Saturday, November 10, 2018

கருப்பட்டி மருத்துவம்!கிராமங்களில் இன்றும் ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான்.

Original Palm Jaggery Available for Sale  (சுத்தமான அசல் பனங்கருப்பட்டி உள்ளது).

WhatsApp or Call : 9488909136

கருப்பட்டி மருத்துவம்!கிராமங்களில் இன்றும் ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான்.

பதநீரை காய்ச்சி அதிலிருந்துபெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. அதிலும் இனிப்புக்காக மட்டும் இதைப் பயன்படுத்த வில்லை.

இந்த கருப்பட்டியில் கூடுதலான மருத்துவத் தன்மை இருப்பதாலும்தான் அதைப் பயன்படுத்தினார்கள். பனங்கருப்பட்டி யில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படி உடல் நலனுக்கு மிகவும் உகந்தது என்பதால் இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து வருகிறது.

இப்போது பரவலாகக் காணப்படும் டெங்கு நோயைக் குணப்­ப­டுத்த கரும்பு கருப்­பட்­டியும் சின்­ன­வெங்­கா­யமும் சிறந்த மருந்­தாகும். என இலங்கை கரும்பு ஆராய்ச்சி நிலையம் இந்­திய கரும்பு ஆராய்ச்சி நிலை­யத்­துடன் இணைந்து மேற்­கொண்ட ஆய்வில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. -

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில்சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.. சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.

*கருப்பட்டி தயாரிக்கும் காணொளியை பார்க்க  கீழே உள்ள Link ஐ செய்யவும்*

https://youtu.be/IK-31GAeRYo

*நண்பர்களுக்கு பகிரவும்*

*இயேசு என்பவா் உண்மையில் இருந்தாரா?*

*இயேசு என்பவா் உண்மையில் இருந்தாரா?*

இயேசு எனப்படும் வரலாற்று நாயகா் உண்மையில் உலகில் இருக்கவில்லை எனப் பல ஆய்வுக் கட்டுரைகளும், புத்தகங்களும் வெளிவந்துள்ளன.
அவற்றின் பட்டியலை  *www.wikipedia forgery in Bible*  எனும் வலைதளத்திலும்,
*Crimes of christianity* எனும் நூலிலும் காணலாம்.

*The Christ Myth by John Remsberg.*

*ஜான் ரெம்ஸ்பா்க் எனும் வரலாற்று ஆசிாியா், தனது நூலான The christ myth என்பதில்*,
*இயேசு வாழ்ந்ததாக சொல்லப்படும் காலத்திலும், அதற்கு பின்பு  100 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த யூத ரோமானிய வரலாற்று ஆசிாியா்கள் 42 பெயா்களை பட்டியலிட்டு, அவா்கள் எழுதிய நூல்கள் எதிலும் யேசுவை பற்றிக் கூறப்படாததால்*,
*யேசு ஒரு கற்பனைப் படைப்பு*
*எனக் கூறியுள்ளாா்*

நடந்திடாத யேசுவின் கதையை உண்மையாக்கிட, அன்று பாலஸ்தீனத்தில் உண்மையில் வாழ்ந்த வரலாற்று நாயகா்களின் பெயா்கள் உபயோகப்படுத்தியுள்ளனா்.

கிறிஸ்துவ மதம் உருவாக காரணமான சவுல் என்ற பவுல் ஆகிய யூதர், இயேசுவை உருவாக்கி  எழுதிய கட்டுரைகளிலும் பிரசங்கங்களிலும்,

அதன்பின் முதலாவதாக தோன்றிய மாா்க் சுவிசேஷசத்திலும்,  இயேசு பிறப்பு இறப்பு உயிா்பித்தல் போன்றவை, முதல் நூற்றாண்டு இறுதியில் தோன்றிய பைபில் ஆன இதில்
காணப்படவில்லை.
மாா்க் 16:9-20 ன் வசனங்கள் இடையில் சோ்க்கப்பட்டது என கிறிஸ்துவ ஆராய்ச்சியாளா்களே ஏற்றுக் கொண்டுள்ளனா்.

