Tuesday, November 24, 2020

ஆக்ஸிஜன் லெவல் குறைந்து விட்டால் ஆக்ஸிஜன் லெவலை மூன்று சித்த மருந்துகளின் துணை கொண்டு எப்படி

* தெரிந்து  கொள்வோம்
நுரையீரலில் தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் லெவல் குறைந்து விட்டால் ஆக்ஸிஜன் லெவலை மூன்று சித்த மருந்துகளின் துணை கொண்டு எப்படி உயர்த்துவது 

1) 1/2 டம்ளர்  தேங்காய் பால் உடன் 
     1/2 டீ ஸ்பூன்  கடுக்காய் தூள் கொண்டு கலந்து காலை மாலை இரண்டு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும் 

2) 1/2 டம்ளர்  தேங்காய் பால்  உடன் 1/2 டீ ஸ்பூன்  கிராம்பு தூள் சேர்த்து கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும் 

3) வெள்ளை முள்ளங்கி சாறு 1/2 டம்ளர்  எடுத்து 1/2 டீ ஸ்பூன்  நித்ய கல்யாணி பொடி கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்  

இதை பருகும் விதம்... உணவுக்கு முன்னோ அல்லது உணவுக்கு பின்னோ பருகலாம் 

 இதை எல்லோருக்கும் அனுப்பி வையுங்கள், பயன் அடையட்டும்.

 *உடலில்* *ஆக்சிஜன்* *அளவு* *98* - *100* *க்குள்* *இருக்க* *வேண்டும்* என்று சொல்லுகிறார்கள்; 43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை;
ORAC-Oxygen Radical Absorption Capacity என்று ஒரு கணக்கீடு உள்ளது; இதன்படி இந்த அளவுகோலில் *ஆக்சிஜன்* *அதிகம்* *உள்ள* *பொருட்களை* *அவ்வப்போது* *நாம்* *சாப்பிட* *வேண்டும்* .
1.கிராம்பு.      314446 ORAC
2. பட்டை. ....   267537 ORA
3. மஞ்சள்.......102700 ORA
4. சீரகம்........... 76800 ORA
5. துளசி..........67553 ORAC
6. இஞ்சி..........28811 ORAC

சரி, இவைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள ஏதாவது சுருக்கு வழி உள்ளதா?... அதற்கு ஒரு ரெசிபி உள்ளது! அதனை குறித்து வைத்துக்கொண்டு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்;
1. *ஓமம்* ........100 கிராம்
2. *சோம்பு* .......50 கி.
3. *கிராம்பு* ........5 கி.
4. *பட்டை* .........   5 கி
5. *சுக்கு* ............10 கி
6. *ஏலக்காய்* .....10 கி.
இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு காலை மாலை டீ போடும்போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால்  டீ  மசாலா டீ ஆக மாறும் ; நமக்கும் ஆக்ஸிஜன் அபரிமிதமாக கிடைக்கும். வாழ்க வளமுடன்! அனைவருக்கும் ஷேர் செய்யவும்....எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க  வேண்டுகிறேன்.

Monday, November 23, 2020

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர்


காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, ‘மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் ‘நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி இராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுகையில் ‘பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் ‘காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம்’ எனக் குறிப் பிட்டுள்ளார்.

ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823-1900) அவர்கள் ‘ஒளியினை தவம் செய்து நம் மூளை, மனதினை உயர்த்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி (1869-1948) அவர்கள் ‘யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் ‘உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்’ என்பதாகும்.

இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி, மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

தத் - வெற்றி
ச - வீரம்
வி - பராமரிப்பு
து - நன்மை
வ - ஒற்றுமை
ரி - அன்பு
நி - பணம்
யம் - அறிவு
ஃபர் - பாதுகாப்பு
க்கோ - ஞானம்
த்தி - அழுத்தம்
வா - பக்தி
ஸ்யா - நினைவாற்றல்
ஃத்தி - மூச்சு
மா - சுய ஒழுக்கம்
யோ- விழிப்புணர்வு
யோ- உருவாக்குதல்
நஹ- இனிமை
பரா- நல்லது
சோ- தைரியம்
த்தா- ஞானம்
யட் - சேவை

காயத்ரி மந்திரம் என்றால் என்ன?

வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
ஓம் - தெய்வீக சக்தி, ஒலி சின்னம்
ப்பூ - உடல் விமானம்
புவஹா - நிழலிடா விமானம்
ஸ்வ - வான விமானம்
தத் - அந்த தலை தெய்வத்தின்
ஸவித்து - பிரபஞ்சம் தயையும் சக்தி
வரேன்யம் - வணங்க வேண்டும்
பர்கோ - பிரபல
தேவஸ்ய - பிரகாசமிக்க
தீமஹி - நம் த்யானம்
தியோ - அறிவினை
யா - யார்
நஹ - எங்கள்
ப்ரசோதயாத் - தெளிவுப்படுத்துங்கள்
ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்

நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத் மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.

இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.

காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக, உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். இருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். குறிப்பாக, பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.

காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்

* கம்பீரத் தோற்றம்
* தரமான பேச்சு
* வறுமை, குறை நீங்குதல்
* பாதுகாப்பு வட்டம்
* கண்ணில் அறிவு தெரிதல்
* அபாயம், தேவையற்ற சூழ்நிலை நீங்கும்
* நரம்புகளும், சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்
மேலும்
* அமைதியாய் இருப்பர்
* நற்செயல்களில் ஈடுபடுவர்
* காந்த சக்தி ஆகியவை உருவாகும்.
மேலும்
* வாழ்க்கையில் தடைகளை நீக்கும்
* மூளையை பிரகாசிக்கச் செய்யும்
* உள்ளுணர்வினை தெளி வாக்கும்
* உயர் உண்மைகள் தெரிய வரும்
- என்றும் கூறப்படுகின்றது.

டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆனால், இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது.

இம்மந்திரம் முழுக்க முழுக்க ஒளியினை வணங்குவதும், மனதின் இருளினை நீக்க வேண்டுவதாக அமைந்துள்ளதால், இம் மந்திரம் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

ஒரு மந்திரமோ, தியானமோ, யோகவோ, உடற்பயிற்சியோ ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்கள் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.
ஒரு பழக்கம் உங்களை விட்டு நீங்க (உ-ம்) காபி, டீ பழக்கம் போன்றவை நீங்க 40 நாட்கள் ஆகும்.
த்யானமோ, மந்திரமோ அது பழக்கமாக ஆரம்பிக்கும் பொழுது அது உங்களுக்கு கை கூடி வர, பழக்கப்பட 90 நாட்கள் ஆகும்.
120 நாட்களில் புதுப்பழக்கம் நன்கு பழகி விடும்.

120 நாட்களில் கை விட்ட பழக்கமும் நம்மிடம் நன்கு நீங்கி விடும்.

1000 நாட்களில் நீங்கள் செய்யும் சாதனையோ, கடைப்பிடிக்கும் பழக்கமோ நீங்கள் மாஸ்டர் ஆகி விடுவீர்கள். (உ-ம்) தொடர்ந்து நீங்கள் 1000 நாட்கள் காலை 4 மணிக்கு எழுந்தால், வாழ்நாள் முழுவதும் அவ்வாறே செய்வர்.

* மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

* ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

* 11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும், சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

* 22நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ, ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

* 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

* 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் ‘க்ரே’ பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

* இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம், மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர்.

- மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் விஞ்ஞான ஆய்வு முடிவுகள் இல்லை. என்றாலும், பல அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன.
மந்திரம் சொல்வதற்கென சில முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

* காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்.
* கிழக்கு முகமாக அமருங்கள்.
* ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.
* மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்.

மகாத்மா காந்தி அவர்கள், அவர்களது ‘இயற்கை வைத்தியம்’ என்ற புத்தகத்தில் ‘ஒரு மருத்துவரின் கடமை நோயாளியின் உடலுக்கு கவனம் செலுத்துவது மட்டுமல்ல. அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் அவர்கள் ‘ராம’ நாமத்தினை பரிந்துரைக்கின்றார். மேலும் ‘ராம’ நாமம் அனைத்திற்கும் தீர்வு என்று குறிப்பிடுகின்றார். இந்த நாமத்தினை சொல்பவர்கள் சிறிய முயற்சியிலேயே அரிய செயல்களை சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘ரா’ என்பது ‘ஓம் நமோ நாராயணா என்பதிலிருந்தும், ‘ம’ என்பது ‘ஓம் நம சிவாய’ என்பதிலிருந்தும் சேர்க்கப்பட்டதால், இரட்டிப்பு பலன் என்றும் கூறப்படுகின்றது.

கந்தர் சஷ்டி கவசத்தில் கூட ‘ரஹன பவச ரரரர, ரிஹண பவச ரிரிரிரி’ என சொல்லப்படுகின்றது. ‘ரா’ என்ற எழுத்தும் ‘ம’ என்ற எழுத்தும் உச்சரிக்கப்படும் பொழுது உடலில் ஏற்படும் அதிர்வுகள் அவரது உடல் நலத்தினையும், ம ன நலத்தினையும் காப்பதாக விளக்கப்படுகின்றது. ஆக, மந்திரங்களும் அமிர்த மருந்தே என்பதை அறிவோமாக.

.

.




.


