Monday, January 7, 2019

சந்திரகலை என்றால் என்ன? ******************************

சந்திரகலை என்றால் என்ன?
******************************

( உலகியல் வெற்றிக்கு அடிப்படையில் நம் சித்தர்களின் குரல் அன்பர்கள் தெரிந்திருக்க வேண்டிய இடகலைமூச்சு பற்றி தற்போது விரிவாக பார்ப்போம் )

இடது நாசிச்(.இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்( .வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/ வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.

'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.

நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள். வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் 'ஸ்பாஞ்' போல காற்றுப் பைகளால் ஆனது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது .

இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும். இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்
நமது இடது நாசி சந்திரகலை. அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும்.வலது நாசி
சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக
இருக்கும். இரண்டு நாசிகளிலும் மூச்சுக்
காற்று வந்தால் சுழிமுனை என்பர்.பொதுவாக
மழைக் காலங்களில் இயற்கையாகவே
சூரியகலையில் ஓடும். ஆதிக வெயில்
அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும். இது
இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும்.

ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும்
சமநிலையில் இருக்க வேண்டும்.இதில்
எந்த குறைபாடு நேர்ந்தாலும் நமது உடலில் பல உபாதைகள் ஏற்படும். ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று
நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம்
சம்பவிக்கும். ஒரே நாசியில் பத்து நாட்கள்
தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில்
மரணம் சம்பவிக்கும். மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும். சுவாசத்தை அடக்குவதால் ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்கின்றன. நாம் நடக்கும் போது
16 அங்குலமும், அமர்ந்திருக்கும் போது 12 அங்குலமும், ஓடும் போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடல்உறவு கொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம்
நடைபெறுகிறது.

சுவாசம் 11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்.
10 அங்குலமாக குறைந்தால் ஞானம்
உண்டாகும்.
9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.
8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி
காண்பான்.
7 அங்குலமாக குறைந்தால் ஆறு
சாஸ்திரங்கள் அறிவான்.
6அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.
5 அங்குலமாக குறைந்தால் காய சித்து
உண்டாகும்
4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து
உண்டாகும்.
3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட
சஞ்சாரம் உண்டாகும்.
2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு
கூடுபாய்தல் சித்திக்கும்.
1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம், உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை அன்னபாணம் நீங்கும்

இந்த சூரிய சந்திரக்கலை மூச்சு
ஓட்டங்களால் நமது உடம்பில் உள்ள
குண்டலினி சக்தி உடலின் தட்பவெப்ப
நிலையில் 98.4 டிகிரியாக ஒரே சீருடன்
வைத்து உடலை இயங்கச் செய்கிறது. இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பிராணிகளின் உடல் வெப்பநிலைகள் வெவ்வேறு விதமாக அமைகிறது. ஒவ்வொரு
ஜீவன்களிலும் உறைந்து உள்ள குண்டலினி சக்தியானது அந்த அந்த உடலுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலையைச் சீர்படுத்தி சமமாக இயங்கச் செய்கிறது. அதாவது உயிர்களின் இயக்கத்தை குண்டலினி சக்தியே நடத்துகிறது.

முறைப்படியான யோகாப்பியாசம் செய்து
சுழுமுனை நாடியை இயங்கச் செய்யும்
யோகிகளுக்கு சுவாசம் இருநாசிகளிலும்
சமமாக ஓடும்.

யோகாப்பியாசத்தில் நின்று
பன்னிரெண்டு ஆண்டுகள் இந்திரியத்தை வெளியேற்றாமல் பிரம்மச்சரியம் கடைபிடிப்பவாகளுக்கு மேதாநாடி இயங்க ஆரம்பிக்கும். இப்படி மேதாநாடி இயக்கத்தில் இருக்கும் நபர் முந்தைய பிறவியில் இனிவரும்
பிறவி வினைப்படி அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களை அறியக்கூடிய முக்கால ஞானமும் ஏற்படும்.

இவர்களுக்கு ஜீவசக்தியானது ஓஜஸ்
சக்தியாக மாறி தேஜஸ் ஆக வெளியப்படும்.