5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பகவான் கிருஷ்ணனின் கதைகள், 2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்த மதக் கதைகள், சைவ சித்தாங்கள் ஆகியவை,
பாரத தேச அரசா்கள் ( பாண்டிய மன்னன் உட்பட) ரோமானிய, கிரேக்கா்களுடன் வியாபார தொடா்பில் இருந்ததால்,
நமது சமய கதைகள் அங்கு சென்றடைந்து இருந்தன.

இதிலிருந்து கிருஷ்ணனின் பிறப்பின் போது அசரீாி ஒலித்தது, நட்சத்திரம் தோன்றியது,  கிருஷ்ணனுக்கு மன்னனால் ஆபத்து, கிருஷ்ணனை வேறு இடத்திற்கு மாற்றியது, கம்ஷன் இரண்டு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை கொல்ல சொன்னது, கிருஷ்ணன் பிறந்ததிற்கு தேவலோகம் கொண்டாடியது, நாரத முனிவர் வணங்கியது, இடையா்கள் சூழந்து இருந்தது, ஏராளமான அற்புதங்கள் செய்தது, குஷ்ட ரோகியை குணப்படுத்தியது, கிருஷ்ணன் உடலை விடும்போது துா்நிமித்தங்கள் உண்டாயின போன்ற அனைத்தையும் காப்பியடித்து, சற்றே மாற்றி, யேசு பிறக்கும் போது, இதே மாதிரி நிகழ்ந்ததாக எழுதி வைத்தனா்.

*புத்தா் சொன்ன, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை திருப்பிக்காட்டு* என்பதை இயேசு சொன்னதாக மாற்றி எழுதினா்.

இன்று இயேசு வாழ்க்கையை பற்றி சொல்லும் தேவ மாதா கருத்தாித்த நாள், நல்ல வெள்ளிக்கிழமை, ஈஸ்டா், கிறிஸ்துமஸ் ஆகியவைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
பின்னாளில் புதிய ஏற்பாடு எனும் பைபிள் களில்  ( சுவிஷேசங்கள்) கற்பனையாக புனையப்பட்டவை.
கி.பி.80-150 ல்.வந்த மத்தேயு லூக்கா யோவான் விவிலியங்களில் புனையப்பட்டவை.

அன்றைக்கு யூத நாடு ரோமானியா்களின்  அடிமை நாடு.

யூத நாட்டுக்கு அருகில், அன்று இந்து சமய வழக்கங்களை பின்பற்றும் ஹெலன் சமயத்தை பின்பற்றிய ரோமானிய, கிரேக்க, எகிப்து நாடுகள் இருந்தன. ( சுமோியா/ மெசபட்டோமியா நாகாிகம்).

ரோமாபுரியில் அன்றைய காலத்தில் பிரபுலமாம விளங்கியது, மித்ரா எனும் சூா்ய தெய்வ வழிபாடு. மனித குலத்தை காத்திட இத்தெய்வம் பூமிக்கு அனுப்பப்பட்டு, ஒரு கன்னி வயிற்றில் டிசம்பா் 25 ந் தேதி பிறந்தாா். பிறப்பின் போது இடையா்கள் சூழ்ந்து இருந்தனா்.
இத்தெய்வத்திற்கு 12 சீடா்கள் இருந்தனா். தான் இறந்ததும் தன் உடலை தின்னும்படியும், தன் இரத்தத்தை குடிக்கும்படியும் தன் சீடா்களிடம் கூறியது.
இத்தெய்வம் கல்லறையிலிருந்து மூன்றாம் நாள் உயிா்பித்து எழுந்தது என்ற கதை, இயேசு காலத்திற்கு முந்தைய கதை.

கிரேக்க தெய்வம் ஹொ்குலிஸ் கன்னி வயிற்றில் பிறந்து, மூன்றாம் நாள் உயிா்த்தெழுந்தாா் என்ற கதை உள்ளது.

எகிப்தின் ஒஸிாிஸ் தெய்வம் டிசம்பா் 25 ல் பிறந்து, ஒா் வெள்ளிக்கிழமை இறந்து உயிா்பித்து எழுந்தது என்றுள்ளது.

டயோனிஸ் எனும் கடவுளும் டிசம்பா் 25 ல் பிறந்து, 12 சீடா்களுடன் இருந்து, இறந்தபின் மூன்றாம் நாள் உயிா்பித்து எழுந்தது என்ற கதை உள்ளது.