NAGARAJAN
9543806174
7667323766

தங்கம் நட்டம்

*ட்ராபிக் ராமசாமியின் அடுத்த போராட்டம்:
ஆண்டுக்கு ஒரு கடை எப்படி?*
தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு...! சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன ?*
_____________________

💫 ஒரு பவுன் தங்கசெயினுக்கு 
1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!

💫 இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் 
8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 
6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!

💫 ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்...!

💫 இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்...!

💫 ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் ! ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்...!

💫 ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!

💫 இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ? பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ? கணக்கு போட்டு பாருங்கள்...!
1 கிராம் தங்கம் ரூ. 3765/-
8 கிராம் தங்கம் ரூ. 30,120/-
1 கிராம்  செம்பு - 4.80
1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-
6.5 கிராம் தங்கம் - 24,472/-

6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு 
அடக்கவிலை-24,472+7=24,479/-

1 பவுனுக்கு தங்கத்தில் - 30,120 - 24,479 
லாபம்= 5,641

சேதாரம் 1.5 கிராம் = 5647/-

 1 பவுனுக்கு மொத்த லாபம்  11,288                 

💫 என்ன தலை சுத்துதா ? எனக்குள் ஒரு ஆதங்கம். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்...!

💫 நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள நல்ல உள்ளங்களே ! உங்கள் ஆதங்கத்தை காட்ட அதிகப்படி ஷேர் செய்யவும். 
I posted it few times. Going to file a Pil.
எதுவும் மக்களால் முடியும்...!

Saturday, July 18, 2020

நரம்புத்தளர்ச்சி, #கை_கால்நடுக்கம், #குழந்தையின்மை, #ஆண்மைக்குறைவு, #விந்துஅணுஇல்லாமை, #விந்து முந்துதல், #விந்து குறைவு, #விந்து கெட்டியில்லாமை, #தூக்கத்தில்/கனவில் விந்துவருவது, #மூலநோய்கள் #பலவீனமானஉடல், #பதட்டம், #இதயம் படபடப்பு, #மூட்டுவலி ஆகியவற்றிற்கு

*#நரம்புத்தளர்ச்சி, #கை_கால்நடுக்கம், #குழந்தையின்மை, #ஆண்மைக்குறைவு, #விந்துஅணுஇல்லாமை, #விந்து முந்துதல், #விந்து குறைவு, #விந்து கெட்டியில்லாமை, #தூக்கத்தில்/கனவில் விந்துவருவது, #மூலநோய்கள் #பலவீனமானஉடல், #பதட்டம், #இதயம் படபடப்பு, #மூட்டுவலி ஆகியவற்றிற்கு நிவாரணமளிக்கிறது.* *திருப்திகரமான #தாம்பத்ய வாழ்க்கைக்கு துணைபுரிகிறது. கடுமையாக உழைப்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கிறது.*

வயதானவர்களுக்கு *#இரத்த_அழுத்தம், #இரத்தச்சர்க்கரை, #கொலஸ்ட்ரால்* அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. மருத்துவ சிகிட்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய உதவுகிறது. 


எமது EnerONN product பயன்படுத்தி *நரம்புத்தளர்ச்சி* குணமடைந்த நபர் டெஸ்டிமோனி வீடியோ காண லிங்க் 
Youtube: https://youtu.be/3q7YdvfcW10

தொடர்பு எண்: +91 9789053353

வாட்சப்: https://wa.me/919789053353

Please share

கேன்சர் சிகிட்சையில் இருக்கும் நபர்களுக்கு பகிருங்கள்*EnerONN Anti-Oxident Health drink

*கேன்சர் சிகிட்சையில் இருக்கும் நபர்களுக்கு பகிருங்கள்*
EnerONN Anti-Oxident Health drink இது ஆயுர்வேத முறைப்படி கேரளாவில் தயாரிக்கப்படுகிறது. 24 வகையான மூலிகைகள், பழங்களால் தயாரிக்கப்பட்டது. 100% இயற்கையானது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. ஏற்கனவே சிகிட்சையில் இருப்பவர்கள் விரைவில் நலம்பெற உதவுகிறது

*EnerONN* பயன்படுத்தி இரத்த புற்றுநோய் (blood cancer) குணமடைந்த நபர் டெஸ்டிமோனி YouTube: https://youtu.be/-9Qpy53_RG8

தொண்டை புற்றுநோய்: YouTube https://youtu.be/kMlVgcMo-xA

மார்பக புற்றுநோய் YouTube https://youtu.be/_ML-94bhMUA

தொடர்பு எண்:  +91 9789053353

வாட்சப் லிங்க்: https://wa.me/919789053353

Please share
#பகிருங்கள்

Tuesday, July 14, 2020

எலுமிச்சம் பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறை பிழிந்து கொட்டி விடுங்கள். அதன் தோலை பொடி பொடியாக நறுக்கி

ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறை பிழிந்து கொட்டி விடுங்கள்.  அதன் தோலை பொடி பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு மிக மிக சிறிய அளவு இஞ்சியை துருவி சேர்த்து ஒரு பெரிய Lம்ளர் நீரில் போடுங்கள் .இதை அடுப்பில் Sim ல் வைத்து கொதிக்கவைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கும் அளவு சூடு வந்ததும் வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடியுங்கள் . 30 நாள் Time .இருதயத்தில் 10 அடைப்பு இருந்தாலும் காணாமல் போய்விடும். கிட்னி லிவர் 10 வயது குழந்தையை போல் ஆகிவிடும்.  இது ஒரு அனுபவ சத்தியமான உண்மை . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏             🍍🌽உணவே நலம்🥕🍑.                    🇮🇳 வாட்ஸ் அப் குழு.🇮🇳           🙏Cell: 7667766999🙏

குடிநீர்?????

 நல்ல குடி நீர் என்பதற்கும்,
சுத்தமான குடி நீர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்...அவசிய பதிவு.
அவசியம் படியுங்கள்.

குடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்???.

நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும்
தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு
சாதனங்களை வைத்திருக்கிறோம். 

இந்த R.O சாதனத்தில் மூன்று
மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை
வெளியில் எடுத்துப் பார்த்தால்
வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.

அதை உதறி தட்டினால் அதிலிருந்து
மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்.

நாம் என்ன நினைப்போம்...அப்பப்பா நல்ல வேளை, இந்த
வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.

ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களின் உடம்பில் செல்லவில்லையே...நிச்சயமாக
அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.

கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து
எடுத்துக் கீழே கொட்டுகிறோமே!. 

அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத்
தேவைப்படும் அத்தியாவசிய
தாதுப் பொருட்கள் ஆகும். 

நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் உங்கள் கண்ணுக்கே தெரியாது.

ஆர்.ஓ.சாதனத்தை பயன் படுத்தினால் மட்டுமே அந்தத்
தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.

தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத
தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே...ஆனால்
கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச்
சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு ஆர்.ஓ வில் ஊற்றி வடிக்கச் செய்ய வேண்டும்.

யாருடைய வீட்டில் தண்ணீரை சுத்தம்
செய்வதற்கு R.O மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே அசைக்க இயலாத உண்மை.

தண்ணீரில் இருக்கும் அந்தத்
தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

எனவே தண்ணீரை ஆர்.ஓ (R.O) செய்யக் கூடாது.

தண்ணீரை R.O செய்து குடித்தால்
மனிதனுக்கு நோய் வரும்.வாழ்நாள் முழுவதுமே தீராது.

சரி...

மினரல் பாட்டில் வாட்டர் -ஐ
பயன்படுத்தலாமா?

மினரல் வாட்டர் பயன்படுத்தவே கூடாது.

மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing Machine என்று ஒரு மெஷின் இருக்கும். 

இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது. 

எனவே நல்ல தண்ணீரை
ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக
மாற்றுவதற்கு நாம் பல வேலைகளை
செய்து அதை பாட்டிலில் அடைத்துப்
பணம் கொடுத்து வாங்கி
குடிக்கிறோம். 

எனவே தயவு செய்து பாட்டிலில்
அடைக்கப் பட்ட மினரல் வாட்டர்
என்று அழைக்கப்படும் தண்ணீரில் உள்ள இயற்கையான சத்துகளே இல்லாத Packaged Drinking Water ஐ யாருமே பயன்படுத்தக் கூடாது.

குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைதான் என்ன?...

தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.

ஆர்.ஓ R.O செய்யக் கூடாது.

பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.

வேறு எப்படித்தான் தண்ணீரை
சுத்தப் படுத்துவது என்று கேட்டால்,
சாதாரணமாக குழாயில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம். 

அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச் சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே. 

யார் ஒருவர் குழாய் தண்ணீரை
நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க் கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக
இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.

குழாயில் வரும் தண்ணீரை எப்படிக்
குடிப்பது?...

தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது.தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது.

சாக்கடை நீர் கலந்து வருகிறது
என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.

எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என TV, பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.

உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர்
கெட்டு விட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டிலில்
மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து
பிரச்சாரம் செய்கிறது. 

அப்பொழுதுதானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டிலில்
தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள்
பிரச்சாரம் செய்கிறார்கள்.

மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் R.O பிளான்ட் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.

உண்மையிலேயே குழாய் தண்ணீர்
குடித்தால் ஒன்றும் ஆகாது. 

இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,

தண்ணீர் கெட்டிருக்கிறது என்று
ஒரு வேளை நாங்கள் நினைத்தால் உங்களது மன திருப்திக்காக சில காரியங்களை செய்யலாம். நான் கூறுவது போல உங்கள்
தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில்
இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை
சுத்திகரிக்கும் கருவி.

