Tuesday, March 27, 2018

தைராய்டு_சுரப்பியை ஆரோக்கியமாக_வைத்துக் #கொள்ள_சாப்பிட_வேண்டிய #உணவுகள்!

தைராய்டு_சுரப்பியை #ஆரோக்கியமாக_வைத்துக் #கொள்ள_சாப்பிட_வேண்டிய #உணவுகள்!

தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள் எவையென்று காண்போம்.

அதைப் படித்து அவற்றை உட்கொண்டு நன்மைப் பெறுங்கள்.

#தேங்காய்_எண்ணெய்

தேங்காய் எண்ணெய் தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவும்.

அதிலும் தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே தைராய்டு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உணவில் தேங்காய் எண்ணெயை அன்றாடம் சேர்த்து வாருங்கள்.

#அயோடின்___உணவுகள்

அயோடின் உணவுகள் தைராய்டு சுரப்பியில் தைராக்ஸின் உற்பத்திக்கு உதவும். தைராக்ஸின் உடலில் மெட்டபாலிசத்தை நிலையாக வைத்துக் கொள்ளும். ஆகவே தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்பட அயோடின் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். இந்த அயோடின் சத்து அன்னாசிப் பழம், அயோடைஸ்டு உப்பு, முட்டை, மீன் எண்ணெய் போன்றவற்றில் ஏராளமான அளவில் உள்ளது.

#அத்தியாவசிய_கொழுப்பு #அமிலங்கள்

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6, தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். இந்த கொழுப்பு அமிலங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை உறுதிபடுத்தப்படுகிறது. இத்தகைய ஒமேகா கொழுப்பு அமிலங்கள் பூசணிக்காய், சால்மன், டூனா, வெங்காயம், பச்சை இலைக் காய்கறிகள், சூரியகாந்தி விதை, பூண்டு, எள்ளு மற்றும் வால்நட் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

#பால்_பொருட்கள்

ஹைப்பர் தைராய்டு பிரச்சனையினால் உடலில் கால்சியத்தின் அளவு குறைய ஆரம்பிக்கும். இதன் விளைவாக எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

எனவே கால்சியம் நிறைந்த உணவுகளான நெய், பால், சீஸ், தயிர் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும்.

மேலும் கால்சியம் சத்தை காய்கறிகளின் மூலமும் பெறலாம். இந்த கால்சியம் சத்தானது அத்திப்பழம், பசலைக்கீரை, எள்ளு, முந்திரிப்பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

#வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் இதர புரோட்டீன்கள் வளமான அளவில் நிறைந்துள்ளது. எனவே ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், வாழைப்பழத்தை அன்றாடம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

#கடல்_காய்கறிகள்

கடல் காய்கறிகளில் அயோடின் பொதுவாக காணப்படும். அயோடின் தைராக்ஸின் உற்பத்திக்கு உதவும். உடலில் அயோடின் போதுமான அளவில் இல்லாவிட்டால், அது தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை பாதித்து, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைப் பாதிக்கும். எனவே கடல் காய்கறியான #கடற்பாசியை தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

#ஜிங்க்__உணவுகள்

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், டயட்டில் ஜிங்க் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இத்தகைய ஜிங்க் சத்து நிறைந்த பாதாம், வேர்க்கடலை, வால்நட்ஸ் போன்றவற்றுடன் இரும்புச்சத்து நிறைந்த பூசணி விதையையும் சாப்பிடுங்கள். இதனால் தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்படும்.

#செலினியம்_உணவுகள்

தைராய்டு குறைபாட்டிற்கு செலினியம் மிகவும் முக்கிய பொருளாகும். இது தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த சத்து தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்களை சமநிலையில் தக்க வைக்கும்.

இத்தகைய செலினியம்…

முட்டை, காளான்கள், கடல் சிப்பி, பூண்டு, பிரேசில் நட்ஸ் போன்றவற்றில் அதிகம் அடங்கியுள்ளது.

#இரும்புச்சத்து_மற்றும்
#காப்பர்_உணவுகள்

தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து மற்றும் காப்பர் மிகவும் உதவியாக இருக்கும். இந்த கனிமச்சத்துக்கள் தைராய்டின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். இதில் காப்பர் சத்தானது…

முந்திரி, சூரியகாந்தி விதை, கடல் சிப்பி, நண்டு, செரில்கள், விதைகள் மற்றும் கொக்கோ பொருட்களில் உள்ளது.

இரும்புச்சத்தானது பச்சை இலைக் காய்கறிகள், மாட்டிறைச்சி, கோழி போன்றவற்றில் உள்ளது. உடலால் இரும்புச்சத்தை எளிதில் உறிஞ்சுவதற்கு, வைட்டமின் சி அவசியமாகும். எனவே இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால், வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், தக்காளி, உருளைக்கிழங்கு, பெர்ரி போன்றவற்றையும் சாப்பிடுங்கள்.