இவை அனைத்திலும் டிசம்பா் 25,  12 சீடா்கள், மூன்றாம் நாள் உயிா்தெழுதல் ஆகியவை ஒரே மாதிாி இருக்க காணலாம்.

கிறிஸ்துவ மதம் என்ற ஒன்றை எழுதி உருவாக்குவகற்கு முன்பே, ரோமானிய கிரேக்க எகிப்து நாட்டில் வழங்கி வந்த கதைகளை திருடி, இயேசுவின் சாித்திரம் என போலியாக தயாாித்துள்ளனா்.

ஹெலன் சமயத்தில் சூாியனின் குறுக்கும் நெடுக்குமான கதிா்களை வைத்து, அவர்கள் உருவாக்கியதே சிலுவை ( Cross) எனும் கிறிஸ்துவர்கள் பின்பற்றும் புனித? சின்னம்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும், ஹெலன்  சமயத்திலிருந்து திருடப்பட்டது.
( ஏனென்றால் கிறிஸ்துவர்களும் பின்பற்றும் பழைய ஏற்பாட்டில், யெககோவா எனும் யூதா்களை மட்டுமே காக்கக் கூடிய தெய்வம், ஞாயிற்றுக்கிழமை உலகை படைக்க ஆரம்பித்து சனிக்கிழமை ஒய்வெடுத்தாக உள்ளது.)

உடலிலுள்ள நச்சுக்களை நீக்கி உடலை சுத்தம் செய்ய முன்னோர்கள் கையாண்ட சிறந்த இயற்கை மருத்துவம்!

உடலிலுள்ள நச்சுக்களை நீக்கி உடலை சுத்தம் செய்ய முன்னோர்கள் கையாண்ட சிறந்த இயற்கை மருத்துவம்!

நாம் பயன்படுத்தும் கார், பைக் போன்ற வாகனங்களை மற்றும் வீடு உபயோக பொருட்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஒரு ஜெனரல் சர்வீஸ் செய்கிறோம். அதாவது, அதை வாட்டர் வாஷ் செய்து, துடைத்து, ஆயில் போட்டு, ஸ்க்ரூ போட்டு அதற்கு ஒரு புத்துயிர் கொடுக்கிறோம்.


இதனை செய்வதால் இன்னும் சில பல ஆண்டுகள் அவை நமக்கு உபயோகமாக உள்ளன. நமது உடலுக்கு இதை எப்போதாவது செய்ததுண்டா? இல்லை என்பது தான் பலரின் விடையாக இருக்கும்.
நாம் இந்த ரீவைடலிஸ் என்ற மறு உயிர்ப்பு முறையை நிச்சயம் பின்பற்ற வேண்டும். இது நமது உடலை புத்துணர்ச்சி அடைய உதவுகிறது. இதன் மூலம் மனதின் அழுத்தங்கள் குறைகிறது. இயற்கை முறையில் உடலை மறு உயிர்ப்பு செய்வது சிறந்த செயலாகும்.
பழங்காலத்தில் கூட நமது முன்னோர்கள் பல்வேறு உணவுகள் மற்றும் பானங்களினால் உடலை ரீவைடலிஸ் செய்திருந்தனர்.
நம் உடலை சுத்தகரிக்க பயன்படுத்தப்படும் 5 பொருட்களையும் அவற்றின்யும் இப்போது காண்போம்.
சியா விதைகள்:
ஊட்டச்சத்துகள் மூலமாக உடலை புத்துணர்ச்சி அடைய விரும்பினால் நீங்கள் கண்டிப்பாக சியா விதைகளை எடுத்து கொள்ளலாம். 1 கிராம் சியா விதைகளில், சால்மன் மீனை விட 8 மடங்கு அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உண்டு.பாலை விட 6 மடங்கு அதிக கால்சியம் உண்டு.கீரைகளை விட 3 மடங்கு இரும்பு சத்து உண்டு.ப்ரோக்கோலியை விட 15 மடங்கு அதிகமான மெக்னீசியம் உண்டு.