இடகலை பிங்கலை, சுழுமுனை, சரஸ்வதி, லட்சுமி, மேதா ஆகிய ஆறு நாடிகளும் புருவ நடுவில் உள்ள ஆஞ்ஞா சக்கரத்தில் சந்திக்கின்றன. இந்த ஆறு நாடிகளும்தான் நமது உடலில் உள்ள 100க் கணக்கான நாடிகளையும் நரம்புகளையும் ஏதோ ஒரு
விதத்தில் சம்பந்கப்படுத்தி இயங்க
வைக்கிறது. எனவே தான் பதஞ்சலி யோக சூத்திரத்தில் புருவ மத்தியில் கவனம் செலுத்தி தியானம் செய்யும் படி கூறப்பட்டு உள்ளது.

அப்படி நாம் தியான யோகத்தைப் பழகும்
போது இயற்கையாகவே பிரம்மச்சரிய
ஒழுக்கம் வந்தமையும் இத்தகைய
பிரம்மச்சரிய நெறி உடனடியாக வரவில்லை என்றாலும் படிப்படியாக கண்டிப்பாக வந்தமையும். அப்படி படிப்படியாக வந்தமையும் காலகட்டத்திற்குள்ளேயே சில
மந்திரப் பயிற்சிகளை நாம் எடுத்துக்
கொண்டால் ஆவிகளுடன் மேலும் அமானுஷ்ய சக்தியைப் பெறலாம்.

ஓஜஸ் சக்தி:--
***************

செயலாலும் சிந்தனையாலு<ம் சிற்றின்பத்தில் செலவிடப்படும் சக்தியைத் தடுத்துச் சேர்த்து
வைத்தால் அது ஓஜஸ் சக்தியாக மாறுவதாக யோகிகள் கூறுகின்றனர்.

முதுகெலும்பின் கடைசி எலும்புக்கு அடியில் மூலாதாரத்தில், வட்டமிட்டுக் கிடக்கும் ஒரு சிறு பாம்பு உறங்குவதாக யோகி சித்திரிக்கிறான். அதைக் குண்டலினி என்கிறான். பிரம்மச்சரியத்தால் குண்டலினி
எனப்படும் இந்த ஓஜஸ் சக்தியை யோகி
தண்டுவடம் வழியாக மேலே அனுப்பி,
மூளையின் அடியில் உள்ள பினியல் என்னும் நாளமில்லா சுரப்பியில் ஆன்ம சக்தியாகச் சேர்த்து வைக்கிறான். எவ்வளவுக்கெவ்வளவு
ஓஜஸ் மூளையில் சேர்த்து
வைக்கப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வலிமையும், புத்திக் கூர்மையும் ஆன்ம
சக்தியும் பெற்றவனாக மனிதன்
விளங்குகிறான். ஒரு மனிதன் அழகிய
நடையில் சிறந்த எண்ணங்களைப் பேசலாம்;

ஆனால் அவை மக்களைக் கவராமல்
இருக்கின்றன. மற்றொருவன் அவ்வளவு
அழகாகப் பேசாமல் இருந்தாலும், அவனுடைய சொற்கள் மக்களை வசப்படுத்துகின்றன.

அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் சக்தி இருக்கிறது. இதுதான் ஒஜஸின் சக்தி.

உலகியல் வெற்றிக்கு இடகலைமூச்சு என்ற குதிரையினை நாம்பழக்கிவிட்டால் அது நாம்சொன்னாவாறெல்லாம் கேட்கும். நினைத்த-வாறெல்லாம் ஆகும். சிறிதாக கை என்றகயிறை அசைத்துக் காண்பித்தாலே மடைமாற்றம் மற்றும் அனேக மாற்றம் வரும்.(கைவிரல்களை காண்பித்துச்சொல்கிறார்)அப்படிப்பட்ட பயிற்சி இருக்குமேயானால்
நம்மால் அந்த மூச்சை மாற்றிக்கொள்ளமுடியும். ஆனால் அது இயல்பாக வந்துவிடும் என்று சொல்கிறார்கள். இந்த மூச்சுஇடது நாசியிலே வரும்போது என்னென்னசெய்வதற்கு அது பயன்படும் என்று அவர்கள்சொல்லியி
ருக்கிறார்கள். யாருக்காவது ஒருகடிதம் எழுத வேண்டும். அது நல்ல பதிலைத்தருவதாக இருக்க வேண்டும் என்றுநினைத்தால் இடது மூச்சிலே சுவாசம்வருகின்ற போது கடிதம் எழுதினால் அதுவெற்றிகரமாக அமையும் என்றுசொல்கிறார்கள். தூது அனுப்புவது.

