Tuesday, June 13, 2017

*ஆண்மையை பெருக்கும் அருமருந்துகள்*

*ஆண்மையை பெருக்கும் அருமருந்துகள்*

அக்ரூட்

அக்ரூட் பருப்பு (10) , வேர்க்கடலை (10) இவை இரண்டையும் இரவில் தண்ணீரில் ஊறவைத்து , அதிகாலையில் பருப்புகளை மட்டும் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

அக்ரூட் பருப்பு , சாரப் பருப்பு இவை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து , சூடான பாலில் கலந்து குடித்துவந்தால் நரம்புத் தளர்ச்சி , கை கால் நடுக்கம் போன்றவை குணமாகும்.

அக்ரூட் விதையை ஆசனவாயில் சிறிது நேரம் சொருகிவைத்துக் கொண்டால் மூல வேதனை , வலி தீரும்.

அக்ரூட் எண்ணெய்யை தினமும் 5 மில்லி அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலப்புழுக்கள் சாகும்.

அக்ரூட் பருப்பு , முந்திரிப் பருப்பு , பாதாம் பருப்பு , பிஸ்தா பருப்பு , உளுந்து இவை அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்துக் கோள்ளவும். இதில் காலை மாலை என இரண்டு வேளையும்  ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

அக்ரூட் பருப்பு , பேரீச்சம்பழம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக நசித்து தேனில்  ஊறவைக்கவும். பின்பு இவற்றில் தினமும் பத்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும்.

வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.

🌿 *நலம் பெறுவோம்* 🌿
🌿 *வளம் பெறுவோம்* 🌿
☘ *நாட்டுமருந்து வாட்சப்குழு* ☘
🍁 *9787472712* 🍁

உப்புக்கு பதிலாக சுவைத் தரும் சில மூலிகைப் பொருட்கள்!!!

உப்புக்கு பதிலாக சுவைத் தரும் சில மூலிகைப் பொருட்கள்!!!

உண்ணும் உணவில் சுவையை வெளிப்படுத்த சேர்க்கப்படும் உப்பின் ருசிக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று அனைவரும் சொல்வார்கள். உண்மைதான், ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு, முக்கியக் காரணம், அதில் உப்பு சேர்த்திருப்பதாலேயே தான். 'உப்பில்லாத பண்டம் குப்பையிலே' என்று சொன்னால், உடனே உப்பு இல்லாமல் எந்த உணவையும் சாப்பிட முடியாது என்று நினைக்க வேண்டாம். உப்பு அதிகம் சேர்த்தால், நம் உடலைத் தான் குப்பையில் போட வேண்டும். ஏனெனில் அதை அதிகம் உணவில் சேர்த்தால், உடலில் பலவகையான நோய்கள் தான் வரும். அதுவும் ஹைப்பர் தைராய்டிசம் முதல் உயர் இரத்த அழுத்தம் வரை அனைத்தும் உருவாவதற்கு உப்பே காரணம் ஆகும். இதற்கு காரணம் உப்பில் சோடியம் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சோடியம் உப்பில் மட்டுமில்லை, அன்றாட சமையலில் பயன்படுத்தும் சில மூலிகைப் பொருட்களிலும் உள்ளது.
மேலும் உணவுகளில் போதிய அளவு சோடியம் இருக்க வேண்டியது அவசியம். இத்தகைய சோடியத்தை உப்பிலிருந்து மட்டும் தான் பெற வேண்டுமென்பதில்லை, உணவுகளில் சுவைக்கும், மணத்திற்கும் சேர்க்கப்படும் ஒருசில மூலிகைகளிலும் சோடியம் உள்ளது. இந்த மூலிகைப் பொருட்கள் சுவை மற்றும் மணம் கொடுப்பதோடு, மருத்துவ குணங்களும் வாய்ந்தது. இதனால் உடலில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்கும். இப்போது அத்தகைய உப்பிற்கு பதிலாக உணவிற்கு சுவையை தரும் ஆரோக்கியமான மூலிகைப் பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய மூலிகைப் பொருட்களால், உணவானது சுவையுடன் இருப்பதோடு, உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எனவே குறைந்த அளவுள்ள சோடியம் இருக்கும் மூலிகைப் பொருட்களை உணவுகளில் பயன்படுத்தி, ஆரோக்கியத்தையும், சுவையையும் பெற்றுக் கொள்ளுங்கள். அந்த மூலிகைப் பொருட்களைப் பார்ப்போமா!!!

