Tuesday, July 25, 2017

*ஆவாரம் பூவிற்குள் ஒளிந்திருக்கும் ஆயுளை கூட்டும் ஆயிரமாயிரம் மருத்துவ குணங்கள்!*

*ஆவாரம் பூவிற்குள் ஒளிந்திருக்கும் ஆயுளை கூட்டும் ஆயிரமாயிரம் மருத்துவ குணங்கள்!*

ஆவாரம் பூ கடுமையான வறட்சியில் கூட வளர கூடிய ஒரு மருத்துவ தாவரம். இதன் இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்தும் மருத்துவ குணம் கொண்டது. 'ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ' என்று ஒரு பழமொழி இருக்கிறது. அந்த அளவுக்கு ஆவாரம் பூ உடலில் உள்ள நோய்களை குணப்படுத்த கூடிய மருத்துவ குணங்களை கொண்டது.

ஆவாரம் பூவில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்டுகள் அடங்கியுள்ளன. டென்ஸ்போயிட்கள், டானின்கள், ஃபிளாவனாய்டுகள், சபோன்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ஸ்டீராய்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன

மலச்சிக்கல் பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. தினமும் இரண்டு முறை மலம் வெளியேறினாலே உடலில் பல நோய்கள் அண்டாது. உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால் ஆவாரம் பூ தேனீரை பருகுங்கள்.

புதிய ஆவாரம் பூக்கள் சருமத்தில் ஏற்படும் பூஞ்சை மற்றும் நுண்ணுயிர் தொற்றுக்களுக்கு எதிரியாக விளங்குகிறது. இதனை சருமத்தின் மீது தடவலாம் அல்லது தேநீராகவும் பருகலாம்.

ஆவாரம் பூ தேநீரை பருகுவதால் சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக்கள் நீங்கும். இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இரத்தமும் பெருகும்.

அதீத சக்திகள் கொண்ட ஆவாரம் பூ தேநீரை நீங்கள் தொடர்ந்து பருகுவதால், காலரா மற்றும் டைப்பாய்டு போன்ற நோய்களும், காய்ச்சல்களும் கூட குணமாகும்.

சக்கரை நோய்க்கு பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆவாரம் பூ பட்டை மிக சிறந்த பலனை தரும். இந்த ஆவாரம் பட்டை நீரானது சக்கரை நோய் மட்டுமில்லாமல் மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவற்றையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு அரை லிட்டர் நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினமும் இரண்டு முறை 1.5 அவுன்ஸ் வீதம் குடித்துவர சக்கரை நோய், மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும்.

ஆவாரம் பூ பொடியை மேனிக்கு பயன்படுத்தினால் மேனி பொன் நிறமாகும். இதனை குளியல் பொடியுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அல்லது ஆவாரம் பூ தேநீர் குடித்தாலும் இரத்தம் சுத்தமாகி மேனி தங்க நிறம் பெரும்.

*காய வைத்த ஆவாரம் பூ அல்லது ஆவாரம் பூ பொடியை நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால், உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்*

ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

Health Care :-

ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதை நீராகாரம், நீச்சுதண்ணி என்றும் சொல்வர். கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு இருந்து வரும் ஆரோக்கிய பானம் நீராகாரம் என்கிற சோற்று நீர். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பும் கொஞ்சம் புளித்த மோரும் சேர்த்து சிறிய வெங்காயம் மூன்று நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். கொஞ்சம் கொத்துமல்லி தழையும் கறிவேப்பலையும் கிள்ளிப் போட்டுக் கொள்ளலாம். உடன் கடித்துக் கொள்ள இரண்டு பச்சைமிளகாயும் இருந்தால் அதன் ருசியே தனி தான். இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது நீராகாரத்தை (சோற்றுநீர்) இரண்டு குவளை பருகினால் என்ன நிகழும் என்பதை தான் மேலேஉள்ள பழமொழி சொல்கிறது. ஆமாங்க! சோற்று நீரை பருகினால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். முதல் நாள் சோற்றில் நீர் ஊற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் விட்டமின் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் "ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்" (கவனியுங்கள்- மில்லியன் அல்ல "ட்ரில்லியன்") பெருகி நம் உணவுப்பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறு வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அதனால் எந்த காய்ச்சலும் நம்மை அணுகாது. இப்பொழுது புரிந்திருக்கும் நமது மூதாதையர்கள் எதனால் பலசாலிகளாகத் திகழ்ந்தனர் என்று!
பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் சில உங்களுக்காக இதோ ...

1. காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும்போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்றுவலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இந்த பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியைத் தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வந்த்தால் ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. எல்லவற்றிற்கும் மேலாக, நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில் கூட வராது.

10. ஆரோக்கியமாகவும்  அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்.

🤝 

Sugar diseases cure d

Sugar Admin Shk Rhmn Zbda:

https://youtu.be/ZN3kama2CeQ

"8" நடை பயிற்சி

"8" நடை பயிற்சிக்கு நம் கால் பாதத்தையே ஒரு அடியாக கொண்டு,
3 அடி ஆரத்தில் வட்டமிட்டு நடத்தல் நல்லது என்ற எனது குறிப்பிற்கு,
ஒரு முகநூல் நண்பர், "சிறிய வட்டமாக இருந்தால் தலை சுற்றுமே?
சற்று பெரியதாக ஏன் இருக்கக் கூடாது?"
எனக் கேட்ட கேள்விக்கு, என் கருத்தை பதிவாக்கியிருக்கிறேன்!
இதுவே சரியானது என வாதம் செய்யவது நோக்கமல்ல!
இது எனது புரிதல் மட்டுமே! ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்!

ஏனெனில் எனது பதிவுகள் விஞ்ஞானம் சார்ந்தது அல்ல!
அனுபவத்தை அடிப்படையாக கொண்டது!
விஞ்ஞான விளக்கம் கேட்கும் அன்பர்கள் சற்று தள்ளி நிற்கவும்!

"8" நடை எதற்கு பரிந்துரைக்கப்படுகிறது என்பதே தெரியாமல் இருக்கிறோம்!
இதைப்பற்றிய புத்தகம் எழுதியவர்களிலிருந்து,
வாய்வழியாக சொல்பவர்கள் வரை தெரிந்துக்கொள்ளாத விஷயம் ஒன்றுள்ளது!

மேம்போக்காக சொல்லப்படுகிற, கேட்கப்படுகிறஎல்லாமே
"தாத்பர்யத்தை" விட்டுவிட்டு "சம்பிரதாயத்தை"
கெட்டியாக பிடித்துக்கொள்வதின் விளைவு!

"8" நடையென்பது முதுகு தண்டு நெகிழ்வு தன்மை பெற்று
"அலைன்மென்டில்" இருப்பதற்கு!
நமது அன்றாடம் இயக்கத்தில், முதுகுதண்டு
பல முறை "டிஸ்அலைன்மென்ட்" ஆகி மீண்டும்
அலைன்மென்ட் ஆகவேண்டும்!

தவறான உணவு பழக்கம் மற்றும், "sedentary" வாழ்க்கை முறையால்
(உடல் இயக்கங்களை இயந்திரங்களிடம் ஒப்படைத்துவிட்டு,
நாகரீகம் என்ற பெயரில் சோம்பித்திரிந்து நோய்களை அழைத்துக்கொள்வது)
அன்றாடம் குனிந்து நிமிர்ந்து வளைந்து திரும்பி-இப்படி பல உடல் இயக்கங்களுக்குப்பின், முதுகுதண்டு 100% அலைன்மென்ட் நிலைக்கு வருவதில்லை!

இதைத்தான் "error" என்கிறது நவீன மருத்துவம்!
உ..ம். S1, S2, T2, T3, L5, L6 ல் error என்பது- இதற்கு
சிகிச்சை ஒன்றே வழியென பயமுறுத்துகிறது!
சிகிச்சைக்குப்பின், இப்பொழுது இருக்கும் இயக்கம்கூட இல்லாமல் போகவும்,
இயக்கம் சற்றும் இல்லாமல் படுத்த படுக்கையில் காலம் கழிக்கவும்,
வாய்ப்புள்ளது என முன்னெச்சரிக்கையாக ஒப்பந்தத்தில் கையெழுத்துப்பெறுகிறது!
நாமும் படித்துப்பார்க்காமலே, படித்தாலும் புரிந்துக்கொள்ளாமலே
கையெழுத்து இடுகிறோம்!
அறுவை சிகிச்சையின்போது நடக்கும் மனித தவறால் மோசமான
பின் விளைவிற்கு நம் தலையெழுத்து என நொந்துக்கொள்கிறோம்!

அனைத்து உறுப்புகளையும் மூளைக்கும்,
மூளையை அனைத்து உறுப்புகளோடும் இனைப்பது
சிறு சிறு நுண்ணிய நரம்புகள்!
இந்த நரம்புகள்தான் நமது உடல் இயக்கத்தின்
அனைத்துச் செய்திகளையும் மூளைக்குத்தெரிவிப்பதோடு,
மூளை இடும் கட்டளைகளை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு
செய்தியை சுமந்து செல்லும் முக்கிய வேலையை செய்வது!

