Tuesday, January 24, 2017

உடல் எரிச்சல் குறைய


பூவரசம் உள்ளிருக்கும் மிருதுவான பட்டையை வெயிலில் காய வைத்து, இடித்து சலித்து வைத்துக்கொண்டு சம அளவு பாசிப்பருப்பு மாவு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை எடுத்து தண்ணீரில் சீகைக்காய் பொடி போல் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் ஏற்படும் எரிச்சல், தடுப்பு ஆகிய நோய்கள் குறையும்.
 மூக்கடைப்பு குறைய


கரிசாலை, அவுரி, கஞ்சா, பொன்னாங்காணி, வெற்றிலை, முசுமுசுக்கை, அகில் கட்டை, எலுமிச்சைப் பழம், குரட்டைப் பழம், அத்திப்பட்டை, இவற்றின் சாறு நல்லெண்ணெய் வகைக்கு 2படி இவற்றை ஒன்றாய் கலந்து அதில் கருஞ்சீரகம், கடுகு ரோகினி, கஸ்தூரி மஞ்சள், தான்றிக் காய், அதிவிடயம், சுரத்தை, சுக்கு, கோஷ்டம், சதகுப்பை, குரோசாளி ஓமம், சிறுநாகப் பூ, தாளிசப்பத்திரி, திப்பிலி மூலம், சித்திர மூலம், பெருங்காயம், நெல்லிமுள்ளி, பிச்சி வேர்ப் பட்டை, மிளகரனைப் பட்டை, சீயாக்காய், நெல்லி வேர், வகைக்கு 1கழஞ்சு இவற்றை எலுமிச்சைப் பழ சாற்றில் அரைத்துப் போட்டு காய்ச்சி வடித்துச் சூட்டுடன் அதில் ஒருபிடி முருங்கைப் பூவைப் போட்டு வைத்துக்கொண்டு தலை முழுகி வர மூக்கடைப்பு குறையும்.


[
 ஒற்றைத் தலைவலி குறைய


எட்டி மரத்தின் இளந்தளிரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளகு வெள்ளைப் பூண்டு அரைத்து போட்டு நல்லெண்ணெய் விட்டு சிவந்து வாசனை வரும் வரை காய்ச்சி ஆறிய பின் தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து சீயக்காய் சேர்த்து குளித்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.


 பேன், ஈறு தொல்லை
சீத்தாப்பழ விதைகளை காய வைத்து பொடியாக்கி, சீயக்காயில் கலந்து குளித்து வர பேன், ஈர் ஒழியும், கூந்தலும் மிருதுவாகும்.





பேன்கள் குறைய


ஊமத்தை இலைச்சாறு, குப்பைமேனி இலைச்சாறு இரண்டையும் ஒன்றாய் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் சென்றபின் சீயக்காய் தேய்த்துக் குளித்து வந்ததால் தலையில் உள்ள பேன்கள் குறையும்.





பேன்கள் குறைய


படிகாரத்தை எடுத்துப் பொடியாக்கி தண்ணீரில் கரைத்து தலையில் தேய்த்து ஒன்று அல்லது 2 மணி நேரம் சென்றபின் சீயக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் பேன்கள் குறையும்.

 வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்



முக்கனிகளுக்கு ஒன்றான வாழையின் அனைத்துப் பகுதிகளும் பெரிதும் பயனுள்ளதாக உள்ளன. அதில் வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்துமே சாப்பிடுவதற்கு உகந்ததாக இருப்பதோடு, ஒவ்வொன்றிலும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.

ப்போது நாம் அதில் வாழைப்பூவின் மகிமைகள் குறித்து தான் பார்க்கப் போகிறோம். பொதுவாக வாழைப்பூவை அதிகம் வாங்கி சமைக்கமாட்டார்கள். ஏனெனில் இதனை சுத்தம் செய்ய நீண்ட நேரம் ஆகும் என்பதால் தான். ஆனால் உண்மையில் இதனை அடிக்கடி சமைத்து உட்கொள்வது மிகவும் நல்லது.

வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!

வயிறு பிரச்சனைகள் நீங்கும் :-

வாழைப்பழத்தைப் போன்றே வாழைப்பூவிலும் நார்ச்சத்து வளமான அளவில் நிறைந்துள்ளது. இதனால் இவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கும் போது, செரிமான பிரச்சனைகள், குடலியக்க பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவை தடுக்கப்படும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் :-

வாழைப்பூவில் பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள செல்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.

நீரிழிவு :-

வாழைப்பூவில் கிளைசீமிக்-இன்டெக்ஸ் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாகவும்உள்ளதால், இவை இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரித்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் பராமரிக்க உதவும்.

வயிற்றுப் போக்கு :-

வாழைப்பூ வயிற்றுப் போக்கை குணமாக்க உதவும்

மாதவிடாய் பிரச்சனைகள் :-

வாழைப்பூவை உட்கொண்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சனைக்கு நல்ல சிகிச்சையாக இருக்கும்.

இரத்த சோகை :-

உணவில் வாழைப்பூவை அதிகம் சேர்த்து வருவதன் மூலம், உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். ஆகவே உங்களுக்கு இரத்த சோகை இருப்பின் வாழைப்பூவை உணவில் சேர்த்து வாருங்கள்.

மனநிலையை மேம்படுத்தும் :-

வாழைப்பூவில் உள்ள மக்னீசியம், மனக்கவலையைக் குறைத்து, மன நிலையை மேம்படுத்தும். ஆகவே உங்களுக்கு மனம் சரியில்லையெனில், வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

தாய்ப்பால் அதிகரிக்கும் :-

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு போதிய அளவில் தாய்ப்பால் உற்பத்தி ஆகவில்லை என்றால், வாழைப்பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.



*மூட்டுவலியை போக்கும் மருத்துவ முறைகள்*



சமையலறையில் இருக்க கூடியதும், எளிதில் கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு எவ்வித பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், வெந்தயம், கழற்சிக்காய், தனியா, வெள்ளரி ஆகியவற்றை கொண்டு கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு தீர்வுகாண்பது குறித்த செய்முறைகளை பார்க்கலாம்.
மூட்டுகளில் வலி இருந்தால் கட்டை விரலை மடக்க முடியாத நிலை, சிவந்த நிலை, வீக்கம் காணப்படும். கால் கட்டை விரல்களில் வலி, வீக்கம் இருக்கும்.

