Tuesday, September 6, 2016

இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும் ஆளி விதை - இயற்கை மருத்துவம்
ஆளி விதைகளின் பயன்கள் அளவிட முடியாதவை. தமிழில் ஆளி விதை எனப்படும் இந்த விதை தெலுங்கில் ‘அவிஸி கிற்சலு’, மலையாளத்தில் ‘செருவுசான வித்து‘, கன்னடத்தில் ‘அகஸி’, ஹிந்தியில் ‘அல்ஸி‘ என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் இடாஸி. ஆனால், நம் நாட்டில் ‘லின் சீட்ஸ்’ என்பதே ஆங்கிலத்தில் பழக்கத்தில் இருந்தது. இப்போது பலரும் பெயர் தெரியாததால் வேற்றுநாட்டு மொழியில் கூறப்பட்டதையே ஆங்கிலத்தில் கூறுகின்றார்கள்.
100 கிராம் அளவு ஆளி விதையில் இருக்கும் சத்துகள்
புரதச்சத்து    -    20.3 கிராம்
கொழுப்பு    -    37.1 கிராம்
நார்ச்சத்து    -    40.8 கிராம்
மாவுச்சத்து-         28.9 கிராம்
சக்தி    -    530 கி.கலோரிகள்
கால்சியம்    -    170 மி.கிராம்
பாஸ்பரஸ்    -    370 மி.கிராம்
இரும்புச்சத்து    - 2.7 மி.கிராம்
இது மட்டுமல்ல கரோட்டீன் (வைட்டமின் - ஏ) தயாமின், ரிபோஃப்ளோவின், நயாஸின் (4.4 மி.கி.), ஃபோலிக் ஆஸிட் மிகச்சிறந்த அளவில் உள்ளன. இதில் புரதச்சத்தின் முக்கியக்கூறான 12 அமினோ அமிலங்களும் உள்ளன. அதனால் இதை ஒரு ‘முழுமையான உணவு’ என்று கூறலாம்.
நமது ஆரோக்கியத்தில்ஆளி விதையின் பங்கு
* இதில் உள்ள ஆல்பா லினோலியிக் ஆஸிட் என்னும் கொழுப்பைத்தான் ‘ஒமேகா-3’ கொழுப்பு என்றும் கூறுவர். இது மிக முக்கிய கொழுப்புச்சத்து. ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்க செய்யும். அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும்.
ஆஸ்துமா, பார்க்கின்ஸன்ஸ் எனப்படும் சீக்கிரம் வயதான தோற்றமளிக்கும் வியாதியைத் தடுக்கும் பல முக்கிய சத்துகளைக் கொண்டது. இதில் உள்ள ‘லிக்னன்‘ என்னும் கொழுப்பு உதவி புரியும் என்பதை பல விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். அதில் முக்கியமானது ‘பிட்ஸ் பேட்ரிக்’ என்னும் விஞ்ஞானி செய்த ஆய்வு.
* பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலங்களில் திடீரென உடல் சூடாவது போலவும் குளிர்வது போலவும் அதிகம் வியர்ப்பது போலவும் உணர்வர். இதை ஆங்கிலத்தில் ‘ஹாட் ஃப்ளஷஸ்’ என்று கூறுவர். உடலில் ‘ஈஸ்ட்ரோஜன்’ என்னும் ஹார்மோனின் சுரப்பில் வித்தியாசம் ஏற்படும் போது இதைப்போல உணர்வர்.
இந்த ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் இதைப் போல வருவதைக் குறைக்கும் என்றும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு பல விதமாக உணவுகளில் சேர்க்கும் போது பாதிக்குப் பாதி குறைகிறது என்பதை 2007ல் நடந்த ஆய்வு கூறுகிறது.
* இதில் கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து, கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து இரண்டுமே பல வகைகளில் நமக்கு நன்மை செய்யும். கொலஸ்ட்ராலை குறைக்கும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது. சர்க்கரை வியாதியைக் குறைக்கும். க்ளைஸிமிக் இன்டெக்ஸ் குறைவு.
* இதில் அதிக அளவு உயிர்வளித் தாக்க எதிர்க்காரணிகள் (Anti Oxidants) உள்ளதால் பிராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மலக்குழாய் புற்றுநோய் போன்றவை வராமல் பாதுகாக்கும். தினமும் உட்கொண்டால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாது. வந்தவர்கள் உட்கொண்டால் கட்டிகள் மேலும் பெருகாது என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
* தினமும் ஆளி விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும். சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும்.
உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்
உணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம்தான். இன்றைக்கு பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமாகிவிட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாறவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங் களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக் கும், கொழுப்பு சத்து குறையும், உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
சிறுதானியங்கள்
கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடு பவர்கள் இருக்கின்றனர். அதனால்தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல்பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை.
கம்பு, சோளம்
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.
வரகு, ராகி
வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ள து. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.
ஆண்மைக்கு சாமை
சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. இது மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.
சம்பா அரிசி
நாம் அன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி என பலவகை உள்ளது.
புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.
சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.
கோதுமை, பார்லி
அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.
வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.
குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.
முகத்தில் வரும் முகப்பரு, கட்டி, கரும்புள்ளிகள் நீங்க - இயற்கை மருத்துவம்
சிலருக்கு முகத்தில் முகப்பரு, கட்டி, கரும்புள்ளிகள் வரும். இதற்கு கண்டகண்ட மருந்துகளை பயன்படுத்தாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறைகளை பயன்படுத்தி பலன் பெறலாம்.
முகப்பரு நீங்க :
* புதினா இலையை அரைத்து, தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தில் தடவி காலையில் கழுவினால் முகப்பரு நீங்கும்.
* தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை சமமான அளவில் கலந்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு குறையும்.
முகத்தில் கட்டிகள் குறைய :
* சந்தனத்தை நன்கு அரைத்து முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு பின்பு முகம் கழுவி வந்தால் சூட்டினால் முகத்தில் வரும் சிறு கட்டிகள் குறையும்
முகத்தில் கரும்புள்ளிகள் குறைய :
* கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காயவைத்து பின்பு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் படிப்படியாக குறையும்.
* சிறிதளவு கடலை மாவை பாலேட்டுடன் கலந்து குழைத்து இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக முகத்தில் பூசி வைத்திருக்க வேண்டும். பின்பு காலையில் எழுந்ததும் பயத்தம் பருப்பு மாவை முகத்தில் தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல் ஆகியவைகள் குறையும்.
மூலிகை பயன்கள் - சோம்பு - இயற்கை மருத்துவம்
மருத்துவக் குணங்கள்:
1) பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை ஜீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள்.
2) இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச் சார்ந்தது. வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இந்தியா முழுவதும் இது பயிரிடப்படுகிறது. குறிப்பாக கேரளா பகுதிகளில் அதிகம் விளைகிறது.
3) இதன் பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
4) எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.
5) சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.
6) அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.
7) கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப்படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.
8) உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.
9)  சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.
10) நாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.
அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
11) பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்
உடல் பருமனைக் குறைத்திட சில எளிய வழிகள் - இயற்கை மருத்துவம்
1. இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால், ஜின்ஜிபெரின் மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் நீக்கும் .
2. கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
3. சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.
4. பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.
5. எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.
6. நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
7. சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.
8. நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்.
காபி பிரியரா நீங்க... சுற்றுச் சூழலின் நண்பன் ஆகலாம் வாங்க!
#
ஒவ்வொரு நாளும் உலகம் முழுக்க அகற்றப்பட முடியாமல்  குவிந்துவரும் குப்பைகள் ஒருபுறம் என்றால்... எதிர்காலத்தையும்,வருங்கால சந்ததியினரைப் பற்றியும் கொஞ்சம் கூட கவலைகொள்ளாமல் சரமாரியாக மரங்கள் வெட்டப்படுவது மறுபுறம்... மரங்கள் வெட்டப்பட்டதனால் இன்று  உலகம் சந்தித்துவரும் பிரச்னைகள் ஒன்றல்ல இரண்டல்ல!
மத்தியப் பிரதேசத்தில் கிசிபுரா என்ற பகுதியில் மணமகன் வீட்டாரிடம் மணமகள் வீட்டார் மரக்கன்றுகளை சீராக கேட்கும் அளவு மரத்தின் தேவை  பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடையே உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு மரங்கள் காணாமல் போய்விட்டன.
உலகின் இந்த இரு மிக முக்கியமான பிரச்சினைகளுக்கும் சேர்த்து ஒரே தீர்வு இருந்தால்?
“இருந்தால் என்ன, தீர்வு இருக்கிறது” என்கின்றது கலிபோர்னியாவை சேர்ந்த ‘Reduce Reuse Grow’ என்கின்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்.
பயன்படுத்திய பின் மண்ணுக்குள் நடக்கூடிய 'பயோ காபி கப்' (bio coffee cup)என்ற காபி கோப்பைகளை உலகிலேயே முதன்முறையாக வடிவமைத்துள்ளனர் இவர்கள். காபி அருந்திய பின்னர் அந்த காபி கோப்பையை மண்ணுக்குள் புதைத்துவிட்டால் போதும். அது செடியாக வளர்ந்துவிடும்.
ஆய்வு ஒன்றில், சராசரியாக ஒரு நாளைக்கு அமெரிக்காவில் மட்டும் 400 மில்லியன் காபி கோப்பைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது. இப்போது நடைமுறையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள் மண்ணில் புதைந்த பின் மட்குவதற்கு பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். ஆனால் இவர்கள் வடிவமைத்துள்ள இந்த பயோ காபி கப்,மூன்று மாதங்களுக்குள் மட்கி செடியாகவே முளைத்து விடுகிறது.
இந்த பயோ காபி கோப்பைகள் PLA என்கிற ஒரு வகையான மட்கும் பிளாஸ்டிக்கால் கோட்டிங் செய்யப்படுகிறது. அதனோடு அறியவகை பூச்செடிகளின் விதைகளும் செலுத்தப்படுகின்றன. காபி அருந்திய பின் இந்த கப்புகளை தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வரை ஊறவைத்து மண்ணுக்குள் புதைத்து விட்டால்போதும். அவை மட்கி, விதைகள் மண்ணுக்குள் புதைந்து கொஞ்சநாளில் செடியாக வளர்ந்து நிற்கும்.
மண்ணில் புதைக்கப்படும் ஒவ்வொரு பயோ காபி கப்புக்குள் இருந்தும் ஒருசெடியாவது முளைக்கும். சிலசமயம், பல நூறு வருடங்கள் வாழப்போகும் மரங்கள்கூட வளரலாம். இந்த காபி கோப்பைகளை தோட்டங்கள், திறந்தவெளி என எங்கு வேண்டுமானாலும் புதைக்கலாம்.
