Wednesday, September 5, 2018

மஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்

மஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்

மஞ்சள் உலகின் மிகச்சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் (அதாவது கீல்வாதம்) சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவதில்லை.

மேலும் மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டி-பயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம். அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இது சுற்றுச்சூழலிலுள்ள அபாயகரமான நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளுடன் போராட ஒரு பயனுள்ள தீர்வாகவும் உள்ளது.

மஞ்சள் பால் செய்முறை:

1 அங்குல மஞ்சள் துண்டை எடுத்துக் கொள்ளவும். அதை பாலில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் பாலை வடிகட்டி மஞ்சளை எடுத்துவிடவும். பின்பு குளிர வைத்து, இந்த பாலைக் குடிக்கவும்.

இப்போது இயற்கை நமக்கு தந்த இந்த அற்புதமான அன்பளிப்பின் முக்கியமான 15 நன்மைகளைப் பார்ப்போம்.

சுவாசக் கோளாறு

மஞ்சள் பால், பாக்டீரியா நோய்த்தொற்றுகள் மற்றும் நச்சுயிரி சார்ந்த நோய்த்தொற்றுகளைத் தாக்கும் நுண்ணுயிர் ஆகும். இந்த மசாலாப் பொருள் உடலை வெப்பப்படுத்தும் என்பதால் நுரையீரலின் சளித் தேக்கம் மற்றும் சைனஸ் பிரச்சனைக்கு விரைவான நிவாரணம் வழங்குகிறது. அதுமட்டுமின்றி சுவாச அமைப்பு தொடர்பான நோய்களான ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் அழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

புற்றுநோய்

மஞ்சள் பால் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளதால், இது மார்பகம், சரும, நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கிறது மற்றும் நிறுத்தவும் செய்கிறது.

தூக்கமின்மை

வெதுவெதுப்பான மஞ்சள் பால் அமினோ அமிலம், டிரிப்தோபன் போன்றவற்றை உற்பத்தி செய்து அமைதியான மற்றும் பேரின்ப தூக்கத்தைத் தூண்டும் என்று கூறப்படுகிறது.


ஜலதோஷம் மற்றும் இருமல்

மஞ்சள் பால் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படக் காரணம், அதன் நச்சுயிரிக்கு எதிரான குணமும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் ஆகும். இது தொண்டைப் புண், இருமல் மற்றும் சளிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.

கீல்வாதம்

மஞ்சள் பால், கீல்வாதத்தை குணப்படுத்த மற்றும் நாள்பட்ட மூட்டு வலிகளின் காரணமாக ஏற்படும் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது வலியை குறைத்து நெகிழ்தன்மையுள்ள மூட்டுக்கள் மற்றும் தசைகள் உருவாக்க உதவுகிறது.

வேதனை மற்றும் வலிகள்

மஞ்சள் தூள் கலந்த பொன்னான பால், வேதனை மற்றும் வலிகளிலிருந்து சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதனால் உடலில் உள்ள முதுகெலும்பு மற்றும் மூட்டுகளையும் வலுப்படுத்த முடியும்.


ஆன்டி-ஆக்ஸிடன்ட்

மஞ்சள் பால் ஒரு தடையற்ற முழுமையான எதிர் ஆக்ஸிகரணிகளுக்கு ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது. இதனால் பல வியாதிகளை குணப்படுத்தவும் முடியும்.


