Monday, January 7, 2019

மனம்

*********************"மனம்

மனித மனத்தின் வேலைகளை புரிந்து கொள்வது ஒரு விஞ்ஞானம் அல்ல . எனினும் அது கடினமான வேலைதான் . இந்த முயற்சியில் நாம் எப்படி சிந்திக்கிறோம் , என்பதைப் பற்றி சிந்திக்கிறோம் . வேறு வார்த்தைகளில் கூறினால் நமது உட்புற கருவி தன்னைத் தானே ஆராய்ந்து புரிந்து கொள்ளும்படி கூறுகிறோம் .
எப்படி எனில் நமது வலது கையால் , வலது கையை பிடித்துக் கொள்ளும்படி கூறுவது போன்றது இது .

மூளையின் இரண்டு பாகங்களை, அவற்றின் செயல்களை ஆராய்ந்ததில்,
இடது மூளை தான் ஆட்சி செய்யும் , வழிகாட்டும் பகுதி , அதுதான் தர்க்க ரீதியாக ஆராயும் அறிவுப் பூர்வமான சிந்தனையை காட்டுகிறது என்று தெரியவந்தது .

ஆம் ,

இல்லை ,

செல் ,

நில் ,

சரி ,

தவறு போன்ற தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்கிறது .

இடது முளையோடு ஒப்பிட்டால் வலது மூளை குறைவான வளர்ச்சியையே அடைந்திருக்கிறது.
சாதாரண உடல் ரீதியான வேலைகளை தவிர அது

உள்ளுணர்வு ,

கற்பனா சக்தி ,

கற்பனை போன்றவற்றையும் செய்கிறது .
அது வார்த்தைகள் அற்ற நிலையில் இயங்குகிறது .

பிம்பங்கள் ,
யோசனைகளின் தொகுப்பினால் வேலை செய்கிறது .
வலது மூளை குறைவாகவே பயன் படுத்துவதால் தான் , அது குறைவான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.
அதன் முழு திறனையும் உணர்வுப் பூர்வமாகவும் வேண்டுமென்றேயும் பயன்படுத்த நாம் பயிற்சி பெறவில்லை .

உண்மையில்பெரும்பாலானவர்கள் சிந்திப்பதே இல்லை . தங்கள் பழைய நாடாவை ஒலிக்கச் செய்து வெறுமனே செயல்படுகிறார்கள் .

உணர்வுள்ள ( இடது மூளை ) , உணர்வு கடந்த ( வலது மூளை ) மனம் என்ற வார்த்தைகள் மூளையின் இரண்டு பிரிவுகளாக கூறப் பயன்பட்டு வந்திருக்கின்றன. அவை இரண்டும் சேர்ந்து ஒரே ""மனதை ""உருவாக்கினாலும் , அவற்றைப் பிரித்துப் பார்ப்பது பயனுள்ளது .

""இடது மூளை ""அறிவுபூர்வமாக தற்காலிகப் பிரச்சனைகளில் முடிவு எடுக்க உதவுகிறது .

"" வலது மூளை ""லட்சியப் பூர்வமான தானியங்கி நினைவு வங்கியாக செயல்படுகிறது .

யோசனைகள் ,

நம்பிக்கைகள் ,

கருத்துக்கள் ,

சம்பவங்களின் உணர்வுபூர்வமான அனுபவங்கள் வங்கியில் தகவல்களாக சேமித்து வைக்கப்படுகின்றன .
இந்த அனுபவம் உண்மையான வாழ்வில் நடந்த சம்பவங்களாக இருக்கலாம் அல்லது செயற்கையான , கற்பனையான சம்பவங்களாக இருக்கலாம் .

இவை இரண்டுமே சேர்ந்து உங்கள் சொந்த மூளைப் பதிவை உருவாக்குகின்றன . அவை அப்படித்தான் செயல்படுகின்றன .

""மனித மனத்தை ""போல் திறமையான , சக்திவாய்ந்த கணிப்பொறி இதுவரை உருவாக்கப்படவில்லை .

🚶🏼HAROON SB

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...