Friday, November 23, 2018

நன்மை_தரும்_தூதுவளை 💊💊💊 .

💊💊💊 #நன்மை_தரும்_தூதுவளை 💊💊💊
.
💊தூதுவளை  கொடி வகையை சேர்ந்தது. இலைகளில் முட்கள் பல படர்ந்திருக்கும். பூ ஊதா நிறம் போல் காணப்படும். காய்கள் உருண்டையான பச்சைநிறத்தில் காணப்படும். நம் வீட்டு  தோட்டத்திலும் மாடியிலும் வளர்க்கலாம். இந்த செடியானது ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை வளரும்.💊
.
💊தூதுவளை இலைகளையும் காயையும்  சூரிய வெளிச்சம் படாமல்  காயவைத்து  பொடியாக்கி காற்று புகாத பாட்டிலில் வைத்துக்கொள்ளவேண்டும். அதில்  ஒரு தேக்கரண்டி பொடியை தினம் காலை  வேளையில் ஒரு டம்ளர் பசும்பால் அல்லது இளஞ்சூடான தண்ணீரில்  கலந்து குடித்து வருவதால்   மூட்டுவலி குணமாகும்.💊
.
💊தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, குழம்பாகவோ சாப்பிட்டு வருவதால் நெஞ்சில்  சேரக்கூடிய நெஞ்சுசளி விரைவில் நீங்கும், நம் உடல் பலம் பெறும்.💊
.
💊மலச்சிக்கலுக்கு மிக சிறந்த மருத்துவ நிவாரணி. இந்த தூதுவளை காய். இந்த காயை காயவைத்து உப்பு மற்றும் தயிர் சேர்த்து பதப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும். தேவைக்கேற்ப எண்ணெய சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் அகலும்.💊
.
💊மனநல பாதிப்பு உடையவர்கள் இந்த தூதுவளை கீரையை கடைந்து சாப்பிடுவதால் மனநல பாதிப்பு அகலும். மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.💊
.
💊தூதுவளை சமூலத்தை 50 கிராம் அளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 150 மி.லி. அளவுக்கு சுண்ட  காய்ச்சி வடிகட்டி, தொடர்ந்து 2 வேளை குடித்து வந்தால் இரைப்பு, சுவாச சளி, இருமல் குணமாகும்.💊
.
💊தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து பொடியாக்கி புகைமூட்டம் போட்டு நுகர்ந்து வந்தால் மூச்சிரைப்பு  இருமல், மூச்சு திணறல் விலகுவதுடன், மார்பில் சேர்ந்த சளி இளகி வெளியேறும்.💊
.
💊தூதுவளை பூக்களை 10 எண்ணிக்கை  எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து, 48 நாட்கள் தொடர்ந்து 2 வேளையும் பருகி  வந்தால் தாது விருத்தி ஏற்படுவதுடன் உடல் பலம் பெறுவதுடன், நமது முகமும் வசீகரமாகும்.💊
.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...