Monday, January 7, 2019

மூளை A to Z*

👆🏼 *நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!:*
*மூளை A to Z*

*நூலாசிரியர்: டாக்டர் சவுண்டப்பன்*

*பதிப்பகம்: விகடன் பிரசுரம்*

*மொழி: தமிழ்*

*நூல் வகை: மருத்துவம், ஆரோக்கியம்*

*வருடம்: 2016*

*பக்கங்கள்: 86*

*நூல் குறிப்பு:*

*மூளையின் சிறு ரகசியத்தைத் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.*

*ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று நிறைய புத்தகங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால், நம்முடைய உடல் உறுப்புக்களைப் பற்றி விரிவான புத்தகம் தமிழில் வருவது* *மிகமிக அபூர்வம்தான். நம்முடைய அனைத்து செயல்பாட்டுக்கும் காரணம், சர்வமும் நானே என்று இருக்கும் மூளையைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரிவது இல்லை.* *மூளையின் செயல்பாடு பற்றியோ, அதில் பாதிப்பு ஏற்பட்டால் நம்முடைய முழு இயக்கமும் பாதிக்கப்படும் என்ற விழிப்புஉணர்வோ யாரிடமும் இல்லை.*

*அளவில் சிறியதாயினும் செயலில் பெரிதானது மூளை. உலகின் மிகப்பெரிய இயந்திரம்* *மூளை என்றே கூறலாம். அதன் செயல் அதிசயமானது. பள்ளிப் பருவத்தில் படித்த பாடம், பிடித்த ஆசிரியர், கல்லூரிக் கால அனுபவங்கள், நம்* *வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இப்போதும் நம் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருக்கிறதே* *அதன் ரகசியம் என்ன? இது எப்படிப்பட்ட நினைவாற்றல்... இது ஒட்டுமொத்த மூளை நடத்தும் அதிசய செயலாகவே கூறலாம்.*

*மனித மூளையில் 10 சதவிகிதத்தைக் கூட நாம் பயன்படுத்துவது இல்லை...* *முழுமையாகப் பயன்படுத்தினால் எங்கேயோ போயிருப்போம் என்று பேச்சுவாக்கில் பலர்* *சொல்வது உண்டு. இது சிந்திக்கும் ஆற்றலுக்கோ, படைப்பாக்கத் திறனுக்கோ வேண்டுமானால் பொருத்தமாக* *இருக்கலாம். ஆனால், உண்மையில் நாம் மூளையை முழு அளவில் பயன்படுத்துகிறோம். முழு மூளையும் இயங்கினால்தான், நம் உடலின் இயக்கம் சீராக இருக்கும்.*

*மூச்சை நன்கு இழுங்கள். ஒரு சில விநாடிகள் அப்படியே மூச்சை அடக்கிவையுங்கள்.* *மூச்சை வெளியே விடுங்கள்... இப்படிச் செய்வதற்கு உடலின் எந்தப் பகுதி துணைசெய்கிறது எனத் தெரியுமா? `நுரையீரல்’ என்று சொன்னால் அது பாதிதான் உண்மை.* *`மூளைத்தண்டு’ என்று சொல்லியிருந்தீர்கள் என்றால் உங்களுக்கு 100 மதிப்பெண்கள். மூளைத்தண்டுதான், இதயத் துடிப்பு, சுவாசம் உள்ளிட்டவற்றை* *ஒழுங்குபடுத்துவது, வலிக் கட்டுப்பாட்டு மையமாகவும், நம் புலன்களின் இயக்க சிக்னல்களை பரிமாறும் ஜங்ஷனாகவும்* *செயல்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேல், நாம் சுயநினைவுடன் இருக்கக் காரணமே இந்த மூளைத்தண்டுதான். இதுபோன்று ஆச்சரியமான* *தகவல்களை அள்ளித் தருவதோடு, உள்ளங்கை அளவுள்ள மூளை ஆறடி உடலை இயக்கும் அதிசயத்தைச் சொல்வது இந்த நூலின் சிறப்பாகும்.*

*டாக்டர் விகடனில் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை' என்ற தலைப்பில் தொடராக வந்தது இப்போது நூல் வடிவமாகியிருக்கிறது.*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...