மண் பானையில் குடி தண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட
பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கிறது. 

எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.

நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து
உங்கள் வீட்டில் ஆர்.ஓ எனும் குப்பை மிஷினை வாங்கி வைத்து இருக்கிறீர்களே நாற்பதாயிரம்
ரூபாய்க்கு மண் பானை வாங்கினால்
எவ்வளவு பானை கிடைக்கும். தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது. 

ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான
இயற்கையான ஒரு Water Filter வாட்டர் பில்டரை யாரும் பயன்படுத்துவதே இல்லை. 

எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்து குடித்தால் கெட்ட பொருள்களும்
அழியும். மண் சக்தியும் கிடைக்கும்,
பிராண சக்தி அதிகரிக்கும்.

வெள்ளை நிற பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டலாம்.

வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால்  தண்ணீரை வடி கட்டினால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து
நோயை உண்டு செய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல்
பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல்
மருத்துவமனைக்குச் செல்லாமல்
வெள்ளைத் துணியில் வடி கட்டிய நீரில் குளிப்பாட்டி குணப் படுத்தி இருக்கிறார்கள். 

எனவே தேவைப் பட்டால் இந்த
முறையில் தண்ணீரைச் சுத்தப் படுத்தலாம்.

செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலமாகவும் தண்ணீரை சுத்தப் படுத்தலாம்

செம்பு என்ற உலோக பாத்திரத்தின்
மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான
சக்தி கிடைக்கிறது. 

அதில் உள்ள கெட்டப்
பொருள் அழிக்கப் படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது.

எனவே செம்பு என்ற தாமிர உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க
பயன் படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை
சுத்தப் படுத்திக் கொண்டே இருக்கும்.

பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக்
கொண்டு இருப்பார்கள் என்பதை அறவீர்களா?.

அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால்
அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம்.

செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப் படுத்த முடியும். 

எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,செம்பு என்ற தாமிர உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை
சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள்
இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு R.O. சிஸ்டத்தை உபயோகிக்க வேண்டும்?.

இதுவும் இல்லாமல் பூமியில் உள்ள மண்ணில் உள்ள அடுக்குக்கு எத்தகைய தண்ணீரையும் சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.

அதே போல் மண்ணை சுட்டு கேன்டில் முறையில் எவர்சில்வர் வாட்டர் பில்டர் பாத்திரக் கடைகளில் கிடைக்கும்.அதுவும் இயற்கையான எளிதான முறைதான்.அதில் மூன்று கேன்டில் உள்ள வாட்டர் பில்டர் அனைத்து குடும்பத்துக்கும் உகந்தது.

வடிந்த தண்ணீரை மண் பானையில் ஊற்றி மகிழ்வுடன் அருந்துங்கள்.

என் அருமை மக்களே!... 
நோய் தீர்க்கும் குடி தண்ணீரை உதாசீனம் செய்யாதீர்கள்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்க்காதே எனும் முன்னோர் வாக்கை நம்புங்கள்.

R.O எனும் அமெரிக்க என்சைம் அரக்கனை தூக்கி எறியுங்கள்.

கழுத்தில் டை கட்டி விட்டு வந்தால் உடனே நம்பி மோசம் போகாதீர்கள்.

நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

பலரை காக்க பகிர்வோம்.

குல தெய்வ வழிபாடு

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன...? 

குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?  ஒரு பார்வை...

குலதெய்வம்... 
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். 

குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். 

மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

அதன் சக்தியை அளவிடமுடியாது...

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.

இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?

நம் முன்னோர்கள்... 
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும். 

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். 
அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...

இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!

நாம் அங்கே போய் நின்று... 
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!...

விஞ்ஞான முறையில் யோசித்தால்... 

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே...

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். 

இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. 

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.

தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...

இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.

ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து... 
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு... 
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...

பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...

ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...

அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...

குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். 

அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.

குலதெய்வகோவிலுக்கு உதவுங்கள்....
[

Sunday, June 21, 2020

கருவளையம் மறைய...💫தமிழ்💫* தக்காளிச்சாறு, எலுமிச்சைச்சாறு

கருவளையம் மறைய...

💫தமிழ்💫
* தக்காளிச்சாறு, எலுமிச்சைச்சாறு இரண்டையும் சம அளவு கலந்து கண்களின் கீழே தடவி, பத்து நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவி வர, படிப்படியாகச் சரியாகிவிடும்.

* உருளைக்கிழங்கைக் கழுவி, தோலுடன் துருவிச் சாறெடுத்து, அந்தச் சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து சில நிமிடங்கள் கழித்து எடுத்துவர, கருவளையம் மறையும்.

 * பாதாம் எண்ணெயை தினமும் கண்களின் கீழே தடவிவர, கருவளையம் நீங்கும்.

 * காய்ச்சாத பாலை கண்களைச் சுற்றித் தடவுவதும் நல்ல தீர்வாகும்.

நிலக்கடலை சக்கரையை கொல்லும்

டாக்டர்களின் எதிரி
நிலக்கடலை 
சக்கரையை கொல்லும்
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

காலை மடக்கி உட்காரப் பழகிக் கொண்டால்......*

*காலை மடக்கி உட்காரப் பழகிக் கொண்டால்......*

.
*நாம் பொதுவாக எப்பொழுதும் காலைத் தொங்க வைத்துத்தான் அதிகமாக அமர்ந்திருக்கிறோம்.*

இரண்டு சக்கர வாகனத்தில்பயணிக்கும்பொழுது,  பேருந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபா, கட்டில், சேர் இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரம் காலைத் தொங்க வைத்துக் கொண்டே இருக்கிறோம். 

இதனால் நமக்குப் பல நோய்கள் உருவாகின்றன. காரணம் என்னவென்றால், காலைத் தொங்க வைத்து அமரும்பொழுது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதியில் மட்டுமே அதிகமாகச் செல்கிறது. மேல் பகுதியில் சரியாக இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை. நாம் காலை மடக்கிச் சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்குக் கீழே இரத்த ஓட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே இரத்த ஓட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில்தான் இருக்கின்றன. எனவே, ஒருவர் காலை தொங்கப் போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தி அதிகமாகக் கிடைக்கிறது. 

ஆரோக்கியமும் அதிகமாகிறது. கால்களுக்கு, நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

எனவே, தயவு செய்து இனிமேல் காலைத் தொங்க வைத்து அமருவதைத் தவிருங்கள்! குறிப்பாக, சாப்பிடும்பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். 

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. இதனால், ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசானத்தில் (சம்மணமாக) அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிடச் சாப்பிடச் சாப்பாடு ஜீரணமாகி விடும்.

ஆனால், இப்பொழுது பலர் காலை மடக்கி உட்காரவே முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், நாம் ஒரே ஓர் இடத்தில் மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்; 

அது மலம் கழிக்கும்பொழுது. யாருடைய வீட்டில் இந்திய பாணிக் கழிப்பறை (Indian style toilet) என்று அழைக்கப்படும் காலை மடக்கி அமரும்படியான கழிப்பறை இருக்கிறதோ அவர்களுக்கு மூட்டு சம்பந்தப்பட்ட எந்த வலியும் வருவதில்லை. ஆனால், மேலைப் பாணிக் கழிப்பறை (European style toilet) உள்ள வீடுகளில் உள்ள அனைவருக்கும் மூட்டு, முழங்கால் வலியும் அவை சம்பந்தப்பட்ட நோய்களும் வருகின்றன. ஏனென்றால், இவர்கள் ஒரு முறை கூட வாழ்க்கையில் காலை மடக்கி அமர்வதே கிடையாது.

முதலில் வயதானவர்களுக்கு மட்டுமே இந்தப் பிரச்சினை இருந்தது. ஆனால், இப்பொழுது சிறு குழந்தைகள் கூட மேலைப் பாணிக் கழிப்பறையைப் பயன்படுத்துவதால் அவர்களும் தரையில் அமர முடியாமல் தவிக்கிறார்கள். 

உங்களால் சம்மணங்கால் போட்டுத் தரையில் உட்காரக் கூட முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்குக் கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

எனவே, ஏற்கெனவே மூட்டு, முழங்கால் வலி முதலான ஏதேனும் காரணங்களுக்காக மருத்துவர் பரிந்துரைப்படி மேலைப் பாணிக் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்கள் தவிர, மற்றவர்கள் தயவு செய்து அதைப் பயன்படுத்த வேண்டாம்! 

அதற்குப் பதிலாக இந்திய பாணிக் கழிப்பறை பயன்படுத்துங்கள். இதனால், குறைந்தபட்சம் ஒரு நாளில் இரண்டு முறை மூன்று முறையாவது நாம் யோகாசனம் செய்வதைப் போல் அமர்ந்து எழ வேண்டியிருக்கும்.

*FORWARD MESSAGE*
*என்றும் அன்புடன்...

தூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்? என்ன செய்தால் சரியாகும்?♦

♦தூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்? என்ன செய்தால் சரியாகும்?♦
  

♦எழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் கடும் சோர்வும் முதுகுவலியும் உண்டாகிறது. அதற்குக் காரணம் தான் என்ன? நன்றாகத் தூங்கி எழுந்த பின்பு கடுமையான இடுப்பு வலி நம்மை விடாமல் துரத்துவதற்கு என்ன காரணம் தெரியுமா? நாம் தூங்குகின்ற முறைதான் அதற்கு மிக முக்கியக் காரணம். நாம் சரியாகத் தூங்காமல் இருப்பதும் சரியான இடத்தில் தலையயணையை வைத்துத் தூங்காமல் இருப்பதும் தான் இதற்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. அதனால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தூங்குகின்ற முறையும் தலையணை வைத்துக் கொள்ளும் முறையும் மிக மிக முக்கியம்.

♦கழுத்து மற்றும் முதுகுவலி உங்களுடைய தோள்பட்டை, கழுத்து மற்றும் மேல்புறத்தில் முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு புறமாக (side lying) அல்லது நேராக மல்லாக்க படுத்திருந்தால் வலி குறையும். இப்படி படுக்கிற பொழுது, முதுகுத்தண்டுவடத்துக்குக் குறைவான அழுத்தம் செல்லும். அப்படி செல்லுகின்ற பொழுது, உங்களுடைய கழுத்துப் பகுதி கொஞ்சம் தளர்வடையும். அதனால் வலி குறையவும் ஆரம்பிக்கும்.

♦தலையணை பொதுவாக தலையணை மிக முக்கியம். வட்ட வடிவிலான தலையணையை கழுத்துக்குக்கும் தலைக்கும் இடையில் வைத்து தான் தூங்க வேண்டும். பொதுவாக எல்லோரும் தலைப்பகுதியில் மட்டும் தலையை வைத்துத் தூங்குவார்கள். அது மிகத் தவறு. அது கழுத்து மற்றும் தோள்பட்டை வலியை ஏற்படுத்தும். அதனால் எப்போதும தலைக்கும் கழுத்துக்கும் இடையில் தான் தலையணையை வைத்துத் தூங்க வேண்டும்.

♦முதுகின் கீழ்ப்பகுதி வலி? ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்தால் முதுகின் கீழ்ப்பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படுகின்ற வலிகள் குறையும். நான் நேராகப் படுத்தே பழகிவிட்டேன்.ஒரு பக்கமாகப் படுத்தால் தூக்கம் வராது என்று சொல்பவர்கள் ஒரு தலையணையை முழங்காலுக்குக் கீழ்ப்புறத்தில் வைத்துக் கொண்டு தூங்குங்கள். இது முற்றிலுமு் பலன் தராது. ஓரளவு பலனைத் தான் இதில் எதிர்பார்க்க முடியும். அதனால் ஒரு பக்கமாகப் படுத்துப் பழகிக் கொள்வது நல்லது.

♦உட்காரும் நிலை நீங்கள் உட்காருகின்ற நிலையை மாற்றினால் மட்டும் தான் இதுபோன்ற வலிகளைக் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் உட்காரும்போது நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தால் இந்த பாதிப்பைத் தவிர்க்க முடியும்

இருமலை ஒரே நாளில் போக்க இதுமட்டும் தான் சிறந்த வைத்தியம்!

இருமலை ஒரே நாளில் போக்க இதுமட்டும் தான் சிறந்த வைத்தியம்!

💫தமிழ்💫

இருமலானது இரண்டு வகையில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கிருமிகள் தாக்கத்தில் தொண்டையில் சளி உருவாகி, நுரையீரலுக்கு பரவி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

மற்றொரு வகை இருமலானது, தூசு, ரசாயனம் போன்ற பலவிதமான கிருமிகள் காரணங்களால் அலர்ஜி போன்று தொடர்ச்சியான வறட்டு இருமல் ஏற்படுகிறது.

வறட்டு இருமலை நிரந்தரமாக குணப்படுத்த, சூப்பரான டிப்ஸ் இதோ :-

தேவையான பொருட்கள்

பால்- 1 டம்ளர்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
முட்டை மஞ்சள் கரு – 1
செய்முறை

பாலை நன்றாக சூடுபடுத்தி அந்த பால் பொங்கி வரும் போது முட்டையின் மஞ்சள் கருவை கலந்து நன்றாக கலக்க வேண்டும்.

பின் அந்த பால் இளஞ்சூடாக இருக்கும் போது, அதில் தேன் கலந்து, அதை தினமும் இரவு உணவு சாப்பிட்டு முடித்ததும் குடித்து வர வேண்டும். இதனால் தீராத வறட்டு இருமல் குணமாகிவிடும்.

தேனை இப்படி பயன்படுத்தினால் மட்டுமே அதன் முழு பயனையும் பெற முடியும்!*

🔊 *தேனை இப்படி பயன்படுத்தினால் மட்டுமே அதன் முழு பயனையும் பெற முடியும்!*


பண்டைய காலத்திலிருந்தே தேன் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் தேனின் நன்மைகள் ஆயுர்வேதத்திலும் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளன. தேன் என்பது தேனீக்களால் பூக்களின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் திரவமாகும். இது பல கட்டங்களில் மிகவும் நீண்ட செயல்முறைக்குப் பிறகு தேனீக்களால் தயாரிக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் உள்ள தேன் ஒரு மருந்தாக பார்க்கப்படுகிறது. இப்போது உலகெங்கிலும் உள்ள மக்கள் இனிப்புக்காக தேனைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 

எந்த வடிவத்திலும் தேனைப் பயன்படுத்தலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு சமமாக நன்மை பயக்கும். அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு, பயன்படுத்தப்பட்ட தேன் சுத்தமானதா அல்லது கலப்படமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் கலப்படம் செய்யப்பட்ட தேனை சாப்பிடுவது பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தேனின் தரம் குறித்து மக்கள் எப்போதும் குழப்பமடைவார்கள். உண்மையான தேன் மிகவும் அடர்த்தியானது மற்றும் தண்ணீரில் சேர்க்கும்போது, ​​அது எளிதில் கரைவதில்லை, மாறாக அது கீழே உறைந்து போகும், அதே நேரத்தில் போலி தேன் தண்ணீரில் விரைவாக கரைகிறது.

தேனில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்:
தேனில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு மூலமாகும். பிரக்டோஸ், கார்போஹைட்ரேட், ரைபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் பி 6, வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் தேனின் முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
ஒரு தேக்கரண்டி தேனில் (21 கிராம்) 
64 கலோரிகள், 17 கிராம் சர்க்கரை (பிரக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ்) உள்ளது. இதில் கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் புரதம் எதுவும் இல்லை.

தேனின் முக்கிய ஆரோக்கியம் தேனின் நன்மைகள்:
1) வெட்டு அல்லது தீக்காயங்களுக்கு தேன் நன்மை பயக்கும்: –
தோல் வெட்டப்படும்போது அல்லது உரிக்கப்படும்போது, ​​தேனில் உள்ள ஆண்டிசெப்டிக் பண்புகள்  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தோலில்  இருக்கும் எரிந்த பகுதியை விரைவாக குணப்படுத்துகிறது மற்றும் சருமத்தை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

பயன்பாட்டு முறை: 
உங்கள் தோலில் லேசான கீறல் ஏற்பட்ட பகுதியில் அல்லது சில பகுதியில் எரிச்சல் இருந்தால் நீங்கள் தேனைப் பயன்படுத்தலாம். தேனைப் பயன்படுத்துவதால் எரிச்சல் குறையும், அந்த பகுதியில் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும்.

2) தேன் இருமல் நிவாரணத்திற்கு உதவுகிறது: உங்களுக்கு பல நாட்களாக குணமாகாத இருமல் என்றால், நீங்கள் தேனைப் பயன்படுத்த வேண்டும். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோய்த்தொற்று மேலும் வளரவிடாமல் தடுக்கிறது.  மேலும் இது கபத்தை நீர்த்துப்போகச் செய்கிறது.  இது கபத்தை எளிதில் வெளியே கொண்டு வருகிறது.

உட்கொள்ளும் முறை:
படுக்கைக்குச் செல்வதற்கு முன், ஒரு தேக்கரண்டி தேனை மந்தமான சூடு உடைய தண்ணீரில் கலக்கவும். இது சளியைக் குறைத்து இருமலில் இருந்து விரைவான நிவாரணத்தை அளிக்கிறது அல்லது இஞ்சி, தேன் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பான திரவத்தை நீங்கள் பருகலாம்.

3) எடை இழப்புக்கு தேனின் பயன்கள்:
உங்கள் எடை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தால், தேன் உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். தேனில் கொழுப்பு இல்லாததால் தவறாமல் தேனை குடிக்கவும். எடையை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, இது உடலின் கொழுப்பின் அளவையும் குறைக்கிறது.

நுகர்வு முறை:
ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் அரை எலுமிச்சை சாற்றை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான  தண்ணீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

4) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது:
தேனில் குறிப்பிடத்தக்க அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் இதயம் தொடர்பான பல நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. இது தவிர, தேனின் முக்கிய செயல்பாடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது பல தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

உட்கொள்ளும் முறை:
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தினமும் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி தேனை வெதுவெதுப்பான பாலுடன் கலந்து குடிக்கவும். பாலில் தேன் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

5) தோலுக்கு தேனின் பயன்கள்:
தேன் சருமத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது சுற்றியுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் மற்றும் தோல் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது. மிகவும் வறண்ட சருமம் உள்ளவர்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க தேனைப் பயன்படுத்த வேண்டும்.

