*மூட்டுவலி, முதுகுவலி, கைகால் வலியை உடனே குணமாக்கும் இந்த அற்புத பழத்தை பற்றி தெரியுமா ?*
*பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ நார்த்தங்காய் மூட்டுவலி,இடுப்புவலி, கைகால் வலி இதற்காகத்தான் நாம் முதன்முதலாக வலிமாத்திரை உபயோகிக்க ஆரம்பிப்போம். இந்த வலி மாத்திரை நாம் தொடர்ந்து உபயோகித்து வரும் பொழுது நம்முடைய கிட்னி, லிவர் போன்ற எல்லா உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. நம்முடைய நாட்டில் உள்ள 90 சதவிகிதம் மக்களுக்கு மூட்டுவலி, இடுப்புவலி,கைகால் வலி போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இப்படி ஏற்படும் வலிகளுக்கு என்ன தீர்வு வலிமாத்திரைகள் மட்டும்தானா. நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகள் இந்த வலிகளை போக்காதா ? அந்த காலத்தில் பெயின் கில்லர் எனப்படும் வலிமாத்திரைகள் இல்லையே அப்பொழுது அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் என்ன செய்திருப்பார்கள். எப்படி இதற்க்கு தீர்வு கண்டிருப்பார்கள். ஒரே மர்மமாக இருக்கிறதல்லவா ஆம் அந்த காலத்தில் 4000 வருடங்களுக்கு முன்னரே நம்முடைய முன்னோர்கள் ஒரே ஒரு அற்புதமான பழத்தை வைத்து இந்த வலிகளையெல்லாம் தீர்த்திருக்கிறார்கள். வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம் நம்முடைய இந்திய மண்ணில் விளைந்த ஒரு சிட்ரஸ் பழத்தை வைத்து இதை செய்திருக்கிறார்கள். இதுதான் சிட்ரஸ் வகையில் முதல் பழம். இதன் பின்னர்தான் நெல்லிக்காய், ஆரஞ்சு,சாத்துக்குடி என எல்லா பழங்களும் வந்திருக்கிறது. அப்படி மிகவும் அருமையான வலிநிவாரணி பழம்தான் கொழிஞ்சிப்பழம் என சொல்லக்கூடிய நார்த்தங்காய்.நாரத்தம்பழம் என சொல்வார்கள். ஆங்கிலத்தில் சிட்ரான் ப்ரூட் . இந்த பழத்தை மருத்துவத்தில் அனல்ஜெசிக் (analgesic) என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அனல்ஜெசிக் (analgesic) என்றால் வலிநிவாரணி என அர்த்தம். நம்முடைய உடலில் ஏற்படுகிற மூட்டு வலி , இடுப்பு வலி, கைகால் வலி, தலை வலி போன்ற எல்லா வலியையும் தீர்க்கக்கூடிய சக்தி கொண்டது இந்த பழம். இதனுடைய தோலுக்கு மிகப்பெரிய மருத்துவ சக்தி உள்ளது. உங்கள் உடலில் எங்கு வலி உள்ளதோ அந்த பகுதியில் இந்த பழத்தின் தோலை எடுத்து வலி உள்ள பகுதியில் ஆரஞ்சு தோலை மடக்கி பிழிந்து விடுவது போல் பிழிந்து விடுங்கள். அந்த ஜூஸை அந்த தோலை கொண்டே மசாஜ் பண்ணுங்கள். ஒரு 2-3 நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்ய வேண்டும். இது உங்கள் உடலில் உள்ள எல்லா வலியையும் போக்கும். முக்கியமாக மூட்டுவலியை உடனடியாக குணமாக்கும். அதுமட்டுமில்லாமால் கேன்சர் வலியையும் போக்க கூடிய தன்மையும் இதற்கு உள்ளதாம். அதுபோல் இந்த பழத்தை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தஅழுத்தம் முழுவதுமாக குறையும்.இது முற்றிலுமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பழம் கொலஸ்ட்ராலை குறைக்கவல்லது. ஹார்ட் அட்டாக் வராது, இதய அடைப்பு வராது. இருந்தால் சரியாகும். இதய ரத்த குழாயில் அடைந்துள்ள கொழுப்பு கரையும். இந்த பழத்தை உப்பு சேர்த்தோ, ஊறுகாயாகவோ எடுக்கக்கூடாது. ஜூஸ் போட்டு குடித்தாலும் உப்பு போடக்கூடாது. சிறுநீரகத்தை பாதிக்கும். இந்த பழத்தை சாப்பிடும் பொழுது புளிப்பு சுவையாக இருக்கும். சாப்பிட்டு முடித்த பிறகு இனிப்பு சுவை தெரியும். வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கு இது முக்கியமான மருந்து. வாய் புண், குடல் புண், செரிமான கோளாறு அற்புதமான பழம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த பழத்தை கொடுக்கலாம். சைனஸ், சளி, மூக்கில் சதை வளர்த்தல், தொண்டையில் சதை, தலைவலி குணமாக இந்த தோலை தண்ணீரில் போட்டு மீதி வைத்து கொதிக்கவைத்து ஆவி பிடித்தால் போதும். இந்த எல்லா நோய்களும் குணமாகும். *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~