Friday, June 29, 2018

வழுக்கையை போக்க..."*

*"வழுக்கையை போக்க..."*

வழுக்கைத் தலை பிரச்சினை இன்றைய இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

வழுக்கை வந்துவிட்டால் அந்த இடத்தில் மறுபடியும் கூந்தல் வளராது என்று நினைப்பது தவறு.

தலையில் வழுக்கை ஏற்படுவதற்கு காரணமே போதிய இரத்த ஓட்டம் இல்லாததே ஆகும்.

கூந்தல் பெரும்பாலும் உதிர்வதற்கு புரதச் சத்து குறைவு, சரியான பராமரிப்பு இல்லாததும் முக்கிய காரணங்களாகும்.

கூந்தலானது படிப்படியாக உதிர்ந்து நாளடைவில் தலையானது வழுக்கை ஆகிறது.

ஆண்களுக்கு விழும் வழுக்கைக்கு காரணம் டெஸ்டஸ்டரோன் என்ற ஹார்மோன்.

இந்த ஹார்மோன்கள் தலைமுடியின் எதிர்வினை மரபுக் கூறுகளால் நிர்ணயிக்கப்படுகிறது.

உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் வழுக்கை இருந்தால் உங்களுக்கும் வழுக்கை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

விடலைப் பருவம் வந்தவுடனேயே ஆண் ஹார்மோன்கள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குகின்றன.

டெஸ்டஸ்டரோன் ஹார்மோனுக்கு வினையாற்றும் விதமாக மரபுக் கூறுகளால் நிர்ணயிக்கப்பட்ட இது தலை முடியை பாதிக்கிறது.

விடலைப் பருவத்திலேயே தொடங்கும் முடி உதிர்தல், பின்புதான் நமக்கு கண்ணுக்கு தெரிய வருகிறது.

உங்கள் முடி அடர்த்தி, முடி உதிரும் வேகம் ஆகியவைகளால் இது தீர்மானிக்கப்படுகிறது.

முதலில் நெற்றிப் பகுதியில் ஏறுதலும் பின்பு பக்கவாட்டில் முடி ஏறுதலும் நிகழ்கிறது.

இதற்கு அடுத்தகட்டமாக நடு மண்டையில் முடி மெலிதாகிறது.

நெற்றி முன்பக்க, பக்கவாட்டு முடி ஏறி நடு மண்டையின் வழுக்கையுடன் தொடர்பு ஏற்படும் போது முழு வழுக்கை விழுகிறது. இறுதியில் பக்கவாட்டு பகுதியிலும், பின் மண்டையிலும் சொற்ப முடிகளே எஞ்சுகிறது.

25-35 வயதிலேயே சிலருக்கு வழுக்கைப் பிரச்சனை தோன்றி விடுகிறது. முடி இழத்தல் என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.

குறிப்பாக கவலை, நீண்ட நாளைய நோய், மற்றும் ஊட்டச் சத்தில்லாத உணவு முறை ஆகியவை பொதுவான காரணங்களாகும்.

இந்தக் காரணங்கள் ஏற்பட்டு 10 வாரங்களில் முடி இழப்பு ஏற்படுகிறது. தற்போதைய ஹை-டெக் கார்ப்பரேட் வேலையில் உள்ளவர்கள் இரவு நீண்ட நேரம் கண் விழித்து வேலை செய்கிறார்கள்.

இதுவே வழுக்கைக்கு ஒரு காணரம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் மேற்சொன்னவைகளால் விழும் வழுக்கை, முன் நெற்றி, பக்கவாட்டு முடி ஏறி விழும் வழுக்கை போல் அல்ல.

மேற்சொன்ன முடி இழப்புகளை ஊட்டச்சத்து உணவுகளால் பழைய நிலைக்கு கொண்டு வந்துவிட முடியும்.இதற்கு வழுக்கை ஏற்பட்ட இடத்தில் இயற்கை முறையிலான மருந்துகளை தடவினாலே கூந்தலானது வளரும் என்கின்றனர் நிபுணர்கள் அவர்களின் ஆலோசனையை படியுங்களேன்.

வழுக்கையை போக்க...

எலுமிச்சை-மிளகு விதைகள் :

இது வழுக்கை ஏற்பட்ட இடத்தில் முடி வளர்வதற்கு ஏற்ற ஒரு சிறந்த இயற்கை மருத்துவம். அதற்கு முதலில் எலுமிச்சை விதைகளையும், மிளகு விதைகளையும் நன்கு அரைத்து, நீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதனை வழுக்கை ஏற்பட்ட இடத்தில் தடவ வேண்டும். அப்போது சற்று எரிச்சலாகத் தான் இருக்கும். ஆனால் அது வழுக்கை உள்ள இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அங்கு கூந்தலை வளரச் செய்யும். இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்ய வேண்டும். இதனால் கூந்தலானது வழுக்கை ஏற்பட்ட இடத்தில் வளரும்.

அதிமதுரம் :

அதிமதுரத்தை நன்கு அரைத்து, அதோடு பால் மற்றும் குங்குமப்பூவைக் கலந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் தடவ வேண்டும். அதனை இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். பிறகு காலையில் எழுந்து அதனை குளிர்ந்த தண்ணீரில் அலசி விடலாம்.

வெங்காயம் :

வெங்காயமும் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதனை வழுக்கை ஏற்பட்ட இடத்தில் காலை மற்றும் மாலையில் சிவப்பு நிறத்தில் ஆகும் வரை தேய்க்க வேண்டும். பிறகு அந்த இடத்தில் தேனைத் தொட்டு தேய்க்க வேண்டும்.

துவரை :

துவரம் பருப்பை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து தினமும் வழுக்கை ஏற்பட்ட இடத்தில் தடவி ஊறவைத்து குளிக்கலாம். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆரோக்கியமாக கூந்தல் வளர...

1. தேங்காய் எண்ணெயை எலுமிச்சை சாற்றில் கலந்து, கூந்தலுக்கு தடவி குளித்து வந்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம். மேலும் கூந்தலும் நன்கு வளரும்.

2. உளுந்து மற்றும் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து பேஸ்ட் போல செய்து தலைக்கு தடவி ஊறவைத்து குளிக்கலாம். இதனால் கூந்தலானது நீளமாக வளரும்.

3. ஆமணக்கெண்ணெயை தினமும் கூந்தலுக்கு தடவ வேண்டும். இதனால் கூந்தலானது அழகாக, அடர்த்தியாக வளரும்.

*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...