அப்படி காபி குடித்துவிட்டு கோப்பைகளை மண்ணில் புதைக்க கூட முடியாமல் சோம்பேறித்தனமாய் இருப்பவர்களுக்காக 'Reduce  Reuse Grow’ நிறுவனம் அங்கங்கே குப்பை தொட்டிகளை நிறுவி, அதில் சேரும் கோப்பைகளை மண்ணில் புதைத்து செடியாக்கி வரும் சேவையையும் செய்துவருகின்றது.
இந்த புதுமையான விஷயம் மக்களிடம் பரவி இப்போது பலரும் இந்த யோசனையை செயல்படுத்தத் தொடங்கி விட்டனர். கடந்த சில மாதங்களில் இப்படி அங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோப்பைகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளன . கலிஃபோர்னியா மட்டுமின்றி பிற இடங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
“ஒருசமயம் தெருவில் மலைபோல குவிந்து கிடக்கும் குப்பைகளை கண்டபோது, 'தேவையில்லாத இந்தஒவ்வொரு குப்பையும் ஒரு மரமாய் முளைத்திருந்தால் இந்நேரம் இந்த பூமிஎப்படி மாறியிருக்கும்” என்று தோன்றியது. இந்த ஒரு சிறு எண்ணத்தின் செயலாக்கம்தான் இந்த 'பயோ காபி கப்’ என்கிறார் இந்த ஐடியாவை செயலாக்கிய ‘Reduce Reuse Grow’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் ஹெனிகே.
சுற்றுச்சூழலை மேம்படுத்த பழைய திட்டங்களையே செயல்படுத்திக்கொண்டிருக்காமல் அதில் சில புதுமைகளை புகுத்தி நம்மூரிலும் இப்படி புதுமையான விஷயங்களை யோசித்து செயற்படுத்தினால் ஒவ்வொரு காபி பிரியரும் சுற்றுச்சூழலின் சிறந்த நண்பனாக முடியும்...
நாமும் செயல்படுத்தலாமே...
அனைத்து வகை புற்றுநோய்களை எதிர்க்கும் புதிய சிகிச்சை முறை: ஜெர்மனி ஆய்வாளர்கள் சோதனை
#
(புற்றுநோய் செல்கள் வளர்வதைக் குறிக்கும் படம்.)
அனைத்து வகையான புற்றுநோய்களையும் எதிர்த்து அழிக்கும்ஆர்.என்.ஏ. (RNA) வாக்சைன் என்ற புதிய நோய் எதிர்ப்பு சக்தியை ஜெர்மன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், இந்த ஆய்வு அதன் முதற்கட்ட நிலையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
அதாவது, வைரஸ் போன்று செயல்படும் ‘மாறாட்ட வைரஸ்களை’ உடலுக்குள் செலுத்தி புற்றுநோய் கட்டிகளுக்கு எதிரான ஒரு தாக்குதல் தடுப்பு உத்தியை உடலே வினையாற்றுமாறு செய்யப்படும் புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.
3 பேரிடம் மட்டுமே சோதனை செய்யப்பட்ட இந்தப் புதிய சிகிச்சை முறை, நோய் எதிர்ப்புச் சக்தித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக நோக்கப்படுகிறது. அதாவது, உடலில் இயல்பாக உள்ள நோய் எதிர்ப்புச் சக்திக் கூறுகளை ஒன்று திரட்டி புற்றுநோய்க்கு எதிரான ஒரு ராணுவமாக படையெடுப்பு செய்ய இந்த புதிய சிகிச்சை முயற்சி செய்வதாக ‘நேச்சர்’ இதழில் வெளியான இந்த ஆய்வு பற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாறாட்ட வைரஸ்களை ‘ட்ரோஜான் குதிரை” என்று இந்த ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். அதாவது கேன்சர் ஆர்.என்.ஏ. அடங்கிய நேனோதுகள்களாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கொழுப்பு அமில சவ்வினால் மூடி அடைக்கப்பட்டுள்ளதாகும். அதாவது ஒருவகையான மரபணு சமிக்ஞையாக்கமே இது (genetic coding).’’
இந்த ட்ரோஜான் ஹார்ஸ் என்ற நேனோ துகள்கள் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்படும், இதனால் பெரிய அளவில் வைரஸ் படையெடுப்பு தூண்டப்படும், இந்த வைரஸ் படையெடுப்பு சிறப்பு வாய்ந்த உடல் நோய் தடுப்பு செல்களுக்குள் ஊடுருவும்.
புறச்சூழலுடன் தொடர்புடைய திசுக்களில் காணப்படும் செல்கள் Dendritic cells என்று அழைக்கப்படுகின்றன. இந்த செல்கள் உட்செலுத்தப்பட்ட நேனோதுகள்களில் உட்பொதிவாகக் அடங்கியுள்ள ஆர்.என்.ஏ.-வின் உட்கூறுகளை தீவிரமாக ஆராயும் இந்த நடைமுறையில் புற்று நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும்.
இந்த புதிய நோய் எதிர்ப்புச் சக்தி புற்றுநோயை எதிர்த்துத் தாக்கும் டி-செல்களை செயலூக்கம் பெறச் செய்யும். இதனடிப்படையில் புற்று நோய்க் கட்டிகளுக்கு எதிரான ஒரு பெரிய தாக்குதல் தடுப்புச் சக்தியை உடலுக்குள் உற்பத்தி செய்து விடும்.
முதலில் எலிகளில் இதனை பரிசோதனை செய்த ஆய்வாளர்கள் தோல் புற்றுநோய் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை குறைந்த அளவு மருந்தின் மூலம் மேற்கொண்டனர். இதில் ஆச்சரியப்படத் தக்க வகையில் மூவரிடத்திலும் வலுவான நோய்தடுப்பு செயல்பாடுகள் உக்கிரமடைந்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
மேலும் பல சோதனைகளை மேற்கொண்டு இந்த சிகிச்சை முறை வெற்றி பெற்றால், அனைத்து வகையான புற்றுநோய்களையும் எதிர்த்து அழிக்கும் ‘உலகளாவிய’ பொது சிகிச்சை முறை வளர்ச்சி பெறும் என்று இந்த ஆய்வு நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சில புற்றுநோய் வகைகளுக்கு நோய் தடுப்பு சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டு வந்தாலும் எவ்வகை கேன்சருக்குமான ‘உலகளாவிய’ பொது சிகிச்சை என்பத் இந்த ஆய்வின் மூலமே தற்போது முதற்கட்ட நிலையில் கைகூடியுள்ளது.
வைரஸ்கள், பாக்டீரியாக்கள், காளான்கள் ஆகியவற்றை மருந்துகள் மூலம் விரட்டியடிக்கலாம். ஆனல் கேன்சர் செல்கள் என்பது நம் உடலுக்குள்ளேயே டி.என்.ஏ சேதமடையும் போது செல்களின் நடத்தை திட்டமிட்டப்படி இல்லாமல் போவதால் ஏற்படுவது.
இதனால்தான் உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு/தடுப்புச் சக்திகளின் தொந்தரவு இல்லாமல் கேன்சர் செல்கள் உடல் முழுதும் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், நோய்க்கூறு செல்களை மட்டும் அழித்து ஆரோக்கியமான செல்களை பாதுகாக்கும் சிகிச்சை முறைகள் மிகவும் கடினம்.
கீமோதெரபி என்று கேன்சருக்கு வழங்கப்படும் பொதுவான சிகிச்சை முறையில் நடப்பது இதுதான். வேகமாகப் பிரியும் செல்களை கீமோதெரபி இலக்கு வைக்கிறது. இதில் நல்ல செல்கள், கெட்ட செல்கள் இரண்டுமே குறிவைக்கப்படுகிறது. ஆனால் நோய்த்தடுப்பு சிகிச்சை முறை என்பதோ நல்ல செல்களை பாதுகாத்து கெட்ட செல்களை மட்டும் அழிப்பதாக இருக்க வேண்டும்.
இந்தப் புதிய ஆய்வு குறித்து லண்டன் கேன்சர் ஆராய்ச்சி மைய பேராசிரியர் ஆலன் மெல்சர் கூறும்போது, "இந்த புதிய ஆய்வு சுவாரசியமாக உள்ளது. ஆனால் இன்னும் இந்த ஆய்வு நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. நேனோதுகள்களை உற்பத்தி செய்வது என்பது ஒரு பெரிய சவால்” என்றார்.
*இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள் !*
-----------------------------------------
இது மிக நீளமான , மிகவும் பயனுள்ள பதிவு
அனைவரும் அலோபதி மயக்கத்தில் முழ்கி இருக்கும் இந்த நாட்டில், நம் மரபு மருத்துவத்தை தேடி வந்த உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இன்று நாம் அனைவரும் கூடியிருப்பது சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு பிரச்சனையை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவே.
முதலில் நம் உடல் எதனால் உருவானது என்று பார்போம்.
நமது உடல் பல லட்சம் கோடிக்கனக்கான செல்களால் ஆனது. ஒவ்வொறு செல்களுக்கும் அறிவு இருக்கிறது. இதன் முக்கிய வேலை நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உட்கிரகித்து, கழிவுகளை  வெளியேற்றவது. உட்கிரகித்தல், வெளியேற்றுதல் இதன் முக்கிய வேலை.
உதாரணத்திற்கு ஒரு மண் பொம்மையை காட்டி, தலையை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், தலை என்பீர்கள். கால்களை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், கால் என்பீர்கள். இந்த இரண்டு பகுதியையும் கையால் நசுக்கி பொடித்தால் அங்கு என்ன இருக்கும் ?...... எண்ணில் அடங்கா சிறு, சிறு மண் துகள்கள் மட்டுமே இருக்கும் அல்லவா.
இது போல் தான் நம் உடலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் ஆனது.
இப்பொழுது உடல் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.
பொதுவாக ஒரு பொருள் இயங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?..... ம் சொல்லுங்க. ஏதாவது ஒரு எரிபொருள் வேண்டும் அல்லவா.
உதாரணத்திற்கு வாகனங்கள் இயங்க வேண்டும் என்றால், பெட்ரோல் என்கிற எரிப்பொருள் வேண்டும். மின் சாதனம் இயங்க வேண்டும் என்றால் ?... மின்சாரம் வேண்டும்.
இது போல் நமது உடல் இயங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ? நமது உடலுக்கு எது எரிபொருள் ? உணவு வேண்டும்ங்க. சரி அந்த உணவு செரிமானத்தின் கடைசியில் என்ன வாக மாறுகிறது ? நாம் உண்ணும் மாவுச்சத்து அனைத்தும் சர்க்கரையாக மாறுகிறது. சர்க்கரை என்பது நாம் பயன்படுத்தும் இனிப்பல்ல இது ஒரு சத்துப்பொருள்.
நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் இந்த சர்க்கரை எனும் சத்துப்பொருள் செல்கள் உட்கிரகித்து, எரித்து வெப்ப சக்தி வழங்குகிறது.
இந்த வெப்ப சக்தியால் தான் நாம் இயங்குகிறோம்.
இப்ப சொல்லுங்க நாம் இயங்குவதற்கு என்ன வேண்டும் ?...... சர்க்கரை எனும் சத்துப்பொருள் வேணுமுங்க.  சரியா சொன்னிங்க.
