Monday, January 7, 2019

கறிவேப்பிலையில் குவிந்து கிடக்கும் மருத்துவம் !!!

கறிவேப்பிலையில் குவிந்து கிடக்கும்
மருத்துவம் !!!

கறிவேப்பிலையில் உள்ள சத்துக்களையும்,
மருத்துவ குணங்களையும் அறிந்தவர்கள்
அதை தூக்கி எறிவதில்லை.
பெரும்பாலானோர் கறிவேப்பிலையை
மணத்துக்காகப் பயன்படுத்திவிட்டு
உணவிலிருந்து அதை தூக்கி
எறிகின்றனர். சுவைத்தும், சமைத்தும்
சாப்பிட வேண்டிய ஓர் அருமருந்து
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ
என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், மசாலாப்
பொருட்கள் நல்ல வாசனை உடையது
மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை
கொண்டது என்பதை கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர்
லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த
ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது
என்கிறார். இது புற்றுநோய், இதய
நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி
எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையை அரைத்து,
சாறெடுத்து, கடலை மாவில் கரைத்து,
தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்
இளநரை எட்டிப் பார்க்காது. கூந்தல்
செழித்து வளரும்.
அதே போல 200 மி.லி. தண்ணீரைக் கொதிக்க
வைத்து, கைப்பிடி கறிவேப்பிலை
போட்டு மூடி வைக்கவும். ஆறியதும்
அந்தத் தண்ணீரைக் குடித்தால் உடலிலுள்ள
நச்சு நீர் வெளியேறி விடும். ஊளைச்சதை
குறைந்து உடல் அமைப்பு மாறும்.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி,
கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும்
கறிவேப்பிலையில் கோயினிஜாக்,
குளுகோசைட், ஒலியோரெசின்,
ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம்,
அயாமைன், புரோலைன் போன்ற அமினோ
அமிலங்கள் உள்ளது. இவைகள் தான்
கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை
தருகிறது. பல மருத்துவ குணங்களையும்
வெளிப்படுத்துகிறது.
கறிவேப்பிலை புற்றுநோயை
ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல்
உடையது என்பதை அண்மையில்
ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள்
கண்டறிந்துள்ளனர்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை
இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால்
நீரிழிவால் உடல் கனமாவது
குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை
வெளியேறுவதும் முற்றிலும் தடை
செய்யப்படும்.
இதுதவிர நீரிழிவு நோயாளிகள்
காலையில் 10 கறிவேப்பிலை
இலையையும், மாலையில் 10
இலையையும் பறித்த உடனேயே வாயில்
போட்டு மென்று சாற்றை விழுங்கி
வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை
பாதியாக குறைத்து விடலாம்
என்கிறார்கள் மருத்துவர்கள்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை
எடுத்து அதை நுரையீரல், இருதயம்,
கண்நோய்களுக்கும் தலைக்கு தேய்க்கும்
எண்ணையாகவும் பயன்படுத்தலாம் என
இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ
ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய
வைத்து தூளாக்கி கஷாயம் செய்து
காலை மாலை குடித்து வந்தால் உடலில்
சர்க்கரையின் அளவை சீராக
வைத்திருக்கும்.
அதிக மன அழுத்தம் காரணமாக சிலர்
எப்போது பார்த்தாலும் குழப்பமாகவே
இருப்பார்கள். எந்த வேலையை முதலில்
செய்வது என்று புரியாமல் தவிப்பார்கள்.
இவர்களுக்கு அருமருந்தாக
கறிவேப்பிலை திகழ்கிறது.கறிவ
ேப்பிலையை நன்கு நீரில் கழுவி
அதனுடன் சிறிது இஞ்சி, சின்ன
வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா
அல்லது கொத்தமல்லி கலந்து நன்கு
அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப்
பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில்
சோற்ரோடு கலந்து சாப்பிட்டு வந்தால் மன
இறுக்கம், மன உளைச்சல், மன அழுத்தம்
குறைந்து குழப்பமான மனநிலை மாறும்.
மேலும் ஞாபக சக்தியைத் தூண்டும்.
உடலை புத்துணர்வு பெறச் செய்யும்
கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி, சிறிதளவு
பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு
இவைகளை நன்கு அரைத்து சூடான
சோற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால்
சுவையை உணரும் தன்மை நாவிற்கு
கிடைக்கும்.
கறிவேப்பிலை குமட்டல், சீதபேதியால்
வரும் வயிற்று உழைவு, நாட்பட்ட காய்ச்சல்
நீங்கும். இக்கறிவேப்பிலையால் பித்த
மிகுதியால் வந்த பைத்திய நோய்களும்
விலகுவதாகச் ‘சித்தர் வாசுட நூலில்’
உள்ளன.
இதன் இலை, பட்டை, வேர் இவைகளை
கசாயம் செய்து கொடுத்தால் பித்தம்,
வாந்தி நீங்கும். நிழலில் உலர்த்திய
கறிவேப்பிலையை இத்துடன் மிளகு,
உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை
தூளாக்கி சோற்றுடன் நெய் கலந்து
சாப்பிட, மந்த பேதி, மலச்சிக்கல், மலக்கட்டு,
கிரகனி, கழிச்சல்நோய், பிரமேகட்டு
நோய்கள் குணமாகும்கறிவேப்பிலை
குடலுக்கு பலத்தைக் கொடுக்கும். தன்மை
கொண்டது இஞ்சி, கருவேப்பிலை,
கொத்தமல்லி இந்த மூன்றும் ஜீரண
உறுப்புக்களின் தோழன் என்று
கூறுவார்கள்
கறிவேப்பிலை ரத்தத்தி இருக்கும்
கொழுப்பைக் குறைக்கவும் அறிவைப்
பெருக்கவும் உதவுகின்றது
கறிவேப்பிலையை பச்சையாகச் சப்பிச்
சாப்பிட்டால் சளி குறையும் குரல்
இனிமையாகும் என மருத்துவர்கள்
கூறுகின்றனர்.
கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள
வெள்ளை அணுக்களைப்பலப்ப
டுத்துகிறது. பத்திய உணவு
சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத்து
வையலை சேர்த்துக்கொள்வது நல்லது.
இவ்வாறு கறிவேப்பிலையின்மருத்துவ
தன்மை பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.

🚶🏼HAROON SB

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...