புரத சத்தின் ஒரு மிக பெரிய ஆதாரம் இந்த சியா விதைகள் ஆகும். உடல், முடி, நகம், தசைகள், சிவப்பு அணுக்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இந்த புரத சத்து இன்றியமையாதது.
அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை சிறந்த இரத்த ஓட்டத்திற்கும் ஆரோக்கியமான இதயத்திற்கும், உடலை சம நிலையில் வைக்கவும் உதவுகின்றன. இரத்த சர்க்கரை அளவை சியா விதைகள் கட்டுக்குள் வைக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல செய்தியாகும்தொப்பை வயிறு காரணமாக நீங்கள், உடல் பருமன் பிரச்சினைகள், இதய நோய்கள், நீரிழிவு நோய் எனும் சர்க்கரை வியாதி, பக்கவாதம் போன்றவை குனப் படும்,
எலுமிச்சை:
மனித உடலுக்கு எலுமிச்சை பல விதமான நன்மைகளை செய்கிறது. குளிர்ந்த அல்லது சூடான நீரில் இந்த எலுமிச்சை சாறை கலந்து பருகும் போது நமது உடலில் உள்ள இரத்தம் புத்துணர்ச்சி அடைகிறது .
உடலும் சீராக இயங்குகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மற்றும் பயோபிளாவனாய்டுகள் ஆகியவை உள்ளன.
அவை நுண்ணுயிர் எதிர்ப்பிகள், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. கல்லீரலும் சிறுநீரையும் சுத்திகரிப்பதற்கு எலுமிச்சை சிறந்த தீர்வாகும். .
தேங்காய் நீர்:
நீர்சத்துக்கு ஒரு மிக பெரிய ஆதாரம் தேங்காய் நீர் அல்லது இளநீர். இது பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் எலெக்ட்ரோலைட் ஆகியவற்றை கொண்டதாகும். பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் ஹைப்பர் டென்ஷன் குறைகிறது.
தசை வலிகளை குணமாக்குகிறது. பதற்றம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றில் இருந்து நரம்பு மண்டலத்தை அமைதி படுத்துவது வைட்டமின் பியின் பணியாகும். தேங்காய் நீரில் இருக்கும் எலெக்ட்ரோலைட்கள் உடலின் ஆற்றலை மீட்டெடுக்க உதவுகிறது அதன்மூலம் மனமும் மூளையும் புத்துணர்ச்சி அடைகிறது.
கொம்புச்சா :
கொம்புச்சா என்பது இயற்கை முறையில் புளிக்க வைத்த ஒரு தேநீர் வகையாகும். உடலை புத்துணர்ச்சி அடைய செய்யும் அற்புதமான செயல்பாடு இந்த பானத்திற்கு உண்டு. பல நூற்றாண்டுகளாக இதன் பயன்பாடு உலக அளவில் இருந்து வருகிறது.
கொம்புச்சா சிறிது புளிப்பு சிறிது கசப்பு கலந்த ஒரு பானமாகும் . இதில் அதிக அளவிலான ப்ரோ பையோட்டிக்குகள் உள்ளன. ஆகையால் செரிமானத்தை அதிகரிக்கிறது. இதன்மூலம் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.
பதற்றம் மற்றும் அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் பி சத்து இதில் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆற்றலை அதிகரிக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் இந்த தேநீரில் அதிகம் உள்ளது.
தர்பூசணி:
தர்பூசணி உடல் புத்துணர்ச்சிக்கு ஏற்ற உணவு பொருள். இது முழுவதும் தண்ணீரால் நிரப்பப்பட்டது மட்டுமல்ல, பல்லூட்டச்சத்துகள் , வைட்டமின் ஏ , வைட்டமின் சி,வைட்டமின் பியில் சில, ஆன்டிஆக்ஸிடன்ட், பீட்டா கரோடின் ,அமினோ அமிலங்கள் ஆகியவையும் தர்பூசணியில் அதிகம் உள்ளன.
தர்பூசணியில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இயற்கையாகவே மன அழுத்தத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாட்டுக்கு பொட்டாசியம் துணை புரிகிறது. பதற்றத்தை குறைக்கிறது.
இளநீரை போல் தர்பூசணியும் நீர்சத்து நிறைந்த உணவு பொருள். இதனை உண்ணும் போது உடல் மற்றும் மனம் இரண்டுமே புத்துணர்ச்சி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இயற்கையான முறையில் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்போம்!

