🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
நல்ல தரமான கடுக்காயை முறைப்படி சுத்தி செய்து சாப்பிட்டு வர தீராத வியாதியெல்லாம் தீரும் என்று தேரையர் அகத்தியர் போன்ற சித்தர்கள் கூறியதை பார்க்கலாம்
1 இரவில் படுக்கும் பொழுது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும் இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன்செய்து மலம் மிதமாக இளகிப் போகும்
2. கடுக்காய் பொடியை மூக்கில் உறிஞ்சினால் மூக்கில் ரத்தம் வடிவது நிற்கும்
3. கடுக்காய் பொடியை கொண்டு பல் துலக்கினால் ஈடுபடுவதோடு நீரில் இருந்து வரும் ரத்தம் நிற்கும் பல்லும் உறுதியாகும்
.4. கடுக்காய் பொடியை தேனில் கலந்து ஒரு ஆண்டு முழுவதும் காலைதோறும் சாப்பிட்டு வந்தால் வயோதிகத்தால் வந்த சுருக்கங்களும் முதுமை தன்மையும் நரையும் நீங்கும்.
5. கடுக்காயை துவையல் செய்து சாப்பிட்டால் நாக்கு சுவைகளை அறியாமல் இருப்பது தீரும்.
6. கடுக்காய் பொடியை இரண்டு கிராம் தண்ணீருடன் மாலையில் அருந்தி வந்தால் மஞ்சள் காமாலை நோய் நீங்கும் மேலும் ரத்தக் குறைவு கை கால் எரிச்சல் தோலின் வெண் புள்ளிகள் ஆகியவை குணமாகும் கல்லீரல் பலப்படும்.
7. 25 கிராம் கடுக்காய் பொடியின் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்கவைத்து 50 மில்லியாக வற்ற வைத்து பருகினால் கண் நோய் சர்க்கரை நோய் கட்டுப்படும் இந்த நீரில் சில துளிகளைக் கண்ணில் விட்டால் கண் நோய் குணமாகும்.
8. கடுக்காய் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து உப்புடன் கலந்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
9. பச்சைக் கடுக்காயைப் பாலில் அரைத்துச் சாப்பிட இருமல் இரைப்பு ரத்தமும் சீழும் வயிற்றுக்கடுப்பு வரட்டு இருமல் ஆகியன குணமாகும்.
10. கடுக்காயை சுத்த தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டிய நீரை வெயிலில் குழம்பாகவும் வரை வைத்து 5 முதல் 10 மில்லி கிராம் அளவு ஒரு நாள்விட்டு ஒரு நாள் உண்டால் இரைப்பை பலப்படுவதோடு நாட்பட்ட மலச்சிக்கலும் தீரும்.
11. கடுக்காய் பொடியை இரவு உணவு உண்டதும் ஒரு அரை தேக்கரண்டி பொடியைத் தின்று ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும் வாதம் குணமாகும்.
11. கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து அதே அளவு சுக்குத்தூள் திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை மாலை அரை ஸ்பூன் வீதம் 21 நாட்கள் சாப்பிட்டு வர வாதவலி பித்த நோய்கள் குணமாகும்.
12. 15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும் அதன்பின் மலச்சிக்கல் வயிற்றுப் பிணிகள் அறவே தீரும்.
13. கடுக்காய் பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து அதே அளவு நெல்லி முள்ளி பொடி கலந்து சாப்பிட மண்ணீரல் வலுப்பெறும்.
14. 200 கிராம் சீனா கற்கண்டை தூளாக்கி நீர் விட்டுப் பாகு போலக் கிளறி அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு காலை மாலை அரை தேக்கரண்டி தின்று வெந்நீர் குடிக்க குடல்புண் சுவாச காசம் மூலம் வாதநோய்கள் குணமாகும்.
15. கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல்பலம் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகள் தீரும்
.16. தலை நடுக்கம் கை கால் நடுக்கம் ஈரல் நோய் வயிற்றுவலி குஷ்டம் இரைப்பு தொண்டை நோய் நாவறட்சி தாகம் குடல் புண் காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கடுக்காய்க்கு உண்டு.
17. கடுக்காய் கொட்டைப்பாக்கு படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும் இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.
18. 100 கிராம் கடுக்காய் பொடி 50 கிராம் சிலாசத்து பஸ்பம் இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும் இதில் இரண்டு கிராம் அளவு காலை இரவு சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் தேறும் நரம்புகள் முறுக்கேறும் இது எமது அனுபவமுறை.
19. தினம் இரவு உறங்கும்முன் ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடி சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர 300% ஆக்சிஜன் மூளைக்கு செல்லும் என்று நவீன ஆராய்ச்சி கூறுகிறது இது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிராணாயாமம் செய்த பலனுக்கு ஒப்பாகும்....