ஒரு பெரியவர் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் உடலை தொட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும் ?... உடல் சூடாக இருக்கும். அடுத்தநாள் இயற்கை எயதி விட்டார், இப்பொழுது உடலை தொட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும்?... உடல் ஐஸ் போல் இருக்கும்.
உயிரோடு இருக்கும் போது உடலில் என்ன இருந்தது ?... வெப்பம் இருந்தது. உயிர் இல்லாத போது உடலில் என்ன இல்லை ?... வெப்பம் இல்லை.
இப்பொழுது சொல்லுங்க உயிரோடு இருக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?.... வெப்பம் வேணுமுங்கோ. வெப்பம் சக்தி எப்படி நமக்கு கிடைக்கிறது ?... உணவில் உள்ள சர்க்கரை (மாவுச்சத்து) செல்களால் எரிக்கப்பட்டு வெப்ப சத்தி கிடைக்குதுங்க.
இப்ப சொல்லுங்க, நாம உயிரோட இருக்கனும் நா என்ன வேண்டும் ?... சர்க்கரை வேணும் ங்க. சரியா சென்னிங்க. இவருக்கு எல்லோரும் கை தட்டுங்க.
பாருங்கள் மக்களே. நாம் உயிரோடு இருக்க தேவைப்படும் ஒரு அதிஅவசிய சர்க்கரை என்னும் சத்துப்பொருளால் நமக்கு நோய் ஏற்படுகிறது என்கிறார்களே, இதுவே இவர்களின் உச்சகட்ட கொடூர மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
இது வரைக்கும் உடல் எதனால் ஆனது., எப்படி இயங்குகிறதென்று பார்தோம்.
இப்பொழுது செரிமானத்தை பற்றி பார்போம்.
நாம் உண்ணும் உணவு வாயில் உமிழ் நீருடன் கலந்தவுடன் செரிமானம் ஆக துவங்கிவிடுகிறது, பின் வயிற்றில் அமிலத்துடன் கலந்து செரிக்கப்பட்டு, சிறுகுடலுக்கு செல்கிறது இங்கு பித்த பையில் இருந்து வரும் பித்த நீரால் செரிக்கப்படுகிறது. பின் இந்த செரிக்கப்பட்ட உணவுக்கூழில்  உள்ள சத்துக்கள் சிறுகுடலின் கடைசிப்பகுதியில் இரத்ததில் கலக்கிறது. பின் கழிவுகள் பொருங்குடலுக்கு சென்று வெளியேற்றப்படுகிறது.
வாய், வயிறு, சிறுகுடலில் செரிமானம் சரியாக நடந்தால், இரத்தத்தில் கலந்த சத்துப்பொருட்கள் தரமான சத்துப்பொருட்களாக இருக்கும். செரிமானம் சரி இல்லை என்றால். சத்துப்பொருட்கள் தரமற்றவையாக இருக்கும்.
பொதுவாகவே நமது உடலுக்கு நன்மையை ஏற்றுக்கொள்ளும் திறனும். தீமையை வெளியேற்றும் திறனும் இயல்பாவே இருக்கிறது.
எப்படி என்று கேட்கிறீர்களா ? இதோ செயல் முறை விளக்கம்.
இப்பொழுது நீங்கள் பசி யோடு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நான் உங்களுக்கு மிகவும் பிடித்த உணவை உங்கள் கண் முன்னே கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். இப்பொழுது வாயில் என்ன மாற்றம் நிகழும் ?.... ஐய்யா எச்சில் ஊறுகிறது. ம் சரி.
அதே உணவை உங்கள் கண் முன்னே கீழே போட்டு மிதித்துவிட்டேன், அதை அப்படியே தட்டில் எடுத்து வைத்து மீண்டும் உங்கள் அருகில் கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். இப்பொழுது எப்படி இருக்கும் ? உமிழ் நீர் சுரக்குமா ?.... சுரக்கவில்லைங்க, கொமட்டீட்டு தான் வருகிறது.
இவ்வளவுதாங்க விடையமே. நல்லதிற்கு நமது உடல் உமிழ் நீர் சுரந்து ஏற்றுக்கொள்கிறது. கெட்டதற்கு உமிழ் நீர் சுரக்காமல் ஏற்க மறுக்கிறது.
நமது உடலில் பல சுரபு உறுப்புகள் இருக்கின்றன. உமிழ் நீர் சுரபிகள், தைய்ராய்டு, தைமஸ், கணையம் போன்ற பல சுரப்புறுப்புக்கள் இருக்கிறது.
இதே போல் தான் கணையமும். இரத்தத்தில் இருக்கும் நல்ல சர்க்கரைக்கு இன்சுலின் சுரக்கிறது கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் சுரப்பதில்லை.
எது நல்லது, எது கெட்டது. முன்னால் பார்த்தோம் அல்லவா. செரிமானம் சரியாக இருந்தால் இரத்தத்தில் கலக்கும் சத்துப்பொருள் தரமானதாக இருக்கும் எனவும். செரிமானம் சரி இல்லை என்றால் தரமற்றவையாக இருக்கும்.
தரமான சர்க்கரையை, நல்ல சர்க்கரை என்றும். தரம் குறைந்த சர்க்கரை கெட்ட சர்க்கரை, என்றும் வைத்துக்கொள்வோம்.
நமது உடல் என்ன செய்யும் என்று செயல் விளக்கத்தோடு பார்தோம் ? நல்லதை ஏற்றுக்கொள்ளும், கெட்டதை வெளியேற்றும்.
அதேப்போல் தான் நல்ல சர்க்கரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கெட்ட சர்க்கரை சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படுகிறது.
சரி. நாம் இப்பொழுது உண்கிறோம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
உணவு வாயில் போட்டவுடன் உமிழ் நீர் கலந்து செரிமானம் வேலை ஆரம்பமாகிறது. பின் உணவு வயிற்றுக்கு செல்கிறது இங்கு அமிலம் மற்றும் பல செரிமான நீர்களுடன் கலந்து செரிமானம் ஆகிறது. பின் சிறுகுடலுக்கு சென்று பித்த நீர் கலந்து செரிமானம் ஆகிறது. சிறுகுடல் இறுதியில் சத்துப்பொருட்கள் இரத்தத்தில் கலக்கிறது.
நீங்கள் உண்ட உணவு அறைகுறையாக செரிமானம் ஆகி உள்ளது என்று வைத்துக்கொள்வோம். எனவே பாதி தரமான சத்துப்பொருளும், பாதி தரம் குறைந்த சத்துப் பொருளும் கிடைக்கிறது. இவை அனைத்தும் இரத்தத்தில் கலந்தாச்சு.
உதாரணத்திற்கு 100 சர்க்கரை கிடைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். இதில் 50 நல்ல சர்க்கரை, 50 கெட்ட சர்க்கரை. இது அனைத்தும் இரத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. கணையம் அருகே வரும் போது. கணையம் ஒவ்வொறு சர்க்கரையாக பரிசோதனை செய்து பார்க்கும். இவை தரமானதா, தரமற்றதா. உடலுக்கு நன்மை செய்யக்கூடியதா, தீமை செய்யக்கூடியதா என்று பரிசோதித்து, நல்ல சர்க்கரைக்கு மட்டும் இன்சுலின் வழங்கும், ஒரு கெட்ட சர்க்கரைக்கும் கூட இன்சுலின்  வழங்காது.
நாம் முன்னே செயல் விளக்கத்தோடு பார்த்தோம் அல்லவா. உடல் நல்ல உணவிற்கு உழிழ் நீர் சுரந்தது, கெட்ட உணவிற்கு சுரக்கவில்லை. இதேதான் இங்கேயும் நடக்கிறது.
தற்போது இன்சுலினுடன் 50 சர்க்கரையும், இன்சுலின் இல்லாமல் 50 சர்க்கரையும் இரத்தத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. செல்கள் இன்சுலின் உள்ள சர்க்கரைக்கு மட்டுமே கதவை திறக்கும். இந்த 50 நல்ல சர்க்கரையும் செல்களுக்குள்ளே போய்விடும். பின் இது எரிக்கப்பட்டு வெப்ப சத்தி நமக்கு கிடைக்கிறது. இந்த சத்தி மூலமே நாம் இயங்குகிறோம்.  இன்சுலின் இல்லாத சர்க்கரையை சிறுநீரகம் கண்டறிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடுகிறது. உடலே நல்லதை, கெட்டதை கண்டறிந்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டது. நாம் இப்பொழுது ஆரோக்கியமாக இருப்போம்.
நீங்கள் செய்யும் வேலைக்கு 30 சர்க்கரை போதும் என்று வைத்துக்கொள்வோம். மீதம் உள்ள 20 நல்ல சர்க்கரையை உடல் என்ன செய்யும் ?... உதாரணத்திற்கு நமக்கு தேவையைவிட பணம் அதிகம் இருந்தால் என்ன செய்வோம், சேமித்து வைப்போம் அல்லவா. அது போல் தான் உடல் தேவைக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரையை கூட்டு சர்க்கரையாக (Glycogen) செரிவூட்டி கல்லீரல், தசைநார்களில் சேமித்துவைத்துக்கொள்கிறது.
இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை எப்போது எதற்கு பயன்படுகிறது, நாம் செய்யும் வேலைக்கு நல்ல சர்க்கரை போதவில்லை என்றால் லேசாக கிறுகிறுப்பு ஏற்பட்டு கண்கள் இருட்டடையும் போது இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்படுகிறது. நமக்கு ஏதாவது காயம் எற்பட்டால், அந்த காயத்திற்கு அருகில் இருக்கும் தசைநார்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரை அங்கு இருக்கும் செல்களை புதுப்பித்து காயத்தை ஆற்ற பயன்படுத்தபடுகிறது. நமக்கு எங்காவது விபத்து ஏற்பட்டு ரோட்டில் கிடந்தால், உறுப்புகள் சீராக இயங்குவதற்காக சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்பட்டு நமது உயிரை காக்க பயன்படுகிறது.
நாம் எப்படி நமக்கு பணம் இல்லாத போது சேமித்த பணத்தை பயன்படுத்துகிறோமோ. அது போல் நமது உடல் ஆபத்து காலங்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்துகிறது.
இப்ப சொல்லுங்க மனிதனுக்கு எது உண்மையான சொத்து ?... பணம் காசு வீடு, வாகனமா ? நிச்சயம் கிடையாது. நாம் சேமித்த சர்க்கரையே நமக்கு உண்மையான சொத்து.
எவர் வந்தாலும் வராவிட்டாலும். எது இருந்தாலும் இல்லாவிட்டாலும். இறுதியில், இந்த சர்க்கரையே உங்கள் கூட இருந்து உயிரை காக்கும். நாம் எதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
10 நிமிட இடைவேளைக்கு பிறகு சந்திப்போம்.
எல்லோரும் வந்தாச்சுங்களா ! சரி ஆரம்பிப்போம்.