வெந்தயத்தை கொண்டு மூட்டு வலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்:

வெந்தயம், மஞ்சள் பொடி, இஞ்சி. வெந்தயத்தை நீர்விட்டு ஊறவைத்து அரைத்து எடுக்கவும்.

இதனுடன் சிறிது மஞ்சள் பொடி, இஞ்சி சாறு சேர்க்கவும். லேசாக சூடு பண்ணவும். இது வெந்தவுடன் எடுத்து ஆறவைத்து முட்டி, கட்டை விரலில் வைத்து கட்டி வைத்தால் மூட்டு வலி, வீக்கம் குணமாகும். வெந்தயத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. மூட்டுவலியை போக்கும் மருந்தாக விளங்குகிறது.

கழற்சிக்காயை கொண்டு மூட்டு வலிக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

கழற்சிக்காய், எலுமிச்சை. கழற்சிக்காயை வெயிலில் காயவைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுக்கவும். பருப்பை காயவைத்து அரைத்து பொடியாக்கவும். இந்த பொடியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் இதை மேல்பூச்சாக போடும்போது வலி, வீக்கம் குணமாகும்.

வீக்கத்தை வற்றச்செய்யும் தன்மை கழற்சிகாய்க்கு உண்டு. மூட்டுவலி உள்ளவர்கள் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவில் உப்பு குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.தனியாவை கொண்டு மூட்டு வலிக்கான தேனீர் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

தனியா, உலர்ந்த திராட்சை. தனியா மற்றும் உலர்ந்த திராட்சையை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதை தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி காலை, மாலை வேளைகளில் குடிக்கலாம்.

இது சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. யூரிக் அமிலம் வெளியேறுவதால் மூட்டுவலி, வீக்கம் குணமாகும். உடல் எடையை குறைப்பதால் மூட்டு வலி சரியாகும். வெள்ளரியை பயன்படுத்தி மூட்டு வலிக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

 வெள்ளரி, இஞ்சி, எலுமிச்சை. 50 மில்லி வெள்ளரி சாறு, 2 ஸ்பூன் இஞ்சி சாறு, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து காலை வேளையில் குடித்துவர மூட்டுவலி குறையும்.

பல்வேறு நன்மைகளை கொண்ட வெள்ளரி, சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலியை போக்கும் தன்மை வெள்ளரிக்கு உண்டு. முகப்பருவை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். கடுக்காய் பொடி, மஞ்சள் பொடியை நீர்விட்டு நன்றாக கலந்து முகப்பருக்களின் மீது போட்டுவர முகப்பரு வடு தெரியாமல் மறைந்து போகும்.
நாம் என்ன உணவாக எடுத்துக்கொண்டோமோ அவைகளின் மிச்சமும் மற்றும் உடலுக்கு தேவையல்லாத பகுதி தான் மலம்...


குழந்தை பருவத்தில் கட்டாயப்படுத்தி நேரத்திற்கு மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை *தினிப்பது*🚫

 இதை விரிவாக பார்ப்போம்
குழந்தைகள் தங்களின் உறுப்புகள் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை இயல்பாக உறுப்புகள் செய்வதை வேடிக்கை மட்டும் பார்ப்பதுண்டு, ஆனால் இன்றைய நாகரீக சமூகம் எல்லாவற்றையும் நேரத்தை மையமாகக் கொண்டு இயங்குவதால் குழந்தைகளையும் இந்த மலம் சிறுநீர் கழிக்கும் இயல்பான ஒன்றையும் நேரத்திற்கு ஏற்றார் போல கட்டுப்படுத்த முயல்கின்றனர்.
*Diaper 🚫* போன்றவைகளை மணிக்கணக்கில் குழந்தையின் உடலில் இறுக்கி காற்று புகாமல் நெடுந்தூர பயணம், வேலைக்கு செல்வது, சிலர் வீட்டிலேயே இருந்தாலும் நீண்ட நேரம் diaper சுற்றி விடுவது வழக்கமாக மாறிவிட்டது, உடல் இயற்கையாக செய்ய வேண்டிய ஒன்றை கட்டுபடுத்த முயல்கிறோம் அதன் விளைவாக உறுப்புகள் செயல்படும் தன்மை மாறி குழந்தையின் *ஆசனவாய், ஆதார உறுப்புகளும் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் மலச்சிக்கலும், மலம்கழித்தல் ஒரு தகாத செயல் போல குழந்தையின் ஆழ் மனதில் பதிந்து விடுகிறது.*
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகளின் மலம் சிறுநீர் போன்றவைகளை தூய்மை செய்தல், இப்படியான மென்மையான *பருத்தி* துணிகளை சிறு சிறு துண்டுகளாக கிழித்து துடைப்பது நமது குடும்பங்களில் இருந்தது.
இரண்டாவது,
உடல் கழிவுகளின் மீது மனிதன் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சி, அருவருப்பும் தான் மிக முக்கிய காரணம், இந்த வெறுப்புணர்ச்சியை குழந்தைகளுக்கும் திணிக்கின்றனர்.
நாம் என்ன உணவாக எடுத்துக்கொண்டோமோ அவைகளின் மிச்சமும் மற்றும் உடலுக்கு தேவையல்லாத பகுதி தான் மலம் என்பதை நாமும் புரிந்து குழந்தையில் உடலையும் மனதையும் இயல்பாக இருக்க அனுமதித்தலே அவர்களின் எதிர்கால வாழ்க்கை நோயின்றி அமையும்.

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Organic Village 9884122255*
Benefits of sleeping on your left side.


 In Ayurveda it is called Vamkushi..

1. Prevents snoring.
2. Pregnant women get the advantage of better blood circulation, flowing of blood to uterus, fetus, and kidneys and relief from back ache.
3. Helps in proper digestion after meals.
4. Gives relief to people having back and neck pain.
5. Helps in filtering and purifying toxins, lymph fluids and wastes.
6. Prevents serious illness as accumulated toxins are flushed out easily.
7. Liver and kidneys work better
8. Smooth bowel movements
9. Reduces workload on heart and its proper functioning
10. Prevents acidity and heartburn
11. Prevents fatigue during morning
12. Fats gets digested easily
13. Positive impact on brain
14. It delays onset of Parkinson’s and Alzheimer
15. It is also considered to be the best sleeping position according to Ayurveda.