#பெர்ரிப்_பழங்கள்

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், தினமும் தங்களது டயட்டில் ஒரு கப் பெர்ரி பழங்களை சாப்பிடுவது நல்லது. அதிலும் ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சாலட்டை ஒரு கப் சாப்பிடுவது நல்லது. இதனால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தைராய்டின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலிமைப்படுத்தும்.

#திணை

திணையில் சையனோஜெனிக் க்ளுக்கோசைடுகள் ஏராளமான அளவில் உள்ளது. இந்த உணவுப் பொருள் தைராய்டு சுரப்பியில் உள்ள அதிகப்படியான அயோடினைத் தடுக்கும். மேலும் இந்த திணை நோயெதிர்ப்பு மண்டலத்தின் முறையான செயல்பாட்டிற்கும் உதவியாக இருக்கும்.

நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!

🌹அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)!!!

🌹இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல் சுரப்பி!

🌹கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப் பட்டுள்ளது!!

🌹இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!

🌹அதுதான் மெலடோனின் (melatonin)!!

🌹இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.

🌹மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

🌹இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!

🌹அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

🌹ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!

🌹நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!

🌹பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும்!!

🌹இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்!!!!

🌹எனவே இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!

🌹அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.

🌹ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

🌹இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

🌹இரவு முன்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது! அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!

🌹நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது.

🌹அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!

🌹அதிகாலையில் எழும்போது; நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!

🌹அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

🌹எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும், அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெற்று பயனடைவோம்.

🌹அவசியம் அனைவருக்கும் பகிருங்கள்!
[

செரிமான மண்டல நோய்க்கான அறிகுறிகள் என்ன?*
வயிறு எரிச்சல், வயிறு வலி, நெஞ்சுக் கரிப்பு, நெஞ்செரிச்சல், குமட்டல், ஏப்பம், வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம், மந்தம், வாயு உண்டாகுதல், உணவு எதுக்களித்தல், வயிறு புரட்டல், கவ்விப் பிடிப்பது போன்ற வலி உணர்வு, மலச் சிக்கல் அல்லது மலம் சிறிது சிறிதாகக் கழிதல், நீராகவோ அல்லது ரத்தம் சளியுடனோ மலம் கழிதல், வயிறு கடுத்தல், கழிதல் ஆகியன பொதுவான அறிகுறிகள்.

*குடல் நோய்கள் ஏற்பட பொதுவான காரணங்கள் என்ன?*
உணவு உண்ணும் அளவுக்கேற்ப உழைப்பு இல்லாமை, பதற்றம், பரபரப்பான வாழ்க்கைச் சூழல், முறையற்ற அல்லது மாறுபட்ட உணவுப் பழக்கம், காரம், மசாலாப் பொருட்கள், எண்ணெய் அதிகம் கலந்த உணவுகள், டீ, காபி போன்ற பானங்களை அளவுக்கு அதிகமாகப் பருகுதல், காலம் தவறி நினைத்த நேரத்தில் நினைத்த உணவுகளைச் சாப்பிடுதல், புகை, மதுப் பழக்கம், கோபம், கவலை, மன அமைதியற்ற நிலை ஆகியவை பொதுவான காரணங்கள். நுண்கிருமிகள் மற்றும் வலி நிவாரண மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதாலும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.

*வாயுத் தொந்தரவு என்றால் என்ன?*
சாப்பிடும் உணவுகள் இரண்டரை முதல் மூன்று மணி நேரத்துக்குள் ஜீரணமாகிவிடும். ஜீரணிக்கப்பட்ட உணவின் சாரம் குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு நமக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. ஆனால் இரைப்பை, சிறுகுடல் உறுத்தல் அல்லது அழற்சியின் காரணமாக உணவுப் பொருள்கள் ஜீரணமாவது தாமதமாகிறது. அதிக நேரம் தங்கி இருக்கும் உணவுப் பொருள்களின் மேல் சுரப்பிக்கப்பட்ட அமிலம் மற்றும் நொதிகளின் செயல்பாட்டினால் வாயுவானது இடம் பெயர்ந்து செல்வதால் வலி மாறி மாறி வருகிறது.