பயன்பாட்டு முறை:
*வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு: 
ஒரு தேக்கரண்டி தேனை எடுத்து சருமத்தின் வறண்ட பகுதியில் தடவவும். இது 15-20 நிமிடங்கள் உலர விடவும், பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். ஒரு வாரத்தில் 2-3 முறை இதைப் பயன்படுத்துங்கள்.

*தோல் வெண்மைக்கு: 
முகத்தின் பிரகாசத்தை அதிகரிக்க, நீங்கள் தேனுடன் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் தேன் மற்றும் எலுமிச்சை, தேன் மற்றும் பால், தேன் மற்றும் வாழைப்பழம் மற்றும் தேன் மற்றும் தயிர் ஆகியவற்றைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளை தயார் செய்யலாம்.

ரொம்ப ஒல்லியா அசிங்கமா இருக்கீங்களா? குண்டாக ஆசைப்படுறீங்களா? இத ஃபாலோ பண்ணுங்க...*

🔊 *ரொம்ப ஒல்லியா அசிங்கமா இருக்கீங்களா? குண்டாக ஆசைப்படுறீங்களா? இத ஃபாலோ பண்ணுங்க...*


எங்க பார்த்தாலும் எடையைக் குறைக்கும் செய்திகளாக உள்ளதா? நீங்கள் உடல் எடையை அதிகரிக்க நினைப்பவரா? அதற்கான வழிகளை அன்றாடம் தேடுபவரா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. உடல் எடையைக் குறைக்கும் வழிகளை ஒருபுற மக்கள் தேடும் அதே வேளையில் எடையை அதிகரிக்கும் வழிகளைத் தேடும் மக்களும் உள்ளனர். ஆம், எப்படி ஒல்லியாவது கடினமான ஒரு விஷயமோ, அதேப் போல் தான் குண்டாவதும் அவ்வளவு எளிதானது அல்ல.



உலகில் பல மக்கள் மிகவும் ஒல்லியாக ஓமக்குச்சி போன்று காணப்படுவதுண்டு. அத்தகையவர்களைக் கண்டால் வயதிற்கு ஏற்ற உடலமைப்பைக் கொண்டிருக்கமாட்டார்கள். இந்நிலையில் அவர்கள் பலரது கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாவதுண்டு. இதனால் ஒல்லியாக இருக்கும் பலர் தங்களின் உடல் எடையை அதிகரிக்க எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் உணவுகள் என ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள். இப்படி ஒருவரது உடல் எடை அதிகரித்தால், அது அவர்களின் ஆரோக்கியத்திற்கே ஆபத்தை உண்டாக்கும். எனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், எப்போதும் ஆரோக்கியமான வழியைத் தேர்ந்தெடுப்பதே பாதுகாப்பானதும் நல்லதும் கூட.
அதற்கு தமிழ் போல்ட்ஸ்கை உடல் எடையை அதிகரிக்க உதவும் ஒருசில ஆரோக்கியமான பழக்கங்களை கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் ஆரோக்கியமான வழியில் எடையை அதிகரித்துக் காட்டலாம்.



வழி #1

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதுவும் பளுத்தூக்கும் பயிற்சியை கட்டாயம் செய்ய வேண்டும். குறிப்பாக ஓவர்ஹெட் ப்ரஸ், செஸ்ட் ப்ரஸ், பெண்ட் ஓவர் ரோஸ், லஞ்சஸ், கர்ல்ஸ் மற்றும் ஸ்டிவ் டெட்லிப்ட் போன்ற பயிற்சிகளை ஒரு செட்டிற்கு 8-12 தடவை என தினமும் 4-5 செட் செய்ய வேண்டும். இந்த பளுத்தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, முடிந்த அளவு அதிக அளவிலான எடையைத் தூக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஆறு நாட்கள் செய்து, ஒரு நாள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.



வழி #2

எப்போதும் கலோரி அதிகமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். நட்ஸ், உலர் பழங்கள், விதைகள், உலர்ந்த பெர்ரிப் பழங்கள் மற்றும் தேங்காய் போன்றவற்றை எப்போதும் கையில் வைத்துக் கொண்டு அவ்வப்போது சாப்பிட வேண்டும். தினமும் உட்கொள்ளும் கலோரியின் அளவை அதிகரிப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.



வழி #3

அன்றாடம் உண்ணும் உணவுகளில் கலோரிகள் மட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அதிகமாகவும், சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைவாகவும் இருக்க வேண்டும். சர்க்கரையில் வெற்றுக் கலோரிகள் உள்ளதால், அதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான உணவுகளான உருளைக்கிழங்கு, சீஸ் சூப், கொழுப்பு இல்லாத பால் சேர்க்கப்பட்ட சூப், பால், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் மில்க் ஷேக் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.



வழி #4

ஜூஸ் குடிப்பதாக இருந்தால், ஒரே ஒரு பழம் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸிற்கு பதிலாக பல பழங்களால் ஆன ஜூஸைத் தேர்ந்தெடுத்துக் குடிப்பது நல்லது. ஆப்பிள், பீச், பெர்ரி, வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள் ஒன்றாக உட்கொள்ள ஏற்றது. ஜூஸ் வழியே கலோரிகளை அதிகரிக்க நினைத்தால், அவகேடோ, நட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ்களைக் குடியுங்கள். ஜூஸ்களை அடிக்கடி குடிப்பதன் மூலம், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சப்ளிமெண்ட்டுகள் கிடைத்து, உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.



வழி #5

டெசர்ட்டுகளை உண்பது ஆரோக்கியமானது மற்றும் இது உட்கொள்ளும் கலோரியின் அளவை அதிகரிக்கவும் உதவும். யோகர்ட்டில் க்ரனோலா மற்றும் பழங்கள் சேர்த்து உண்பது, தவிடு மஃப்பின்கள் போன்றவை மிகவும் சிறப்பான டெசர்ட்டுகளாகும். உடல் எடையை அதிகரிக்க குறிப்பிட்ட அளவு கலோரிகளை எடுப்பது அவசியமாகிறது. எனவே எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், ஆரோக்கியமான உணவுகளின் மூலம் கலோரிகளின் அளவை அதிகரிக்க வேண்டும்.



வழி #6

பானங்களின் மூலம் கலோரி அளவை அதிகரிக்க நினைப்பவர்கள், கவனமாக இருக்க வேண்டும். சோடா, பீர், ஒயின் மற்றும் இதர சோம பானங்கள் உடல் எடையை அதிகரிக்க சிறப்பான பானங்கள் இல்லை. இவற்றில் இருப்பது வெற்று கலோரிகள் ஆகும். அதாவது இவை ஆரோக்கியமற்ற உடல் பருமனுக்கு வழிவகுக்கும். நற்பதமான பழச்சாறுகள் மற்றும் பானங்களான மாம்பழம் மில்க் ஷேக் போன்றவை உடல் எடையை அதிகரிக்க சிறப்பான பானமாகும். எனவே முடிந்தால் தினமும் ஒரு மாம்பழ மில்க் ஷேக் குடியுங்கள்.

உடல் எடையை குறைப்பது இவ்வளவு சுலபமா…காலையில் இதை மட்டும் சாப்பிடுங்க….பிறகு எப்படி ஸ்லிம்மா ஆகுறீங்கன்னு பாருங்க*

🔊 *அட….உடல் எடையை குறைப்பது இவ்வளவு சுலபமா…காலையில் இதை மட்டும் சாப்பிடுங்க….பிறகு எப்படி ஸ்லிம்மா ஆகுறீங்கன்னு பாருங்க*



ஒரு சிறந்த எடையை அடைவது அல்லது இடுப்பைச் சுற்றியுள்ள கூடுதல் அங்குலங்களைக் குறைப்பது அனைவரின் கனவு. ஆனால் அதற்கு வலுவான விருப்பம் மற்றும் விஞ்ஞான உண்மைகளை ஆதரிக்கும் அணுகுமுறை தேவை. உடலுக்குத் தேவையானதை விட அதிகமான கலோரிகளை உட்கொள்வதை நீங்கள் கட்டுப்படுத்தும்போது, ​​தற்போதுள்ள சேமிக்கப்பட்ட கொழுப்பை உடல் செயல்பாடுகளின் மூலம் எரிக்கும்போது கொழுப்பு இழப்பு அல்லது எடை இழப்பு அடைய முடியும். 

குறைந்த கலோரி உட்கொள்ளலுக்கான ஒரு சிறந்த அணுகுமுறை கொழுப்பு, வறுத்த மற்றும் கலோரி நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது. அப்படிப்பட்ட உடல் எடையை குறைக்க உதவும் காலை உணவை தான் இந்த பதிவில் நாம் காண உள்ளோம். 

