Friday, June 29, 2018

நீரிழிவே என்னை நெருங்கதே !!

நீரிழிவே என்னை நெருங்கதே 

#############3#########

தொடர் :1

1.நம் உடல்!நம் ஆரோக்கியம் 

 டாக்டர்:        டயபாட்டிஸ் வந்தால் ஜென்மத்துக்கும் மாத்திரை எடுத்துக்கொண்டு சமாளிக்கலாமே தவிர அதை பூரணமாக குணப்படுத்த முடியாது .எனவே டயபாட்டிஸ் சரியாகிவிட்டது என்று நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது ?

இதுதானே உங்களை சுற்றி இருப்பவர் கேள்வி ?'

'ஆமாம் டாக்டர் .'

'இந்தாருங்கள் ,நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்  'என்று டாக்டர் ஒரு படத்தை காண்பித்து ''இந்த யானைக்கு எத்தனை கால்கள் ?,என்றார்.

யானைக்கு நான்கு கால்கள் தானே என்று படத்தை பார்த்தேன் .நான்கா ஐந்தா என குழம்பி 'இது வெறும் இல்யூஷன் என்றேன் .

ஆமாம் நாம் பார்ப்பதை பொருத்துதான் எல்லாமே .உலகத்தில் டிவிட்டர் ,கூகுள், நேற்று வந்த புது ஐபோன் வரை எவ்வளவோ விஷயங்களை பார்த்து வியக்கிறோம்.என்றாவது நம் உடலை பார்த்து வியந்திருக்கிறோமா?

கம்யூட்டர் புரோக்கிராம் மாதிரி நம் உடல் முன்னூறு வருடங்களுக்கு எந்த நோயும் இல்லாமல் வாழ புரோக்கிராம் செய்யப்பட்டது .அதே சமயம் தன்னைதானே குணப்படுத்திக் கொள்ள சூட்சுமங்கள் அந்த புரோக்கிராமிலயே அடங்கியிருக்கு .

''அட''

ஆனா கம்யூட்டர் புரோக்கிராமை வைரஸ் தாக்குவது போல இன்றைக்கு நீரிழிவு ,இரத்த அழுத்தம் ,உடல் பருமன் ,கொழுப்பு கோளாறுகள் ,தைராய்டு செயலிழப்பு ,ஆட்டோ இம்யூன் குறைபாடுகள் ,புற்று நோய் ,அல் சைமர் நோய் மறதி போன்ற 4448 வியாதிகள் நம் உடலை தாக்கிக்கொண்டு இருக்கு .இதெல்லாம் வியாதிகள் இல்ல !'மாறிவரும் வாழ்க்கை முறையை நம் உடம்பு நமக்கு  சொல்லும் சமிக்கைகள் (லைப் ஸ்டைல் )

''சுலபமாக புரிய ,வைரஸ் தாக்கிய கம்யூட்டர் குழம்பி போய் எப்படி தப்பு தப்பா செயல் படுமோ அது போல் நம் உடலும் குழம்பி போக ஆரம்பிக்கிறது .இவை நம் உடலுக்கு காண்பிக்கும் சிக்னல்கள் .''

''டாக்டர் அப்படின்னா மருந்து மாத்திரை எதுவும் வேண்டாமா ?அதுவா சரியாயிடுமா ?,,

அப்படி இல்ல .......வைரஸ் வந்தால் கம்யூட்டரை உடனே கிளின்செய்து ,அப்புறம் அதை ஒழுங்காக எப்படி மெயின்டைன் செய்கிறோமோ ,அதேபோல் நம் உடலையும் பாதுகாக்கனும். ஆனா நாம் அப்படி செய்றது இல்லை என்பது தான் பிரச்சினையே ''

''உடம்புல காயங்களுக்கு மருந்து அவசியம் தானே !""

நிச்சயமா நம் உடம்பில் மூன்று காயங்கள் ஏற்படுகிறது .ஆங்கிலத்தில் 3T என்று சொல்வாங்க Trauma,Toxin,Thought !!''

முதல் T க்கு உதாரணம்னா நாம் விழுந்து அடிபட்டா ஏற்படும் வலி ?''

""கரெக்ட்''

அடுத்த T நச்சுத்தன்மை ,விஷம் ,பொல்யூஸன் புகை "

''ஆமாம் அதனால் தான் நமக்குச் சில சமயம் ''புட்  பாய்சன் ''ஆகிறது ''

கடைசி T கவலை ,குடும்ப ,அலுவலக பிரச்சிணை வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டம் ,அதனால் வரும் மன உளைச்சல் .

 

இந்த மூன்று T யில் ஏதாவது ஏதாவது ஒன்று குறை ஏற்பட்டாலும் ,நமது மூளை நம்மைக்காப்பாற்ற முனைந்து ,ஆபத்தை எதிர்த்து ஹீரோ போல சண்டை போட வேண்டுமா அல்லது வில்லன் போல ஓட்டம் பிடிக்க வேண்டுமா என்று முடிவு செய்யும் .''

''ஆதி மனிதன் ,இயற்கை சீற்றம் ,தொற்று நோய் ,கொடிய விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொண்டு வாழ்ந்தான்,ஆனால் இனறைக்கு நவீன அன்ராய்டு மனிதன் கொடிய வில்ங்குக்ளிடமிருந்து சுலபமா தப்பித்து பல கொடிய நோய்களுக்கு இரையாகி கொண்டு இருக்கிறான் !.