இரத்தத்தை சுத்தப்படுத்தும்

மஞ்சள் பால் ஆயுர்வேத பாரம்பரியத்தில் இரத்தத்தை தூய்மைப்படுத்தும் ஒரு சிறந்த பொருளாகவும் மற்றும் சுத்தப்படுத்தியாகவும் கருதப்படுகிறது. இது உடலில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு உயிர்ப்பூட்டு பொருளாகவும் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது. மேலும் இது நிணநீர் அமைப்பு மற்றும் இரத்த குழாய்களில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் நீக்கி, இரத்த மெலிவூட்டியாக வேலை செய்கிறது

கல்லீரல் நச்சு நீக்கி

மஞ்சள் பால் ஒரு இயற்கையான கல்லீரல் நச்சு நீக்கியாக விளங்குகிறது. இது இரத்தத்தை தூய்மைப்படுத்தி, இதனால் கல்லீரல் நன்றாக செயல்பட உதவும் ஒரு ஊக்கியாகவும் இருக்கிறது. இதன் தூய்மைப்படுத்தும் குணத்தினால், இது கல்லீரலுக்கு ஆதரவாகவும் மற்றும் நிணநீர் மண்டலத்தையும் சுத்தமாக்குகிறது.


எலும்பு சுகாதாரம்

மஞ்சள் பாலில் கால்சியம் நிறைந்து காணப்படுவதால், அவை எலும்புகள் ஆரோக்கியமாக மற்றும் வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது. இந்தியாவில் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், நல்ல ஆரோக்கியமான எலும்பைப் பெற, இந்த மஞ்சள் பாலை தினசரி குடிக்கிறார். மஞ்சள் பால் எலும்பு தேய்மானத்தையும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸையும் குறைக்கிறது.


செரிமான நலம்

இது ஒரு சக்தி வாய்ந்த கிருமி நாசினியாக இருப்பதால், குடல் சுகாதாரத்தை ஊக்குவிக்கிறது. மேலும் வயிற்று புண்களையும் மற்றும் பெருங்குடல் அழற்சியையும் கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி இது சிறந்த செரிமான சுகாதாரத்திற்கும் மற்றும் வயிற்றுப்புண்கள், வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணத்தையும் தடுக்கிறது.



மாதவிடாய் தசைப்பிடிப்புகள்

இது வலிப்பு நோயைக் குறைக்கும் மருந்தாக இருப்பதால், மாதவிடாய் காலத்தில் உண்டாகும் தசைப்பிடிப்புகள் மற்றும் வலியையும் போக்குகின்றது. கர்ப்பிணிப் பெண்களுக்கு எளிதாக பிரசவம் நடைப்பெற, குழந்தைப் பேற்றுக்குப் பின் நலம் பெற, அதிகமான தாய்ப்பால் சுரத்தலுக்கு மற்றும் கருப்பைகள் வேகமாக சுருங்குதலுக்கும் மஞ்சள் தூள் கலந்த பொன்னான பாலை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.


சொறி மற்றும் சருமம் சிவத்தல்

கிளியோபாட்ரா, மென்மையான மிருதுவான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெற மஞ்சள் பாலில் குளித்தார். இதே போல், ஒளிரும் சருமத்தைப் பெற வேண்டுமானால் மஞ்சள் பாலை குடிக்க வேண்டும். மேலும் சருமம் சிவத்தல் மற்றும் கரும்புள்ளிகளின் தோற்றத்தைக் குறைக்க, ஒரு பஞ்சுருண்டையை மஞ்சள் பாலில் ஊற வைத்து, பின் அந்த பாலில் நனைத்த பஞ்சினைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் சருமமானது முன்பை விட இன்னும் பிரகாசமாகவும் மற்றும் ஜொலிக்கவும் செய்யும்.

எடை குறைப்பு

மஞ்சள் பால் உணவில் இருக்கும் கொழுப்பை முறிக்க உதவுகிறது. இதனால் இது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது.

எக்ஸிமா/சிரங்கு

எக்ஸிமா சிகிச்சைக்கு தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பால் குடிக்க வேண்டும். இதனால் நாளடைவில் அந்த பிரச்சனை குணமாகும்.

அனைத்து நோய்களும் குணமாக வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை மருத்துவம்

மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாக வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை மருத்துவம்

காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும்.

சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும்.

ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் மருந்தினை
அருளியுள்ளார்.