*வயிற்று வலி வருவது ஏன்?*
வயிற்று வலி பெருமபாலும் குடல் புண்ணால்தான் உண்டாகிறது. ஆனால் புண் மட்டுமே காரணம் அல்ல. மேலும் புண் இருக்கும் உறுப்பைப் பொருத்தும் வயிற்று வலி மாறுபடும். இரைப்பையில் புண் இருந்தால் உணவு உட்கொண்டதும் வலி ஏற்படும். சிறுகுடல் முதல் பகுதியில் புண் இருந்தால் உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின் வலி ஏற்படும். உணவு உண்டதும் வலி நீங்கிவிடும். குடல்புண் தவிர செரிமான உறுப்புகளில் அழற்சி குடலில் கிருமிகள் இருப்பது இவற்றாலும் வலி உண்டாகக் கூடும்.

*குடல் புண் வருவது எப்படி?*
உணவை செரிப்பதற்கான அமிலம் குடலில் சுரக்கிறது. அதனுடன் வேறு சில நொதிப் பொருள்களும் சுரக்கின்றன. காலம் தவறி சாப்பிடுதல் அல்லது அடிக்கடி உணவு சாப்பிடுவதால் அமிலம் மற்றும் நொதிப்பொருள்கள் முறையற்று சுரந்து அவை இரைப்பை அல்லது குடலின் உட்பகுதியை அரித்துப் புண் உண்டாக்கிவிடுகின்றன.
[

கருஞ்சீரகம் அதிக மருத்துவ குணம் கொண்டது என்பது நாம் அறிந்த ஒன்றே. ஆனால் இதை எதற்கு எப்படி பயன்படுத்துவது என்பதே நம்மில் சிலருக்கு தெரிவதில்லை. இந்த பதிவில் கருஞ்சீரகத்தை எந்த பிரச்சினைக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். தவறாமல் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கருஞ்சீரகப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெண்ணீரில் கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்த பை கற்களும் மறைந்து விடும். இதை காலை மாலை என இருவேலைகளிலும் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்ப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அறைத்த பூண்டுடன் சாப்பிட வேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.

அதேபோல் அடிக்கடி ஜலதோஷத்தால் பாதிக்கபடுபவர்கள் கருஞ்சீரகத்தை வறுத்து பின் அதை அரைத்து தூளாக்கி எண்ணெயில் ஊற வைத்து அதனை மூக்கில் இரண்டு அல்லது மூன்று முறை விட்டுவந்தால் ஜலதோஷத்துக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மேலும் தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த மருந்து. இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாசிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகள் மறையும். குளியளுக்கு பயன்படுத்தும் பொருட்களில் கருஞ்சீரகத்தை அரைத்து பயன்படுத்துவது நல்லது.

அடுத்து முக்கியமாக சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடி வயிறு கனமாகி சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். இதற்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து தூள் செய்து கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு 10 நாட்கள் முன்பு இருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இருவேலை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு குணம் குறைந்து சிறுநீர் நன்றாக புரியும்.மேலும் கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மீது தடவி வர தேமல் கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.

இதை கர்ப்பிணி பெண்கள் எடுத்து கொள்ள வேண்டாம்.
[

வெங்காயத்தின் மருத்துவப் பயன்கள்🌡*

🌿நாலைந்து
வெங்காயத்தை தோல் உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும்.

🌿வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்
வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

🌿வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

🌿வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

🌿வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது.

🌿நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

🌿வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

🌿வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட தொண்டை வலி குறையும்.

🌿தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

🌿வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

*┉

பாகற்காயின் மருத்துவப் பயன்கள்💉*

🥝டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

🥝பாகற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். மேலும் குடற்புழுக்களை அகற்றும்.

🥝பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

🥝பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு-பி என்ற வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

🥝பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.

*❢

நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்கள்*
*கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்...!*

👉 நாம் அன்றாடம் செய்யும் சில சாதாரண பழக்கவழக்கங்கள் கூட நோய் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இப்பழக்கங்கள் நம் உடல்நலத்தில் சிறிது சிறிதாக பாதிப்பினை ஏற்படுத்தி நம்மை கொல்லும் விஷமாகிறது.

👉 நம்மில் பல பேரிடம் இருக்கும் கெட்டப்பழக்கம் நகம் கடித்தல் ஆகும். நாம் விரலில் உள்ள நகத்தினை கடிக்கும் போது அதில் உள்ள கிருமிகள் நமது உடலுக்குள் சென்று நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

👉 நமது விரலில் ஏராளமான கிருமிகள் நிறைந்து இருக்கும். மூக்கு மற்றும் வாயில் நாம் விரலை வைப்பதால் நம் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் எளிதாக சென்று நோய் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

👉 தரம் குறைவான கண்ணாடியினை பயன்படுத்தி சூரியனை பார்க்கும்போது அதிலிருந்து வரும் ஊதாக்கதிர்கள் நேரடியாக நமது கண்ணின் கருவிழியினை தாக்கி பார்வை குறைபாடுகளையும், சில சமயங்களில் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

👉 கால்மேல் கால் போட்டு அமர்வதால் இரத்தநாளங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும், இதனால் உயர் மனஅழுத்தம், நரம்பு சிதைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

👉 உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக் கொண்டு தூங்கும் போது கார்பன்-டை-ஆக்சைடு அளவுக்கு அதிகமாக அதிகரித்து மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

👉 தொடர்ந்து செல்போனில் ஹெட்ஃபோனை உபயோகிப்பதால் நோய்தொற்று ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாது, காது கேட்கும் திறனும் குறைகிறது.

