கருவளையம் மறைய...
💫தமிழ்💫
* தக்காளிச்சாறு, எலுமிச்சைச்சாறு இரண்டையும் சம அளவு கலந்து கண்களின் கீழே தடவி, பத்து நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவி வர, படிப்படியாகச் சரியாகிவிடும்.
* உருளைக்கிழங்கைக் கழுவி, தோலுடன் துருவிச் சாறெடுத்து, அந்தச் சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து சில நிமிடங்கள் கழித்து எடுத்துவர, கருவளையம் மறையும்.
* பாதாம் எண்ணெயை தினமும் கண்களின் கீழே தடவிவர, கருவளையம் நீங்கும்.
* காய்ச்சாத பாலை கண்களைச் சுற்றித் தடவுவதும் நல்ல தீர்வாகும்.