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,

தூதுவளை 50 கிராம்,

முசுமுசுக்கை 50 கிராம்,

சீரகம் 50 கிராம்

ஆகியவற்றை பொடியாக
காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).

இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.

இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும்.

சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும்.

சிறுகுடல் உறிஞ்சிகள் (VILLUS) தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும்.

99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும்.

கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது.

உடலில் உள்ள அனைத்து நோய்களும் குணமாகும்.

வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம் இது.

இதற்கு பத்தியம் எதுவுமில்லை.

இந்த காயகற்ப சூரணம் சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது.

காலையில் அருந்துவதற்கு ஏற்ற மூலிகைபானமாகவும் விளங்குகிறது.

இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.

இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.

🚶🏽‍♂HAROON SB

தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்...அப்புறம் பாருங்கள் என்ன நடக்குதுன்னு..!*

கை தட்டுங்கள்

👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
*தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்...அப்புறம் பாருங்கள் என்ன நடக்குதுன்னு..!*

👏🏼பொதுவாக, அடுத்தவர்களின் நற்செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை தட்டுகிறோம்.

👏🏼சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள், கோவில் போன்ற இடங்களில் பஜனை பாடும்போதும் கை தட்டிக் கொண்டிருப்பார்கள்.

👏🏼கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல.

👏🏼கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

👏🏼ஆம். கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி தான். கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

👏🏼இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன.

👏🏼அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அது நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.

👏🏼தினமும் கை தட்டுவதால் ஜீரணக்கோளாறுகள் நீங்கும்.
இன்றைய காலகட்டத்தில் 20 வயதைக் கடந்தவுடனேயே முதுகுவலியும் மூட்டுவலியும் வந்துவிடுகின்றன. ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகுவலியும் மூட்டுவலியும் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

👏🏼வாதம், ரத்த அழுத்தம் போன்றவையும் கை தட்டுவதால் குணமாகும்.

👏🏼ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை புன்னகையுடன் கை தட்டிக் கொண்டிருந்தால், இதயம் மற்றம் கல்லீரல் தொடர்பான நோய்கள் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

👏🏼குழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக் கொடுத்தால் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்கும். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

🚶🏽‍♂HAROON SB

உணவின் நிறத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டா?

உணவின் நிறத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டா?
உணவின் நிறத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் தொடர்பு இருக்கிறதா?

ஒரு உணவைப் பார்த்ததும் உங்களுக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அந்த எண்ணம் எதன் அடிப்படையில் தோன்றுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

👉 அது பல வண்ணங்களில் இருப்பதால் உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா? இல்லை அந்த உணவின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா?

👉 இதைப் பற்றி தாங்கள் சிந்தித்தது உண்டா? ஆனால் உண்மையில் உணவின் நிறத்திற்கும், ஆரோக்கியத்திற்கு தொடர்பு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.

பச்சை நிற உணவுகள் :

👉 பச்சை பீன்ஸ், பச்சை குடைமிளகாய், கீரை வகைகள், பச்சைப் பட்டாணி, கிரீன் டீ போன்ற பச்சை நிற உணவுகள் உடலின் நச்சுத் தன்மையை வெளியேற்றுகின்றன.

👉 இவ்வகை உணவுகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

மஞ்சள் நிற உணவுகள் :

👉 வாழைப்பழம், சோளம் போன்ற மஞ்சள் நிற உணவுகள் உடல் பொலிவடைவதற்கு உதவுகின்றன.

👉 இவ்வகை உணவுகளில் கரோட்டினாய்டு மற்றும் பயோ பிளேவனாய்டு நிறைந்திருக்கின்றன.

👉 எனவே, இவை நமது சருமம், எலும்பு மற்றும் பற்களைப் பாதுகாக்கின்றன.

ஆரஞ்சு நிற உணவுகள் :

👉 கேரட், ஆரஞ்சு, பரங்கிக்காய் போன்ற ஆரஞ்சு நிற உணவுகள் உடலில் புற்றுநோய் வராமல் தடுக்கின்றன.

