Tuesday, March 27, 2018

மாதவிலக்கு சுழற்சி முறையாக -----

உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!

இன்றைய மருத்துவ சிந்தனை

அசோகு

மாதவிலக்கு சுழற்சி முறையாக
----------------------------------------------------- அசோகப் பட்டை (கால் கிலோ) மாவிலங்கப் பட்டை (100 கிராம்) ,
சுக்கு (25 கிராம்) , கருஞ்சீரகம் (25 கிராம்) ஆகியவற்றை அரைத்துத் தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.  இதில் மூன்று கிராம் அளவு காலை,  மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.

அதிக இரத்தப்போக்கு உடனே நிற்க
----------------------------------------------------- அசோகப் பட்டையை பொடியாக்கி வைத்துக்கொண்டு அவற்றில் (5 கிராம்) பொடியை  எடுத்து கட்டித் தயிரில் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால்  இரத்தப்போக்கு உடனே நிற்கும்.

வயிற்றுப் போக்கு  குணமாக
-----------------------------------------------------
அசோகு பூ , மாம்பருப்பு  இவை இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை அளவு எடுத்து  பாலில் சாப்பிட்டால்  வயிற்றுப்போக்கு நிற்கும்.

மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலி முற்றிலும் குணமாக
-----------------------------------------------------
அசோகப் பட்டைத் தூள் (200 கிராம்) , பெருங்காயத்தூள் (25 கிராம்) இரண்டையும் எடுத்து கலந்து வைத்துக் கொள்ளவும். இவற்றில் இரண்டு கிராம் அளவு பொடியை  எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரவும். இதனால் ஓரிரு மாதங்களில் மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகிவிடும்.

கருச்சிதைவு , பெண் மலடு பிரச்சனை தீர
-----------------------------------------------------
அசோகுப் பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம்பழ ஓடு(தோல்) இவை மூன்றையும்  சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 3 சிட்டிகை அளவு எடுத்து  காலை, மாலை என இருவேளையும்  சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால்  கருச்சிதைவு  வயிற்றுவலி, கர்ப்பச் சூலை, வாயுத்தொல்லை நீங்கும் . இந்த பொடியை  (4 மாதங்கள்) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண் மலட்டுத்தன்மை  தீரும்.

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...