Tuesday, May 21, 2019

அதலைக்காய்....புற்று நோய், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கு மருந்தாகும் அதலைக்காய்.*

*புற்று நோய், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கு மருந்தாகும் அதலைக்காய்.*

*பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ அதலைக்காய் மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. இது ஒரு அற்புத மருந்து. இந்த காய் உங்களை சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கும். இந்தியாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய அதலைக்காய் பாகற்காய் வகையை சேர்ந்த ஒரு கொடி தாவரம். மழைக்காலம் வந்தால் இது தானாகவே சாலையோரமும், விளைநிலங்கள் அருகிலும் விளையத்தொடங்கும். இதன் சதைப்பகுதி இன்சுலின் போல செய்லபடக்கூடியது. இன்சுலின் என்பது நமது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள மிகவும் அவசியம். மேலும் சர்க்கரையை குறைக்கும் பல சத்துக்களை கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு அதலைக்காய் ஒரு இயற்கை மருந்தாகும். எய்ட்ஸ் எய்ட்ஸ் நோய் என்பது நம் இரத்தத்தில் உள்ள அணுக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து நம் உடலின் பாகங்களை செயல்பட விடாமல் செய்கிறது. அதலைக்காய் நம் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து ஹெச்ஐவி கிருமிகளின் தாக்கத்தை குறைக்கிறது. அதலைக்காய் கருக்கலைப்பிற்கும் பயன்படுத்த படுகிறது. எடை குறைப்பு அதலைக்காயில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இது பசியுணர்வை கட்டுப்படுத்தும், எனவே நீங்கள் இதனை சிறிதளவு சாப்பிட்டாலே பசி அடங்கியது போல் திருப்தியாய் உணருவீர்கள் எனவே நீங்கள் அதிகம் சாப்பிடுவதை இது தடுக்கும். அதலைக்காயில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளது. ஒரு கப் அதலைக்காயில் 16 கலோரிகள் மட்டுமே இருக்கும். ஆதலால் எடை குறைக்க விரும்புவோர் தங்கள் டயட்டில் முக்கியமாக சேர்க்க வேண்டியது இந்த அதலைக்காய். மஞ்சள் காமாலை அதலைக்காயில் உள்ள ஆல்பமின் மஞ்சள்காமாலையை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. உங்கள் உணவில் தினமும் இதை சேர்த்துவர மஞ்சள் காமாலை தானாக குணமடைவதை நீங்கள் உணரலாம். மேலும் அதலைக்காயை பறித்தவுடன் சமைத்துவிட வேண்டும். இல்லையெனில் காய்கள் வெடித்துவிடும். எனவே இதனை வெளியூர்களில் பார்ப்பது மிகவும் கடினம். *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...