இரத்தம் சுத்தமாக இல்லை என்றால் என்னவாகும் தெரியுமா* 🍎

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🍓🍓🍏🍏🍋🍋

*இரத்தம் சுத்தமாக இல்லை என்றால் என்னவாகும் தெரியுமா*
🍎🍎🍎
இரத்தம் என்பது அனைத்து உயிரினங்களின் உடலிலும் உள்ள சிவப்பு நிற திரவம் ஆகும். இரத்தத்தின் முக்கியமான வேலை உடலில் உள்ள செல்களுக்கு தேவையான அத்யாவசிய பொருளான ஆக்சிஜனையும் ஊட்டச்சத்தையும் கொண்டு சேர்பதாகும். அதே போல் இரத்தமானது அனைத்து செல்களில் இருந்து கழிவுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது. இரத்தம் சுத்தமாக நுரையீரல் பெரும்பங்கு வகிக்கிறது. நுரையீரல் இதயத்திலிருந்து சுத்த இரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த நாளங்களின் மூலம் கடத்துகிறது. அதே நேரத்தில் உடலின் அனைத்து பாகங்களில் இருந்து அசுத்த இரத்தத்தை இதயத்தின் வலது பாகத்திற்கு கொண்டு சேர்க்கிறது. நாம் சுவாசிக்கும் பொழுது ஆக்சிஜென் உள்ளிளுக்கப்படுகிறது. உள்ளிழுக்கப்பட்ட ஆக்ஸிஜென் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு இரத்தம் ஆக்சிஜென் கலந்த இரத்தமாகிறது. இவ்வாறு இரத்தம் சுத்தமடைகிறது.
🍏🍏🍏
1. இரத்த சுத்தத்தின் அவசியம் தற்போது பெரும்பாலான நோய்களுக்கு இரத்த சுத்தமின்மைதான் காரணமாக உள்ளது. இரத்தம் சுத்தமாக இருந்தால்தான் நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துப் பொருட்களான வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக கடத்தப்படும். கல்லீரல் உடலின் கெட்ட பொருட்களை பிரித்தெடுத்து வெளியேற்றும் உறுப்பாகும். இரத்தம் உடலின் கெட்ட பொருட்களை கல்லீரலுக்கு கடத்துகிறது. கல்லீரல் அதை வெளியேற்றுகிறது;. மனிதனுக்கு வயது அதிகமாகும் பொழுது காலப்போக்கில் இரத்தம் தனது தூய்மையை இழக்கிறது. அதன் பின்பு உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து அனைத்து நோய்களின் இருப்பிடமாக மனித உடல் மாறுகிறது. அதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்..
🍋🍋🍋
2. ரத்தம் சுத்தமில்லாதால் வரும் நோய்கள் ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி, தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண் பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் உண்டாகும்.
🍒🍒🍒
3. இரத்தம் சுத்தமாக... இரத்தம் சுத்தமாக தண்டுக் கீரை, மிளகு , மஞ்சள், தேங்காய்பால் மருந்து தண்டுக் கீரையை களைந்து அதனுடன் சிறிது மிளகு , சிறிது மஞ்சள், கொஞ்சம் தேங்காய்பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நாக்கிற்கு சுவையாகவும் இருக்கும் இரத்தமும் சுத்தமாகும்.
🍉🍉🍉
4. நெல்லிக்காய் நெல்லிக்காயை பறித்து கழுவி விட்டு நன்றாக மென்று தின்றால் பற்களும் ஈறுகளும் உறுதியாகும். நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பலவிதமான நோய்களும் குணமாகும். அது மட்டும் இல்லாமல் வெறும் நெல்லிக்காயை மட்டுமே அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்
🍃🍃🍃
5. புதினா இலை, வேப்பிலை புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவில் எடுத்து நன்கு கழுவி பின் இரண்டு இலைகளையும் அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அல்லது ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஒரே மாதத்தில் தூய்மையாகும். இந்த மருத்துவத்தை வேப்பிலை தளிரும் காலத்தில் ஒரு மாதம் முழுவதும் வருடத்திற்கு ஒரு முறை என பழக்க படுத்திக் கொண்டால் ஆயுளுக்கும் ரத்தம் சுத்தமாக இருக்கும்.
🌿🌿🌿
6. காசினிக் கீரை, பாதாம் பருப்பு இரத்தம் சுத்தமாக இது கொஞ்சம் விலை உயர்ந்த மருந்து. காசினிக் கீரையை பாதாம் பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். புத்துணர்ச்சி கிட்டும்.
☘☘☘
7. முருங்கைக் கீரை முருங்கைக் கீரையை சுத்தம் செய்த பின் துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி பசும் நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். 8. அருகம்புல் சாறு, கீழாநெல்லி மருந்து அருகம்புல் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய ஓர் அதிசயம். நம் முன்னோர்கள் அதன் மகத்துவம் அறிந்தே அதனை விநாயகருக்கு மாலையாய் அணிவித்தனர். வெறும் அருகம்புல் சாறு அருந்தினாலே உடலில் பல அவஸ்தைகள் காணாமல் போகும். அருகம்புல் சாறுடன் கீழாநெல்லி சேர்த்து அரைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாவதோடு இரத்தமும் தூய்மையாகும்.
🍂🍂🍂
9. விளாம்பழம் இரத்தத்தில் உள்ள கிருமிகள் நீங்கி இரத்தம் சுத்தமாக அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வரலாம். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது.
☁☁☁
10. பல், எழும்புகள் விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுவடையச் செய்கிறது. தயிருடன் விளாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட வாய்ப் புண், அல்சர் குணமாகும். வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர.. நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும். விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலை சுற்றல் நீங்கும்.
🌥🌥🌥
11. நாவல்பழம் நாவல் முழுத்தாவரமும் துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பொதுவாகத் துவர்ப்புச் சுவையே அதிகமாகும். நாவல் பட்டை நரம்புகளைப் பலப்படுத்தும்; தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றைக் குணமாக்கும்.
⛅⛅⛅
12. குடல் இரைப்பை நாவல் பட்டை இரத்தத்தைச் சுத்தமாக்கும்; நாவல் பட்டை நீர் தொண்டை கழுவும் நீராகவும் பயன்படும். நாவல் பழம் சிறுநீர் பெருக்கும்; பசியைத் தூண்டும்; நாக்கு மற்றும் ஈறுகளைச் சுத்தம் செய்யும், குடல், இரைப்பை, இதயத் தசைகளை வலுவாக்கும். நாவல் பழம் கிடைக்கும் சீசன்களில் நாவல் பழத்தை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. நாவல்பழம் தினமும் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
☀☀☀
13. குங்குமப்பூ, தேன் மருந்து குங்குமப் பூவை சாப்பிட்டால் இரத்தம் பெருகும். அதுமட்டுமின்றி, குங்குமப்பூவை தினசரி ஒரு சிட்டிகை தேன் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் நன்கு சுத்தமாகும்
🍓🍓🍓🍓🍓🍓
🍋🍋🍋🍋🍋🍋
*உடலில்* *உள்ள*
*எல்லாம்* *உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
🍇🍇🍇🍇🍇🍇
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*