இப்போதுஉதாரணமாக இடது நாசியிலே மூச்சுவருகின்ற போது கண்ணனை அழைத்துவாஎன்று சொன்னால் கண்ணனும் வருவான்.மாறாக வலது நாசியில் வருகின்ற போதுசொன்னால் கண்ணன் இருந்தாலும்; வரமாட்டான். இங்கே அவன் இவன் என்றுசொல்வதை தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். (கண்ணன் என்பவர் ஒரு மாணவர்)ஒரு தந்தை,மகன் உறவிலே அவ்வாறுசொல்கிறேன்.

பொதுவாக இடது நாசியில் மூச்சு வருகின்றபோது குணாதிசயங்கள். இயல்புகள் இவ்வாறுஇருக்கும். அந்த இயல்புகள் இவனைப் பணிசெய் வதற்குத் தூண்டி விடும். சாதாரணமாகஅனைவருக்கும் இந்தப் பயிற்சியினால் இந்தகுணம் வந்து விடுமா என்பது வேறு விஷயம்.அடிக்கடி இந்த விஷயத்தை செய்தோம்என்றால் அது கண்டிப்பாக அதற்கு என்று ஒருபண்பு உண்டு. அது வெற்றியினைத் தரும்.அது ஒரு உபயோகமான விஷயம்.

தூதனுப்புவது என்று மட்டுமல்லாமல்கலந்து பேசுவதும் கூட, ஆக இட கலையில்கலந்து பேசுவது, முடிவெடுப்பதுபோன்றவற்றை மேற்கொள்வது நல்லது.

புதியஆடைகள் அணிவது மற்றும் அணிவிப்பது,மங்கல நாண் பூட்டுவது அதாவது தாலிகட்டுவது, இதையும் இடகலையில் செய்தால்நலம். என்ன நீங்கள் இதற்கெல்லாம் எப்படிஎவ்வாறு அந்த மூச்சிற்காக காத்திருப்பதுஎன்று கேட்ககூடும். அந்த சரியான நேரத்தில்அது முடிந்தாக வேண்டுமே என்றஎண்ணமெல்லாம் வரும்.

அப்போதுபெருமூச்சுதான் வரும் (சிரிப்பு)இந்த விஷயங்களை எல்லாம் சாதாரணஆட்களுக்கு சொன்னார்களா? அல்லது அந்தக்கலையிலே தேர்ச்சி பெற்றவர்களுக்கு
ச்சொன்னார்களா என்பது சிந்திக்க வேண்டியவிஷயம். அது ஒருபுறம் இருக்கட்டும். மங்கலநாண் பூட்டும்போது இடகலைஇயங்கிக்கொண்டிருந்தால் துணைவி நம்முடன்எப்போதும் சந்தோஷமாக வாழ்வாள் என்றுநாம் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.(மறுபடியும் சிரிப்பு) இதையெல்லாம் நான்ஒரு நகைச்சுவைக்காக சொல்கிறேன்.

பல காரியங்களுக்குத் தயாராக நாம் நம்மைத்தயார் செய்கிறோம்.பொதுவாக இடது நாசியிலே மூச்சு வருகிறபோது வேலையாட்களை வேலைக்குச்சேர்த்துக்கொள்ளலாம். கிணறு, ஏரி, குளம்,வெட்டத் துவ ங்குவது, வீட்டுமனைவாங்குவது, கிரஹப்பிரவேசம் செய்வது,பெரியவர்களை தரிசனம் செய்யப்புறப்படுவது, மரியாதை நிமித்தமானசந்திப்பு, சில சாந்திகளை மேற்கொள்வது.நாள் பார்ப்பது, நேரம் பார்ப்பது, யோகம்பார்ப்பது, சூலம் பார்ப்பது என்று இந்துக்களில்பல முறைகள் வைத்திருக்கிறோம். நாள்நன்றாக இல்லை என்றாலும்அத்தியாவசியமான காரியங்களுக்குச் சுப ஓரைபார்க்க வேண்டும் என்பார்கள்.