Do share this information!

www.nirmitinidra.com

 தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம்பித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியுமா? பலரும் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தான் நினைக்கிறார்கள். ஆனால் பேரிச்சம் பழத்தில் நாம் நினைக்க முடியாத அளவில் நன்மைகள் நிறைந்துள்ளது.

அதிலும் தினமும் 3 பேரிச்சம் பழத்தை ஒருவர் உட்கொண்டு வந்தால், தற்போது பலர் சந்தித்து வரும் நிறைய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அந்த அளவில் இந்த சிறு பழத்தில் சத்துக்களானது ஏராளமான அளவில் அடங்கியுள்ளது

போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் :-

பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம்.

செரிமான கோளாறுகள் நீங்கும் :-

பேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சனைகள் இருப்பின், பேரிச்சம் பழத்தை தினமும் 3 உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

சிறந்த வலி நிவாரணி :-

பேரிச்சம் பழத்தில் மக்னீசியம் என்னும் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். மேலும் ஆய்வுகளும் பேரிச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைப்பதாக கூறுகின்றன.

ஆரோக்கியமான பிரசவம் :-

பேரிச்சம் பழத்தை கர்ப்ப காலத்தில் உட்கொண்டு வந்தால், பிரசவம் முடிந்த பின் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.

உயர் இரத்த அழுத்தம் :-

பேரிச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், இதய செயல்பாட்டை மென்மையாக்கி, இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். எனவே உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

பக்கவாதம் :-

முக்கியமாக பேரிச்சம் பழத்தில் இருக்கும் மக்னீசியம் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைப்பதாக ஏழு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு தினமும் ஒருவர் 100 மிகி மக்னீசியத்தை எடுக்க வேண்டியது அவசியம்.

மூளையின் செயல்பாடு மேம்படும் :-

யார் ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறாரோ, அவரது மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.

இரத்தணுக்கள் அதிகரிக்கும்:-

 பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும். எனவே உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.
12  இயற்கை முறையில் பயனுள்ள வைத்தியக் குறிப்புகள்*

✍🍃✍🍃✍🍃✍🍃✍🍃✍

*☄1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!*

*☄2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.*

*☄3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.*

*☄4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.*

*☄5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.*

*☄6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.*

*☄7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.*

*☄8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.*

*☄9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.*

*☄10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.*

*☄11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.*

*☄12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.*

☄☄🍃☄☄🍃☄☄🍃☄☄
தமிழ் உலகம் விழிப்புணர்வு அடைய "கேன்சர்"  பற்றிய மிக முக்கிய தகவலை வெளியிடுகிறோம்..

Raja Bai , Shakthi Bala Yogi

( புற்றுநோய் - CANCER  ) கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.

உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.

"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும்  உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy )  எனும் ஒரு கொடிய  நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு  என்பது தெரியவந்தது.
 
கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.

இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.

தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை  கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE  லேட்ரில்  உள்ளது.

ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது .

DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில்  90% வெற்றி கண்டார்.

கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள்  :

1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், ,  லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.

2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்-  எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை

5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:

அப்ரிகாட்
லிமா பீன்ஸ்
ஃபாவா பீன்ஸ் ( Fava Beans )
கோதுமை புல் ( Wheat Grass)
பாதாம்
ராஸ்பெரிஸ்
ஸ்ட்ராபெர்ரி
ப்ளாக்க்பெரி  
பிளூபெர்ரி    
பக் வீட் ( Buck Wheat )
சோளம்
பார்லி
குதிரைவாலி
முந்திரி
மெகடாமியா கொட்டைகள்  ( Macadamia Nuts )
முளைகட்டிய பீன்ஸ்
இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid  இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.
இதை தவிர்ப்பதற்கு  லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம்.

அதுமட்டுமின்றி நான் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நான் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு   சிறந்த வழி  நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும்  உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.

உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.

கீழ்காணும் இணையதளத்தில் இருந்து எடுத்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது..

http://www.newsrescue.com/secret-uncovered-cancer-not-disease-business/#axzz4MOVbUFAi
வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!



வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும். பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து,  பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?



இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், அதனால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்.


1. நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை நீர்ச்சத்து திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது.


2. வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.


3. வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள்.


4. சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.


5. வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றம் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். நோய் எதிர்ப்பாற்றல் அதிகமுள்ள வெண்டைக்காய் சிறந்த உடல்நல ஊக்கி என்றே சொல்லாம்.


6. வெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.


7. வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இந்த கரையாத நார்ச்சத்துக்கள் பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து, குடல் புற்றுநோயைத் தடுக்கும்.

இஞ்சி,,பூண்டு,வெங்காயம்,, நனமைகள்

இஞ்சிஇஞ்சி :-

உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தும் இஞ்சி, பல்வேறு பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக செயல்படுகிறது. இதற்கு இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோன் மற்றும் ஜிஞ்சரால் என்னும் பொருட்கள் தான் காரணம். இவை இரத்தம் உறைதலைத் தடுத்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

பூண்டு :-

பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படும் பூண்டு, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் பூண்டு இரத்த நாளங்களை அமைதிப்படுத்தி, இரத்த சிவப்பணுக்களுடன் சேர்ந்து ஹைட்ரஜன் சல்பைட்டின் உற்பத்தியை அதிகரிக்கும். ஏனெனில் ஹைட்ரஜன் சல்பைடு தான் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

வெங்காயம் :-

வெங்காயம் கூட இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதற்கு அதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான் காரணம். எனவே முடிந்த அளவில் இதனை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

நட்ஸ் :-

நட்ஸில் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றில் வைட்டமின் பி3 என்னும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சத்து வளமாக நிறைந்துள்ளது.

