Tuesday, March 27, 2018

இரத்தச் சோகை குணமாக. செம்பருத்தி

உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!

இன்றைய மருத்துவ சிந்தனை

செம்பருத்தி

இரத்தச் சோகை குணமாக
-----------------------------------------------------
செம்பருத்தி பூவை காயவைத்து அரைத்து (100 கிராம்) , மருதம் பட்டைத் தூள்
(100 கிராம்) இரண்டையும் ஒன்றாகக் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.

சிறுநீர் எரிச்சல் குணமாக
-----------------------------------------------------
செம்பருத்திப் பூ (10 இதழ்களை) நீரில் போட்டு நன்றாக கொதிக்கவைத்து காய்ச்சி வைத்துக்கொண்டு அந்த நீரை கொஞாசம் கொஞாசமாக குடித்து வந்தால் சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்

தலைச் சுற்றல் , மயக்கம் குணமாக
-----------------------------------------------------
செம்பருத்திப் பூவுடன் (2) , சீரகம் (சிறிதளவு) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் பித்தத்தினால் வரக்கூடிய மயக்கம் , தலைச்சுற்றல் , ரத்த அழுத்தம்  போன்றவை குணமாகும்.

இரத்தம் சுத்தம் அடைய
-----------------------------------------------------
செம்பருத்திப் பூவுடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் ரத்தச் சுத்தி உண்டாகும். தோல் நோய்களும் குணமாகும்.

பேன் , பொடுகுத் தொல்லை தீர
-----------------------------------------------------
செம்பருத்திப் பூக்களை எடுத்து இரவு படுக்கும் போது தலையில் வைத்துப் படுத்துக் கொண்டால் பேன், பொடுகுத் தொல்லை தீரும்.

மாதவிடாய் வயிற்று வலி குணமாக
-----------------------------------------------------
செம்பருத்தி மொட்டை எடுத்து மாதவிடாய் நாட்களில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

மாதவிலக்கு ஒழுங்காக
-----------------------------------------------------
செம்பருத்திப் பூக்களை (3) ,எலுமிச்சம் பழத் தோலுடன் அரைத்து  காலை வேளை வெறும் வயிற்றில்  சாப்பிட்டுவந்தால் மாதவிலக்கு ஒழுங்காகும்.

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

Cell  :  96557 58609

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...