சர்க்கரை நோயை குணமாக்கும் சப்ஜா...
திருநீற்றுப்பச்சை என்பது எல்லோரும் அறிந்த செடி வகை.
இது துளசி இனத்தோடு சேர்ந்தது. இதன் விதைதான் சப்ஜா.
திருநீற்றுப்பச்சை செடியில் வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை. இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மருத்துவ குணம் நிறைந்தது. உலகமெங்கும் ‘பேசில்’ என்று அழைக்கப்படும் மூலிகை பிரபலம். திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசில் என்று அழைக்கிறோம்.
சப்ஜா இலைக்கு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் சக்தி இருக்கிறது. வியர்வையாக அது வெளியேறும். அதனால் மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் அதனை பயன்படுத்தலாம். இந்த தொந்தரவுகள் இருக்கும்போது ஒரு கைபிடி அளவு இலையை, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தவேண்டும். மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும். இது பூச்சிகளை கொல்லும் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
படர்தாமரை தொந்தரவால் அவதிப்படுகிறவர்கள், இதனை அரைத்து சருமத்தில் பூசி வரலாம். எல்லாவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது.
சிலருக்கு காய்ச்சல் இருக்கும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கு ஒரு கைபிடி அளவு இலையை எடுத்து ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தொடர்ந்து பருகிவரவேண்டும். காதுவலி மற்றும் காது நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.
ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம். ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.
#தேமல்_வெண்படை...
1. திரிபலாசூரணமாத்திரை மூன்று,தினமிருவேளை சாப்பிட்டுவர வெண்படை நீங்கும்
2. அன்னபேதிச்செந்தூரம்100-200மிகி,பறங்கிப்பட்டைசூரணம்1-2கிராம்,5-10மிலி தேனில் கலந்து,தினம் 2வேளை சாப்பிட்டுவர வெண்படை நீங்கும்
3. கார்போகபற்று தயிரில் அல்லது எலுமிச்சைசாறில் கலந்து தடவ வெண்படை நீங்கும்
4. பலகறைபற்பம்100-200மிகி,பறங்கிப்பட்டைசூரணம்1கிராம்,5-10மிலி பாலில் கலந்து பருகி,அருகன்தைலம் தடவிவர தேமல் நீங்கும்
5. சீமைஅகத்திஇலையுடன்,கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்துப் பூசி,1மணி நேரம் ஊறவைத்து குளிக்க தேமல் குணமாகும்
6. திருநீற்றுப்பச்சை இலைகளையரைத்துப்பூசி,1மணி நேரம் ஊறவைத்துக் குளிக்க தேமல் நீங்கும்
7. திப்பிலிச்சூரணம் அரைதேக்கரண்டி,தேனில்,தினம்3வேளை நீடித்துச் சாப்பிட்டுவர தேமல் குணமாகும்
8. சோற்றுக்கற்றாழை சோற்றை தினமும் பூசிவர வெண்படை குணமாகும்
9. மஞ்சள்,அருகம்புல் சேர்த்தரைத்துப்பூசி,குளித்துவர சொறி,சிரங்கு, படர்தாமரை, புண்கள்,உடல் அரிப்பு குணமாகும்.
10. சந்தனக்கட்டையை எலுமிச்சைசாறிலரைத்துப்பூச படர்தாமரை, வெண்குஷ்டம், முகப்பரு குணமாகும்.
🚶🏽♂HAROON SB