ரன்னிங் :-

நாம் ஓடுவதற்கும், இரத்த ஓட்டத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்ற பலரும் கேட்பார்கள். ஆனால் உண்மையில் தினமும் ரன்னிங் மேற்கொண்டால், உடலில் இரத்த சுழற்சி அதிகரிக்கும். அதிலும் தினமும் தவறாமல் 20 நிமிடம் ரன்னிங் மேற்கொள்ள வேண்டும். மேலும் நாளுக்கு நாள் ஓட்டத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். :-

உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தும் இஞ்சி, பல்வேறு பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக செயல்படுகிறது. இதற்கு இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோன் மற்றும் ஜிஞ்சரால் என்னும் பொருட்கள் தான் காரணம். இவை இரத்தம் உறைதலைத் தடுத்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

பூண்டு :-

பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படும் பூண்டு, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் பூண்டு இரத்த நாளங்களை அமைதிப்படுத்தி, இரத்த சிவப்பணுக்களுடன் சேர்ந்து ஹைட்ரஜன் சல்பைட்டின் உற்பத்தியை அதிகரிக்கும். ஏனெனில் ஹைட்ரஜன் சல்பைடு தான் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

வெங்காயம் :-

வெங்காயம் கூட இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதற்கு அதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான் காரணம். எனவே முடிந்த அளவில் இதனை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

நட்ஸ் :-

நட்ஸில் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றில் வைட்டமின் பி3 என்னும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சத்து வளமாக நிறைந்துள்ளது.

ரன்னிங் :-

நாம் ஓடுவதற்கும், இரத்த ஓட்டத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்ற பலரும் கேட்பார்கள். ஆனால் உண்மையில் தினமும் ரன்னிங் மேற்கொண்டால், உடலில் இரத்த சுழற்சி அதிகரிக்கும். அதிலும் தினமும் தவறாமல் 20 நிமிடம் ரன்னிங் மேற்கொள்ள வேண்டும். மேலும் நாளுக்கு நாள் ஓட்டத்தின் அளவை அதிகரிக்க வேண்டும்.
நாம் பயன்படுத்தும் பழம்புளியை விட சிறப்பு நன்மைகள் கொண்ட குடம்புளியையும் அவ்வபோது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதே.

அன்றாடம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் புளியை விட அதிக மருத்துவகுணம் கொண்டதே குடம் புளி. இது என்னடா புதுசா வயித்துல புளியை கரைக்கிறாங்கன்னு நினைக்க வேண்டாம்.

நாம் பயன்படுத்தும் புளியை போன்று விளைச்சல் இல்லாதது. பெரும்பாலும் மலைபிரதேசங்களில் விளையக் கூடியது குடம்புளி.

தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் தான் அதிகமாக விளைகிறது குடம்புளி, இன்றைய நாளில் கேரள மக்கள் அதிகமா குடம்புளியை தான் பயன்படுத்தி வருகின்றனர், இந்த குடம் புளிக்கு மலபார் புளி என்று வேறு பெயரும் உண்டு.

மருத்துவ புளி என்றழைக்கப்படும் குடம் புளி :-

மருத்துவ குணங்கள் ஏராளமாய் உள்ளது குடம் புளி, அதனால் இதனை மருத்துவ புளி என்றும் அழைக்கின்றனர்.

இதனை கேரளாவில் அன்றாட சமையலுக்கே பயன்படுத்தி வருகின்றனர், இந்த குடம் புளியை சமையலில் சேர்த்து சமைத்தவுடன் புளியை வெளியே எடுத்து விடவேண்டும். நேரம் ஆக ஆக சமைத்த உணவில் புளிப்பு சுவையை அதிகரித்து கொண்டே போகும்.

நாம் புளிசேர்க்கும் அனைத்து உணவுகளிலும் குடம் புளியை சேர்ப்பதால், புளிப்பு சுவையை தருவதுடன் சிறந்த செரிமானத்தை தரவல்லதாக குடம் புளி உள்ளது.

குடம் புளியில் அடங்கியுள்ள ஹைட்டிராக்சி சிட்ரிக் எனும் ஆசிட் இதயம் சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை படைத்தது என்பதுடன் உடலில் கொழுப்பை குறைத்து மெல்லிய தோற்றத்தையும் ஏற்படுத்தும்.

உடல் மெலிவிற்கான தயாரிக்கப்படும் பல மருந்துகளில் பிரதான மருந்தே குடம் புளி தான். எனவே உடலை இயற்கையான முறையில் மெலிய செய்ய விரும்புபவர்கள் அன்றாட சமையலில் குடம் புளியை பயன்படுத்தி கொள்ளலாம்.

குடம்புளியிலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்து வயிற்றுபோக்கை குணப்படுத்த தரப்படுகிறது.

குடம் புளியின் வேறு சில பயன்கள்:-

குடம்புளியின் பழத்தோலையில் இருந்து சாறு எடுத்து வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாக தரலாம். இந்த குடம் புளி மரத்தின் பட்டையில் வடியும் மஞ்சள் நிற பிசின் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

கால்நடைகளின் வாய் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குடம் புளி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ரப்பர் மரத்தில் இருந்து வடியும் பாலை கெட்டிபடுத்த குடம் புளி உதவுகிறது. அதுபோல் தங்கம், வெள்ளியை பளபளக்க செய்யவும் குடம் புளி பயன்படுகிறது.

குடம் புளி உணவு வகைகள்:-

குடம்புளியை கொண்டு சாம்பார், கார குழம்பு, ரசம் போன்றவையை அன்றாடம் சமைத்து உண்ணலாம், மேலும் இதனை வெல்லத்துடன் கலந்து பானகம் போல செய்தும் சாப்பிடலாம், குடம்புளியின் பழப்பகுதியை அப்படியே பயன்படுத்தலாம்.

இல்லையெனில் நன்கு காய வைத்த குடம் புளி கிடைக்கின்றன அவற்றையும் பயன்படுத்தி கொள்ளலாம். நாம் பயன்படுத்தும் பழம்புளியை விட சிறப்பு நன்மைகள் கொண்ட குடம்புளியையும் அவ்வபோது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதே.
"Now We Opened Our First GENERIC MEDICAL SHOP in TamilNadu"

திரு.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கும்
"மக்கள் பாதை" நண்பர்கள் இணைந்து தமிழக மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன் சிவகங்கையில் முதல்  JAN AUSHADHI MEDICAL STORE ( மக்கள் மருந்தகம்) Generic Medical Shop துவங்கியுள்ளோம். இதை தமிழக மக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் நீங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் தங்களின் மருந்து பெயருடன் வாட்ஸ் அப்(9788052839)அல்லது svgjanaushadhi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும் . நாங்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம்.  அணைத்து வகையான ஆங்கில  மருந்துகளும் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் .

உதாரணமாக :
இதய நோயாளிகளுக்கு :
மாதம் : ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு
நம் மக்கள் பாதையின் மக்கள் மருந்தகத்தில்
ரூ:150 மட்டுமே ஆகும்..

