுகின்றது. முதல் 10 நிமிடங்களில் வியர்வையினுாடாக கழிவுகள் வெளியேறத் தொடங்குகின்றன. அடுத்த 20 நிமிடங்களில் சக்திக்காக குளுக்கோஸ் எரிக்கப்படுகின்றது. 30 நிமிடங்களில் கெட்ட கொழுப்புக்கள் குறையத் தொடங்குகின்றன. இதன் மூலம் இரத்த ஓட்டம் உடல் முழுதும் சீராகும். இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.
(5) மற்றைய உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக பல மணி நேரம் செய்தாலும் அவை மொத்த உடல் உறுப்புக்களை ஈடுபட வைக்காது. ஆனால் சைக்கிள் ஓட்டம் அனைத்து உடற்பயிற்சிகளையும் செய்த பலனை உடலுக்கு பெற்றுக்கொடுக்கும்.
(6) தொடர்ச்சியான சைக்கிள் ஓட்டம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
(7) மனம் மகிழ்ச்சியாக இருந்தால் ஆரோக்கியம் அதிகமாகும். ஆரோக்கியம் அதிகமானால் ஆயுள் அதிகரிக்கும் என்பதற்கேற்ப தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டினால் நமது ஆயுளில் ஒரு மணிநேரம் அதிகரிக்கக கூடும் என்று நெதர்லாந்து நாட்டில் உள்ள உட்ரெச் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.
(8) உடலின் கீழ் அவயவங்கள், இடுப்பு வளையம் போன்றவைகளுக்கு உறுதியை வழங்குவதுடன், முழங்கால் மூட்டின் அசைவையும் சீராக்கிநமது சீரான இயக்கத்திற்கும், நடமாட்டத்திற்கும் உதவுவதுடன், உடலிற்கு புத்துணர்ச்சியையும் வழங்குகின்றது.
(9) மூட்டுவலியை தொடர்ச்சியான சைக்கிள் பயிற்சியின் மூலம் வெகுவாகக் குறைக்கலாம். உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளும் இறுகும் தன்மை மாறி வலுவான மூட்டாக மாறுகிறது. கை தொடை, முதுகு முள்ளந்தண்டு, இடுப்புப் பகுதி, கால் தசைகள் போன்றவை உறுதியாகின்றன. பாதங்களின் தசைகளும் உறுதியாகின்றது. உடலில் இருக்கும் எலும்புகளை உறுதியாக வைக்கிறது.
(10) உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க தவறியவர்கள் உடல் பயிற்சியின்றி உழைப்பின்றி உடல் பருமனைக் கொண்டிருப்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் சைக்கிள் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
(11) பொதுவாகவே உடற்பயிற்சி செய்து முடித்த உடன் உடலில் மகிழ்ச்சிக்குரிய ஓமோன் சுரக்கத் தொடங்குகின்றன. இதனால் எப்போதும் மனதில் உற்சாகம் அதிகமாக இருக்கும். இத்தகையவர்களை எப்போதும் சோர்வு, அழுத்தம் என்பது தாக்காது. நேர்மறை எண்ணங்களுடன் வாழ்க்கையில் அனைத்து சவால்களையும் கடந்துவிடும் அளவுக்கு உற்சாகத்தை சைக்கிள் பயணம் தருகிறது.
(12) சைக்கிள் ஓடும்போது உச்சி முதல் பாதம்வரையிலான உடலின் உள்ளுறுப்புக்கள் அனைத்தும் ஒருங்கே செயற்படுவதால், உடலுக்கும் உள்ளத்திற்குமான தொடர்பு அதிகரிக்கின்றது. இதனால் உள நெருக்கீடு (ஸ்ரெஸ்) குறைகின்றது.
(13) உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதிலும், மலச்சிக்கல் வராமலும், குடல்களின் இயக்கம் சீராக இருக்கவும் முக்கியமாக உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் அழகையும் கம்பீரத்தையும் அதிகரிக்கவும் சைக்கிள் பயணம் உதவியாக இருக்கும் என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள்.