இப்பொழுது நமது உடல், நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை, அதிகப்படியான நல்ல சர்க்கரைகளை எப்படி கையாள்கிறது என்று பார்தோம். இது மனிதன் தோன்றிய காலம் முதல் நடந்து வரும் இயற்கை நிகழ்வு.
இந்த மாவுச்சத்து பொருளுக்கு எவன் சர்க்கரை என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை. இது நம்மை குழப்புவதற்காக சூழ்ச்சி செய்து வைக்கப்பட்டுள்ளது. செரிமான கோளாறால் ஏற்படும் அதிக நீரிழிவு பிரச்சனைக்கு எவன் சர்க்கரை நோய் என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை.
நாம் உண்ணும் சர்க்கரைக்கும் (இனிப்பு) இந்த சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு பிரச்சனைக்கும் துளி கூட சம்மந்தம் கிடையாது.
சர்க்கரை என்பது ஒரு சுவை. அவர்கள் கூறும் சர்க்கரை (மாவுச்சத்து) என்பது ஒரு சத்து பொருள்.
மனிதனுக்கு செரிமானம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இனிப்பு சுவை மிக மிக அவசியமானது. இனிப்பு சுவையால் மட்டுமே உங்கள் வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தி வழங்க முடியும்.
இலை போட்டு முதலில் இனிப்பு வைத்தவன் எல்லாம் முட்டாள்
வீட்டு தின்னையில் வழிப்போக்கர்களுக்கு ஒரு மூடி தேங்காயும் ஒரு உருண்டை கருப்பட்டி வைத்தவன் எல்லாம் முட்டாள்.
விழா காலங்களில் இனிப்பு பண்டம் செய்து உண்டவன் எல்லாம் முட்டாள்.
இனிப்பை சாப்பிடக்கூடாது என்று சொல்லும் ஆங்கில மருத்துவர்கள் அறிவாளிகள்.
எதற்கு இலையில் முதலில் இனிப்பை வைத்தார்கள் ? அனைத்து உணவையும் சாப்பிட்டுவிட்டு இறுதியில் இனிப்பை வீட்டிற்கு மூட்டைகட்டி செல்லவா !,  இனிப்பை முதலில் உண்ண வேண்டும். இனிப்பு சுவை நாக்கில் பட்டவுடன் மின்காந்த அலையாக மாறி நேரடியாக வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தியை வழங்குகிறது. பின் நாம் என்ன சாப்பிட்டாலும் அது நன்கு செரிமானம் ஆகி நல்ல சத்துக்களாக இரத்தத்தில் கலக்கிறது.
உங்கள் மருத்துவர் என்ன சொல்லுவார் இனிப்பு சாப்பிடக்கூடாது. இனிப்பு சாப்பிடாவிட்டால் வயிறு, இதற்கு சக்தி வழங்கும் மண்ணீரலுக்கு சத்தி கிடைக்காது. இப்பொழுது உணவு உண்டால் செரிமானம் எப்படி இருக்கும் ? அறைகுறையாக. கிடைக்கும் சத்துப்பொருட்கள் பெரும்பாலும் கெட்ட சத்துப்பொருளாகவே இருக்கும். இவைகளை உடல் என்ன செய்யும் சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். நாம் எப்படி இருப்போம் சோர்வுடன் நோயாளியாகவே இருப்போம்.
நம்மை நோயாளியாக்கி சாகடிப்பதற்காக இவர்கள் செய்த முதல் தந்திரம். மாவுச்சத்திற்கு சர்க்கரை என்று பெயர் வைத்தது, இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொன்னது.
இனிப்பை சாப்பிடக்கூடாது என்று செரிமானத்தை கெடுத்ததோட விட்டார்களா ! இல்லை.
இவர்களின் அடுத்த கட்ட கொலைகார செயல்களை பார்போம்.
இப்பொழுது உங்களுக்கு அதிக நீரிழவு, தாகம், சோர்வு, அதிக பசி. ஏற்படுகிறது இவை அனைத்திற்கும் என்ன காரணம்? அரைகுறை செரிமானத்தால் இரத்தத்தில் கலந்த கெட்ட சத்துப்பொருட்கள் வெளியேறுவதே காரணம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? செரிமானம் சரியாக என்ன வழிவகையோ அதை செய்ய வேண்டும். செரிமானத்தை சரி செய்தால் மேலே குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள்,  உங்கள் அருகில் உள்ள மேதாவி உனக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும் போய் பரிசோதித்துக்கொள் என்பார். நீங்களும் பரிசேதனை செய்து பார்க்க போவீர்கள். அங்கு எவன் எப்பொழுது மாட்டுவன் எப்படியெல்லாம் அவன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று 5 வருடம் படித்துவிட்டு வெள்ளை கோர்ட்டு போட்டு கழுத்தில் பாசக்கயிறை மாட்டிக்கொண்டு ஒரு பூதம் உட்காந்திருக்கும். உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்து, உங்களுக்கு சர்க்கரை அதிகம் உள்ளது. நீங்கள் சர்க்கரை நோயின் ஆரம்பகட்டத்தில் உள்ளீர்கள் என்பார்கள். இதில் என்ன பரிதாபமான விடையம் என்றால். நல்ல மற்றும் கெட்ட சர்க்கரை இரண்டிற்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியாது, இரண்டுமே சேர்த்துதான் இவர்களால் சொல்ல முடியும்.
அந்த சர்க்கரை நல்ல சர்க்கரையா, கெட்ட சர்க்கரையா ? கணையம் பரிசோதித்து இன்சுலின் வழங்கப்பட்டுவிட்டதா இல்லையா ? சர்க்கரை செல்களுக்குள் சென்று எரிக்கப்பட்டுவிட்டதா ? சிறுநீரகத்தால் கெட்ட சர்க்கரை கண்டரிந்து வெளியேற்றப்பட்டுவிட்டதா அல்லது வேலை நடந்து கொண்டிருக்கிறதா ? அதிக நல்ல சர்க்கரை தசைநார்களில் சேமிக்கப்பட்டுவிட்டதா, இல்லை சேமிப்பு வேலை நடந்து வருகிறதா ? நீங்கள் செய்யும் வேலைக்கு சர்க்கரை போதுமானதா இல்லையா என்று எதுவும் அந்த அப்பாவி Robotic மருத்துவர்களுக்கு தெரியாது. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அளவுகளை பார்த்து மாத்திரை கொடுப்பது மட்டுமே.
நல்ல சர்க்கரைக்கும், கெட்ட சர்க்கரைக்கும் இயந்திரங்களுக்கு வித்தியாசம் தெரியாது. இரண்டிற்கும் ஒரே Chemical formula வைத்தான் காட்டும், Glucose - C6H12O6. இதோ உதாரணம் அடிக்கரும்பு எப்படி இருக்கும் ?... நன்கு இனிப்பு சுவை உடையதாக இருக்கும் ங்க. சரி நுனிக் கரும்பு எப்படி இருக்கும் ?...
இனிப்பு குறைவாக சல்லென்று இருக்கும். இந்து அடிக்கரும்பையும், நுனிக்கரும்பையும் ஒரு Lab ல் கொடுத்து பரிசோதனை செய்யது பாருங்கள் Sucrose - C12H22O11 என்று ஒரே Chemical formula வைதான் காட்டும். எப்படி நமக்கு சுவையில் வித்தியாசம் தெரிந்து இயந்திரத்திற்கு தெரியவில்லையோ, அதேப்போல்தான் தரமான சர்க்கரைக்கும்( நல்ல )மற்றும் தரமற்ற சர்க்கரைக்கும் (கெட்ட) உடலுக்கு வித்தியாசம் தொரியும், இயந்திரங்களுக்கு தெரியாது.
இப்பொழுது புரிகிறதா ஏன் ஆங்கில மருத்துவத்திற்கு நல்ல மற்றும் கெட்ட சர்க்கரைக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று. இவர்கள் தன் சொந்த மூலையை விட மனிதன் உருவாக்கிய இயந்திரத்தை மட்டுமே நம்புவார்கள்.
சரி, இப்பொழுது நீங்கள் சர்க்கரை நோயாளி என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டார்கள். மாத்திரை எழுதி கொடுத்துவிட்டார்கள்.
இவர் எந்த அளவை வைத்து உங்களை சர்க்கரை நோயாளி என்று முடிவு செய்தார் ? யார் அளவை நிர்ணயம் செய்தது ? இந்த சர்க்கரை மாத்திரை எதற்கு கண்டுபிடிக்கப்பட்து ? உண்மையில் ஆரோக்கியத்திற்கு அளவு ஏதும் உண்டா ? என்று பார்ப்போம்.
ஆங்கில மருத்துவம் அறுவைசிகிச்சை செய்யத்துவங்கும் காலகட்டத்தில், இரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சையின் போது ஒரு மாத்திரை கொடுக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்துபார்த்தார்கள். இது அவர்களுக்கு வெற்றியாக அமைந்து. அறுவை சிகிச்சையின் போது மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த இந்த மாத்திரையை எப்படி உலகம் முழுவதும் வியாபாரம் செய்து கோடிகோடியாய் பணம் சம்பாதிப்பது என்று இரவு பகலாக ஆங்கில மருத்துவ உலகம், மருந்து மாத்திரை பெருநிறுவனங்கள் இணைந்து ஆலோசனை செய்து ஒரு முடிவிற்கு வந்தார்கள். அந்த முடிவு என்ன ?
மதிய உணவு இடைவேளை பிறகு பார்ப்போம். சரியாக 1/2 மணி நேரம் கழித்து துவங்குவோம்.
சர்க்கரைக்கு அவர்களே ஒரு அளவை நிர்ணயித்து, இதற்கு மேல் சென்றாலும் நோய், கீழ் சென்றாலும் நோய் என்று பொய் பிரச்சாரம் செய்வதென முடிவெடுத்தார்கள்.
இதன் படி உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் மாட்டுவர்கள். இவர்களிடம் மாத்திரை விற்பனை செய்து கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்பதே இவர்களின் இலக்கு.
இந்த வியாபாரிகள் விரித்த வலையில் தான் நீங்கள் இப்போது சிக்கி உள்ளீர்கள்.
உண்மை என்னவென்றால் சர்க்கரை இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சர்க்கரையை பரிசோதித்து பார்பதே மிகப்பெரிய முட்டாள்தனம்.
ஒரு மினிதன், அவர் வாழும் பகுதி, அவர்கள் பண்பாடு, கலாச்சாரம், அவர் செய்யும் வேலை ( உடல் உழைப்பு), மன நிலை, உணவு, சுற்றுச்சூழல், நீர், செரிமாண மண்டலத்தின் சக்தி, பிராண சக்தி இவைகளை பொருத்து சர்க்கரையின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறிக்கொண்டே இருப்பது தான் இயற்கை.
உண்மை இப்படி இருக்கும் போது, எதன் அடிப்படையில் உலகம் முழுவதும் அனைத்து மனிதர்களுக்கும், இவர்களால் ஒரே அளவை நிர்ணயம் செய்ய முடிகிறது. இதை வைத்தே தெரியவில்லையா ?.... இவர்களின் நோக்கம் உலக மக்களை நோயாளிகளாக்கி,  அவர்களின் செவ்வம் மற்றும் ஆரோக்கியத்தை சுரண்டும் கொடூர பாவச்செயல்களை செய்கிறார்கள் என்று.