இந்த தகவல் பரிமாற்றம் யாருக்கு செவ்வன இருக்கிறதோ
அவர்கள் ஆரோக்யத்தை அனுபவிக்கிறார்கள்!
இத்தகவல் பரிமாற்றத்தின் "telephone exchange" ஆக
பணியாற்றுவது முதுகுதண்டு!

"எர்ரரில்" (முள் எலும்புகளுக்கிடையே)
மாட்டிக்கொள்ளும் நுண்ணிய நரம்புகளால் தகவல்
பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது!
முதுகெலும்பை நேராக வைத்துக்கொள்ளும் ஆரோக்யவான்களுக்கு
நோய் என்பது இல்லை, அப்படி வந்தாலும் உடலே மருத்துவராக,
தகவல் பரிமாற்றத்தின் மூலம் சரிசெய்து கொள்கிறது(self healing)!

சில நரம்புகள் மாட்டிக்கொள்வதால்,
தகவல் போக்குவரத்து பாதிக்கப்படுவதால்,
உடல் சில பிரச்சினைகளை தீர்க்க முடிவதில்லை!

அத்தகய நரம்புகளை "ரிலீஸ்" செய்வதே "8" நடையின் நோக்கம்!
இதற்காக முதுகுதண்டிற்கு நெகிழ்வுத்தன்மையை
பழக்கப்படுத்துவதே சரியான தீர்வு!
குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் பழக்கமுள்ளவர்களுக்கு,
வாழ்க்கைமுறையிலேயே, நெகிழ்வு தன்மை கிடைத்துவிடும்!

ஆகவே "8"நடை நடக்கும்போதும் உங்கள் பாதம்,
ஒவ்வொரு அடியும் வளைந்து, வளைந்து(curve)ஆக வைக்கப்படவேண்டும்!
அப்பொழுதுதான் முதுகு தண்டின் முள் எலும்புகள்
நெகிழ்வுத்தன்மைக்கு பழக்கப்படும்!
இதற்கு வட்டம் உங்கள் பாதத்தில் 3 அடி ஆரம் உள்ள சற்று
குறுகிய வட்டமிருந்தால்தான் சாத்தியம்!
பெரிய வட்டத்தில் இது சாத்தியமில்லை, எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்காது!

இதுமட்டுமல்லாமல், முள் எலும்புகளுக்கிடையில்
"lubrication" தேவைக்கு, தாவரக்கொழுப்பு
தரும்படியான காலையுணவு, வாழைப்பழத்தையே(divine food)
உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும்!

மூன்றுவேளையுமே செயற்கையுணவை சாப்பிட்டுக்கொண்டு
"8" நடை நடந்தாலும் நினைக்கும் ஆரோக்ய நிலை, எட்டாக்கனியே!

முறையாக தெரிந்துக்கொள்ளும் எனது ஒருநாள் பயிற்சி வகுப்பின்
பயனாளிகளுக்கு எந்தக்குழப்பமும், இது போன்ற வாழ்க்கைமுறை
மாற்றத்தை, வாழ்நாள் முழுதும் செய்ய எந்த தடையும்இருப்பதில்லை!

குரு இல்லாமல், எல்லாவற்றையும்,
கூகுள், யூ ட்யூப், முகநூல், வாட்ஸப், மற்றும் கேள்வி ஞானத்தால்
செய்ய நினைக்கும் அன்பர்களுக்கு "தவறான புரிதலுக்கு" நிறய வாய்ப்புள்ளது!

அதனாலேயே நல்ல விஷயங்களை நாம்
ஆரம்பித்தாலும் தொடர்ந்து செய்யமுடிவதில்லை!
யோசித்துப்பாருங்கள், சிறு வயதிலிருந்து எத்துனை
செயல்களை முயற்சித்திருக்கிறோம்!
அவற்றில் எதை தொடர்ந்து செய்கிறோம்?

ஒவ்வொருவரும் அவர்களின் புரிதலுக்கு ஏதாவது
சொல்லிக்கொண்டிருப்பார்கள், அது நல்லதாக
இருந்தாலும் எல்லாவற்றையும் செய்ய நினைப்பது,
எதையுமே உருப்படியாக செய்ய முடியாத நிலைக்குத்தள்ளும்!