மருந்துக்கு தொடர்பு: திரு.கண்ணன் - 9788052839
சிவகங்கை மக்கள் பாதை
 

தமிழகத்தில் பிற மாவட்டங்களில் "மக்கள் மருந்தகம்" துவங்கும்
எண்ணம் உள்ள மற்றும் சமூக அக்கறை கொண்டவர்கள்
தொடர்பு கொள்ளவும் :
மு.உமர் முக்தார்
மாநில துணை
ஒருங்கிணைப்பாளர்
களப்பணி மற்றும் கட்டமைப்பு
9367777700

நம் "மக்கள் மருத்துவம்" திட்டத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவோர் :

Makkal Pathai
State Bank Of India
Current A/C : 35752101378
Branch : Arumbakkam, Chennai
IFSC Code : SBIN0006495
MICR Code : 600002008

என்ற வங்கி கணக்கில் உங்கள் உதவிகளை செய்யவும்.

Inbox Importants
#Share

Velusamy           9486218025

மிகவும் முக்கியம்......

அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்திரைகளையே (அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.........

(1) "1MG Health App For India" என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்.

(2) மருந்து பெயரை தேடவும்...........

(3) பயன்படுத்தும் மருந்து தேடவும்.

(உதாரணம்...லிரிகா 75 மில்லி கிராம்) (பிபிசர் கம்பெனி).......

(4) கம்பெனி பெயர், மருந்து பெயர், விலை,கலந்துள்ள வேதிப் பொருட்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.

(5) Substitute என்பதை க்ளிக் செய்யவும்.......

(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.....

(உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது.

ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே......

இதை DELETE செய்யாமல் FORWARD செய்யவும்.... உங்களது போன் புக்கில் உள்ள எல்லா நம்பருக்கும்...... அனைவரும் பயன் பெற

சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது.........

உயிர் காக்கும் மருந்துகளை கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன.

ஆனால் சாமானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது......

அன்புக்கு விலை இல்லை.....மற்ற குருப்பில் பதிவிடவும்.....
மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்...
Hotel food: ஓட்டலில் சாப்பிடாதீங்க.-

 ஒரு முன்னாள் ஓட்டல் உரிமையாளர் தனது தொழில் ரகசியங்கள்(!)  பற்றி முகநூலில் எழுதியிருக்கிறார்.

அப்ரூவர் ஆனவர் சொல்லும் தகவல்கள் அதிர்ச்சியூட்டுபவையாகத்தானே இருக்கும். அதே அதிர்ச்சி ரகம்தான் இவரது முகநூல் ஸ்டேட்டஸும்.

1. ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கனை மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை. 2 அல்லது 3 நாட்களுக்கு முன்  வாங்கிய சிக்கனைத்தான் அதிகமாக உபயோகப்படுத்துவோம். அதை வினிகரில் கழுவி பயன்படுத்தும்போது கெட்டுப் போன வாடையை  வாடிக்கையாளர்கள் அறிவதில்லை.

2. சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிவப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடர் பயன்படுத்துகிறோம். ஆனால், அது தடை  செய்யப்பட்ட பொருள். அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிவப்பு சாயம் உங்கள் கையில் 2  நாட்களுக்கு இருக்கும்.

3. சோயா சாஸ்... இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே பயன்படுத்துவதில்லை. மாறாகத் தண்ணீரோ அல்லது ஒரு  வாரத்துக்கு முன்னர் உபயோகப்படுத்திய எண்ணெயோ கலந்து செய்கிறோம்.

4. எந்த ஃபாஸ்ட் ஃபுட் கடையிலும் சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்துவதில்லை. பாமாயில்தான் உபயோகிக்கிறோம்.

5. ஃப்ரைடு ரைஸ் செய்யும் போது சட்டியில் சாதம் ஒட்டக்கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை கொட்டுகிறோம்.

6. இன்னொன்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்... ஃப்ரைடு ரைஸ் செய்யும் சட்டியை நாங்கள் ஒரு வாரத்துக்குக் கழுவ மாட்டோம். கழுவி எண்ணெய்  பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்ட்டாகிவிடும்.

7. மோனோசோடியம் க்ளூட்டமேட்... இதை அதிகமாக பயன்படுத்துகிறோம். உடலுக்குக் கேடு உண்டாக்கும் பொருள் என்று பலரும் சொல்கிறார்கள்.  இதைத் தொட்டு நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்துவிடும். சோதித்துப் பாருங்கள்.

8. மிளகுத் தூளில் வெண்மை நிறத்துக்காக கோல மாவு கலப்படம் செய்யப்படுகிறது. அதைத் தான் நாங்கள் உபயோகப்படுத்துகிறோம்.

9. காலாவதியான தக்காளி சாஸ் விலை கம்மியாகக் கிடைப்பதால் அதையே உபயோகப்படுத்துகிறோம்.

10.சில்லி சாஸ்... அதை அருகில் சென்று முகர்ந்து பார்த்தால் முகம் சுளிக்கிற அளவுக்கு கெட்ட வாடை அடிக்கும். எல்லாம் மசாலா மணத்தில்  மறந்து போய்விடும்.

5 நிமிடத்தில் 8 பிளேட் தயாராகிவிடும். ஒரு பிளேட் 50 ரூபாய் என்றால் கூட 400 ரூபாய் சம்பாதித்துவிடுவோம். இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்  சாப்பிட்டு என் உடலும் கெட்டுவிட்டது. மற்றவர்களின் உடல் நலனையும் கெடுக்கும் இந்த வேலை வேண்டாம் என என் மனசாட்சி உறுத்தியதால்,  அதை மூடிவிட்டு 8,000 ரூபாய் சம்பளத்துக்கு நிம்மதியாக வேறு வேலைக்குச் செல்கிறேன்!-

தினேஷ் (ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருந்தவர்)
மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA)

Dr.சிவராமன் அவர்கள்
       பேச்சின் சுருக்கம்.

✖பிஸ்கட், பிரட், புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல, அதில் விஷம் தான் உள்ளது.!

இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்
அழிவை காண்பீர்கள்.!
விழித்து கொள்ளுங்கள்.!

✖ சாக்லெட் வேண்டாம்.! (CHOCHALATES)

✔ வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.!

✖pizza, burgers தவிர்க்கவும்.!
 (AVOID JUNK FOOD)

✔ கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.! (WHEAT)
கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும்  வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது!

✔ பழங்களில்  கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை
Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.!

✖ corn flakes,oats வேண்டாம்.!

