Friday, November 23, 2018

ஒற்றைத் தலைவலி ஏற்படக் காரணங்கள்🌐⛔*

*❇♍ஒற்றைத் தலைவலி ஏற்படக் காரணங்கள்🌐⛔*

*மது (ஆல்கஹால்) அருந்துவதால் ஒற்றை தலைவலி வரும்*

மது அருந்துவதால் ஒற்றைத் தலைவலி உண்டாகும். மதுவை தவிர்ப்பது ஒன்றே இதற்கு சிறந்த வழி. இரவில் மது அருந்திய பின் காலையில் தற்காலிகமாக வரும் Hangover தலைவலி அல்ல இது. மது அருந்துவதால் நரம்புகள் மெல்ல மெல்ல பலவீனமடைந்து ஒற்றை தலைவலி பிரச்சனை நிரந்தரமாக ஆரம்பமாகும்.

*சரியான நேரத்தில் உண்ணாமை ஒற்றை தலைவலி உண்டாக்கும்*

மனிதன் அன்றாடம் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும். சில நேரங்களில் வேலைப்பளு காரணமாக உணவு உட்கொள்ளும் நேரத்தில் உட்கொள்ளாமல் இருப்பதனால் ஒற்றைத் தலைவலி ஏற்படும். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்.

*மனஅழுத்தத்தினால் ஒற்றை தலைவலி வரும்*

ஒற்றைத் தலைவலி ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்று
மனஅழுத்தம்

குடும்பத்தில் உண்டாகும் சண்டை சச்சரவுகள் மூலம் ஒற்றை தலைவலி வர நிறைய வாய்ப்புள்ளது. யோகா மற்றும் தியானம் போன்றவற்றில் ஈடுபட்டு மனவலிமை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஒற்றை தலைவலியில் இருந்து விடுபடலாம்.

*சரியான தூக்கமின்மையால் ஒற்றை தலைவலி உண்டாகும்*

சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் உறங்க வேண்டும். ஒரு சில காரணங்களுக்காக தூக்கத்தைத் தவிர்த்தால் பின் ஒற்றைத் தலைவலியை தவிர்க்க முடியாது.


*ஒவ்வாமை மற்றும் நோய் தொற்று ஒற்றை தலைவலிக்கு காரணங்கள்*

அடிக்கடி உண்டாகும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய் தொற்றினால் கூட ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். சளி மற்றும் காய்ச்சலை விரட்டுவதன் மூலம் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.

*மருந்து மாத்திரைகள் கூட ஒற்றை தலைவலிக்கு காரணமாகலாம்*

அதிக அளவு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதினாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். சில மருந்து மாத்திரைகளை தொடர்ந்து தினமும் எடுத்து வரும் பழக்கம் இருந்து திடிரென ஒருநாள் எடுக்காமல் போனால் ஒற்றை தலைவலி உடனே வரும். பொதுவாகவே மருந்து மாத்திரைகளை தொடர்ச்சியாகவோ வலிகளுக்காக ஒரே ஒரு முறை மட்டும் தானே என்று அதிக அளவு எடுத்துக் கொள்வதோ தவறான அணுகுமுறை ஆகும்.

மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் என்னால் நிம்மதியாக தூங்கவே முடியாது என்ற வாதத்தை எடுத்துக் கொள்ளவே முடியாது. தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் நாளடைவில் அந்த மருந்து மாத்திரைகள் நம் உடலில் எந்த ஒரு நல்ல மாற்றத்தையும் உண்டாக்காது. நாளாக நாளாக அந்த மருந்து மாத்திரைகளின் சக்தியை அதிகப்படுத்தி உண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட நேரிடும்.

தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள் உடனே மொத்தமாக நிறுத்தாமல் இயற்கையான பழங்களையும் உணவு முறைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி கொண்டு மருந்து மாத்திரைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டே வர வேண்டும். ஒற்றை தலைவலிக்கு மட்டுமல்ல மற்ற எல்லா நோய்களுக்கும் மருந்தாக பழங்களையும் இயற்கை உணவு முறைகளையும் அதிகப்படுத்துவது ஒன்றே நிரந்தர தீர்வாகும். சிறிய வயதிலேயே மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால் வயதான காலத்தில் மருந்து மாத்திரைகளுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டி வரும். தினம் ஒரு பழம் என்ற பழக்கம் குழந்தை பருவத்திலேயே பழகி விட்டால் அதைவிட அற்புதமான பழக்கம் வேறேதும் இல்லை.

*நரம்பு தொடர்பான காரணங்களாலும் ஒற்றை தலைவலி வரும்*

நரம்பு தொடர்பான பிரச்சினைகளால் சில நேரம் ஒற்றைத் தலைவலி ஏற்படும். சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பரம்பரை பரம்பரையாக வரலாம். நரம்பு பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.

*ஒற்றை தலைவலிக்காக எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?*

தாங்க முடியாத தலைவலி ஏற்படும் போது.

கண் பார்வை மங்கினால்.
இருமும் போது தலைவலி அதிகம் ஏற்பட்டால்.

சுயநினைவை இழக்க நேரிட்டால்.

தலைவலியுடன் சேர்ந்து காய்ச்சல் ஏற்பட்டால்.

கழுத்தை அசைக்க முடியாவிட்டால்.

மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...