◆சியா விதைகள்:

சியா விதைகள் என்பது வேறு ஒன்றும் இல்லை சப்ஜா விதைகள் தான். இவை நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இரண்டு தேக்கரண்டி சியா விதைகள் சுமார் 11 கிராம் நார்ச்சத்து கொடுக்கின்றன. பழம் அல்லது காய்கறி சாலடுகள், பழச்சாறுகள், மோர் அல்லது சூப் போன்ற மாறுபட்ட தயாரிப்புகளில் சேர்த்து இதனை உட்கொள்ளலாம். 
துளசி நீர், ஜீரா, அஜ்வைன், புதினா நீர் போன்றவற்றில்  சியா ஜெல்லை சேர்த்து காலை உணவோடு இணைக்கலாம். காலை உணவின் பகுதியைக் குறைத்து அதை ஃபைபர் மற்றும் புரதத்துடன் மாற்றுவதே குறிக்கோள். ஆனால் 2 தேக்கரண்டி சியா விதைகளில் 9 கிராம் கொழுப்பு உள்ளதால் இதனை மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

◆கலப்பு தினை கஞ்சி:

தினையில் அதிக நார்ச்சத்து இருப்பதால், அது வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு செல்ல நீண்ட நேரம் எடுக்கும். இது திருப்தியை அளிக்கிறது மற்றும் உணவு நுகர்வை குறைக்கிறது. ஃபிங்கர், பெர்ல், புரோசோ, கோடோ, ஃபோக்ஸ்டைல், பார்ன்யார்ட் மற்றும் சிறிய தினை போன்ற பல தினைகள் உள்ளன. 
ஒற்றை தானியங்கள் அல்லது வெவ்வேறு தினைகளின் கலவையானது அதிக சத்தான காலை உணவை உண்டாக்குகிறது. எல்லா தினைகளிலும், ராகி அல்லது விரல் தினை மிகவும் பிரபலமானது. இதில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது பசியின்மை அடக்கியாக செயல்படுகிறது. இதனால் எடை இழப்புக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

◆கீன்வா :

கீன்வா என்பது ஒரு சீமைத்தினை ஆகும். இதில்  புரதங்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதனால் உடல் எடை குறைக்க உதவுகிறது. அதிக சுவை பெற, அதை உட்கொள்ளும் முன் வறுக்கலாம். உப்மா, புலாவ், கிச்சடி போன்ற மாறுபட்ட தயாரிப்புகளை நீங்கள் செய்யலாம்.

◆ஓட்ஸ் :

ஓட்ஸ் ஒரு மலிவு, உயர் ஃபைபர், கடினமான  கார்போஹைட்ரேட் ஆகும்.  இது எந்தவொரு தயாரிப்பிலும் நன்றாக கலக்கிறது. நீங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க விரும்பினால் இதனை கொண்டு பல விதமான காலை உணவுகளை தயார் செய்யலாம். உடனடி ஓட்ஸ்  பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும். நீங்கள் ஓட்ஸை வேகவைத்து காய்கறிகள், பருப்பு, சாம்பார், தயிர், காய்கறி குழம்பு அல்லது முட்டை போன்றவற்றை சேர்த்து பயன்படுத்தவும். 

◆முட்டை:

எடை இழப்பில் புரதம் ஒரு முக்கியமான மற்றும் இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். முட்டைகள் புரதத்தின் அதிக மூலமாக அறியப்படுகின்றன. புரதங்கள் வளர்சிதை மாற்றத்தை 15 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கின்றன. மேலும் மனநிறைவையும் தருகின்றன. நீங்கள் காலை உணவின் ஒரு பகுதியை இரண்டு வேகவைத்த முட்டை வெள்ளையோடு எடுத்து கொள்ளலாம். அவை உங்களை நீண்ட நேரத்திற்கு  வயிறு நிரம்பிய உணர்வோடு வைத்திருக்கும் மற்றும் பசியை குறைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தும் நீர்க்குமளி எனப்படும் வாட்டர் ஆப்பிள் நீரிழிவு நோய்க்கு நல்லதா*

🔊 *நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தும் நீர்க்குமளி எனப்படும் வாட்டர் ஆப்பிள் நீரிழிவு நோய்க்கு நல்லதா*



வாட்டர் ஆப்பிள் சுகாதார நன்மைகள்:
1.தீவிர சேதத்தை எதிர்த்துப் போராடுகிறது:
வாட்டர் ஆப்பிளில் வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள் எனப்படும் பிற பினோலிக் கலவைகள் நிறைந்துள்ளன. இவை இலவச தீவிரவாதிகள், மாசுபடுத்திகள் மற்றும் நச்சு இரசாயனங்கள் காரணமாக உயிரணுக்களின் சேதத்தைத் தடுக்கின்றன, அவை இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் கீல்வாதம் போன்ற சுகாதார நோய்களுக்கு வழிவகுக்கும். கதிர்வீச்சு, புகையிலை அல்லது புகை ஆகியவற்றால் உடல் வெளிப்படும் போது மற்றும் உணவை உடைக்கும் செயல்பாட்டின் போது உடலில் இலவச தீவிரவாதிகள் உருவாகின்றன. நீர் ஆப்பிள்களின் ஆக்ஸிஜனேற்ற சொத்து உடலில் உள்ள நச்சுக்களை திறம்பட எதிர்த்து நிற்கிறது.

போல்ஸ்டர்ஸ் நோயெதிர்ப்பு செயல்பாடு:

வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்கள் உற்பத்தியை மேம்படுத்துகிறது மற்றும் செயல்பாட்டிலும் உதவுகிறது. வைட்டமின் சி ஒரு ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், இது ஆக்ஸிஜனேற்ற சேதத்தை நீக்கி, மென்மையான செயல்பாட்டை மேம்படுத்துகிறது. வைட்டமின் சி ஜலதோஷத்தை எதிர்க்க நோயெதிர்ப்பு சக்தியை திறம்பட அதிகரிக்கிறது.
வாட்டர் ஆப்பிள் சுகாதார நன்மைகள்

பக்கவாதம் குறைக்கப்பட்ட ஆபத்து:

வாட்டர் ஆப்பிளில் சோடியம் மற்றும் கொழுப்பின் மிகக் குறைவான அளவு வீக்கம், ஆக்ஸிஜனேற்ற சேதம், இருதய ஆரோக்கியம், பெருந்தமனி தடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் எண்டோடெலியல் ஆரோக்கியம் போன்ற பக்கவாதம் மற்றும் சுகாதார நோய்களுக்கான வாய்ப்புகளை குறைக்கிறது. உடலில் பிளேக்கின் வளர்ச்சி பக்கவாதம் அல்லது மாரடைப்பை ஏற்படுத்துகிறது, இது வைட்டமின் சி மூலம் குறைக்கப்படலாம்.


நல்ல எச்.டி.எல் கொழுப்பை அதிகரிக்கிறது:

வாட்டர் ஆப்பிள் என்பது நியாசினின் மூலமாகும், இது அமைப்பில் கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது. நியாசின் நல்ல எச்.டி.எல் கொழுப்பின் அளவை மேம்படுத்துகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் ட்ரைகிளிசரைடுகள் மற்றும் இரத்தத்தில் மோசமான எல்.டி.எல் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது:

வழக்கமான உணவில் நீர் ஆப்பிள்களை உட்கொள்வது, உயிர்வேதியியல் செயல்முறைகளில் என்சைம்களுக்கு வினையூக்கியாக செயல்படுவதன் மூலம், உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்களை ஒருங்கிணைப்பதை துரிதப்படுத்த உதவுகிறது. இது சரியான பசியையும் வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கிறது மற்றும் உகந்த உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.


மலச்சிக்கலைத் தடுக்கிறது:

நீர் ஆப்பிளில் உள்ள உணவு நார்ச்சத்து பொருள் இயக்கத்தில் செரிமான அமைப்பை ஆதரிக்கிறது மற்றும் மலத்திற்கு மொத்தமாக சேர்க்கிறது, இது ஒழுங்கற்ற குடல் செயல்பாடு அல்லது மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும். இது ஆரோக்கியமான எடையை ஆதரிக்கிறது மற்றும் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

தசை பிடிப்பை குணப்படுத்துகிறது:

வாட்டர் ஆப்பிளில் போதுமான அளவு பொட்டாசியம் மற்றும் நீர் உள்ளது. இது தசைகளின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் குறைந்த அளவு பொட்டாசியம், சோடியம் மற்றும் நீரிழப்பு காரணமாக ஏற்படும் தசைப்பிடிப்பைக் குறைக்கிறது.


உடலை ஹைட்ரேட் செய்கிறது:

வாட்டர் ஆப்பிள்களில் ஏராளமான நீர் உள்ளடக்கம் மக்கள் பெரும்பாலும் நீரிழப்புக்குள்ளாகும் போது, ​​கோடைகாலத்தில் தாகத்தைத் தணிக்கவும், உடலை குளிர்விக்கவும் சரியான வழியாகும். பழத்தை அப்படியே உட்கொள்ளலாம் அல்லது ஒரு சாற்றில் பிழிந்து, குளிர்ந்து, பருகலாம், போதுமான நீர் விநியோகத்தை உறுதிசெய்யவும், உடல் உயிரணுக்களில் எலக்ட்ரோலைட் நிரப்பவும் முடியும்.

கல்லீரல் பாதிப்பை குணப்படுத்துகிறது:

கல்லீரல் சேதம் ஆல்கஹால், இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, தொற்று மற்றும் ஹெபடோடாக்ஸிக் மருந்துகளின் அதிகப்படியான நுகர்வு காரணமாக ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது. வாட்டரி ரோஸ் ஆப்பிள் கல்லீரல் வியாதிகளுக்கு திறம்பட சிகிச்சையளிக்க உதவும் ஹெபடோபிரோடெக்டிவ் முகவர்களைக் கொண்டுள்ளது.
நீரிழிவு நோய்க்கு வாட்டர் ஆப்பிள் நல்லதா?

வாட்டர் ஆப்பிள்களில் சக்திவாய்ந்த ஆண்டிஹைபர்கிளைசெமிக் பண்புகள் உள்ளன, அதாவது அவை நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றன. வெறும் 2 இன் குறைந்த கிளைசெமிக் சுமை மதிப்புடன், அவை உடலில் நுழையும் உணவில் உள்ள சர்க்கரைகளை படிப்படியாக பதப்படுத்த உதவுகின்றன, எனவே இரத்த குளுக்கோஸ் அளவை ஆபத்தான அளவில் அதிகரிப்பதை கண்காணிக்கின்றன.