✔ கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி  பயன்படுத்தவும்.!

✖சீனியே வேண்டாம்.! (SUGAR)

✔ தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும்.

✔  black tea without sugar good

✔ சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது.

✖யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் வாங்கி செல்லாதீர்கள்.

✔ கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கி செல்லுங்கள்.!
இது  Dr.சிவராமன் அவர்களின் வேண்டுகோள்.!!

✔ நாம் தான் முதலில் திருந்தவேண்டும்.!
பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம்
விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்.!

Hyper activity because of this types of food also

✔ பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து
சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம்
பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்.!
வாழவேண்டும் ஆரோக்கியத்துடன்...!!

✔ நல்ல விசயங்களை படித்து விட்டு ஷேர் பண்ணுவோம்.....!

✔ ஓர் ஆண் தெரிந்து கொள்ளும் விசயம் அவனை மட்டுமே மாற்றும்....!

✔ஒர் பெண் தெரிந்து கொண்ட விசயம் குடும்பத்தையே மாற்றும்....!

✔எனவே, தயவுசெய்து இதை உங்கள் குடும்ப பெண் களுக்கு புரிய வையுங்கள்...!

மாற்றம் நிச்சயம்....!!
 இயற்கை மருத்துவம் :-

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""

16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""

25) முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும் 🍃"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும் 🌱“கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

பகிர்ந்து கொள்ளுங்கள் கண்டிப்பாக மற்றவர்களும்  அறிந்துகொள்ளட்டும்..!! ☁360°
தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!



அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
* சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
* சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
* சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
* சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
* எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை. அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
* தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
* சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.
🖥சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!

தீராத விக்கலை நிறுத்த...
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxigen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது...
நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்...
அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!

வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?


எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு
சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும்
வாய் துர்நாற்றம் நீங்கும்.

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?


வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,
முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

வேனல் கட்டி தொல்லையா?


வெள்ளைப் பூண்டை நசுக்கி
சிறிது சுண்ணாம்பு கலந்து
கட்டி மீது தடவி வர அது உடையும்.

தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!


*முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் !!!


* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.
* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.
* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.
* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.
* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.


=====================================================

நீங்கள் ஒரு நாளைக்கு 7 தடவை பால் டீ அருந்துபவரா...?  அப்படியானால் நீங்கள் ஒரு நாளைக்கு 7 ஸ்பூன் யூரியாவை உண்கிறீர்கள் என்று அர்த்தம். என்ன யூரியாவா என்று பதற்றப்படுகிறீர்களா....? ஆம். யூரியாதான். உங்கள் பதற்றம் பத்தாது. இன்னும் கொஞ்சம் அதிகமாக பதற்றப்படுங்கள். “நீங்கள் அருந்தும் பாலில் வனஸ்பதி, யூரியா, சவுக்காரத்தூள், சர்க்கரை, உப்பு, ஃபார்மலின் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டு, அவரவர் பின்பற்றும் தொழில் நுட்பத்துக்கு ஏற்ப செயற்கை பால் உருவாக்கப்படுகிறது.  இவை மட்டும் அல்ல... பிணங்களைப் பதப்படுத்த உதவும் ஃபார்மலினும் நீங்கள் அருந்தும் பாலில் இருக்கிறது.” என்கிறார் நக்கீரன்.

இதற்கு சான்றாக அவர் காட்டுவது இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (FSSAI) ஆய்வு முடிவை.  “FSSAI பால் மாதிரிகளை எடுத்து செய்த ஆய்வில், பாலில் 14 சதவிகித சவுக்காரத்தூள் இருப்பதாக கண்டுபிடித்தது. ஆனால், அவர்கள் பால் கலன்களைச் சரியாகத் தூய்மை செய்யாததால் கலந்திருக்கலாம் என அறிவித்தார்கள். உண்மை அதுமட்டுமல்ல, பாலின் அடர்த்தியையும் பிசுபிசுப்புத் தன்மையையும் அதிகரித்துக் காட்டவே இது சேர்க்கப்படுகிறது. சவுக்காரத்தூளில் உள்ள ‘காஸ்டிக் சோடா’ இதற்கு உதவும்” என்று சான்று பகிர்கிறார் நக்கீரன்.

 “
நன்றி..
👆🏿சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால்,

உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது .

ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது.

 இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி,

மூளை பாதிப்பு, உடல்அசைவுகள், பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம்.

அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம்...

சி. எஃப். எல். பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்...?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும்.

அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம்.

நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும்...

* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது.

வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும்.

அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரி துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்...

* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு
சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம்...

* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து, 'சீல்' செய்யவும்.

சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் 'ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால்,

அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள்...

முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும்...!
"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்".

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???

1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது

2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்

3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்

4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது

5. ஆயில் புல்லிங்

6. காம்பிளான் குடித்தால் வளரலாம்

7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா

8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா

9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி

10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்

வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன் ????

நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின
அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது

 அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்
அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமையம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச்சென்றது
பின்விளைவு
பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளிநாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று

சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்
பின்விளைவு
 பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து

உண்மையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா மைதா தான்.

சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல்...

டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது

இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று உணராமல்
இன்னும் கொஞ்ச  சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள், நாளை நம்மையும் இழந்து விடுவோம்.

மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல
மருத்துவமனைகள்
அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..

 படித்தேன்.. பிடித்தது...... பகிர்ந்தேன்.....
உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்.


* நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்.

* சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

* அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
சில வித்தியாசமான கணக்குகள்....

கூட்டல்:
மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி
மனிதன்+கவலை = கண்ணீர்
மனிதன்+ஆனந்தம் = புன்னகை
மனிதன்+இயலாமை = கோபம்
மனிதன்+அன்பு = காதல்
மனிதன்+ஆசை=காமம்

கழித்தல்:

மனிதன் - தன்னம்பிக்கை= தோல்வி
மனிதன் - கவலை = உற்சாகம்
மனிதன் - ஆனந்தம் = சோம்பல்
மனிதன் - இயலாமை = முயற்சி
மனிதன் - அன்பு = குரோதம்
மனிதன் - ஆசை = அமைதி

பெருக்கல்:

மனிதன் × தன்னம்பிக்கை = சாதனை
மனிதன் × கவலை = தற்கொலை
மனிதன் × ஆனந்தம் = ஆயுள் விருத்தி
மனிதன் × இயலாமை = அவதி
மனிதன் × அன்பு = மனிதாபிமானம்
மனிதன் × ஆசை = வக்கிரம்
😀😀😀😀😀😀😀😀

அதிகாலை வேலை காவல் நிலைய தொலைபேசி மணி அழைக்க, காவலர் கந்தன் தொலைபேசியை எடுத்துக் பேசினார்.