அதிலும்உங்களுக்கு நேரம் இல்லை என்றால் சரத்தை(மூச்சுக் கலை)யைப் பார்க்க வேண்டும்.தேவதா பிரதிஷ்டை செய்வது. எதிரிகளுடன்உடன் படிக்கை செய்து கொள்ளலாம். கல்விதுவங்கலாம். அந்தக்காலத்தில் தானியங்களைக் களஞ்சியத்தில்சேர்க்கும்போது கூட அந்த இடது நாசியில்சரம் வருகின்ற போது செய்யுங்கள் என்றுசொன்னார்கள். புதிய சொத்துக்களைகைக்கொள்ளுவது. எல்லாவற்றிற்கும் மேலேநாம் ஊழ்வினை, கர்மா என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

அதனுடையநிர்ப்பந்தத்தின் பேரில்தான் நாம் அலைக்கழிக்கப்படுகின்றோம் என்றெல்லாம் உறுதியாகநம்புகிறோம். அது போல அந்தத்தீவினைகளில் இருந்து நாம் விடுதலைதேடிக்கொள்வது என்பதற்கான காரியங்களில்இறங்குவதற்கு இடது நாசியில் சரம்வரும்போது செய்யலாம் என்றுசொல்லியிருக்கிறார்கள். ஆக இடது மூக்கிற்குமிகவும் அதிகமான முக்கியத்துவம்க
ொடுத்திருக்கிறார்கள்.ஒரு வீட்டிற்குப் பெண் செல்லும்போது வலதுகாலை எடுத்துவை என்று சொல்கிறார்கள்.இடது காலை எடுத்துவை என்றுசொல்வதில்லை.

ஏனென்றால் இடது கால்திடமானது. திடமான இடது காலை ஊன்றிசற்று திடம் குறைந்த வலது காலைமுன்னெடுத்து வை என்பதற்காகச்சொல்கிறார்கள். பின் இடது காலை ஊன்றிநடைதுவக்கு என்று சொன்னால் அப்போதுஇடது நாசியில் சுவாசம் வந்து விடும். இடதுநாசிதான் சக்தி. சக்தி இல்லையெனில்ஒன்றுமில்லை.

இலௌகீக வாழ்க்கையில் இருந்து கொண்டுபரசிந்தனையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இதற்கு முக்கியத்துவம்இல்லை என்றாலும். ஆனால் இது போன்றசெயல்களால் இலௌகீக வாழ்க்கையில் வெற்றிகிடைத்து அதனால் பிறருக்கும் பயன்கிடைக்கும் என்றால் அதை நாம் ஏன்செய்யக்கூடாது.

கடைசியாக சொன்ன அந்தநாடியிலே மூச்சு வருகின்ற போது அந்தத்தீவினைகள் மாறுவதற்கு ஒரு வழிதேடல்.எப்படி அதற்கு வழிதேடுவது.
ஒருபாவத்திற்குப் பரிகாரம் செய்வது என்றுசொன்னால் அதை இடது நாசியிலே கலைவரும்போது செய். அதற்குப் பலன் கூடும்என்று சொல்கிறார்கள்.