நீங்கள் கூறியதுப்போல தலை சுற்றல் வருவது,
நம் உடலின் ஆரோக்யமற்ற நிலைப்பாடு!
உடலை அதற்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்ளவேண்டுமே
தவிற வட்டத்தை பெரிதாக்கிக்கொள்ளக் கூடாது.

Happy Healing... 💐

*வெரிகோஸ் வெயின் என்பது நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகும்.*


*வெரிகோஸ் வெயின் என்பது நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகும்.* *பொதுவாக சாதாரண நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால் வெரிகோஸ் நரம்பில் ரத்தம் பின்னோக்கியும் செல்லும்!*

_
காரணம் நரம்புகள் ஒன்றோடொன்று பின்னப்பட்டும் திருகியும் காணப்படும்.
_ _
இதனால்தான் அங்கே சிலந்தி போல் நரம்புகள் காணப்படுகின்றன.
_

_
நாள் முழுவதும் அதிக நேரம் நிற்பது, அதிகமாய் கால்களுக்கு சிரமம் தருவது ஆகியற்றால் வெரிகோஸ் வெயின் வர காரணமாகும்.

L admin agriculture:
அத்தி மரம் பாலை கொண்டு நரம்புகள் முடிச்சு உள்ள இடத்தில் தொடர்ந்து 48 நாட்கள் காலை மாலை தடவிட வெரிகோஸ் குணமாகும்...

அத்தி மர பால் கிடைக்கவில்லை என்றால் சைப்பரஸ் ஆயில்/ எண்ணெய் தடவவும்...

லேசர் அல்லது அறுவை சிகிச்சை மூலம் கண்டிப்பாக இதற்கு தீர்வு இல்லை என்பதில் 100% சவாலு
_

_
மிகத் தீவிரமான வெரிகோஸ் வெயின் இருந்தால் அதனால் தாங்க முடியாத வலி உண்டாகும். நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள். ரத்த ஓட்டம் பாதித்து, மரத்தும் போகும்.
_

_
இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று இல்லை. இதனை வீட்டிலேயே மூலிகை சாற்றின் மூலம் குணப்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை.
_

*தேவையானவை:*
_ஆப்பிள் சைடர் வினிகர் - 2 ஸ்பூன்_
_கேரட் - அரை கப்_
_சோற்றுக் கற்றாழை - அரை கப்_

*தயாரிக்கும் முறை::*
_
கேரட்டை பொடிபொடியாக நறுக்கி அதனுடன் கற்றாழையை கலந்து மிக்ஸியில் அரையுங்கள். அதில் சிறிது சிறிதாக ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மேலும் அரையுங்கள். க்ரீம் போன்ற பதம் வரும் வரை நைஸாக அரைக்க வேண்டும். நீர் கலக்கக் கூடாது.
_

*_
எப்படி உபயோகிப்பது!
_*
_
இந்த க்ரீம் போன்ற கலவையை வெரிகோஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து, காலை மேலே தூக்கி ஏதாவது உயரமான பொருளின் மீது வைத்துக் கொள்ளுங்கள்.

_
அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவலாம். இதனை அந்த நரம்புகள் மறையும் வரை தினமும் உபயோகியுங்கள். நல்ல பலனைத் தரும்.
_

மாதுளம்பழம் குணங்கள் :


மாதுளம்பழம் குணங்கள் :

     மாதுளம் பழத்தில் வைட்டமின் சி எனற உயிர்ச் சத்து உள்ளது.

      ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தைத் தூய்மைப்படுத்தவும், நினைவாற்றலை அதிகரிக்கும் ஆற்றலும் மாதுளம் பழத்திற்கு உண்டு.

        பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும், எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதியை அளிக்கும் சத்தி இதற்குண்டு.

       மலச்சிக்கல், வறட்டு இருமல், மலத்தில் ரத்தம் வருதல், கடுமையான சீதப்பேதி, நீர்த்தாரையில் எரிச்சல் இருந்தாலும் குணமாக்கும்.

       ஆண், பெண் இருபாலாருக்கும் உண்ர்வுகளைத் தூண்டும் ஆற்றல் பெற்றது.

      கோழை சம்பந்தப் பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

        அளவுக்கு மீறிய போதையில் மயக்கிக் கிடப்பவர்களுக்கு மாதுளம் பழச்சாற்றைக் கொடுக்க மயக்கம் தெளியும்.

       கருவுற்றிருக்கும் பெண்கள் மசக்கை, வாந்தி போன்றவற்றால் வருந்தும் நிலையில் மாதுளம் ஒரு கை கண்ட மருந்தாகும்.

     சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு.

     புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.

         3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை வைத்து தலையை அலச வேண்டும்.

இப்படி தொடர்ந்து 10 நாட்கள் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று வளர ஆரம்பிக்கும்.

        மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.

     ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.

    சிருக்கு திறக்கவே முடியாத அளவுக்கு கண் பொங்கிவிடும்.. இமைகளும் உதிர்ந்து விடும். இதற்கு ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஆற வைத்துக் கிடைக்கிற தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.

    சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு!

  மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.

      ஒரு டீஸ்பூன் மாதுழை பவுடருடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும்.

      குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும்.

     வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

       பருவே வராமல் தடுக்கும் மந்திரமும் மாதுளைக்கு இருக்கிறது. ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ்டன் ஒரு டீஸ்பூன் வெட்டிவேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவி வந்தால், பருக்கள் உங்களை நெருங்காது !

     "மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால்பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும்.
ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

           கடுமையான சீத பேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளைதான்.

     மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு.. இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

  இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

     மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.

    கல்கண்டு, பனீர், தேன், மாதுளம்பழச் சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து, கலந்து, உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து, சருமத்தை விட்டே விலகும்.

      மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்."

     மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.

     மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.

      மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் ம

♥#பிரசவத்திற்கு பின்.. தாய்மார் செய்யவேண்டியது... நார்மல்&சிசேரியன்

Rasi:
தகவல் ;;டாக்டர் தனலட்சுமி. (MD)Acu சென்னை ;91

♥#பிரசவத்திற்கு பின்.. தாய்மார் செய்யவேண்டியது... நார்மல்&சிசேரியன்

♥பொதுவாக நார்மல் டெலிவெரி மூலம் குழந்தைப் பெற்றவர்கள் செய்ய வேண்டியது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது; ஆனால் ஓரளவு எனக்குத் தெரிந்தவற்றை கூறுகிறேன்...

♥ #நார்மல் டெலிவெரி தாய்மார்கள் #கவனத்திற்கு:

♥குழந்தை பிறந்ததும் சில மணி நேரங்களில் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு உடல் தெம்பு இருக்கும்;

♥ ஆனால் சிலருக்கு சில குறைபாடுகள் காரணமாக உடல் வ்லுவின்றி எழுந்திருக்க முடியாது, அதனால் பரவாயில்லை உங்களுக்கு முடியும் போது எழுந்து கொள்ளலாம்;

♥ நீங்கள் முக்கியமாக படுத்திருக்கும் போது உங்கள் கால்களை ஒடுக்கி வைத்தே உறங்க வேண்டும்;

♥டெலிவெரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எவ்வளவு சூடு உடல் தாங்குமோ அவ்வளவு சூடு உள்ள தண்ணீரை வைத்து குளிப்பதோடு அல்லாமல் உங்கள் வயிற்றிலும் நன்கு வேகமாக ஊற்ற வேண்டும்; இது தொங்கும் வயிற்றை குறைப்பதற்காக;

♥நன்கு நடைபயிற்சி செய்தல் அவசியம்; அப்போது தான் எடை பழையபடி வரும்; வயிறும் குறையும்;

♥இப்போது நீங்கள் பெல்ட் (அ) காட்டன் துணி கொண்டு உங்கள் வயிற்றை இறுகக் கட்டிக்கொள்ளுங்கள்; இது உங்கள் வயிற்றை பழைய அளவிற்கு இறுக்க உதவும்;

♥இப்போது நீங்கள் வயிற்றைக் குறைப்பதற்காக உங்கள் மருத்துவர் கூறும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்

♥ உணவுக் கட்டுப்பாடு கூடவே கூடாது

♥பத்திய உணவு என்று சமைத்துக் கொடுப்பார்கள்; தயவு செய்து சுவை பிடித்தாலும் பிடிக்காவிடினும் அதனை உண்ணுவதே சிறந்தது உங்கள் உடல் நிலைக்கும் உங்கள் குட்டிப் பாப்பாவுக்கும்;

♥ #சிசேரியன் டெலிவெரி தாய்மார்கள் கவனத்திற்கு:

♥ நீங்கள் மூன்று நாட்களில் நடக்கத் துவங்கலாம்

♥நீங்கள் டெலிவெரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எவ்வளவு சூடு உடல் தாங்குமோ அவ்வளவு சூடு உள்ள தண்ணீரை வைத்து குளிப்பதோடு அல்லாமல் உங்கள் வயிற்றிலும் மெதுவாக ஊற்ற வேண்டும்; இது தொங்கும் வயிற்றை குறைப்பதற்காக;