பட்டை:

மசாலாப் பொருட்களில் ஒன்றாக பயன்படும் பட்டை, இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் ஆசியாவின் பல இடங்களில் சமைக்கப்படும் உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உணவுக்கு சுவை கிடைப்பதோடு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருப்பதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கச் செய்யும்.

ஏலக்காய்:

நிறைய மக்கள் ஏலக்காயை வைத்து டீ போட்டு குடிப்பார்கள். அதிலும் ஏலக்காய் போட்டு சமைத்தால், உணவானது மிகுந்த சுவையுடன் இருப்பதோடு, வித்தியாசமான சுவையும் கிடைக்கும். குறிப்பாக இதனை சீரகம் மற்றும் மல்லியுடன் சேர்த்து சமையலில் சேர்க்கும் போது, இதன் சுவை மற்றும் மணத்திற்கு அளவே இல்லை.

பேசில்:

இந்தியாவில் சமைக்கும் போது பயன்படுத்தும் மூலிகைகளில் பேசில் இலையும் ஒன்று. இந்த இலை சற்று காரமான சுவையும் மற்றும் லேசான இனிப்பு சுவையையும் உடையது. இது வெறும் மருத்துவப் பொருட்களில் ஒன்றாகப் பயன்படுவதோடு, உப்புக்கு பதிலாக உணவுகளில் சிறந்த சுவையூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது.

சிவப்பு மிளகாய்:

சிவப்பு மிளகாய் வெறும் காரத்திற்காக மட்டும் பயன்படுவதில்லை. இது உணவில் காரத்துடன், ஒரு நல்ல சுவை தரும் பொருளாகவும் பயன்படுகிறது

பிரியாணி இலை:

பொதுவாக பிரியாணி இலை பிரியாணிகளில் மட்டும் தான் சுவைக்காக பயன்படுத்துவோம். ஆனால் அத்தகைய பிரியாணி இலை சற்று இனிப்பு சுவையுடன், மிகுந்த மணமுடன் இருக்கும். எனவே தான், இதனை உணவுகளில் சேர்த்தால், உணவின் சுவை சூப்பராக உள்ளது.

பூண்டு பொடி:

உணவில் பூண்டை சுவைக்கு மட்டும் பயன்படுத்துவதோடு, அதிலுள்ள மருத்துவ குணம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்பதால் தான் அதிகம் பயன்படுத்துகிறோம்.

மிளகு தூள்:

மிளகு தூளுக்கும் உப்புக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை. எப்படி உப்பை உணவில் சேர்க்கிறோமோ, அதேப் போல் தான் மிளகு தூளையும் சேர்க்கிறோம். உப்பில்லாமல், வெறும் மிளகுத் தூளை மட்டும் சேர்த்தாலும், உணவில் சூப்பரான சுவையைப் பெறலாம்.

சோயா சாஸ்:

சோயா சாஸை கூட உப்பிற்கு பதிலாக பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் சரியான அளவில் உப்ப இருப்பதால், அதை சமைக்கும் போது பயன்படுத்த நல்ல சுவை கிடைக்கிறது. அதுமட்மின்றி, சோயா சாஸில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சத்துக்கள் உள்ளன.

வெங்காயப் பொடி:

காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் மிகவும் காரமான சுவையுடையது. எனவே இதனை உணவில் சரியான அளவில் சேர்த்தால், சரியான ருசியைப் பெறலாம்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாற்றிலும் சூப்பரான சுவை உள்ளது. அதிலும் நல்ல ஃப்ரஷ்ஷான எலுமிச்சை பழத்தை நறுக்கிப் பயன்படுத்துவது சிறந்த ருசியைத் தரும். அதுவே காய்ந்த எலுமிச்சையை பயன்படுத்தினால், பின் உணவில் சுவையே மாறிவிடும்.

சூரியகாந்தி விதை:

சூரியகாந்தி விதைகளில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் உப்பிற்கு பதிலாக சேர்க்கக்கூடிய சிறந்த உணவுப் பொருட்களில் ஒன்றாகும்.