நீங்கள் என்ன செய்தீர்கள், மாத்திரை டப்பாவை வாங்கி வீட்டிற்கு வந்துவிட்டீர்கள். இப்பொழுது உணவெடுக்கிறீர்கள். செரிமானம் அறைகுரையாக இருக்கிறது. இதனால் 70 கெட்ட சர்க்கரையும், 30 நல்ல சர்க்கரையும் இரத்தத்தில் கலக்கிறது என்ற வைத்துக்கொள்வோம். உடல் என்ன செய்யும் 70 கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். 30 நல்ல சர்க்கரை செல்களுக்குள் சென்றுவிடும்.
இப்பொழுது மாத்திரை சாப்பிடுகிறீர்கள். இது என்ன செய்யும் நேரடியாக கணையத்திடம் சண்டையிட்டு 70 கெட்ட சர்க்கரைக்கும் இன்சுலின் வாங்கி கொடுக்கும் கொடூர செயலை செய்யும், இந்த 70 கெட்ட சர்க்கரையும் இன்சுலினுடன் இரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். செல்கள் இன்சுலின் இருப்பதால் கதவை திறந்து ஏற்றுக்கொள்ளும். இந்த கெட்ட சர்க்கரையை செல்களால் சரியாக எரிக்கப்பட்டு வெப்ப சக்தியாக மாற்ற முடியாது. எனவே முதல் முதலில் உங்கள் செல்களில் கழிவு தங்குகிறது.
உதாரணத்திற்கு நல்ல சர்க்கரையை வெயிலில் நன்கு காய்ந்த விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். கெட்ட சர்க்கரையை காயாத ஈர விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். செல்களை அடுப்புகளாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.
அடுப்பின் வேலை என்ன?.. விறகை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. செல்களின் முக்கிய வேலை என்ன?.. சர்க்கரையை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. நன்கு காய்ந்த விறகை அடுப்பில் எரித்தால் அங்கு என்ன மிச்சம் இருக்கும் ?... சிறிது சாம்பல் மட்டுமே. வெப்ப சக்தியும் முழுமையாக கிடைத்துவிடும். ஈர விறகை எரித்தால் என்ன நடக்கும் ?... சரியாக எரியாமல் புகைந்து புகைந்து விறகு அடுப்பில் தங்கிவிடும். சரியாக வெப்ப சக்தியும் கிடைக்காது. இது போல் தான் நம் செல்களும் கெட்ட சர்க்கரையை முழுமையாக எரிக்க முடியாமல் கழிவு செல்களில் தங்கிவிடுகிறது.
உலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே காரணம்தான். அது என்ன ? இயற்கை விதிமீறல் செயல்களால் கழிவுகள் நமக்குள் தங்குவதே காரணம். கழிவு தேக்கம் நோய். கழிவு நீக்கம் குணம்.
உடல் சரியாக கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலம் வெளியேற்றிய தரமற்ற சர்க்கரையை நாம் சொந்த செலவில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு செல்களுக்குள்ளையே செலுத்துவதுதான் உங்கள் அறிவியலின் உச்சகட்ட அற்புத செயல்.
சாக்கடைக்கு செல்ல வேண்டிய ஒரு தேவையற்ற பொருளை, நாம் செல்களுக்குளே செலுத்துவதால் கழிவுகள் செல்களில் தங்கி அந்த செல் பாதிக்கிறது. இத தொடர்ந்து நடக்கும் போது. அந்து உறுப்பு பாதிக்கிப்படுகிறது. உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அதன் வேலையை சரியாக செய்ய முடியாது. இதனால் மேலும் கழிவுகள் உள்ளேயே தங்க, சொல்லிலடங்கா துயரங்களுக்கு ஆளாகுகிறோம்.
இப்பொழுது தெரிகிறதா சர்க்கரை நோய் வந்தால் ஏன் எல்லா நோய்களும் வருகிறதென்று. சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனை வந்தால் எந்த நோயும் வராது. இதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போடுவதின் மூலமே அனைத்து நோய்களும் வருகிறது.
சாதாரணமாக உள்ள செரிமானப்பிரச்சனையை சரி செய்திருந்தால் உங்கள் அனைத்து பிரச்சனையும் சரியாகியிருக்கும் அதைவிட்டுவிட்டு, பன்னாட்டு வியாபாரிகளின் கொடிய விசப் பொருட்களை துளி கூட சிந்திக்காமல், அப்படியே நாம் ஏற்றுக்கொண்டதால் உணர்ச்சியற்ற நோய் பிண்டங்களாக காட்சியளிக்கிறோம்.
நீரிழிவு காரணங்கள் !
--------------------------------
சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனைக்கு மூன்றே காரணம்தான். அனைத்து நீரிழிவு நோயாளிகளும் இதில் அடங்குவார்கள்.
1 - அதிக கவலை
2 - அவசரமாக சாப்பிடுவது
3 - அதிக உடல் வெப்பம்
சர்க்கரை நோயாளி என்னு சொல்லப்படும் செரிமானக் கோளாறு உள்ளவர்கள் அனைவருக்கும் இதில் ஒரு காரணமாவது நிச்சயம் பொருந்தும். பரிசோதித்து பாருங்கள். என்னங்க நான் சொன்னது சரியா... !
https://www.youtube.com/channel/UCgBKNGCCD8eGGh7dH-xijFA
http://www.agathiyarjanachithar.in/
*எப்படி குணப்படுத்துவது  ?*
-----------------------------------------
1 : கவலை - சாப்பிடும் பொழுது கவலை எல்லாம் மறந்து உணவின் மேல் முழுகவனமும் செலுத்தி சாப்பிட வேண்டும். கவலைக்கு உண்டான காரணங்களை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.
2 : அவசரமாக சாப்பிடுவது - அவசரமாக டிக்கட் எடுக்க விரும்புபவர்கள் தாராளமாக அவசரமாக சாப்பிடலாம். "நொறுங்கத்தின்றால் நூறு ஆயுசு", பசி எடுத்தால் மட்டுமே உணவெடுக்க வேண்டும்.
ஒரு முறை நன்கு சிந்தித்து பாருங்கள் நாம் எதற்காக இவ்வளவு பாடுபடுகிறோம் என்று, இறுதியில் சாப்பிடுவதற்காகவே என்று உணர்வீர்கள். அதை இப்பவே உணர்ந்து பொறுமையாக சாப்பிடலாமே. நம் நலனுக்காக நம் உடலை இவ்வளவு பாடுபடுத்துகிறோம், ஏன் உடல் நலனுக்காக நாம் 1/2 மணி நேரம் ஒதுக்கி பொறுமையாக சாப்பிடக்கூடாது.
சாப்பிடும் பொழுது உலகத்தையே மறந்துவிட வேண்டும். உணவிற்கு முன் இனிப்பான பழங்களை சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது உணவை பார்த்து நமது முழு கவனமும் உணவின் மேல் செலுத்தி மென்று ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும்.
கோதுமையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
3 : அதிக உடல் வெப்பம் - பச்சை தண்ணீரில் குளிப்பது. வாரம் இரண்டு நாள் எண்ணெய் குளியல். நீர்காய்கனிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
இனி இந்த செரிமானப்பிரச்சனையை யாரும் நோய் என்று சொல் வேண்டாம். நீரிழிவு என்பதே பொருந்தும். தேவையில்லாத, கெட்ட சத்து பொருட்கள் அனைத்தும் சிறுநீர் முலமே வெளியேறும், சர்க்கரை மட்டும் அல்ல. நீரிழிவை சரி செய்ய மேலே குறிப்பிட்ட மூன்று காரணத்தையும் சரி செய்தால் குணம் பெற்றுவிடுவீரகள்.
https://www.youtube.com/channel/UCgBKNGCCD8eGGh7dH-xijFA
http://www.agathiyarjanachithar.in/
சர்க்கரை நோய் - செரிமானக்கோளாறால் ஏற்படும் நீரிழிவு பிரச்சனை.
தீர்வு - இனிப்பான பழங்களை சாப்பிடுவது. உணவை பசிக்கும் போது மென்று ரசித்து ருசித்து சாப்பிடுவது.
இனி நாம் யாரும் பன்னாட்டு வியாபாரிகளின், உயிரை குடிக்கும் இரசாயண மாத்திரைகளையும் இன்சுலின்களையும் எடுக்க மாட்டோம் என்று உறுதி எடுப்போம். மூளையில், மழுங்கி கிடக்கும் நமது முளையை சற்று பயன்படுத்தி சிந்திக்க துவங்குவோம்.
பன்னாட்டு கொலைகார வியாபாரிகளின், கொடூர வச தன்மை உள்ள பொருட்களை விற்கும் சந்தையாக உங்கள் உடலை மாற்றிவிடாதீர்கள்.
"உள்ளமே பெருங்கோவில்
ஊநுடலே ஆலையமாம்"
ஆலையத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
*சர்க்கரை நோய் - உச்சம் !*
உண்மையில் சர்க்கரை நோய் என்று ஒரு நோய் உலகில் இல்லை
இது முழுக்க முழுக்க மருந்து மாத்திரை கம்பனிக்காரர்களின் வியாபார தந்திரம்.
இனிப்பிற்கும், சர்க்கரை நோய்கும் 0.1% கூட சம்பந்தம் கிடையாது.
இதற்கு சர்க்கரை நோய் என்று பெயர் வைத்ததிலேயே மிகப்பெரிய தந்திரம் இருக்கிறது.
லேசாக தலை சுற்றலே, சோர்வே, மயக்கமே வந்து விட கூடாது உடனே
நீங்கள் பயந்து போய், பரிசோதனை செய்து பார்ப்பீர்கள், அளவு அவர்கள் நிர்ணயித்ததை விட குறைவாகவே, அதிகமாகவோ இருக்கக்கூடும், உடனே உனக்கு சர்க்கரை நோய் உள்ளது, இந்தா இந்த மாத்திரையை போடுனு எழுதி கொடுத்துவிடுவார்.
இதோட நிறுத்தினால் பரவாயில்லை, மாத்திரை போடலைனா அது வந்துரும், இது வந்துரும் னு பயப்படுத்தி, ஒரு பெரிய பட்டியலை காட்டி இதோ பாருங்க சர்க்கரை நோய் வந்தா இந்த எல்லா நோய்களும் வந்துவிடும்னு சொல்வார்.
ஆனால், உண்மை என்ன தெரியுமா, சர்க்கரை நோய் வந்தால் எல்லா நோயும் வராது. சர்க்கரைக்கு அவர்கள் கொடுக்கும் மாத்திரை சாப்பிடுவதால் மட்டுமே எல்லா நோயும் வருகிறது. அந்த மாத்திரை பெட்டியிலேயே இதை சாப்பிட்டால் சிறுநீரக கேன்சர் வரும் என்று எழுதியிருப்பது யாருக்காவது தெரியுமா !