👉 இவ்வகை உணவுகள் கண்களைப் பாதுகாக்கவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது.

சிவப்பு நிற உணவுகள் :

👉 தக்காளி, ஆப்பிள், சிவப்பு மிளகாய், செர்ரி பழம் போன்ற சிவப்பு நிற உணவுகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.

ஊதா நிற உணவுகள் :

👉 நாவல்பழம், வெங்காயம், கத்திரிக்காய், திராட்சை போன்ற ஊதா நிற உணவுகள் புற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்றன.

👉 மேலும் இதயத்துக்கும், கல்லீரலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கவும் மற்றும் ஆயுளை அதிகரிக்கவும் இந்த வகை உணவுகள் உதவுகின்றன.

🚶🏽‍♂HAROON SB

இன்சுலின் மரணங்களும் மறைக்கப்படும் உண்மைகளும்*

*இன்சுலின் மரணங்களும் மறைக்கப்படும் உண்மைகளும்*
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
*பக்க விளைவு (Side effect) எனும் பொய்*
🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹
*தொடர் - 6*
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
அலோபதியின் அறிவியல் மிக வினோதமானது நோய் வாய்ப்பட்ட மக்களிடம் அது ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்கிறது.. நீ தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறாயா? அல்லது கொலை செய்யப்பட விரும்புகிறாயா? என்பதே அக்கேள்வி.

"நாங்கள் வாழவே விரும்புகிறோம்" என மக்கள் கதறினால், உனக்கு வந்த நோயிலிருந்து நீ மீண்டு உன்னால் வாழவே முடியாது. ஒன்று நோயுடன் கிடந்து நீயே செத்துபோ, அல்லது  எனது மருந்துகளால் நான் உன்னை கொலை செய்கிறேன்,என்பதே அதன் மறைமுகமான பதில், எல்லா அலோபதி மருந்துகளுமே எதிர் விளைவு கொண்டவைதான் அதாவது எந்த நோய்க்காக மருந்து கொடுக்கப்படுகிறதோ அந்த நோயையும் குணப்படுத்தாமல், சம்பந்தமே இல்லாத வேறு பலநோய்களையும் உருவாக்குபவைதான் அலோபதி மருந்துகள்,

சர்க்கரை நோய் அலோபதியின் வணிகச் சந்தையை மிக விரிவானதாக மாற்றிவிட்டிருக்கிறது. பல ஆயிரம் கோடிகள் இந்தச்சந்தையில் புழங்குகின்றன. மரபு வழி மருத்துவ முறைகளால், சர்க்கரையை நாம் குணப்படுத்த முடியும் என்று கூறினால். தமது சந்தைக்கு பெரும் ஆபத்து வந்து சேரும்.என்ற பதட்டம் அவர்களில் சிலரை ஆட்கொள்கிறது.

இப்போது சில அலோபதி மருத்துவர்கள், அவரவர் இணைய பக்கங்களில், என்னை  *"சமுக விரோதி"* என்றே குறிப்பிட்டு எழுதிக் கொண்டுள்ளனர். ஒரு மருத்துவர் ஒரு படி மேலே சென்று தமது இயலாமையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்தி விட்டார்.

அலோபதிக்கு எதிராக எழுதப்படும் கட்டுரைகளுக்கு விருப்பம் *like* தெரிவிக்கும் நபர்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

அந்த நபர்கள் எங்களிடம் மருத்துவத்திற்கு வரும் வரும் போது *"கவனித்து"* அனுப்புவோம் என்று எழுதியுள்ளார் அந்த

*"மருத்துவர்"*

*ஒரு வேளை விஷ ஊசி போட்டு கொன்று விடுவாரோ!*

சரி, அப்படியே கொலை செய்தாலும் நாம் அவர்கள் மீது வழக்கு கூட தொடுக்க இயலாது. நாம் தான் அவர்கள் அவர்கள் நீட்டும் படிவங்களில் எல்லாம் என்ன இருக்கிறது எனக் கூட படிக்காமல் கையொப்பம் இட்டு தருகிறோமே.

