*கண்பார்வையை தெளிவடைய செய்யும் இயற்கை மருத்துவம்.*
*பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ கண்பார்வை பார்வை குறைபாடிலே இரண்டு வகை காணப்படுகிறது. அவை கிட்டப்பார்வை, தூரப்பார்வை. பார்வை குறைபாடு ஏன் ஏற்படுகிறது என்று முதலில் பார்ப்போம். வைட்டமின் A குறைபாடு இருந்தால் பார்வை குறைபாடு ஏற்படும். வைட்டமின் A என்பது நமது உடலில் அதிகமான நீர்ச்சத்தை தக்கவைக்க கூடிய ஒரு பொருள். வைட்டமின் A குறையும் பொழுது நம்முடைய உடலில் நீர்ச்சத்தும் குறையும். ஆகவே கண்களில் ஈரப்பதம் இருக்க வேண்டும். நமது உடம்பிலே ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும் போது கண்களிலும் ஈரப்பதம் குறைந்து பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதை நாம் எளிதில் எப்படி தெரிந்து கொள்வோம் என்று பார்த்தால், நாம் கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றை பார்க்கும் பொழுது கண்களில் வறட்சி ஏற்பட ஆரம்பிக்கும். இதனால் எளிதில் பார்வை குறைபாடு வர ஆரம்பிக்கும். ஆமணக்கு எண்ணெய் ஆமணக்கு எண்ணெயை 2 சொட்டு எடுத்து கொள்ளவேண்டும். இது அதிக பிசுபிசுப்பு தன்மை கொண்டது. மட்டுமல்லாது அதிகமான குளிர்ச்சியையும் கொடுக்க கூடியது. இந்த எண்ணெயானது ஈரப்பத்தினையும் தக்க வைக்கும். இதில் வைட்டமின் A அதிகமாக உள்ளது. ஆகவே 2 சொட்டே போதுமானது. இந்த எண்ணெயை விரலில் எடுத்து கண்ணெய் சுற்றி நன்றாக தேய்த்து விடுங்கள். தேய்த்து விட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். கண்ணிற்கு உள்ளே பட்டாலும் பிரச்சினை ஒன்றும் இல்லை. சிறிதளவு நீர் மட்டும் வடியும். நீர் வடிவத்தால் பிரச்சினை ஒன்றும் கிடையாது. நீர் வடிவதும் நல்லது. காரணம் கண்ணிற்கு உள்ளே இருக்கும் கெட்ட அழுக்குகள் வெளியேறும். அதற்கடுத்து உங்களது உச்சந் தலையில் தேய்த்து விடுங்கள். கைகளின் மடக்கிலும் தேய்த்து விட வேண்டும். இதனை 2 நாளைக்கு ஒரு தடவை செய்தாலே போதும். இப்படி செய்யும் பொழுது 1 மாதத்திலேயே கண்பார்வை தெளிவடைவதை உங்களால் உணர முடியும். கேரட் ஜூஸ் கேரட் ஜூஸ் ஒரு நாளைக்கு 5 எடுத்து கொள்ள வேண்டும். இதனை கழுவி தோல் சீவாமல் எடுத்து கொள்ள வேண்டும். கேரட்டின் தோலில் அதிகமாக பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் A காணப்படுகிறது. இதன் தோலானது சருமத்தில் அதிகமான நீரை தங்க வைக்க பயனுள்ளதாக இருக்கிறது. நீர்சத்து தங்கும் போது எளிதில் கண் பார்வை தெளிவடைய ஆரம்பிக்கும். கேரட்டை சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அரைத்த கேரட்டை வடி கட்டி எடுக்கும்போது காய்ச்சி ஆறிய பாலை இளம் சூடுடன் இதில் கலந்து வடிகட்ட வேண்டும். மிதமான சூட்டில் இருக்கும் பாலை சேர்த்தால் அதன் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். இந்த ஜுஸுடன் நாட்டு சர்க்கரை, பாகுவெல்லம் அல்லது தேன் ஏதாவது ஓன்றை சேர்த்து கொள்ளலாம். வெள்ளை சர்க்கரை சேர்க்க கூடாது. இதை தினமும் காலையில் காபி, டீக்கு பதிலாக குடிக்கலாம். குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பலாம். வெள்ளை பொன்னாங்கண்ணிக்கீரை இந்த கீரையை பொரியல் செய்து ஒரு வாரத்தில் 3 முறை சாப்பிட வேண்டும். விளக்கெண்ணெய் தேய்க்கும் நாளில் இதை சாப்பிடக் கூடாது. இந்த மூன்றையும் நாம் செய்யும் போது எப்படிப்பட்ட கண்பார்வை குறைபாடையும் இது தீர்த்து விடும். 40 வயதுக்கு மேல் ஏற்படக்கூடிய வெள்ளெழுத்து குறைபாடையும் இது சரி செய்யும். எனவே இதனை மறக்காமல் செய்து பாருங்க இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~