இலவசமாக சிறு நீரகக்கல் கரைய.

இலவசமாக சிறு நீரகக்கல் கரைய...
=================================

கடந்த 30.05.2017 அன்று என்னிடம் முதுகுக்கு பிம்புறம் இடதுபக்கத்தில் தாங்கமுடியாத வலியுடன் வீரமுத்து என்ற நோயாளி என்னிடம் மருத்துவம் பார்க்க வந்தார்.

அவர் கடந்த ஒரு வருட காலமாக  7 mm அளவு சிறுநீரகக்கல் தொந்தரவினால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழைத்தண்டு சாறு குடித்தும், பல ஆங்கில மருத்துவர்களை அணுகி குளுகோஸ் வாயிலாக கல் கரைக்கும் மருந்துகளை உடலில் செலுத்தியதின் வாயிலாக  அது 6 mm அளவு குறைந்தும், நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியாமல் லேப்ராஸ்கோப்பி ஆபரேஷன் செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயத்தின் காரணமாக என்னை பார்க்க வந்தார்.

நான் அவரது மருத்துவ குறிப்பேடுகளை பார்த்ததில் அவரது இடதுபுறம் சிறு நீரகத்தில் கல் உருவாகி அது 7 mm  அளவு வளர்ந்து  பிறகு சில மருந்துகளினால் அது 6 mm அளவு குறைந்தும் அவருக்கு தாங்க முடியாத வலியைக் கொடுத்து வந்தது தெரிந்தது.

இதற்கு ஒரு பைசா கூட செலவு இல்லாத இயற்கை மருந்து ஒன்று கூறுகின்றேன் என அவரிடம் கூறி அவருக்கு நாம் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முதல் நாள் காப்பு கட்டுதல் என்ற ஒரு சம்பிராதாயத்தை காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றோமே அதில் கட்ட பயன்படும் சாதாரணமான பீளைப்பூ தேவை என்றேன்.

இதன் தாவரப் பெயர் : Aervalanata.
தாவரக்குடும்ப பெயர்: Amarantaceae.
இதன்வேறுப் பெயர்கள்: சிறு பீளை, சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்பார்கள்.

இந்த பீளை பூவை சிறிது எடுத்து ஒன்றறை டம்பளர் நீரில் அவைகளைப் போட்டு நீரை நன்றாக கொதிக்க வைத்து நீர் பாதியளவு சுண்டக்காய்ச்சி அந்த நீரை தினமும் வெறும் வயிற்றில் 10 நாட்களுக்கு எடுத்து வரவும் என்று கூறியிருந்தேன். இத்துடன், அசைவ உணவுகள் மற்றும் மசாலா உணவுப்பண்டங்களைத் தவிற்கக் கூறியிருந்தேன்.

அவரும் 10 நாட்களாக நான் கூறிய இந்த இலவச வழிமுறையை கைடைப்பிடித்து வலி நின்றவுடன் மிகுந்த சந்தோஷத்துடன் என்னை வந்து சந்தித்தார்.

நான்,மீண்டும் சிறுநீரகக்கல் எந்த அளவுக்கு கரைந்து உள்ளது என்பதைப் பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு முழுவதுமாக கல் கரைந்திருந்ததை அறியமுடிந்தது.

இதில் அவருக்கு முழுவதுமாக கல் கரைந்து பூரண குணம் கிடைத்து.

இதில் எனக்கும்,அவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

எனவே, நம் முன்னோர்கள் ஆங்கில மருந்துகள் இந்தியாவிற்கு வரும் முன்னர் இதுபோல இயற்கை முறையில்தான் மருத்துவம் செய்துகொண்டார்கள், பணத்தை பல மடங்கு பிடுங்கி இலாபம் பார்க்கும் பண்ணாட்டு மருந்து கம்பெனிகளை நம் நாட்டில் அனுமதிக்கவில்லை. ஆனால், தற்பொழுது மருந்து விற்பனைக்காக இந்த நாட்டையே விற்க தயாராக இருக்கும் அரசியல்வாதிகளிடத்தில் நம் நாடு உள்ளதை நினைக்கும் போது மனம் வேதனைப்படுகின்றது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...