ஏனென்றால்உன்னுடைய சுவாச மாறுதல்களினால்உடலினுடைய இயல்புகள் பல மாறுகிறதுஎன்பது தான் இதனுடைய அடிப்படை.அதனால் நம்முடைய இதயத்தை சற்று இடதுபுறம் வைத்திருக்கிறார் இறைவன், என்று நான்நினைக்கிறேன். அதன் காரணமாகவேஅம்மைக்கு ஈசன் இடது பாகத்தை கொடுத்தார்என்று நினைக்கிறேன். வாம பாகம் என்று அதைசொல்வார்கள். இடதுபாகம் சக்திக்குரியதுஎன்று சொன்னால் அதுதான் வலுவானதுஎன்று பொருள். ஒன்று செயல்படுத்துவதுமற்றொன்று வலுவானது. இந்த இடதுநாசியினைப் பற்றி இன்னும்சொல்லிக்கொண்டு ÷ பாகலாம்.யோக சாதனையினை ஆரம்பிக்கும்போது இடது நாசியில் முதலில் மூச்சை நன்றாகவெளியிட்டுப் பிறகு வலதின் வழியே மூச்சைஇழுக்கும்
படியாகஉங்களுக்கு ஏற்கனவேகூறியிரு
க்கிறேன் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.ஏனென்றால் வலம் என்பது பல முக்கியசம்பிரதாயச் செயல்பாடுகளில் இருக்கிறது.

அப்போது இடது வந்தால் வலதுசெயல்பாடுகளில் இருந்து கழன்று விடும்.பொதுவாகவே இடது கை பழக்கம்உள்ளவர்களுக்கு வலிமை அதிகம் என்றுசொல்வார்கள்.

இடது கை கிரிக்கெட் வீரர்கள்.இடது கையில் எழுதும் கவிஞர்கள் என்றுஇடது கை சற்று விசேஷம் பொருந்தியதுதான்.இன்னும் கூட பார்த்தீர்களேயானால்நம்முடைய யோகத்தில் நீ ங்கள்உறங்கும்போது கூட இடது பக்கமாக படுங்கள்என்று சொல்லியிருக்கிறோம்.

ஆழ்ந்துதூங்கும்போது நீ மாறிப்படுத்துவி
ட்டால்?பரவாயி ல்லை. உன்னுடைய இரைப்பைஅமைப்பிற்காகவும், இடது பக்கத்தில் இதயம்உள்ள காரணத்தினாலும்,சில நாடிகளுடையசெயல்பாடுகள் அதிகமாக வேண்டும்என்றாலும் இடது பக்கமாகப் படு என்றுசொல்லியிருக்கிறோம்.

சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல்--
********************************************************************

சாகாத்தலை ஆகாசம், வேகாக்கால் வாயு,
போகாப்புனல் அக்கினி. சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திர தத்துவம். வேகாக்கால்
என்பது மயேசுரபாகம் மயேசுரதத்துவம்.
போகாப்புனல் என்பது சதாசிவபாகம்,
சதாசிவதத்துவம். இம்மூன்றும்
சாகாக்கல்வியைத் தெரிவிக்கின்றது.

ஆத்மதத்துவாதி சிவகரணம் 36-ம் நிர்மல குரு துரியாதீதம் 7-ம் சேர்ந்து ஆனநிலை 43-ல் ஒவ்வொரு நிலையிலும் இவைகளுண்டு.

மேலும் சாகாத்தலை, வேகாக்கால்,
போகாப்புனல் என்கிற தத்துவங்கள்
பிண்டத்தில் 4 இடத்திலும், அண்டத்தில் 4
இடத்திலும் ஆக 8 இடத்திலும் உண்டு.

இவைகள் பிண்டருத்திரர்கள் அண்டருத்திரர்கள்
முதலிய ருத்திர மயேசுர சதாசிவ
பேதமென்றறிக. சாகாக்கல்வியைக் குறித்த
இந்த நாற்பத்துமூன்று நிலைகளில்
முதனிலையின் அனுபவத்தைப் பெற்றுக்
கொண்டவன் பிரமன். அவனுக்கு ஆயுசு 1
கற்பம். இப்படி 43 நிலைகளும்
ஏறியனுபவத்தைப் பெற்றவன்
காலங்கடந்தவன், காலரகிதன். சாகாத்தலை
வேகாக்கால் போகாப்புனல் என்பவற்றிற்குப்
பொருள் சிலர் உப்பு வகைகளின் பேதமென்று
சொல்லுவது பிசகு.

அவைகளினுண்மைப்
பொருளை மேற்குறித்தபடி யோகக் காட்சிகளில்
அனுபவிக்கலாம். ஆகையால் இவைகள் யோக அனுபவங்களே யென்று அறியவேண்டும்.

            -  *சித்தர்களின் குரல் *

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...