காவலர் : ஹலோ V 7 காவல் நிலையம், சொல்லுங்க.


எதிர் முனை : சார் இங்க ஒருத்தரச் சுட்டுட்டார் சார்.


காவலர் : சுட்டது யாருன்னு தெரியுமா?


எதிர் முனை : தெரியும் சார்.


காவலர் : யார் சுட்டது?


எதிர் முனை : சுடலை சார்.


காவலர் : யோவ் சுட்டங்களா இல்லையா?


எதிர் முனை : சுட்டாங்க சார்.


காவலர் : யார் சுட்டது?


எதிர் முனை : சுடலை சார்.


காவலர் : உங்கள் பேர் என்ன?


எதிர் முனை : சாரதி சார்.


காவலர் : கோபத்துடன் எந்த எடத்துல இருக்கீங்க


கொலை நடந்த இடத்தைக் கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்றனர் காவல் துறையினர்.


அந்த இடத்தில இருவர் மூவர் நின்று கொண்டிருந்தனர். ஒருவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.


காவலர் : இங்க கொலையா பார்த்த சாரதி யாரு?


அங்கே இருந்த இருவர் கையை தூக்கி நான் தான் என்று கூறினார்.


ஒருவரைப் பார்த்து


காவலர் : சொல்லுங்க என்ன பார்த்தீங்க?


பார்த்த சாரதி : நான் ஒன்னும் பார்க்கல சார் நான் இப்பத்தான் வந்தேன்.


காவலர் : யோவ் பிறகு எதுக்கு யா கையைத்தூக்குன.


பார்த்த சாரதி : என் பேர் பார்த்த சாரதி அதான் கையத் தூக்கினேன்.


இன்னொருவரைப் பார்த்து


காவலர் : அப்பா நீ யாருயா?


சாரதி (போனில் பேசியவர்):  நான் தான் பார்த்த சாரதி.


கடுங்கோபத்தில்


காவலர் : யோவ் உன் பேரு பார்த்த சாரதி யா?


சாரதி : இல்ல சார்.


காவலர் : நீ தான் யா சொன்ன பார்த்த சாரதினு.


சாரதி : ஆமா சார்.


காவலர் : அப்ப ஏன் இல்லனு சொன்ன?


சாரதி : என் பெரு பார்த்த சாரதி இல்லேனு சொன்னேன் சார் .


காவலர் : அப்ப உன் பேரு என்ன?


சாரதி : சாரதி சார்.


காவலர் : சுட்டதை பார்த்தது நீங்கள் தானா?


சாரதி : ஆமாம் சார்.


பார்த்த சாரதியப் பார்த்து


காவலர்  : அப்ப நீங்க


பார்த்த சாரதி : கொலையைப் பார்க்காத பார்த்தசாரதி சார்.


சாரதியைப் பார்த்து


காவலர் : போன் செய்தது நீ தானா?


சாரதி : ஆமாம் சார்.


காவலர் : சுட்டது யார்?


சாரதி : "மூன்றாம் நபரைக்  காட்டி" இவர் தான் சார்.


மூன்றாம் நபரைப்  பார்த்து


காவலர் : நீ யாரு?


3ம் நபர் : நான் சுடலை சார்.


சாரதியைப் பார்த்து


காவலர் : யோவ் அவரு சுடலைனு சொல்லுறாரு.


சாரதி :  ஆமாம் சார் அவர் சுடலை.


காவலர் : அப்ப சுட்டது யாரு?


சுடலையைக் காண்பித்து

சாரதி : இவர் தான் சார்.


காவலர் இப்பொழுது கீழ்ப்பாக்கத்தில் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்கிறார்.

ரசிக்கத் தக்கது.   ரசித்தேன்.

😀😀😀😀😀😀😀😀
*☀ONE TREATMENT FOR ALL DISEASES🌛*

*🔺250gm. Fenugreek*  (வெந்தயம்)  
*🔺100gm. Ohmam –Ajwain* (ஓமம்)        
*🔺50gm.  Black Jeeri –Kali Jeeri*  (கருஞ்சீரகம்)

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

*Preparation:*

*🍃Clean the  above 3 items*
*🍂Roast it separately.*
*☘(Make  sure not to over roast)*
*🌿Mix all of them together and make a powder*
*☀Stock in an airtight glass jar*.
🌱🌱🌱🍁🍁🍁🌱🌱🌱
*👉🏼Dosage:👈🏼*

*👉🏼Consume one spoon with one full glass of warm water in the night.*

*👉🏼It is important to consume with warm water.*

*👉🏼Do not have any food after consuming this*

*👉🏼The powder can be consumed by all genders and ages*

*👉🏼By consuming this powder daily, the toxin stagnant in every corner of our body will be pushed out via Stool, Urine and Sweat*.

*👉🏼The best result will be noticed after 80-90 days of consuming this powder*

*👉🏼By then, the unwanted fat will also be burned down.*
      *👉🏼Fresh, Cleaner Blood will be in Circulation*
      *👉🏼Wrinkles will Vanish.*
      *👉🏼The body will become Strong, Brisk and Glowing.*


*📌Benefits📌*

*👉🏼1.Arthritis (Ghatiya) and similar chronic issues will be Cleared.*

*👉🏼2.Bones will become Stronger.*

*👉🏼3.Improves Eye Sight.*

*👉🏼4.Improves Hair Growth.*

*👉🏼5.Clears Constipation Problem permanently.*

*👉🏼6.Improves Blood Circulation.*

*👉🏼7.Can get rid of Cough.*

*👉🏼8.Improves Performance of Heart.*

*👉🏼9.Makes you feel Brisk*

*👉🏼10.ncreases Memory Power..*

*👉🏼11.Ladies features will be maintained even after marriage.*

*👉🏼12.Improves Hearing.*

*👉🏼13.Clears Side effects of allopathic medicines taken earlier.*

*👉🏼14.Purifies the Blood.*

*👉🏼15.Clears all the Blood Vessels.*

*👉🏼16.Teeth and Gums will become Stronger and help in maintain the Enamel.*

*👉🏼17.Imptroves Sexual Weakness.*

*👉🏼18.Controls Diabetes. You should take this powder along with the Diabetic Care Powder.*