👉 அதிக எடையுள்ள பைகளை நாம் எடுத்து செல்லும்போது நமக்கு தோல் வலி, முதுகு தண்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

👉 அதிக உயரமுள்ள செருப்புகளை அணியும்போது, குதிகாலில் எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

👉 காலை உணவானது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். இதனை தவிர்க்கும்போது உடல் ஆற்றலை குறைத்து, உடல் எடையினை அதிகரிக்க செய்கிறது.

*❢◥

*மயக்கம், தலைச்சுற்றல், வயிற்று போக்கு நீங்க மாதுளம் பழம் சாப்பிடுங்கள்....*

மாதுளம்பழத்தின் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது.

நாம் உண்டு வரும் பழங்கள் எல்லாம் மருத்துவ தன்மை வாய்ந்தது.

அதில் மாதுளை ஒரு அற்புத மருத்துவ தன்மை கொண்டது.

அதன் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது ஆகும்.

மாதுளையின் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்துப் பாகங்களும் மருத்துவதில் பயன்படுபவை.

மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள் :

பூ, பழத்தோல், பட்டை ஆகியவை துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பழம், இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பூ, பழத்தோல் ஆகியவை ரத்தப் போக்கைக் கட்டப்படுத்தும். துவர்ப்புச் சுவையைக் கூட்டும். பழம் குளிர்ச்சியை உண்டாக்கும். பூ, பசியைத் தூண்டும். மரப்பட்டை, வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். விதை, ஆண்மையைப் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். பல நோய்களையும் கட்டுப்படுத்தி உடலை வளமாக்க மாதுளை பயன்படுகின்றது.

மயக்கம், தலைச்சுற்றல், தொண்டை வறட்சி, புளிப்புயேப்பம், வாந்தி தீர :

மாதுளம் பழச் சாறு, 100 மி.லி. அளவு காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். பிரயாணத்தின் போது சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படலாம். அப்போதும் இதனை சாப்பிட்டு பயன் பெறலாம்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி நிற்க :

மாதுளம் பழச்சாறு குடிப்பது உடனே பயன் விளைவிக்கும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு ரத்த சோகையும் ஏற்படக்கூடும். இதற்கும் மாதுளம் பழச்சாறு உகந்தது. நோய்வாய்ப்பட்ட பின்னர் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச்சாற்றுடன் சிறிதளவு கல்கண்டு சேர்த்துச் சாப்பிட குணம் பெற முடியும்.

வயிற்றுப் போக்கு, பேதி தீர :

மாதுளம் பிஞ்சை நன்றாக அரைத்து, பசைபோலச் செய்து கொண்டு, நெல்லிக்காய் அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைகள் இவ்வாறு செய்யலாம்.

ரத்த மூலம் கட்டுப்பட :

பூச்சாறு 15 மி.லி. சிறிதளவு கற்கண்டு சேர்த்து, காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வரலாம்.

உடல் குளிர்ச்சி பெற :

ஒரு டம்ளர் அளவு பழச்சாற்றை, தேவையான அளவு கற்கண்டு சேர்த்து, காலையில் குடிக்க வேண்டும்.

வாய்ப்புண், தொண்டை ரணம், வலி தீர :

மாதுளம் பூக்களைச் சேகரித்து, உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை 1/2 தேக்கரண்டி யளவுல், 1/4 லிட்டர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, வாய் கொப்புளித்து வர வேண்டும்.

மாதுளம் பற்கள் :

பல்லுக்கு உதாரணமாக மாதுளை விதைகளைக் கூறுவார்கள். நன்கு, முற்றிய மாதுளம் பழத்தை உடைத்தால் உள்ளே முத்துப் பற்கள் போன்று அழகாக அடுக்கப்பட்டிருக்கும் விதைகள் அனைவரையும் அதிசயிக்க வைக்கும். பற்களையும், ஈறுகளையும், பாதுகாக்க மாதுளம் பழம் சாப்பிடவது மிகவும் அவசியமானதாகும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...