பல் முளைக்கும் வயதுடைய குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகளை செதுக்கி அவர்கள் கைகளில் கொடுக்கும் போது விளையாட்டாக அதை வாயில் வச்சு கடிப்பாங்க..
கடிக்கும் போது ஈட்டி மரத்தால் செய்த மரப்பாச்சியின் சுவை அந்த குழந்தையின் நாவின் வழியாக உமிழ் நீருடன் வயிற்றுக்குள் போகும்..
இப்படி உடம்பில் உள்புகும் போது குழந்தைகளுக்கு உள்ள
செரிமான கோளாறு, தொழுநோய் பிரச்சனை,
வயிற்றுப்போக்கு உபாதைகள் ஏற்படாது..
சொல்லப்போனா இதுவும் ஓர்வகை தடுப்பூசிதான்..
அதனாலேயே அந்த காலத்துல குழந்தைகள் கைகளில் மர பொம்மைகளை கொடுத்திருக்காங்க பெரியவங்க ....
குழந்தைகள் விளையாடி மகிழ..இயற்கையான ஒரு உள்நாட்டு தயாரிப்பு..
ஆனா இப்போ மரபொம்மைகளுக்கு பதிலா சீனா பிளாஸ்டிக் பொம்மையை வீம்புக்கு விலை கொடுத்து வாங்கி பெருமைகொள்கிறோம்..!
நம்ம நாயா அலைஞ்சு சேர்த்து வைக்கிற காசு,சொத்து,வீடு,சொகுசு வாகனம், பொன், பொருள் இவை எல்லாத்தையும் விட உயர்ந்தது ஒண்ணு இருக்கு தெரியும்ங்களா?
அதுதான் நோயில்லா பெருவாழ்வு..
இதை விட பெரும் செல்வம் வேறு என்ன கொடுக்க முடியும் நம் பிள்ளைகளுக்கு..
ஹிந்து திருமணங்களில் ஒரு நிகழ்வாக மணமக்கள்... மரப்பாச்சி பொம்மைகளை தொட்டிலிட்டு ஆட்டுவது...
தேங்காய் உருட்டுவது..
அப்பளம் நொறுக்குவது...
பானைக்குள் மோதிரம் போட்டு எடுப்பது ...
போன்ற சடங்குகளில்....
முக்கிய பங்காக மரப்பாச்சி பொம்மைகள் விளங்கியது..
மணப்பெண்ணின் தாய் வீட்டு சீதனமாக இந்த மரப்பாச்சி பொம்மை வழங்கப்படும்...
தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும்பொழுது இந்த பொம்மையின் அவசியம் புரியும்...
குழந்தைகளுக்கு தலைவலி , ஜலதோஷம் போன்ற சமயங்களில் இந்த மரப்பாச்சி பொம்மையை இழைத்து தாய் பாலில் கரைத்து காமாட்சி விளக்கில் காய்ச்சி
வெதுவெதுப்பான
இதமான சூட்டில் நெற்றியில் பற்றுப்போட ஜலதோஷம் நீங்கும்...
குழந்தையும் அயர்ந்து தூங்கும்..
சிறுவயதில் டெய்லர் கடையில் வெட்டி தூக்கி எறியப்படும் ....துணி துண்டுகளை எடுத்து வந்து இந்த பொம்மைக்கு விதவிதமாக அலங்காரம் செய்து மகிழ்ந்திருக்கிறோம்...
மரப்பாச்சி பொம்மை அந்தந்த ஊர் இயற்கை அங்காடிகளிலும்,
ஊர் சந்தைகளிலும் கிடைக்கும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுங்க..❣️❣️❣️❣️❣️❣️❣️❣️