ஜம்போசின் என்பது வாட்டர் ஆப்பிள்களில் உள்ள ஒரு பயோஆக்டிவ் படிக ஆல்கலாய்டு ஆகும், இது மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதை இடைநிறுத்துகிறது, இதனால் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது, குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு.
எனவே, நீரிழிவு நோயாளிகளால் வாட்டர் ஆப்பிள்களை மிதமான அளவில் உட்கொள்ளலாம். இருப்பினும், பக்கவிளைவுகள் ஏற்படாமல் இருக்க மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கவும்.

உங்க குழந்தைகளின் மூளை ஸ்மார்டா வேலை செய்யணுமா? இந்த கீரையை மட்டும் கொடுத்து பாருங்க*

🔊 *உங்க குழந்தைகளின் மூளை ஸ்மார்டா வேலை செய்யணுமா? இந்த கீரையை மட்டும் கொடுத்து பாருங்க*



தமிழில் வல்லாரை கீரை என்று அழைக்கப்படும் சென்டெல்லா ஆசியட்டிகா (Centella asiatica)-வில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் பல தாதுக்கள் நிறைந்துள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் ஆரோக்கியத்துக்கும் ஏற்ற சரியான விகிதத்தில் தேவையான அனைத்து பொருட்களும் இதில் உள்ளன. மேலும், மூளையின்  ஸ்மார்ட் செயல்பாட்டிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன.

வல்லாரை கீரை என்பது வாய் அல்சர் பிரச்சினைக்கு ஒரு சிறந்த மருந்து ஆகும். வாய் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த வல்லாரை கீரையின் 3 அல்லது 5 இலைகளை பச்சையாக எடுத்துக்கொண்டு காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மென்று சாப்பிடலாம். இவ்வாறு செய்துவர அற்புதமான குணப்படுத்தும் விளைவை சில நாட்களுக்குள் காணலாம்.

இது நினைவக சக்தியையும் மேம்படுத்துகிறது. தொண்டை-அடைப்பு, காய்ச்சல் மற்றும் சளி மற்றும் உடல் சோர்வு போன்ற பல சிக்கல்களுக்கு இது ஒரு சிறந்த சிகிச்சை தீர்வாகும். இது மலச்சிக்கலைக் குணப்படுத்துவதோடு கண்கள் மங்கலாக தெரிவதையும் சரி செய்து கண்பார்வையை கூர்மையாக்குகிறது.
உடல் எரிச்சல், மூட்டுகளில் வலி (முழங்கால்கள் மற்றும் கைகள்), வீக்கம், மஞ்சள் நிற சிறுநீரை கடந்து செல்வது போன்ற புகார்கள்.
வல்லாரை கீரையால் செய்யப்பட்ட சட்னி மலச்சிக்கலை குணப்படுத்தும். கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இதனுடன் எந்த உணவுகளையும் தயாரிக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்ப்பது அசல் சுவையை கெடுத்துவிடும், மேலும் அதன் மருத்துவ குணப்படுத்தும் பண்புகளையும் நடுநிலையாக்கக்கூடும்.

மலச்சிக்கலைக் குணப்படுத்துவதைத் தவிர, வல்லாரை கீரை கல்லீரல் மற்றும் வயிற்றின் புண் நிலையையும் குணப்படுத்துகிறது. வல்லாரை கீரை இலைகளை பகல் நேர நிழலில் உலர வைக்கவும். ஒரு கப் பாலில் ஒரு ஸ்பூன் பொடியைக் கலந்து இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் குடிக்கவும். இது செரிமான அமைப்பில் உள்ள புழுக்களைக் கொல்லும். குழந்தைகளின் வயிற்றுப்போக்கு நிலையை குணப்படுத்தவும் இது பயன்படுகிறது.

வல்லாரை கீரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் ஆகியவற்றின் கூடுதல் பொருட்களைப் பயன்படுத்தி ‘சாம்பார்’ தயாரிக்கவும் பயன்படுத்தலாம். இல்லையெனில், சிறிது அளவு உளுந்து வறுத்து, வணங்கிய வல்லாரை கீரை, தேங்காய், உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து ஒரு சுவையான துவையல் அல்லது சட்னி தயாரித்தும் எடுத்துக்கொள்ளலாம். அப்படியில்லையெனில், வல்லாரை கீரையை பச்சைப்பயறு உடன் சேர்த்து குழம்பு செய்தும் சாப்பிடலாம்.

முட்டைக்கோஸ் எலும்புக்கு வலிமை சேர்ப்பது முதல் சருமத்திற்கு அழகை சேர்ப்பது வரை அனைத்துக்கும் இது ஒன்று போதும்*

🔊 *எலும்புக்கு வலிமை சேர்ப்பது முதல் சருமத்திற்கு அழகை சேர்ப்பது வரை அனைத்துக்கும் இது ஒன்று போதும்*



முட்டைக்கோஸ் அதன் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றது. பாலிபினால்கள் சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளில் ஒன்றாகும். இது உடலின் செல்களை கட்டற்ற ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும் முக்கிய ஆக்ஸிஜனேற்றிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதோடு, முட்டைக்கோஸில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் C மற்றும் வைட்டமின் K ஆகியவை முட்டைக்கோஸில் உள்ள முக்கியமான வைட்டமின்கள் ஆகும்.
இது தவிர, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற பிற தாதுக்கள் இருப்பதால், முட்டைக்கோஸ் தண்ணீரை உட்கொள்வது பல உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.
முட்டைக்கோஸ் தண்ணீரை எவ்வாறு தயாரிப்பது?

எனவே, முட்டைக்கோஸ் தண்ணீரை தயாரிப்பதற்கான எளிய வழி இங்கே பாருங்கள்:

ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து, பாட்டிலின் அரை பாகம் வரை துண்டாக்கப்பட்ட முட்டைக்கோஸ் கொண்டு நிரப்பவும்.

பாட்டில் நிரம்பும் வரை தண்ணீர் சேர்க்கவும்.

கடல் உப்பு ஒரு டீஸ்பூன் சேர்த்து ஜாடியை மூடி வைக்கவும்.

ஒரு இரவில் அல்லது ஒரு நாள் முழுவதும் செங்குத்தாக அதை அப்படியே வைத்துவிடுங்கள்.

ஒரு கிளாஸ் எடுத்து தண்ணீரை வடிக்கவும், ருசிக்கு ஏற்ப உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

அதை நன்றாக கலக்கி பின்னர் குடிக்கவும்.

பார்வையை மேம்படுகிறது:

முட்டைக்கோஸ் பீட்டா கரோட்டின் கொண்டிருக்கிறது, இது உங்கள் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. முட்டைக்கோஸ் நீரை தவறாமல் உட்கொள்வது மாகுலர் சிதைவு ஏற்படுவதை தடுக்க உதவுகிறது மற்றும் உங்கள் கண்ணின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

சருமத்திற்கு நல்லது:

முட்டைக்கோஸ் தண்ணீரை தவறாமல் உட்கொள்வது சருமத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. அத்தியாவசிய பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால், முட்டைக்கோஸ் நீர் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஏனெனில், ஃப்ரீ ரேடிகல்கள் முகப்பரு போன்ற தோல் பிரச்சினைகள் மற்றும் தீவிர வறட்சி போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.

எலும்புகளுக்கு நல்லது:

முட்டைக்கோஸ் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து எலும்புகள் சிதைவடையாமல் பலவீனமடையாமல் பாதுகாக்க உதவுகின்றன. ஒரு கிளாஸ் முட்டைக்கோஸ் தண்ணீரை தவறாமல் குடிப்பது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

எடை இழப்புக்கு உதவுகிறது:

முட்டைக்கோஸ் நீரை உட்கொள்வது உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முட்டைக்கோஸ் உடலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாலும் நிறைந்துள்ளது மற்றும் எந்தவித கொழுப்போ அல்லது அதிகப்படியான கலோரிகளையோ கொண்டிருக்கவில்லை. இது எடை இழப்புக்கு உதவுகிறது.

கல்லீரலுக்கு நல்லது:

ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்ற முட்டைக்கோஸ் நீரில் ‘இந்தோல் -3 கார்போனைல்’ (Indole-3 Carbonile) எனப்படும் மிகச்சிறந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, இது கல்லீரலை நச்சுத்தன்மை அற்றதாக மாற்ற உதவுகிறது, இதனால் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?*

🔊 *ஒரு வாரம் தொடர்ந்து சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?*


உலகின் மிக அழகான பூக்களில் சூரியகாந்தி பூக்களும் அடங்கும். இந்த பூக்களின் முழு ரகசியமும் சூரியகாந்தி விதைகளில் மறைக்கப்பட்டுள்ளது. உண்மையில், சூரியகாந்தி விதைகளின் மருத்துவ குணங்கள் பற்றி அறிய பல ஆய்வுகள் இதுவரை செய்யப்பட்டுள்ளன. அவை பல ஆண்டுகளாக உடல் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.  