ஆனால், உண்மையின் வலிமைக்கு முன், உலகின் எந்த சக்தியும் நிற்கவும் நிலைக்கவும் முடியாது. எந்த ஊசி போட்டும் உண்மையின் குரலை ஒடுக்கிவிட முடியாது. உலகில் உண்மை பேசுவோர், அறிவையும், ஆயுதங்களையும், நம்பி அல்ல மனசாட்சியையும் இயற்கையின் பேராற்றலின் ஆட்சியையும் நம்பி பேசுகின்றனர். ஆகவே இந்த மிரட்டல்கள் பரிதாபத்துக்கு உரியவையே தவிர, பயப்படத் தகுந்தவை அல்ல,

உண்மை பேசுவோர் எல்லாத் துறைகளிலும் இருக்கத்தான் செய்கின்றனர். அலோபதித் துறை எண்ணற்ற நல் மனதுக்காரர்களை கொண்ட துறை தான். அவர்களில் இருவரை உங்களுக்கு அறிமுகம் செய்ய விழைகிறேன்.

அமேரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இரு அலோபதி மருத்துவர்கள் அவர்கள். ஒருவர் என்ரிகோ பொர்டியூஸ், NPH உதவி ஆய்வாளர், மற்றவர் பேராசிரியர் ட்ரிவர் ஆர்சர்ட் M D, இருவரும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் துறையை சேர்ந்தவர்கள். இன்சுலின் பயன்படுத்தும் சர்க்கரை நோயாளிகளின் ஆயுட்காலம் பற்றிய விரிவான ஆய்வு ஒன்றினை இவர்கள் மேற்கொண்டனர்.

இன்சுலின் சிகிச்சை அறிமுகமான 1920 களில் என்ன விதமான மாற்றங்கள் நடந்தன என்று என்று அவர்கள் அறிவித்துள்ளார்கள், *"இன்சுலின் சார்ந்த, சர்க்கரை நோய் மரணங்கள்"* என்பது அவர்களது ஆய்வுநூலின் மையக் கருத்து, ஆய்வின் தொகுப்புரையை அவர்கள் பின்வருமாறு தொடங்கியுள்ளார்கள்:

1920 களில் இன்சுலின் அறிமுக படுத்தப்பட்ட பின்னர், இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோயாளிகள் மரணம் அடையும் விதத்தில் அதிர்ச்சி அளிக்கதக்க மாற்றம் ஏற்பட்டது. இன்சுலினுக்கு முன்பு, சர்க்கரை நோயாளிகள் கோமா நிலைக்கு சென்று மரணமடைந்தனர். இன்சுலினுக்கு பின்னர், அதை பயன்படுத்திய மக்கள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதயநோய் ஏற்பட்டு மரணமடைவது அதிகரித்து விட்டது.

இன்சுலின் பயன் படுத்தும் நோயாளிகளின் மரண எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குழந்தை பருவ இன்சுலின் நோயாளிகளை பொறுத்த வரை, தற்போது இன்சுலின் பயன் படுத்துவோரில் 15 சதவிதத்துக்கும் அதிகமானவர்கள் அவர்களது 40 வது வயதிலேயே வாழ்வில் நடைபிணங்களாக வாழ்ந்து மரணமடைவார்கள். அந்த நேரத்தில், நாட்டின் இறப்பு விகிதம் இப்போது உள்ளதைக்காட்டிலும் 20 மடங்குகள் அதிகமாக இருக்கும்.