''ஆனால் மருத்துவத்துறையின் முன்னேற்றத்தை மறுக்க முடியாதே ?''

""ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருப்பது போல்  இன்றைய மருத்துவத்துக்கும் இரண்டு பக்கங்கள் ,''

""ஜுலை மாதத்தில் கோவையில் ஒரு விபத்து ,ஒருபெண்மணி ''ப்ரெய்ன் டெட் ''அவங்க உடல் உறுப்புகளை ஆம்புலன்ஸில் போக்குவரத்தை நிறுத்தி விமானநிலையத்துக்கு கொண்டு சேர்த்தாங்க ''

''ஆமாம் டாக்டர் நானும் படித்தேன் படித்தேன.் "

"ஓரு சிறுநீரகம் கே ஜி மருத்துவ மனைக்கும் ,மற்றொன்று ராமகிருஷ்ணா மருத்துவ மனைக்கும் ,கல்லீரல் சென்னை மியாட் மருத்துவ மனைக்கும் ,இரு கண்கள் கோவை சங்கரா மருத்துவமனைக்கும் ,இருதய வால்வு சென்னை மெடிக்கல் மிஸன் மருத்துவ மனைக்கும் அனுப்பி உடனே பொருத்திட்டாங்க இதனால் ஆறு பேறுக்கு மறுவாழ்வு கிடைத்தது .இது மருத்துவ வளர்ச்சியின் "தி பிரைட் சைட் "-பிரகாசமான பக்கம் ஆனால் .""கிரானிக் ""அதாவது நாட்பட்ட கடுமையான நோய்களுக்கு நம் மருத்துவ முறை முற்றிலும் தவறு செஞ்சு   பல உயிர்களை அழிக்கிறது .'

"விரிவா சொல்லுங்க டாக்டர் "

'இன்றைய தேதியில் டயபாட்டிஸ் ,இதய நோய் ,தைராய்டு எல்லாம் விஜய் ,அஜித் போல பழக்கப்பட்ட பெயராகிடுத்து ""

""ஆமாம் இதற்க்குத்தான் வித வதமா மருந்துகள் இருக்கே ? .

"இருக்கு ,ஆனால் நவின மருத்துவம் இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு சொல்லாம பெருசாக்குது ""

.

""கொஞ்சம் புரியும் படி சொல்லுங்களே டாக்டர் ""

""டயபட்டிஸ் என்ற நீரிழிவு ,ஓபீஸ்  என்ற உடல் பருமன் எல்லாம் வளர்சிதை கோளாறுகளால் ஏற்படுகிறது .ஆங்கிலத்தில் Metabolic disorderன்னு சொல்வாங்க .உடலில் வளர்ச்சிக்காக ஏற்படும் வேதியியல் ரசாயன மாற்றங்கள் தான்  Metabolism.அதில் கோளாறு ஏற்பட்டால் ?

ஒரு மரத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள் .இதில் எப்படி கோளாறு ஏற்படுது ?முன்பு பார்த்த 3 Tநினைவு இருக்கிறதா ?

"காயம் நச்சு எண்ணங்கள் ''

இவைதான் வேர்கள் .எது நடந்தாலும் ,எதிர் வினையாக பல ரசாயன மாற்றங்கள் அடுக்கடுக்காக ஏற்படுத்தும் ."

"இதைத்தானே டாக்டர் ஹார்மோன் என்கிறோம் ''

""ஆமாம் சர்க்கரை சாப்பிட்டா இன்சுலினும் ,அதிக மன அழுத்தம் இருந்தால் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் சுரக்குது ."

""இவை எல்லாம் நம் உடம்புக்கு தேவை தானே ?"

'எல்லாமே தேவை தான்.ஆனா இந்த ஹார்மோன்கள் அதிகமாகவோ குறைவாகவோ சுரந்தால் தான் பிரச்சினை வரும் .அதை தான் டயபட்டிஸ்,உடல் பருமன் ஹைபர் டென்சன் எல்லாம் செழிப்பாக வளரும் .

நவீன மருத்துவம் கிளைகளை வெட்டுகிறதே தவிர வேர்களை அப்படியே விட்டு விடுகிறது .உடல் இயக்கத்தை சின்ன ரசாயன பொருளைக்கொண்டு அதாவது மருந்து மாத்திரைகளை கொண்டு  கட்டு படுத்த பார்க்கிறது .

நம் உடல் சீராக இயங்கக்கூடிய ஓர் அருமையான இயந்திரம். சைக்கிள் செயினில் அதிக எண்ணெய் போட்டால் செயின் கழன்டு விடும் .அது போலதான் நம் உடலும் அதிக மாத்திரை மருந்து எடுத்தால் ரிப்பேர் ஆகிவிடும் .

"இன்னோரு உதாரணம் சொல்றேன் நம் உடல் ,கிச்சன் "சிங்க் "மாதிரி .தண்ணீர் சுத்தமா இருந்தா சீராக வெளியேறும் .ஆனா அதிக அழுக்கு சேர்ந்தா அடைததுக் கொள்ளும் .3Tதான் அடைத்துக்கொள்ளும் அழுக்கு .!

அந்த அழுக்கை எப்படி அகற்றலாம் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம் .

(தொடரும் )

*💚வாழ்க வையகம்*

*வாழ்க வளமுடன்*💚

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...