ஆங்கில மருத்துவம் நிர்ணயிக்கும் அளவுகள் எல்லாம் நம் ஆரோக்கியத்தை மையப்படுத்தி நிர்னையிக்கும் அளவுகள் அல்ல.
அளவுகள் நிர்ணயிப்பது யார் தெரியுமா ? மருந்து மாத்திரை கம்பனிக்காரர்களே ! வியப்பாய் உள்ளதா, இது தான் உண்மை.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், அவரவர் வாழும் பகுதி, செய்யும் வேலை, உணவு, மனம், சுற்றுச்சூழல் இதை பொருத்து சர்க்கரை அளவு
மாறிக்கொண்டே இப்பது தான் இயற்கை.
இப்படி இருக்கும் போது, எதன் அடிப்படையில், உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான அளவை நிர்ணயம் செய்ய முடிகிறது.
சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் சிறிய பிரச்சனைப்பற்றி மக்களுக்கு முழு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக
படித்தவுடன் உங்களின் நண்பர்களுக்கு, அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கண்டிப்பாக பகிருங்கள். விழிப்புணர்வுடன் பகிர்ந்தால் குறைந்தபட்சம் ஒரு குடும்பத்தையாவது நிம்மதியுடன் வாழ வைக்க முடியும்.
*இராஜேந்திரன்*
*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு போடுவது மட்டுமே!
பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும்
சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது
பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள்
இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது.
சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது.
வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.
இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.
அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.
தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது.
நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும்
சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.
பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.
ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே
ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது.
காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.
அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது
இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.
ஆஸ்திரேலியாவில் விளையும் ஓஸ்ட் என்னும் குப்பை உணவு....இது அங்குள்ள  கால்நடைகளின் தீவனம் ஆகும் ..அங்குள்ள மனிதர்களே அதனை உண்ண மாட்டார்கள்...ஆனால்  பணத்திற்கு ஆசைப்பட்டு நாம்ம ஊர் பெரிய மனிதர்கள்(மருத்துவர்..பெரிய நிறுவனங்கள்) ஓஸ்ட் சாப்பிட்டா நல்லது  என செல்லி திரிகின்றனர்....இந்த நிலை மாற வேண்டும் ...நாம் தமிழ் உணவில் இருக்குற சத்துக்களில் ஒரு சதவீதம் கூட ஓஸ்ட்யில் இல்லை  என்பது தான் உண்மை   ..நாம் பரம்பரிய கம்பு..தினை..குதிரை வாலி அரிசி ...வரகு பொன்றவற்றில் எண்ணில் அடங்க சத்துக்கள் உள்ள . ...தயவு செய்து  அன்னிய விஷத்தை உண்ணதீர்கள் என் இனிய நண்பர்களே இப்படிக்கு உங்கள் நாண்பன்.
தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்
 ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள் ...!
நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான். ...!!!
அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள் ...!!!
நிலத்திலே மனிதர்களால் விளைவிக்கின்ற நன்செய், புன்செய் பயிர்களின் நன்மைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. இதில் அரிசியானது சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது. இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா, பர்மா, சீனா, யப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் அரிசி உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உண்ணும் உணவாகவும் விளங்கிவருகிறது. ஆனால் இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான்.
பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பதுபோல் முடங்கி விடுகிறார்கள். உண்மையில் மற்ற தானியங்களைப்போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது. உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. உடலை வளர்த்தால்தான் உயிரை வளர்க்கமுடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள். எனவே உடலுக்கு எது தேவையோ அதை மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள். இதில் தமிழர்களின் முக்கிய உணவான சோறு சமைப்பது என்பதே தனிக்கலையாக விளங்கியது எனலாம். இதில் தமிழர்கள் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள்.
சோறு வடிப்பது என்பது பழைய அரிசியைத் தவிடு, நொய் நீக்கி நன்றாக தீட்டி, முழு அரிசியாய் ஆய்ந்து எடுத்து இளவெந்நீரால் கழுவி சற்று ஆற விட்டுவைத்து கொள்ள வேண்டும். அரிசிக்கு மூன்றுபங்கு நீர்விட்டு அடுப்பிலேற்றி அது நுரைவிட்டு கொதிக்கும் பொழுது அரிசியை அதில் போட்டு முக்காற்பங்கு வெந்தவுடன், கரண்டியால் துழாவி வடித்து கொள்ள வேண்டும். கஞ்சி வடிந்தவுடன், அந்த அடுப்பு தணலில் சோற்று பானையை வைத்து விட வேண்டும். அதன் பிறகு நீர் முற்றிலும் வற்றி பக்குவமாய் இருக்கும் சமயத்தில் எடுத்து கொள்வதே சோறு. இந்த சோறே உணவுக்கு ஏற்றது. வாதம் பித்தம் கபம் ஆகிய முக்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஏற்றது. பத்தியத்திற்கும் உகந்தது. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது என்பதையும் சொல்லிவைத்தார்கள்.
முழு அரிசிசோற்றை மிதமான சூட்டுடன் சாப்பிட்டால் முப்பிணிகளையும் நீக்கி உடலுக்கு வன்மை தந்து நலத்துடன் வாழவைக்கும். நன்றாக சமையாத சோற்றை உண்பதால் மலம் கட்டும். மறுநாளும் செரிக்காமல் இருக்கும். இதனால் உடலில் இதன் சத்துக்கள் ஊறாது. குழைந்த சோற்றை உண்டால் இருமல், மந்தம், பீளை, மேகம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும். மிகுந்த சூட்டுடன் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் ரத்தம் சூடாகும், நீர்வேட்கை அதிகரிக்கும், பெருத்த வயிறு ஏற்படும். எனவே முழு அரிசிசோற்றை மிதசூட்டில் சாப்பிடுவதே நன்மை தரும்.
இதில் கார் அரிசியை கொண்டு வடிக்கப்படும் சோறு உடலில் உள்ள சிறு நஞ்சுகளை நீக்கி புண்களை ஆற்றும். ஈர்க்கச்சம்பா அரிசிசோறு கடவுளுக்கு படைக்கும் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசியாகும். இது பார்த்தவுடன் விருப்பத்தையும் நாவிற்கு சுவையை தரும். புழுகுசம்பா அரிசி சற்று அளவில் நீண்டு இருந்தாலும் இந்த அரிசியை சமைத்து உண்பதால் உடலில் வனப்பு ஏற்படும். நல்ல பசி எடுக்கும். தீராத தாகம் நீங்கும்.
கோரைச்சம்பா அரிசியை உண்பதால் வெப்பத்தால் ஏற்படும் வெறி, பெண்களுக்கான வெள்ளைபடுதல், உடலில் உண்டாகும் நமைச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி உண்டாகும். குறுஞ்சம்பா அரிசிசோறு ஆண்மையை பெருக்கி உடலில் குத்துகின்ற வலியை போக்கும். ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும். மிளகுசம்பா அரிசிசோறு பல நன்மைகளை வாரி வழங்கக் கூடியது. பசியை உண்டாக்கும். பெருவளி என்கின்ற கடுமையான வாத நோய்களை நீக்கும்.சீரகச்சம்பா அரிசி சோற்றை மன்னர்களும், செல்வந்தர்களும் மட்டுமே உண்ணும் பழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது.
இனிப்பு சுவையுள்ள இதை உண்பதால் உடலில் ஏற்படும் அனைத்து வளி நோய்களையும் நீக்கும். சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாக செரித்து மீண்டும் பசியை ஏற்படுத்தும் அளவிற்கு எளிமையானது. கல்லுடைச்சம்பா என்ற அரிசி சோறு அதிகமான ஆற்றலை தரக்கூடியது. மிகுந்த பலசாலியை கூட எதிர்க்கும் உடல் திறனையும் மனத்தெம்பும் ஏற்படுத்தும். நல்லசுவை கொண்ட இதை உண்டுவந்தால் பேசும் திறன் அதிகரிக்கும். குன்றிமணிச்சம்பா சோறு உண்டுவந்தால் உடல் வலித்து ஆண்மை உண்டாகும். வளி நோய்கள் அனைத்தும் போகும்.
அழகும் சுவையும் நிரம்பிய அன்னமழகி என்ற அரிசியை சமைத்து உண்பதால் உடல் வெப்பமாறுபாட்டால் ஏற்படும் சுரங்களை நீக்கி உடலுக்கு நன்மை தரும். மோர்ச்சோறு உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு இவைகளை போக்கும். இரவில் நீரூற்றிய சோற்றை பழையது என்பார்கள். விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடு பழையதை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். உடலில் ஒளி உண்டாகும். வெறிநோய் முற்றிலும் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.
பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும். மிகுதியாக உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களை தழுவும். பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அளவாக தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதால் கெடுதல் என்பதே உண்டாகாது. அதுவும் உணவே மருந்து. மருந்தே உணவு என்று வாழ்க்கை முறையை வகுத்து கொண்டு வாழும் தமிழர்களின் உணவே, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால், பெரிதும் விரும்பும் உணவாகவும் மாறி வருகிறது. எனவே அரிசிசோறு உண்டு நலமுடன் வாழ்வோம்.
பித்தத்தை போக்கும் கஞ்சி
சோறு கொதிக்கும் போது இருக்கும் நீரை கொதிநீர் என்பார்கள். வீட்டில் சமையல் செய்யும் பெண்கள், பசியுடன் இருக்கும் சிறுவர்களுக்கு இதை குடிக்க கொடுப்பார்கள். தாங்களும் குடிப்பார்கள். இதுவும் மருத்துவ குணம் கொண்டதுதான். கொதிநீரை குடிப்பதால் நீர்சுருக்கு என்னும் சிறுநீர்நோய் போகும். சோறு வடித்தவுடன் கிடைக்கும் கஞ்சியை சூட்டுடன் தண்ணீர் கலந்து உப்பிட்டு குடிப்பதால் உடல் பருக்கும். உடலில் ஒளி உண்டாகும். உடலில் உண்டாகும் பித்தம், வெப்பம் நீங்கும். சோறு வடித்த கஞ்சியை எந்த வகையில் குடித்தாலும் சிறு மந்தத்தை உண்டாக்கும் என்றாலும், விழிகளுக்கு குளிர்ச்சியும் கொடுக்கும். உடல் சூட்டால் தோன்றிய பல்வேறு நோய்களை குணமாக்கும்.
[05/08 06:59] NAGARAJAN G: இதைப் பயன்படுத்தாத ‘சுத்திகரிப்பு நிலையங்களே’ இருக்காது. அரசு குடிநீர்கூட குளோரின் வழியாகத்தான் சுத்திகரிக்கப்படுகிறது.