மிகநீண்ட ஆய்வறிக்கையின் தொகுப்புரை (Summery) இவ்வாறு துவங்குகிறது. தொடர் இன்சுலின் பயன்பாடு மனித உடலை சீரழிக்கும் என்பதை அமேரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் அரசு சுகாதாரத்துறைகளே வெளிப்படையாக அறிவித்து கொண்டு இருக்கின்றன. மேற்கண்ட ஆய்வு அறிக்கையைகூட அமெரிக்காவின் "அமெரிக்க உடல் நல மற்றும் மனித சேவைத் துறை" தான் வெளியிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இன்சுலின் குத்திக் கொள்ளும் நம் சமூகத்தவர் சிறுநீரக செயலிழப்புக்கு ஆளாகி, டயாலிசிஸ் எனும் செயற்கை இரத்த சுத்திகரிப்புக்கு ஆட்பட்டு, சில காலத்தில் மரணமடைவதை நாம் நேரடியாக பார்த்து கொண்டு தானே இருக்கிறோம். மரணமடையாத மக்கள் கூட விரும்பிய இடங்களுக்கு போக இயலாமல் விரும்பிய உணவுகளை உண்ண இயலாமல் நடைபிணங்களாக அலைவதையும் பார்க்கிறோம் தானே, இவை எல்லாம் சர்க்கரை நோயால் வந்தவையா? அல்லது அந்த நோய்க்கு வழங்கப்பட்ட இன்சுலினால் வந்தவையா? என இந்த நாட்டின் 120 கோடி மக்களில் ஒருவர் கூட கேட்க கூடாதா? அப்படி எழுதப்படும் கேள்விகளுக்கு இதுவரை எந்த அலோபதி மருத்துவராவது நேர்மையாக பதில் கூறியுள்ளாரா? இந்த இன்சுலின் நோயை குணப்படுத்துவதும் இல்லை, நோயாளியின் உயிருக்கு உத்தரவாதம் தரவும் இல்லை. மாறாக அந்த நோயாளி எதிர்பாராத பல உயிர் ஆபத்து நோய்களை உருவாக்குகிறது. பின்னர் எதற்கு இந்த "சிகிச்சை" என்று மக்கள் கேட்க வேண்டும்.

மாடுகளை தார்குச்சியால் குத்தினால் கூட, குத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விலங்கு நல வாரியம் இருக்கிறது, மனிதர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளால் ஏற்படும் மரணங்களை கேட்கத்தான் முறையான சட்ட அமைப்புகள் இல்லை.

பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ள வேறு சில தகவல்களை பார்ப்போம்.

"ஆயுள் காப்பீடு செய்து கொண்ட மக்களின் மரணம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவு இது. 1935-63 ஆண்டு காலத்தில் இன்சுலின் எடுத்துக் கொண்ட 30 வயதுக்கு குறைவான மக்களின் மரண எண்ணிக்கை எதிர் பார்க்கப்பட்டதை காட்டிலும் 6 மடங்குகள் அதிகமாக இருந்தது.

ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்ளும் போது, காப்பீட்டு நிறுவனங்களுக்கு மக்களின் ஆயுள் காலம் குறித்து ஒரு கணக்கு இருக்கும் அல்லவா?, அந்த கணக்கை காட்டிலும் 6 மடங்குகள் அதிகமாக மரணங்கள் இன்சுலின் நோயாளிகளுக்கு ஏற்ப்பட்டது.

"இந்த மரணங்கள் அனைத்திலும், இதய நோய், கழுத்து பட்டை நரம்பு நோய்கள் மிக அதிக அளவில் இருந்தன. ஜோஸ்லின் க்ளினிக் மற்றும் வேறு சில குழுக்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள், அமெரிக்கா மக்கள் தொகையில் ஏற்படும் பொதுவான மரண எண்ணிக்கைக்கும், இன்சுலின் நோயாளிகளின் மரணங்களின் எண்ணிக்கைக்கும், இடையிலான வேறுபாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்ததை காட்டுகிறது. 1931-59 காலத்தில் ஜோஸலின் க்ளினிக் நோயாளிகளின் மரண ஒப்பீட்டு ஆய்வு மசாசூசெட்ஸில் இருந்த பொதுமக்களின் வயது பாலினம் (ஆண் /பெண்) ஆகிய வற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது.
அதாவது இந்த க்ளினிக் ல் இரு‌ந்த இன்சுலின் நோயாளிகள் மற்றும் மசாசூசெட்ஸ் நகரின் மக்கள் தொகையில் ஏற்பட்ட மரணங்கள் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு நடத்தப்பட்ட ஆய்வு.