*👉🏼19.The effect of the medicine will be noticed after 2-3 months.*

*👍🏼You can lead a Healthy, Happy, Brisk, Tensionless, Disease-Less, Long life.*

*❤We humbly request you to please circulate this message to whom you Care*
*👌🏻Your Share willBenefit
உங்கள் நிலத்தைத் தவறாக இன்னொருவர் பெயருக்கு வருவாய்த்துறை மாற்றம் செய்திருந்து, அதனை நீங்கள் பழையடி உங்கள் பெயருக்கே வைக்க அதனிடம் விண்ணப்பித்திருந்து, அது உங்களுக்கு சேவை அளிக்காவிடில், நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சேவையும், இழப்பீடும் கோரலாம்.

ஆதாரம்: பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு. வழக்கு எண்: 39/2015 தீர்ப்பு நாள்: 19/10/2016


அரசு துறைகளில் தாங்கள் செய்த தவற்றை மறைக்க கோப்புகள் காணவில்லை என பதில் அளிப்பதை வழக்கமாக கொள்வார்கள் அப்படி சொன்னால் கீழ்கண்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த சொல்லுங்கள்.( கோப்பு காணாமல் போனால் F.I.R முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றம் - SB CWP - 7835/2007 நாள் : 26-09-2007 )
மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும்.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: ஆனால் முடியை கம்மியா வெச்சிக்கிறதுதான் இப்ப ஃபேஷன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: வெட்டிக்கிட்டால், என்னோட ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணினாலும் பண்ணுவாங்க.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: வெட்டிக்கிட்டால் என்னோட சின்ன முகத்திற்கு நல்லாருக்கும்னு எங்கம்மா சொன்னாங்க.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: சலூன் கடையில் கேவலமாக வெட்டி விட்டுட்டால் என்ன செய்றது?

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: பரவாயில்லை, வெட்டிக்கிறதுதான் சரின்னு நினைக்கிறேன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: முடி வெட்டுனதுக்கு அப்புறம் நல்லா இல்லைன்னா நீங்கதான் பொறுப்பு.

கணவன்: சரி வெட்டிக்காதே.

மனைவி: முடி கம்மியா இருந்தால் பராமரிக்கிறது ஈஸியா இருக்கும்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: அசிங்கமாக போயிடுமோன்னு பயமாகவும் இருக்கு.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: என்ன வந்தாலும் சரி, நான் முடி வெட்டிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: உங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு எனக்கு தெரியலை.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: சரி இதை விடுங்க. என் தொண்டை வலிக்கு எப்ப டாக்டரை பார்க்க போறது?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: என்னது? நான் டாக்டரை பற்றி பேசிட்டு இருக்கேன்.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: ஹலோ, உங்களுக்கு என்னாச்சு? நீங்கள் என்ன பேசுறீங்க?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: அடக்கடவுளே, உங்களுக்கு என்னங்க ஆச்சு?

கணவன்: சரி, வெட்டிக்காதே.
.
.
.
.

இந்த பாவப்பட்ட கணவன் இப்ப கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரில உக்காந்துட்டு நாள்முழுவதும் "வெட்டிக்கோ", "வெட்டிக்காதே" அப்டின்னு சொல்லிட்டு இருக்கானாம்.

😂😂😂😂😂😂😂😂

நல்லபடியாக பார்த்துக்குங்க ... உங்கள் கூந்தலை மட்டுமல்ல, உங்கள் கணவரையும் 😂😂😂
Suffering From Sexual DISORDERS?
Kindly visit this page!



www.braziliancatuaba.blogspot.in/

ஜோக்

மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும்.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: ஆனால் முடியை கம்மியா வெச்சிக்கிறதுதான் இப்ப ஃபேஷன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: வெட்டிக்கிட்டால், என்னோட ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணினாலும் பண்ணுவாங்க.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: வெட்டிக்கிட்டால் என்னோட சின்ன முகத்திற்கு நல்லாருக்கும்னு எங்கம்மா சொன்னாங்க.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: சலூன் கடையில் கேவலமாக வெட்டி விட்டுட்டால் என்ன செய்றது?

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: பரவாயில்லை, வெட்டிக்கிறதுதான் சரின்னு நினைக்கிறேன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: முடி வெட்டுனதுக்கு அப்புறம் நல்லா இல்லைன்னா நீங்கதான் பொறுப்பு.

கணவன்: சரி வெட்டிக்காதே.

மனைவி: முடி கம்மியா இருந்தால் பராமரிக்கிறது ஈஸியா இருக்கும்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: அசிங்கமாக போயிடுமோன்னு பயமாகவும் இருக்கு.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: என்ன வந்தாலும் சரி, நான் முடி வெட்டிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: உங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு எனக்கு தெரியலை.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: சரி இதை விடுங்க. என் தொண்டை வலிக்கு எப்ப டாக்டரை பார்க்க போறது?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: என்னது? நான் டாக்டரை பற்றி பேசிட்டு இருக்கேன்.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: ஹலோ, உங்களுக்கு என்னாச்சு? நீங்கள் என்ன பேசுறீங்க?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: அடக்கடவுளே, உங்களுக்கு என்னங்க ஆச்சு?

கணவன்: சரி, வெட்டிக்காதே.
.
.
.
.

இந்த பாவப்பட்ட கணவன் இப்ப கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரில உக்காந்துட்டு நாள்முழுவதும் "வெட்டிக்கோ", "வெட்டிக்காதே" அப்டின்னு சொல்லிட்டு இருக்கானாம்.

😂😂😂😂😂😂😂😂

நல்லபடியாக பார்த்துக்குங்க ... உங்கள் கூந்தலை மட்டுமல்ல, உங்கள் கணவரையும் 😂😂😂
சர்க்கரை நோய்க்கு மாத்திரை, ஊசி வேண்டாம்; இதை முயற்சித்து பாருங்களேன்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள்:
வரக்கொத்தமல்லி - அரை கிலோ; வெந்தயம் - கால் கிலோ; தனித்தனியா - கால் கிலோ
மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்ளராக சுண்டக் காய்ச்சவும்.
பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...