ஏன் மாதுளை பழத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும்..?
மாதுளம் பழம் உடலுக்கு நல்லது என எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இதை அடிக்கடி ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்களை பற்றிதான் இங்கே பார்க்க போகிறோம்.
மாதுளம் பழத்தில் அதிகமாக இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் இரத்தசோகை வராமல் தடுக்கும். முக்கியமாக முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த மாதுளம் பயன்படும்.
மற்றும் இதில் உள்ள விட்டமின் சி மற்றும் விட்டமின் கே முடி வளர்ச்சிக்கு மிகவும் பயன் அளிக்கின்றன. விட்டமின் கே முடியின் வேர் கால்களை வலிமை அடைய செய்கிறது. அதே போன்று விட்டமின் சி முடிக்கு தேவையான ஊட்டசத்துளை உறிஞ்சுவதற்கு தேவைப்படுகிறது.
அடுத்து முக்கியமாக மாதுளம் பழ சாற்றை தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினை நீங்கும். நினைவாற்றல் பெருகும். அதே போன்று பெண்களை விட ஆண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவதால் பெண்களை விட ஆண்கள் அதிக மாதுள பழச்சாற்றை குடித்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். ஆண்கள் இந்த பழச்சாற்றை குடித்து வந்தால் இதய பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தினமும் மாதுளையை உணவில் சேர்த்து வந்தால் அதில் உள்ள ஆண்டி ஆக்ஸைடுகள், ஆண்டி மலேரியல் மற்றும் ஆண்டி மைக்ரோபியல் தன்மைகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகவும் துரிதமாகவும் அதிக அளவிலும் அழித்து விடுகின்றது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மிகச்சிறந்த பலன்களை தருகிறது. எனவே ஆண்கள் மற்றும் பெண்கள் மாதுளம் பழம் மற்றும் பழச்சாற்றை தினமும் பருகி வாருங்கள் நல்ல பலன்களை பெறுங்கள்.
. 🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*