(14) சைக்கிள் ஓடும்போது, கால்களின் தசைகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் சீரான குருதி வழங்கலுக்காக, இதயம் சீராக இயங்கி, இதயத்தின் உறுதி 3 – 7 சதவீதத்தால் அதிகரிக்கின்றது. வாரத்திற்கு 20 மைல் சைக்கிள் ஓடுபவர்கள் ஏனையவர்களுடன் ஒப்பிடும்போது, இதய நோயின் தாக்கத்திற்குள் உள்ளாவது 50 சதவீதத்தினால் குறைக்கப்படுகின்றது.
(15) சிறந்த ஆரோக்கியமான நுரையீரல் சுகாதாரத்தை மேம்படுத்துகின்றது.
(16) பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றது.
(17) சைக்கிளோட்டிகள் சிறந்த துாக்கத்தை பெறுபவர்கள் என் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
(18) மூளையின் ஆரோக்கியத்தை அதிகரித்து, வயோதிப காலத்தில் மூளையில் வருகின்ற நோய்களை இல்லாமல் செய்கின்றது.
(19) கனமான உடம்பை உடையவர்களுக்கு நடைப்பயிற்சி செய்யும்போது கால் மூட்டு தேய்மானம் அதிகம் ஏற்பட வாய்ப்பு அதிகம். சைக்கிள் ஓட்டும்போது இது குறைவு.
(20) எரிபொருட் செலவு குறையும் அல்லது நிறுத்தப்படும்.
(21) வாகனப் பராமரிப்பு செலவு சேமிக்கப்படும்.
(22) தெருக்களில் வாகன நெரிசல் குறைக்கப்படும்.
(23) நேரம் சேமிக்கப்படும்.
(24) விபத்துக்கள் குறையும்.
(25) வாகன நிறுத்துமிடங்களுக்கு ஒதுக்கப்படும் பெரிய இடங்கள் குறையும்.
(26) மற்றைய வாகனங்களை விட மிதிவண்டியில் செல்லும்போது, சூழலையும், மனிதர்களையும் அவதானிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். உறவுகள் மேம்பட வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
(27) ஒவ்வொரு நாளும் மிதிவண்டி ஓடுவராக இருந்தால், கொஞ்சம் அதிகமாக அல்லது இரண்டாவது தடவையும் காலையில் சாப்பிடலாம்.
(28) மிதிவண்டிப் பாவனை, வீதிகள், பாதைகள், தெருக்கள், புவியியல் அமிசங்கள் அதன் அமைவிடங்கள், விரைவாக செல்லக்கூடிய வழிகள் பற்றிய திறனை அதிகரிக்கும்.
(29) சமூகத்தோடு உறவுகளை அதிகரிக்கச் செய்து, புகழ் பெறுவீர்கள்.
(30) மற்றவர்களுக்கு முன்மாதிரியாவீர்கள்.
(31) சைக்கிள் ஓட்டதொடங்கும் முதல் நாளிலேயே 20 கி.மீ வேகத்தைக் கடக்க முயற்சிக்காமல் சிறிது சிறிதாக தூரத்தை அதிகரிக்கலாம். முதலில் 5 கி.மீ தூரம் வரை சைக்கிள் ஓடலாம். அதன் பிறகு படிப்படியாக தூரத்தை அதிகரிக்கலாம். குழந்தைகளும், மாணவர்களும் பாடசாலைகளுக்கு சைக்கிளில் செல்லலாம். வாரத்தில் ஒரு நாள் ஒவ்வொருவரும் தங்களது அலுவலகங்களுக்கு சைக்கிளில் செல்ல முயற்சிக்கலாம். இதன் காரணமாக பெற்றோலிய எரிபொருளுக்கான செலவுகள் தவிர்க்கப்பட்டு, வளி மாசடைவதும் தவிர்கப்படும் என்கின்றார்கள் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள். அதே வேளை, சிறு குழந்தைகள், மாணவர்கள் அதீத உடற்பருமனுக்குள்ளாகமல் இருக்கவும், தொடர்ச்சியாக ஒரே இடத்தில் இருந்து செல்ஃபோனில் நேரம் தொலைப்பதையும் தவிர்க்கவும் சைக்கிளைப் பழக்குங்கள் என்கிறார்கள் குழந்தை மருத்துவ நிபுணர்கள்.
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...