*பவானி*
*ஈரோடு மாவட்டம்*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🌻🌻🌻🌻🌻🌻

மிகவும் ஆபத்தான உணவு வெள்ளை சர்க்கரை (சீனி)* 🍃

*மிகவும் ஆபத்தான உணவு வெள்ளை சர்க்கரை (சீனி)*

🍃🍂🍃🌀🌀🌀🍃🍂🍃

🌀உண்மையை சொல்வதானால் வெள்ளை சர்க்கரையை (சீனியை) உணவு என்று அழைக்கக் கூடாது. காரணம் வெள்ளை சர்க்கரையில் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பல இரசாயனங்கள் கலந்துள்ளன. வெள்ளை சர்க்கரை நன்மைகளை விடவும் தீமைகளையே அதிகமாக விளைவிக்கின்றன.

🌀Coca-cola, Pepsi போன்ற குளிர்பானங்களை கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்யலாம், இரும்புகளில் உள்ள கரைகளை போக்கலாம். அவற்றில் உடைந்த பல்லை ஊறவைத்து மறுநாள் சுத்தியலால் தட்டினால் பல் தூள் தூளாக நொருங்கிவிடும். இப்படி பல வீடியோக்கள் YouTube பில் உள்ளன (தேடிப் பாருங்கள்).

