*திராட்சை பழச்சாற்றில் சீரக பொடியை கலந்து குடித்தால் . . .*
திராட்சை பழம் ஆரோக்கியமான மனித வாழ்க்கைக்கு வழிவகுக்கும் உன்னதமானமூலிகை என்றால் அது மிகையாகாது.
இந்ததிராட்சை பழத்தில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அதிகளவில் காணப்படுகின்றன.
இரத்தம் நமது உடலில் உள்ள ரத்தக்குழாய்கள் வழியாகத்தான் ஓடுகிறது. இப்படி ஓடும் ரத்தம் நமது இதயத்துக்குள் செல்லும் போது குறிப்பிடத்தக்க வேகத்தில் நுள் நுழையும். பின் உள்நுழைந்த அந்த இரத்தமானது நமது இதயத்திலிருந்து வெளியே செல்லும்போது வேறு விதமான வேகத்துடன் வெளியேறும்.
இந்த வேகத்துக்கு, மருத்துவர்கள்வைத்த பெயர்தான் இரத்த அழுத்தம். இந்த இரத்த அழுத்தமானது பொதுவாக ஒருவருக்கு பாதரச அளவில் 120/80 மி.மீ. என இருந்தால், அது இயல்பானது பிரச்சனையில்லை.
ஆனால் சில நேரங்களில் இந்த ரத்த அழுத்தமானது அதிக ளவில் இருந்தால் அது பல்வேறு விபரீதமான நோய்களுக்கு வித்திடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த இரத்த அழுத்தத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுக்குள் வைத்திருக்க, நமக்கு இயற்கை அருளிய மூலிகையாக கருதப்படும் திராட்சையும் சீரகத்தையும் விட வேறு சிறந்த மருந்து கிடையாது என்கிறார்கள் மருத்துவர்கள்.
போதுமான அளவு திராட்சை பழங்களை எடுத்து அவற்றின் சாற்றினை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த சாற்றுடன் கொஞ்சம் சீரகப் பொடியை கலந்து குடித்தால் ஆரம்ப நிலையிலேயே இரத்த அழுத்த நோய் குணமாகும்.
மத்திய தர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது.
*குறிப்பு :*
கண்டிப்பாக திராட்சை சாற்றுடன் சர்க்கரை, பால், ஐஸ் இந்த மூன்றையும் கலக்கக் கூடாது.