Sunday, June 21, 2020

உடல் பருமன் நமது உடலில் நோய்கள் தோன்ற கூடிய காரணங்களில் ஒன்று உடல் பருமன்

நமது உடலில் நோய்கள் தோன்ற கூடிய காரணங்களில் ஒன்று உடல் பருமன். இது அளவுக்கு அதிகமான உணவை உண்பதாலும் உடலுக்கு தேவையான உழைப்பு இல்லாததாலும் உடல் பருமன் ஏற்படுகிறது. “அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழியை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

அதிகாலை எழும் பழக்கத்தை முதலில் கடைபிடிக்க வேண்டும். பின் பல் துலக்கி, குறைந்தது ½ லிட்டர் நீர் பருக வேண்டும். பின் வாழைதண்டு சாறு அருந்தி வர வேண்டும். அத்துடன் குறைந்தது ½ மணி நேரம் எளிய உடற்பயிற்சி குறிப்பாக நடைபயிற்சி (Walking), யோகாசனம் (Yoga) அல்லது மிதிவண்டி (Cycling) போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

காலை உணவு (Break Fast):
கோதுமை தோசை, கோதுமை உப்புமா, ராகி தோசை, ராகி உப்புமா மற்றும் வரகரிசி கொள்ளு இட்லி அத்துடன் சாம்பார் அல்லது சட்னி சேர்த்து மிக குறைந்த அளவுடன் எடுத்துக்கொள்வது நலம். இவைகள் உங்களுக்கு அதிக கொழுப்புச்சத்து இல்லாத உடலுக்கு தேவையான நார்ச்சத்து நிறைந்தது. நம் உடலில் நார்ச்சத்து அதிகமாகும் போதுதான் உடல் குறைய ஆரம்பிக்கும்.

மதிய உணவு (Lunch):
கண்டிப்பாக ஒரு சப்பாத்தி உடன் சிறிது வரகரிசி சாதம். இவற்றுடன் பாசிபருப்பு சாம்பார், ரசம் அல்லது மோர். இருவகை காய்கறிகள் குறிப்பாக கீரைவகைகள். அதிலும் தொப்பைக் கரைய பசலைக் கீரை உண்டு வரலாம். பப்பாளி கூட்டு, வாழைப்பூ கூட்டு போன்றவைகளை அளவுடன் உண்டு வர நம் ஜீரண சக்தி சரிவர இயங்க ஆரம்பிக்கும். நம் உடம்பில் ஜீரணம் சரியாக இருந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. நம் உடம்புக்கு தேவையான சக்தி போக எஞ்சிய கழிவுகள் சரிவர வெளியேற்றப் படுவது முக்கியம்.

இரவு உணவு (Dinner):
நம் முன்னோர்கள் ‘போகிக்கு இருவேளை” என்று கூறியுள்ளனர். ஆனாலும் நாம் மூன்று நேரம் உண்டு பழகிவிட்டதால் அதை உடனடியாக மாற்றினால் நம் உடல் நிலை ஏற்காது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுவது உடல் எடையை குறைக்க ஏதுவாக இருக்கும். இரவில் அளவான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உணவுக்கு பின் சிறிது 15 நிமிடம் அல்லது 30 நிமிடம் நடப்பது நலம். இது உங்களுக்கு நிறைவான தூக்கத்தை கொடுக்கும்.

இவற்றுடன் நீங்கள் நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் பால் மற்றும் பால் பொருட்கள் தவிர்த்து, பழங்கள் மற்றும் முளைகட்டிய பயறுவகைகள் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் தேங்காய்ப் பாலுடன் பழுத்த வாழைப் பழத்தைக் குழைத்து கலக்கி புதிய வாழைப் பூவை சாறெடுத்து ஒரு மேஜைக் கரண்டி சேர்த்து, நாளைக்கு மூன்று வேளை மூன்று மாதம் உண்டு வர உடலில் உள்ள தேவையற்ற ஊளைசதை குறையும்.

கூடிய வரையில் ஹோட்டல் உணவுகளை தவிர்த்து மேல் கூறியவற்றை இடைவிடாது கடைபிடிக்கவும். உடல் பருமன் குறைவதோடு உடல் ஆரோக்கியம் கெடாமல் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதற்குகிணங்க வாழலாம்.

🚶🏼HAROON SB 👍🏼

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...