🌀கழிவறைகளிலும், இரும்புகளிலும், தரையிலும் இருக்கும் கறைகளை போக்கும் தன்மையை அந்த குளிர்பானங்களுக்கு உண்டாக்கியது, அந்த குளிர்பானங்களில் கலந்திருக்கும் வெள்ளை சீனிதான். நாம் அருந்தும் ஒவ்வொரு குளிர்பானத்திலும் 20 முதல் 70 கிராம் வரையில் வெள்ளை சீனி கலக்கப் படுகிறது. அதாவது 10 முதல் 17 டீ கரண்டிகள் அளவு சீனி.

🌀Coca-cola, Pepsi, Milo, Horlicks, Boost, போன்ற பானங்கள் உடலுக்கு தீங்கணவை என்று பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளி வந்துள்ளன. இவ்வாறான பானங்களை அருந்தும் போது, உடலுக்கு தற்காலிக உற்சாகம் உண்டாவது உண்மைதான். ஆனால் அந்த உற்சாகம் உண்டாவதற்கும் காரணம் அவற்றில் கலந்திருக்கும் வெள்ளை சர்க்கரையே. சர்க்கரையில் இருக்கும் சிறிதளவு நல்ல குளுகோஸ் உடலுக்கு தற்காலிக உற்சாகத்தை வழங்குகிறது. ஆனால் பெரும்பான்மையாக இருக்கும் இரசாயனங்கள் உடலுக்கு தீங்கை விளைவிக்கின்றன.

🌀நான் சொல்வதை செய்து பாருங்கள் உங்கள் கழிவறையில், கறையாக உள்ள பகுதியை ஈரமாக்கி, அதில் ஒரு கைப்பிடி வெள்ளை சீனியை தூவி, ஊறவிட்டு, பின் தேய்த்துப் பாருங்கள். டீவி விளம்பரங்களில் வரும் கழிவறை கழுவும் மருந்துகளை விடவும் சீனி அதிக பலனை தரும்.

🌀மனிதர்களின் உடலில் உண்டாகும் பல வகையான நோய்களுக்கு வெள்ளை சர்க்கரை முக்கிய காரணமாக இருக்கிறது. கரும்புச் சாறு பச்சை வர்ணத்தில் இருக்கும் போது அதிலிருந்து தயாராகும் சீனி மட்டும் எவ்வாறு வெள்ளையாக இருக்கிறது?. அதற்கு காரணம் சீனியில் கலந்திருக்கும் இரசாயணங்கள். பச்சையாக இருக்கும் கரும்பு சாற்றில் Sulfur Dioxide, Phosphoric Acid, Calcium Hydroxide, Polyacrylamides போன்ற பல இராசயன பொருள் கலக்கப் படுகின்றன.

🌀சர்க்கரையை வெள்ளையாக்க, கரும்பு வாடையை நீக்க, தூசுகளை பிரிக்க, ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க, அழகாக கட்டம் கட்டமாக அச்சிட, பூச்சிகள் அண்டாமல் இருக்க இப்படி பல காரணங்களுக்காக இரசாயணங்கள் கலக்கப் படுகின்றன.

🌀இந்த இரசாயணங்கள் மனிதனின் ஆரோக்கியத்துக்கு பல வகையான தீங்குகளை உண்டாக்குகின்றன. பற்கள் கறையாவது, பற்கள் சொத்தையாவது, கண் பார்வை மங்குவது, தொண்டை வலி, தோல் நோய்கள், ஆண்மை கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகள், சிறுநீரக பாதிப்புகள், சர்க்கரை நோய், நரம்பு தளர்ச்சி, கேன்சர், இன்னும் எத்தனையோ கெடுதல்களை இந்த இரசாயனங்கள் உண்டாக்குகின்றன.

🌀வெள்ளை சர்க்கரையை தவிர்த்திடுங்கள். வெள்ளை சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவு மற்றும் பானங்களை தவிர்த்திடுங்கள். வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இயற்கையாக கிடைக்கும் பனை வெள்ளை, அச்சு வெள்ளம், கருப்பட்டி, தேன் போன்றவற்றை பயன்படுத்துங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
🍃🍂🍃🌀🙂🙏🍃🍂🍃

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...