Removing Gallbladder stones - பித்தப்பை கல் நீங்க...
கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும்.
இந்த அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.
ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும்.
இவ்விதம் ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் வரை குடிக்கவும்.
கீழா நெல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது.
அறுவை சிகிச்சை மூலம் பித்த பையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இன்று மக்கள் அதிகமாக சந்தித்து வரும் நோய்களில் பித்தப்பை கல் நோயும் ஓன்று. இதை ஆங்கிலத்தில் (Gallstones )என்பார்கள்.
இந்த பித்தப்பை கல் ஏன் வருகிறது ?
உணவு முறை தான் முதல் காரணம். இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு ஆகும். இது மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கும்.
இதனுடைய செயல் பாடுகள் என்னவென்றல், உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது.
இது மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்து கொள்ளும் ஒரு தனி அரை ஆகும்
நாம் உண்ணும் உணவானது செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கிறது. இந்த அமிலம் பலவகையான பொருட்களால் ஆனது.
அவையாவது கொழுப்பு,
பித்தச்செம்பசை,பித்த உப்பு. இது சுரந்து அதை குடல் வழியாக நம் உணவோடு சேர்த்துவிடும்படியான அற்புதமான
பணியை செய்கின்றது.
பித்த பை கல் உருவாவதற்கு பல வகையான காரணங்கள் உண்டு.
அவற்றை கீழே பாப்போம்.
1) இந்த நோயானது நம் குடுமபத்தில் யாருக்காவது இருந்தது என்றல். குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் வரும் வாய்பு உள்ளது.
2) உடல் பருமன் இதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. உடல் பருமனானவர்களுக்கு கொழுப்பு அதிகமாக உண்டாகிறது.அந்த கொழுப்பானது பித்தபையை காலியாக இருக்கவிடாது.
3) ஈஸ்ட்ரோஜென்
(Estrogen): இது கொழுப்பை அதிகமாக உடலில் உண்டு பண்ணும் மேலும் இது பித்தபையை அசைய விடாமல் அதன் செயல் பாடுகளை குறைக்கும்.
கர்ப்பமாக உள்ளவர்கள், கருத்தடை மாத்திரை எடுத்து கொண்டவர்கள், ஹார்மோன் அதிகமாக சுரப்பவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்புகள் அதிகம்.
4) பாலினம் மற்றும் வயதும் ஒரு முக்கிய காரணம். இந்த நோய் வயதான பெண்களை அதிகமாக தாக்கும்.
5) போதையான கொழுப்பு பொருள் பித்தத்தில் கொழுப்பை அதிக படுத்தும்.இது போன்று நிகழும் போது கொழுப்பு கற்கள் உருவாகும்.
6) நீரிழிவு: நீரழிவை தடுப்பதற்காக கையலபடுகிற முறைகளினால் இரத்தத்தில் கொழுப்பு உண்டாகும். இந்த வகை பித்தப்பை கல் மிக மோசமானது.
இந்த நோயால் பாதிப்படைந்தவர்கள் முதலில் உடல் பருமனை குறைக்க வேண்டும்.
நோன்பு நோர்பதினால் பித்தப்பை சுருங்கும்.
இந்த நோயின் அறிகுறிகள்:
1) மேற்புற வாயிற்று பகுதியில் மற்றும் முதுகு புரத்தின் மேற்புறத்தில் வலி உண்டாகும்.
2) குமட்டுதல்: இந்த நோய் உள்ளவர்களுக்கு குமட்டல் உண்டாகும்.
3) வாந்தி உண்டாகும்.
4) உணவு பாதையில் பிரச்னை உருவாகும்,வாயு தொல்லை உண்டாகும், அசீரணம் பிரச்சனைகள் உண்டாகும்.
மருத்துவம்:
இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.
🚶🏽♂HAROON SB