குளோரின் பயன்பாட்டினால் மன அழுத்தம், மனப் பதற்றம், பீதியடைதல் என மூன்று வகையான மன நோய்கள் உருவாகின்றன என நவீன அறிவியலின் ஆய்வுகள் சொல்கின்றன. இந்த மனநோய்கள், மோசமான உடல் நோய்களை உருவாக்கும் என்பதும், அந்த நோய்களை ஒரு வரையறைக்குள் அடக்கிப் பட்டியலிட இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சமூகத்தில் எல்லா பாவங்களுக்கும் ஒரு வடிகால் உள்ளது. அந்த வடிகாலுக்கு உள்ள மதிப்புமிக்க பெயர், ‘அனுமதிக்கப்பட்ட அளவு’ என்பது. `குடிநீரில் குளோரின் பயன்பாடு புற்றுநோயை உருவாக்குமா?' என்று நீங்கள் கேள்வி எழுப்பினால், ‘சுத்திகரிப்பு’ நிபுணர்கள் அளிக்கும் விடை, ‘அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் பயன்படுத்தினால் குளோரின் பாதுகாப்பானதுதான்’ என்பதாக இருக்கும்.
புட்டிகளில் அடைக்கப்பட்ட நீரை வாங்கிப் பருகுகிறீர்கள். நீங்கள் பருகும் நீரில் எவ்வளவு குளோரின் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா? அது ‘அனுமதிக்கப்பட்ட’ அளவில்தான் உள்ளது எனத் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ‘இந்தக் குடிநீரில் கிருமிகள் இல்லை. ஆகவே, இது பாதுகாப்பானது’. கிருமிகளைக் காட்டிலும் கொடூரமான விளைவுகளை வேதி நஞ்சுக்கள் உருவாக்குகின்றன என்பதும், அந்த நஞ்சுக்கள் கலக்கப்பட்ட நீரைத்தான் பருகிக்கொண்டுள்ளோம் என்பதும் நீங்கள் அறியாதவை.
ஒரு லிட்டர் நீரில் எவ்வளவு வேதிப்பொருட்கள் கலக்கலாம் என்ற கணக்கை, மிகத் துல்லியமாக எல்லா நிறுவனங்களும் கடைப் பிடிக்கின்றன என நம்புகிறீர்கள் அல்லவா? இந்த நம்பிக்கை உண்மையாகவே இருக்கட்டும். குளோரின் கலக்கப்பட்ட நீரை ஒரு நாளுக்கு எத்தனை லிட்டர் பருகுவது பாதுகாப்பானது? எத்தனை ஆண்டுகளுக்குப் பருகுவது பாதுகாப்பானது? ஆகிய இரு கேள்விகளுக்கான விடைகளைத் தேடிப்பாருங்கள். உங்களுக்கு நீர் வழங்கும் நிறுவனங்களிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள். பதில் சொல்லவேண்டிய கடமையும் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளன.
பூமியில் வீசும் கதிர்வீச்சுகளில் அகச்சிவப்பு, புறஊதாக் கதிர்கள் அடிப்படையானவை. குறைந்த வெப்ப ஆற்றல் செறிவு கொண்டவை, அகச்சிவப்புக் கதிர்கள். மிகை வெப்ப ஆற்றல் செறிவுகொண்டவை புறஊதாக் கதிர்கள். பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் புறஊதாக் கதிர்வீச்சைப் பாய்ச்சித்தான் ‘சுத்திகரிப்பு’ச் செய்கின்றன. குளத்து நீரின் கீழே படித்திருப்பவை அகச்சிவப்புக் கதிர்கள். நீரில் மிகக் குறைவான அளவு கதிர்வீச்சு இருப்பது, நுண்ணுயிர் வாழ்க்கைக்கு நல்லது.  குளத்து நீர் மாசுபடாதவரை, மனிதர்களும் பருகலாம். அதிக அளவிலான கதிர்வீச்சுகள், எந்த உயிரினத்துக்கும் ஆபத்தானவை தான். குறைந்த அளவு கதிர்வீச்சுகள் அடங்கிய உணவையும் நீரையும் உட்கொள்ளும் வகையில் நாம் படைக்கப்பட்டுள்ளோம். இப்போது மிதமிஞ்சிய புத்திசாலித் தனத்தின் வெளிப்பாடாக, மிகைக் கதிர்வீச்சுகள் குடிநீரில்  செலுத்தப்படுகின்றன.
புறஊதாக் கதிர்களை நீரில் பாய்ச்சுவது கிருமிகளை மட்டும்தான் அழிக்கும்; அந்த நீரைப் பருகும் மனிதர்களை அழிக்காது என எந்த ஆய்வும் இதுவரை கூறவில்லை. நீங்கள் பருகும் குடிநீரில் கதிர்வீச்சுகள் உள்ளன என்பதையாவது முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
எல்லா வேதிப்பொருட்களும் பிளாஸ்டிக்குடன் வினைபுரிபவைதான். பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட ஒரு சொட்டு நீர் உங்கள் வாயில் விழும்போது, அதில் பல வகையான வேதிப்பொருட்களும் கதிர்வீச்சுகளும் கலந்துள்ளன என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
`அரசு அனுமதிபெற்ற நிறுவனம்’ ‘தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனம்’ போன்ற அறிவிப்புகளின் பின்னால், மறைவான ஓர் உலகம் இயங்குகிறது. உங்களை வந்தடையும் ஒவ்வொரு நீர்ப்புட்டியையும் அரசு அதிகாரிகள்  சோதித்து அனுப்புவதாகவும், உலகத்தரம் வாய்ந்த நிபுணர்கள் சோதித்து சான்று தருவதாகவும் ஒரு மாயத் தோற்றம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
வீட்டிலேயே நீரைச் `சுத்திகரிப்பதற்கு' என அமைக்கப்படும் கருவிகளுக்கும், மேலே உள்ள அனைத்து விளக்கங்களும் பொருந்தும்.
நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு நன்னீர்தான் உயிர் ஆதாரம். நன்னீர் என்றால், பல கோடி நுண்ணுயிரிகளை உள்ளடக்கிய நீர்தான். நீருக்கும் மனிதர்களுக்குமான இயற்கையான உறவை, நிறுவனங்களும் அவற்றைத் தாங்கிப்பிடிக்கும் தொழில்நுட்பங்களும் சிதைத்துவிட்டன. நமது மரபு, நவீனத்தின் சதிகளைக் காட்டிலும் வலிமையானது. `மழைநீர்தான் அமுதம்’ என்றார் ஆசான் திருவள்ளுவர்.
மழைநீரைச் சேமிக்கும் தொழில்நுட்பங்கள் இப்போது கூடுதலாகத் தேவைப்படுகின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்வோர், தமக்குள் கூட்டமைப்பு ஏற்படுத்தி அனைவருக்கும் பொதுவாக மழைநீர் சேமிப்பில் ஈடுபடலாம். ஏரிகளும் குளங்களும் தூய்மையானவை யாகப் பாதுகாக்கப்பட வேண்டும். தேவையான நேரங்களில் நீரைக் காய்ச்சிப் பருக வேண்டும்.
வேறு வழியே இல்லாமல், ‘சுத்திகரிப்பு’ நீரைப் பயன்படுத்துவோருக்கு என, சத்து நீர
் முடிச்சு ஒன்றைப் பரிந்துரைக்கிறேன். நன்னாரி வேர், வெட்டி வேர், தேற்றாங்கொட்டைகள், சீரகம், மிளகு ஆகியவற்றை ஒரு தூய வெள்ளைத் துணியில் முடிச்சாகக் கட்டி வைத்துக்கொள்ளுங்கள். தொடக்கத்தில் இவை அனைத்தும் சிறிய அளவு இருந்தால் போதும். அனுபவத்தில் அளவுகளைக் கற்றுக்கொள்ளுங்கள். `சுத்திகரிக்கப்பட்ட’ நீரை, பானையில் ஊற்றிவைத்து, அந்த முடிச்சை உள்ளே போட்டுவிடுங்கள். ஓரிரு மணி நேரத்தில் குடிநீர் மணக்கும். பானையில் ஊற்றப்படும் நீரில் உயிரிகள் உற்பத்தி யாகின்றன. உள்ளே போடப்பட்ட முடிச்சு, சத்து வழங்குவதாகவும், இயற்கையான பாதுகாப்புக் கருவியாகவும் செயலாற்றும்.
இதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். உங்கள் பொருளாதாரம், நாட்டு மருந்துக் கடைகளை நோக்கித் திரும்புவது மிக நல்லது. அங்குதான் நமது காடுகளுக்கும் நகரங்களுக்கும் இடையிலான வேர்கள் ஓடிக்கொண்டுள்ளன. அந்த வேர்களின் ஆயுள்காலம் மிக நீளமானது. எந்தச் சீர்கேடுகளையும் உறிஞ்சி எடுத்து மரங்களைக் காக்கும் வல்லமை அந்த வேர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- திரும்புவோம்...

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்
* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத் தொடங்கும்.
வெங்காயம் உரிக்கும் போது மெழுகுவர்த்தி கொளுத்தி வச்சா கண்ணு எரியாது! முயற்சித்து பாருங்கள்.
1. சின்ன வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
2. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
3. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
9 Reasons Why Cucumber Is So Good For Your Health
Cucumber is a low-calorie and high potassium food. It is also inherently cooling and has hydrating properties that helps the body to retain water in hot and humid days. So load your fridge with cucumbers without a second thought this summer and reap the endless health benefits.
_HEALTH BENEFITS OF CUCUMBER_
Cucumber has countless health benefits to offer, some of these include:
1 . *Reduces Cholesterol*
A compound called sterol in cucumber helps reduce bad cholesterol. So every bite of that cucumber slice helps your heart in innumerable ways.
2 . *Regulates Blood Sugar*
 Our pancreas contains beta cells which produce insulin. Cucumber aids the production of insulin by supplying hormones to beta cells, thus making cucumber beneficial for diabetics.
3 . *Promotes Joint Health*
Cucumber is an excellent source of silica & helps promote health of joints by strengthening the connective tissues and lubricating the joints to facilitate easier movement.
4 . *Helps In Hydration*
Cucumber is made up of over 90% water. For a change one can replace a glass of water with a glass of cucumber juice for an instant dose of much needed fluids needed to keep the body hydrated
5 . *Aids In Weight Loss*
Add crunchy cucumbers to your regular meals in form of salads or soups. The soluble fiber in cucumbers aids in slowing down digestion, keeps us feeling full for a longer time, and helps keep you away from eating frequently
6. *Keeps Depression At Bay*
Cucumbers are a source of vitamin B1,B5, B7 (biotin). Deficiency of B Complex is known to cause anxiety and stress. So crunch your way to great mental health, and keep depression away.
7 . *Rejuvenates Skin*
Cucumbers are used in spas for their natural hydrating properties. Slices of cold cucumbers placed around the eyes reduce puffiness and dark circles. It is a sure treat for tired eyes.
8 . *Improves Digestion*
Not only does the cucumber salad help in weight loss, the fiber in every slice helps your gut digest the food that goes in there. The fiber is also beneficial in regulating bowel movements. It is definitely a must have for those heavy lunch days.
9 . *Maintains Kidney Health*
The high water content in cucumbers helps in maintaining kidney health, it reduces uric acid levels in the kidneys and its diuretic properties help flush toxins from the kidneys.