♥ஒவ்வொரு முறை குளித்தப் பின்பும் தையல் போட்ட இடத்துல் நீர் இல்லாமல் பார்த்து ஒற்றி எடுக்க வேண்டும்; துடைக்கக் கூடாது அவ்விடத்தில்;

♥ உங்களுக்கு அதிகம் பத்திய உணவு தேவை இல்லை; ஆனால் காரம் மற்றும் புளிப்பு, ஒவ்வாமை குணம் உள்ள உணவு கூடவே கூடாது;

♥ நீங்கள் உங்கள் வயிற்றை மருத்தவர் ஆலோசனைப் படி இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு பெல்ட் அல்லது துணி மூலம் கட்டலாம்। ஆயினும் முழுமையாக வயிறு ஒட்டுமா என உறுதியளிக்க இயலாது

♥நீங்கள் மல்லாந்துப் ப்டுத்தவாக்கில் எழுந்திருக்கக் கூடாது; குப்புற படுப்பதும் கூடாது;

♥அதிக எடை தூக்குதல், வேகமாக நடத்தல், அதிக அளவு வேலை செய்தல் கூடவே கூடாது 8மாதங்களுக்கு;

♥சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்;

♥பொதுவாக இரு வகையினரும் செய்ய வேண்டியது:

♥குளிர் பானங்கள், செயற்கை உணவுப் பொருள், கடை உணவு, குளிர்ந்த நீர், அதிக காரம், அதிக புளிப்பு, சிக்கன் மற்றும் அதிக சூடு தரும் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்;

♥ஈரத் தலையுடன் அதிக நேரம் இருக்காமல் விரைவில் உலர்த்திடுங்கள்;

♥உங்கள் உடல் சூடு குழந்தைக்குக் கண்டிப்பாக அவசியம் ஆதலால் குழந்தை உங்கள் அருகாமையிலேயே இருக்க வேண்டும்; உங்களுடன் உங்கள் அருகிலேயே தூங்க வேண்டும்;

♥அதிகம் தண்னீர் மற்றும் பால், மீன், கீரை, பச்சைக்காய்கறிகள், திராட்சை,
பலா, மா தவிர்த்து அனைத்து விதமான பழங்கள் போன்றவற்றை அத்தியாவசிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்;

♥பால் குறையும் சமயம் ரஸ்க், பிரட், பீன்ஸ், கோதுமை உணவு, ஓட்ஸ் கஞ்சி, பால், தண்ணீர், மீன், தயிர் சாதம் போன்றவை உடனடியாகப் பால் சுரக்க உதவும்;

♥கஸ்தூரி மஞ்சள் வயிற்றில் உள்ள கோடுகளை நீக்க உதவும்; ஆனால் சிசேரியன் செய்தவர்கள் வெளிப்புற புண் ஆறியது இதனை உபயோகிக்கலாம்;

♥குழந்தைக்குப் பால் கொடுக்கும் வரை கர்ப்பம் தரித்தல் கூடவே கூடாது; சிலர் பால் கொடுக்கும் போது கர்ப்பம் தரிக்காது என்று தவறாக நினைக்கிறார்கள்; அப்படியெல்லாம் இல்லை, எனக்குத் தெரிந்த ஒருவருக்கு கையில் 5மாதம் வயிற்றில் மூன்று மாதம்

♥குழந்தை வெகு நேரம் பால் குடிக்காமல் இருந்தால் சேர்ந்திருக்கும் பாலை எடுத்துவிடுவது நல்லது;

♥அதிக இரும்புச் சத்து, கால்சியம் நிறைந்த உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்;

♥முக்கியமானது என்னவென்றால் இப்போது உங்கள் குழந்தை மட்டுமல்ல நீங்களும் புதிதாகப் பிறந்திருக்கிறீர்கள்; ஆதலால் உங்கள் உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து நிறைந்த உணவு மூலம் வலு சேர்க்க வேண்டும்;

♥அதிக அளவு காய்கறி சூப், மட்டன் சூப், ஈரல், முட்டை, பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்;

♥இப்படியெல்லாம் நம்மை நாமே பார்த்துக்கொண்டால் வயதானாலும் தெம்புடன் இருக்கலாம்; பிரசவத்திற்கு பின் உடல் நிலையை கவனிக்கவில்லை எனில் பிற்காலத்தில் பாதிப்பு.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...