சர்க்கரை நோயாளிகளின் மரணம் எல்லா வயதுகளிலும் அதிகமாகவே காணப்பட்டது, 0-9 வயதில் இருந்த ஆண் குழந்தைகளில் மட்டும் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆண்களை பொறுத்தவரை, எதிர்பார்க்கப்பட்ட மரண விகிதத்தை விட, 3.75 மடங்குகள் அதிகமானோர் இறந்து போனார்கள்.

அதாவது 10 பேர் இறந்து போவார்கள் எனக்கணக்கிட்டால் ஏறத்தாழ 38 பேர் இறந்து போனார்கள். என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்களான என்ரிகோ பொர்டியூஸ் மற்றும் "ட்ரிவர் ஆர்சர்ட்" ஆகியோர்.

இங்கேயுள்ள அலோபதி மருத்துவர்களில் எத்தனை பேர் இந்த ஆய்வு அறிக்கையை வாசித்து இருப்பார்கள், என சிந்தித்து பாருங்கள். மருந்து நிறுவனப் பிரதிநிதிகள் நீட்டும் விளம்பர படிவங்களை வாசித்து, அம்மருந்துகளை எழுதித் தள்ளினால் கிடைக்கும் "அன்பளிப்புகளை பற்றி சிந்திக்கும் மருத்துவர்கள் தான் அதிகம். மக்களை காப்பாற்ற தேவையான ஆய்வுகளை படித்து, அவற்றுக்கேற்றவாறு மருந்துகளின் அளவையும் தன்மைளையும் மாற்றி பரிந்துரைக்கும் மருத்துவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

சர்க்கரை நோய் என்ற காரணத்திற்காக அலோபதியை அணுகும் மக்களுக்கு, இரண்டு வழிகள் காட்டப்படுகின்றன, ஒன்று அலோபதி மருந்துகளை உட்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்தொழிய வேண்டும், அல்லது நோயால் செத்தொழிய வேண்டும். ஆகக் கடைசியில் அவர் நோயை குணப்படுத்துவதும் இல்லை, எதிர்விளைவுகள் இல்லாத மருந்துகளை பரிந்துரைப்பதும் இல்லை.

சர்க்கரை "நோயை அமைதியான கொலைகாரன் (silent killer) என்கிறது அலோபதி மருத்துவம், உண்மையில்" அமைதியாக கொலை" செய்வது சர்க்கரை நோயா? அலோபதி மருந்துகளா? என்பதை கூட புரிந்து கொள்ள முடியாமல் போனால், நமக்கு வழங்கப்பட்ட வாழ்க்கையை வீணடிக்கிறோம் எனப் பொருள்.
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
*அடுத்த தொடர்ச்சி இனிப்பாக நாளை தொடரும்.*
*தொடர் - 7*
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴

*இந்த சர்க்கரை என்ற நோய் என அறிவிக்கப்பட்டு ஆங்கில மருந்து எடுத்துக் கொண்டவர்கள் அந்த பாதிப்புகளில் இருந்து மீளவும், மாத்திரை, இன்சுலின் இவற்றை விட்டு சுக வாழ்வு பெற நமது ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை வழங்கும் சித்த சக்தி துணை உணவு சாப்பிட்டு சிறப்பாக செயல்புரிந்து பல ஆயிரம் மக்கள் நண்மைகள் பெற்றுள்னர், உறவுகள் பயன் படுத்தி பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்,*
*ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை, அனுப்பர்பாளையம், திருப்பூர், 9585436122, 8778832095.*
💚💚💚💚💚💚💚💚💚💚

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...