*FUN WAYS TO HAVE CUCUMBER*
There are many simple and fun ways to have cucumber daily in your diet:
*Relish It With Your Drinks*
Cucumber slices mixed with lemon juice, mint syrup; black salt and water can be blended for a magic summer drink.
*Have It In Your Salads*
Add cucumber to your regular salad and see the difference it makes to your appetite and digestion.
*Make Raita Out Of It*
Grate 2 cucumbers and mix with 1 cup of curd, add some salt, pepper and cumin powder as seasoning, and for a healthy side dish with oily food.
*Add It To Your Water Bottle*
Add slices of cucumber to drinking water for instant rehydration, for a variation add mint leaves, slices of apple or strawberry for a summer take on plain drinking water.
Cucumbers are as versatile as they are delicious unlike the other green vegetables providing the same nutritive effects. So go for it and beat the heat this hot summer with the humble cucumber by your side.
*Stay Healthy, Stay Happy*
  *சிறுதானிய அரசி*

அன்று ஏழைகளின் உணவாக கருதப்பட்ட சிறுதானியங்கள், இன்று பலரும் நோய்களுக்கு பயந்து சாப்பிடும் உணவாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அவை நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடும் அத்தனை சாராம்சங்களையும் உள்ளடக்கியவையாக இருக்கின்றன. அதனால் நிறைய பேர் சிறுதானியங்களுடன் புது உறவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவைகள் மீது தங்களுடைய பிரியத்தை புதுப்பித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை பிரபலப்படுத்தும் சீரிய முயற்சிகளில் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திருவையாறு ராஜேஸ்வரி.


இவருடைய முயற்சி பலருடைய உணவு பழக்க வழக்கத்தையே மாற்றி விட்டதுடன், அவர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கொண்டிருக்கிறது. துரித உணவுகளுக்கு அடிமையாகி கிடந்தவர்களை, இவர் சிறுதானிய உணவுகள் மீது மோகம் கொள்ள வைத்துவிட்டார். 10–ம் வகுப்பு வரையே படித்திருக்கும் ராஜேஸ்வரி, சிறுதானிய உணவுகளை பிரபலப்படுத்தும் நோக்கில் அதற்கான நிறுவனத்தை தொடங்கி நடத்துகிறார். அதன் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுக்கிறார். இயற்கை சார்ந்த இவரது முயற்சியையும், வளர்ச்சியையும், விழிப்புணர்ச்சியையும் பாராட்டி மத்திய அரசும் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
தன்னை பற்றியும், சிறுதானிய உணவுகள் பற்றியும் ராஜேஸ்வரி தரும் தகவல்கள்!
‘‘நான் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரியில் பிறந்தேன். எனக்கு சிறு வயதில் இருந்தே புத்தகம் வாசிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. மேல்நிலைப்படிப்பு படிக்க எங்கள் ஊரில் வசதி இல்லாததால் 10–ம் வகுப்புடன் படிப்பு தடைபட்டு போனது. கல்விப் பயணம் முடிவுக்கு வந்தாலும் வாசிக்கும் திறனை மட்டும் கைவிடவில்லை. ஓய்வு நேரங்களில் ஏதாவது புத்தகங்களை படித்து கொண்டே இருப்பேன். நான் படித்த புத்தகங்களில் சிறு தானியங்களை பற்றிய புத்தகங்கள் என்னை கவர்ந்தன. அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கியங்கள் என்னை வியக்கவைத்தன. அதனால் சிறுதானிய உணவுகளை சமைக்கத் தொடங்கினேன்’’ என்கிறார்.
ராஜேஸ்வரி சிறுதானியங்களை பயன்படுத்தி விதவிதமாக சமைப்பதற்கு பழகிக்கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. இவருடைய கணவர் ரவிக்குமார் சோப்பு விற்கும் ஏஜென்சி நடத்தி வருகிறார். கணவருடைய தொழில் மூலமே சிறுதானியங்களை பற்றிய விழிப்புணர்வை விதைத்திருக்கிறார்.
‘‘என்னுடைய சமையலில் சிறுதானிய உணவுகளை இடம்பெற செய்தேன். என் கணவர் அவைகளை விரும்பி சாப்பிட்டார். அவைகளில் புதிய உணவுகளை தயார் செய்வதற்கும் ஊக்கப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கமே என்னுடைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது. தொழில்ரீதியாக அவரை சந்திப்பதற்கு நிறைய பேர் வீட்டுக்கு வருவார்கள். அவர்களுக்கு சிறுதானியங்களை கொண்டு சமைத்த உணவு களை சாப்பிட கொடுத்ததுடன், அதன் நன்மைகள் பற்றியும் எடுத்து கூறினேன். அவர்கள் சிறப்பினை அறிந்து வாங்கத் தொடங்கினார்கள். அப்படியே இந்த உணவு பிரபலமாகிவிட்டது’’ என்கிறார்.
இவர் சிறு தானியங்களில் இருந்து கஞ்சி மிக்ஸ், பொங்கல் மிக்ஸ், கார அடை மிக்ஸ், புட்டு மாவு, வெந்தய தோசை மிக்ஸ், முறுக்கு மாவு, சிவப்பரிசி புட்டு மாவு, உப்புமா குருணை, ஊட்டச்சத்து மாவு, முளை கட்டப்பட்ட தினை மாவு, முளை  கட்டப்பட்ட ராகி மாவு, கம்பு மாவு, கொள்ளு மாவு, கொள்ளு ரசப்பொடி, வரகு தோசை மிக்ஸ், உப்புமா குருணை போன்ற விதவிதமான உணவுப் பொருட்களை தயார் செய்கிறார்.
சிறுதானியங்கள் குறித்தும், அவைகளில் அடங்கியிருக்கும் அளப்பெரிய நன்மைகள் பற்றியும் ராஜேஸ்வரி பட்டியலிடுகிறார்:
‘‘சிறுதானியம் என்பது வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் என வடிவத்தில் சிறியதாக இருக்கும் தானிய வகைகளை குறிக்கும். இந்த சிறுதானியங்கள் பழந்தமிழர்களின் உணவில் பெரும் பங்கு வகித்திருக்கிறது. நம் முன்னோர்கள் அதனை உட்கொண்டதால்தான் மிகுந்த ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள்.
‘உணவே மருந்து’ என்ற அவர்களின் வாக்கு இன்று ‘மருந்தே  உணவு’ என தடம்மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் மாறி வரும் உணவுப்பழக்கம் தான். பாஸ்ட்புட் கலாசாரம் பெருகிவிட்டது. இதுவே பல்வேறு நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. நாம் வியாதிகளில் இருந்து விடுபட்டு உடல் நலனை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும். நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சிறுதானியங்கள் தருகின்றன.
தினை, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்புச்சத்து குறையும். உடல் பருமனை குறைக்கும். சிறுநீரக கோளாறு தொந்தரவுகள் ஏற்படாது. பெண்களுக்கு ஏற்படும்  மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக சிறுதானியங்கள் அமைகின்றன.
அதேபோல தாய்ப்பாலை அதிகரிக்கவும், கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக வாழவும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நன்றாக இருக்கவும், மலச்சிக்கலை சரி  செய்யவும், வயிற்றுப்புண்ணை குணப்படுத்தவும் சிறுதானியங்கள் உதவுகின்றன’’ என்று விளக்கியவர், தனக்கு மத்திய அரசின் விருது கிடைத்ததற்கான காரணத்தையும் விளக்குகிறார்.
‘‘நான் பரமக்குடி, தேனி, மதுரை, ஈரோடு, அரியலூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்களை வாங்கி வருகிறேன். அவைகளை மக்கள் விரும்பி சாப்பிட்டால், விவசாயிகள் விளைச்சலை அதிகப்படுத்துவார்கள். அதன் மூலம் விலை குறையும். இயற்கை கொடுத்த பாரம்பரிய உணவு தானியங்களை பாதுகாக்க வேண்டியது நம்முடைய  பொறுப்பு.
இயற்கை வளங்களை பாதுகாப்பவர்களுக்கு மத்திய அரசு விருது வழங்குகிறது. நான் இயற்கை கொடுத்த கொடையான பாரம்பரிய  உணவுகளுக்கு புத்துணர்வு கொடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறேன். அதனால் சிறு தானியங்களை கொண்டு தயாரித்த உணவுப்பொருட் களை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தேன். அதில், இந்த உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியலிட்டு இருந்தேன். என்னுடைய விழிப்புணர்வு சேவையை பாராட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் ‘‘ஸ்ருஸ்டி சம்மான்’’ என்ற விருதினை மத்திய அரசு வழங்கியது. இந்த விருது என்னுடைய விடாமுயற்சிக்கும், உழைப்பிற்கும் கிடைத்த வெற்றியாகும்’’ என்கிறார், இந்த சிறு   தானிய அரசி.
ராஜேஸ்வரி– ரவிகுமார் தம்பதியருக்கு பபிதா, சபிதா என இரு மகள்கள். பபிதா பல் டாக்டர். சபிதா என்ஜினீயரிங் படித்தவர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. ஆரோக்கிய பெட்டகம்சிறுதானிய  உணவுகளின்  சிறப்புகள்:
* கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்ற சிறுதானிய வகைகளை சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன், இதய நோய் போன்ற நோய்கள் ஏற்படாது.
* கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சம நிலையில் வைத்திருக்க உதவும். தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை குறைக்கும். தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை பெருக்கும். உடல் வலிமையை அதிகரிக்கும்.
* கம்பில் அரிசியை விட 8 மடங்கு இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இதில் போலிக் அமிலமும் அதிகமாக நிறைந்துள்ளதால் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்த உணவாகும். மக்னீசியம்,  துத்தநாகம் ஆகிய தாது உப்புகளும் கம்பில் உள்ளன. கம்பில் கூழ், அடை, புட்டு, சேமியா, சூப் போன்ற உணவு  பதார்த்தங்களை செய்து சாப்பிடலாம்.
* சோளத்தில் புரதம், இரும்பு, கால்சியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லவை. உடல் பருமனை குறைக்கும். வயிற்று புண்ணை ஆற்றும். வாய் துர்நாற்றத்தை போக்கும். இதில் புட்டு, தோசை, அடை போன்றவற்றை தயாரிக்கலாம்.
* வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச்சத்து இருக்கிறது. இது உடல் எடையை குறைப்பதற்கு துணைபுரியும். மாதவிடாய் பிரச்சினை சமயங்களில் பெண்கள்  வரகை சமைத்து சாப்பிடுவது நல்லது.
* தானியங்களில் அதிக சத்து மிக்கவை கேழ்வரகு. இதில் புரதம், தாது, உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர் சத்துக்களும் இருக்கின்றன. இது  உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களை சாப்பிடலாம்.  கேழ்வரகை கொண்டு ராகி மால்ட் தயாரிக்கிறார்கள். 
* சாமையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. சாமையில் சாதம், புலாவ், பொங்கல், இட்லி போன்றவை செய்யலாம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...