கல்லீரலை காப்பாற்ற மருத்துவம்:-
கல்லீரல் என்பது பித்தாஷயம் அதாவது பித்தத்தின் இடம். பித்தம் என்பது உஷ்ணத்தின் அம்சமாகும். சக்தி எல்லாவற்றிலும் மாற்றத்திற்குக் காரணமாக உள்ளதே கல்லீரல் .அப்படியே நம் உடலிலும் சூரியனுக்குச் சமமாக எல்லா மாற்றங்களும் நிகழ்வது கல்லீரலீன் செயல்பாடுகளால்தான்.
கல்லீரலில் பல்வேறு வைரஸ் மற்றும் கல்லீரல் நச்சுக்களால் Hepatitis என்னும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. கல்லீரல் சுருங்குதல் பெரும்பாலும் மது அருந்துவதால் ஏற்படுகிறது. இதில் கல்லீரல் ஒரு கடின திசுக்களாக மாறிவிடுகிறது.
இதில் இரண்டு நிலைகள் உண்டு .
ஒன்று கல்லீரல் சிறுத்து சுருங்கி விடும். இதை LALNIC ATROPLINC CIRRHOSIS என்பர்.
இரண்டாவது நிலையில் கல்லீரலின் இணைப்பு இழையகங்கள் (CONNECTIVE TISSUES) மிக அதிகமடைந்து கல்லீரல் பெருத்து மிருதுவாகிவிடும். இதை FATTY CIRRHOSIS LIVER என்பர்.
கல்லீரல் பழுதுபட்டிருப்பதற்கான அறிகுறிகள்:
· பசியின்மை
· குமட்டல்
. வாந்தி
· தொடர்ந்து உடல் எடை குறைந்து கொண்டே வருதல்
· வயிறு உப்புசம்
· கல்லீரல்,மண்ணீரல்,தொடும் போது விரைப்பாகவும்,வலியுடனும் காணப்படும் ..
· நாடி வேகமாக துடிக்கும்.
· கல்லீரல் நாளங்களில் அதிக இரத்த அழுத்தம் .
· கண்கள் மஞ்சல் நிறமடைதல்.
· வயிற்றில் நிறைந்த விறைத்த கல்லீரல் பகுதியில் உள்ள எட்டுகால் பூச்சி உணர்வு போன்ற அமைப்புள்ள அசுத்த இரத்த குழாய் வீங்கி பெருத்துவிடுதல் RASCULAR SPIDERS சிகிச்சை முறை :
மஞ்சள்காமாலை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது கீழாநெல்லியே .கல்லீரல் கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் ஆயுர்வேத ,சித்த மூலிகைகளுக்கு மட்டுமே உண்டு.
வாசா குரூச்யாதி கஷாயம், புனர்நவாதி கஷாயம், ஆரோக்ய வர்தினிவடி முதலிய மருந்துகள் கல்லீரலின் செயல்பாடுகளை சரிசெய்பவை ஆகும்.