எனவே இது ஒரு சூப்பர்ஃபுட் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. அதன் விதைகள் பல மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இதன் காரணமாக இது மிகவும் பிரபலமாகக் கருதப்படுகிறது. பல ஊட்டச்சத்துக்கள் அதன் நுகர்வு மூலம் உடலில் நிரப்பப்படுகின்றன. இதனை  உட்கொண்டால் பல நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை பெறலாம்.  சூரியகாந்தி விதைகளை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

சூரியகாந்தி விதைகளின் நன்மைகள்:


◆சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் C உள்ளது. இது இதய நோய்களில் இருந்து நம்மை காக்கும். மேலும், இதில் உள்ள வைட்டமின் E,  தமனிகளில் கொழுப்பு உறைவதைத் தடுப்பதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது. கால் கப் சூரியகாந்தி விதையை தினசரி எடுத்து வரும்போது 90 சதவீதம் வைட்டமின் E கிடைத்து விடுகிறது.

◆அவற்றில் மோனோ மற்றும் பாலி சாச்சுரேட்டட்  கொழுப்புகள் உள்ளன. அவை நல்ல கொழுப்புகளாக கருதப்படுகின்றன. கெட்ட கொழுப்பைக் குறைக்க அவை வேலை செய்கின்றன. இது தவிர, அவற்றில் ஏராளமான நார்ச்சத்துகளும் உள்ளன, அவையும்  கொழுப்பைக் குறைக்கும்.

◆சூரியகாந்தி விதைகளில் அதிக அளவு மெக்னீசியம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பல ஆராய்ச்சிகளின்படி, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் 80 கிராம் சூரியகாந்தி விதைகளை சாப்பிட வேண்டும்.


◆சூரியகாந்தி விதைகளின் உண்டால் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.  ஏனெனில் அதில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது.

◆அதன் விதைகள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.  ஏனெனில் இதில் ஏராளமான கொழுப்பு, தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் உள்ளன.

◆பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் இருப்பவர்களுக்கு இதன் உட்கொள்ளல் நன்மை பயக்கும்.

◆சூரியகாந்தி விதைகள் சருமத்தை மேம்படுத்துகின்றன.  ஏனெனில் இதில் வைட்டமின் E மற்றும் கேப்பர் உள்ளன.

◆வைட்டமின் E, ஃபைபர் மற்றும் செலினியம் பெருங்குடலில் உண்டாகும்  புற்றுநோயிலிருந்து நம்மை  பாதுகாக்கிறது.


◆இந்த விதைகளில் உள்ள ஏராளமான நார்ச்சத்து மலச்சிக்கல் தீர்க்க உதவுகிறது.

◆தோல் மற்றும் தோல் நோய்களை அகற்றவும் பெரிதும் கைக்கொடுக்கும்.

◆சூரியகாந்தி விதை எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எனவே சருமத்தை பாக்டீரியாவிலிருந்து  பாதுகாத்து மேலும் அவை வளரவிடாமல் தடுக்கின்றன. சூரியகாந்தி எண்ணெய் அரிப்பு மற்றும் தோல் அழற்சி நோயைத் தடுக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

◆இது நம் மனதை அமைதியாக வைத்திருக்கிறது. இதில் உள்ள மெக்னீசியம் மூளையின் நரம்புகளை அமைதிப்படுத்துகிறது மற்றும் மன அழுத்தம்,  ஒற்றைத் தலைவலியை நீக்குகிறது.

வயிற்றுக் கோளாறுகளை தீர்க்கும் 19 மருத்துவ குறிப்புகள்

வயிற்றுக் கோளாறுகளை தீர்க்கும் 19 மருத்துவ குறிப்புகள் !

1.ஒரு ஸ்பூன் சீரகத்தை எடுத்து சிறிதளவு நீர்விட்டு அரைத்து நீரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம் அடங்கும்.

2.ஒரு துண்டு இஞ்சியை நசுக்கி ஒரு கப் நீரில் போட்டு, பாதியாகும் வரை காய்த்து நீரை மட்டும் வடிகட்டி சாப்பிட வயிற்று உப்புசம், புளி ஏப்பம் குணமாகும்

3.ஒரு கரண்டி இஞ்சி சாறுடன், ஒரு கரண்டி கரிசலாங்கண்ணி இலை சாறை கலந்து மூன்றுவேளை சாப்பிட வயிற்று வலி குணமாகும்

4.வெந்தயக்கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து கூட்டுவைத்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் நீங்கும்

5.சிறிதளவு பேய் மிரட்டி இலையை பிழிந்து சாறு எடுத்து, ஒரு கரண்டி சாறை ஒரு கப் தண்ணீரில் கலந்து சாப்பிட வயிற்றுவலி தீரும்

6.ஒரு வெற்றிலையோடு சிறிதளவு சீரகம், உப்பு இரண்டையும் சேர்த்து சாப்பிட வயிற்று அஜீரணம் நீங்கும்

7.ஒரு கரண்டி வெற்றிலைச் சாறு குடிக்க வயிற்று உப்புசம் தீரும்

8.சிறிதளவு சீரகம், உப்பு இரண்டையும் சேர்த்து தின்று சிறிதளவு வெந்நீர் குடிக்க வயிற்றுவலி குணமாகும்

9.எலுமிச்சை சாறில் சிட்டிகை அளவு ஆப்ப சோடா மாவை போட்டு கலக்கி குடித்தால் வயிற்றுவலி குணமாகும்

10.சிறிதளவு மிளகு, சீரகம், உப்பு இம்மூன்றையும் எடுத்து நன்றாக அரைத்து வாயில் போட்டு விழுங்கி சிறிதளவு குடிதண்ணீர்  குடித்து விட்டால் எந்தவித வயிற்றுவலியானாலும் உடனே குணமாகும்

11.சுக்கை இடித்து தூளாக்கி, அரை கரண்டி தூளை எடுத்து, இதே அளவு சர்க்கரையும் சேர்த்து வாயில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுங்கினால் வயிற்றுவலி குணமாகும்

12.ஐம்பது கிராம் ஓமத்தை எடுத்து ஒரு சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். சிவக்க வருத்தபின் ஆறவைத்து, நன்றாக உமி போகும் வரை பிசைந்து இதனுடன் பத்துகிராம் பனை வெல்லத்தை சேர்த்து அரைத்து காலை. மாலை சாப்பிட வயிற்று உப்புசம் தீரும்.

13.சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை சம எடை விதம் எடுத்து வறுத்து பொடியாக்கி பசுநெய்யில் கலந்து சாப்பிட்டால் வயிற்று கோளாறுகள் தீரும்.

14.சிறிதளவு பாகல் இலைகளை எடுத்து பிழிந்து சாறு எடுத்து இத்துடன் சிறிதளவு மிளகுப்பொடி மற்றும் நெய் சேர்த்து குழைத்து சாப்பிட வயிற்று வலி, அஜீரணம், பொருமல் நீங்கும்.

15.சுடுநீரில் மிளகு பொடியையும், பெருங்காய பொடியையும் கலந்து குடிக்க வாயுக் கோளாறுகள் தீரும்.

16.ஒரு கரண்டி இஞ்சி சாறுடன், ஒரு கரண்டி துளசி இலை சாறு கலந்து காலை ஒரு கரண்டி வீதம் ஏழு நாட்கள் சாப்பிட வாயுத் தொல்லை தீரும்.

17.பத்து கிராம் பிரண்டை, பத்துகிராம் ஓமம், இரண்டையும் தட்டி ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு, ஒரு டம்ளராக சுண்டும் அளவிற்கு காய்த்து ஒரு நாள் மூன்று வேலை மூன்று கரண்டி விதம் குடித்துவர, அஜீரண வயிற்று போக்கு குணமாகும்.

18.இள முருங்கை மரத்தின் பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து, ஒரு லிட்டர் நீர்விட்டு கால்பாகமாக சுண்டக்காய்த்து அதில் கால் லிட்டர் விளக்கெண்ணெய் சேர்த்து நீர் சுண்டும்வரை காய்த்து வடி கட்டி, காலையில் அரை அவுன்ஸ் விதம் சாப்பிட வாயுக்  கோளாறு தீரும்.

19.இந்து கிராம் விதம் கிராம்பு, சுக்கு, ஓமம், இந்துப்பு இவைகளை எடுத்துக்கொண்டு, நன்கு பொடியாக இடித்து, சிட்டிகைப் பொடியை சாப்பிட செரிமானம் ஏற்படும், பசி கூடும்.

வெங்காய தேநீர் நன்மைகள் !வெங்காய தேநீர் பருகினால் இதய நோய் வராமல் தற்காத்து கொள்ளலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

வெங்காய தேநீர் நன்மைகள் !

வெங்காய தேநீர் பருகினால் இதய நோய் வராமல் தற்காத்து கொள்ளலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

வெங்காயத்தில் இருக்கும் குர்செடின் மற்றும் பிளாவனோல் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும் உதவுகிறது.

பலவகையான தேநீர்கள் புழக்கத்தில் இருக்கின்றன. வெங்காயத்தில் தயாரிக்கப்பட்ட தேநீர் பருகுவது வழக்கத்திற்கு மாறானது என்றாலும் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாகவும் அமையும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.

வெங்காய தேநீர் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் – 1
பூண்டு பல் – 3
தேன் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
பிரியாணி இலை – சிறிதளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்கவைக்க வேண்டும். பிறகு வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி அதோடு பிரியாணி இலை சேர்த்து கொதிக்கும் தண்ணீரில் போடவும்.

வெங்காயம், பூண்டு நன்றாக வெந்ததும் தண்ணீர் நிறம் மாறத்தொடங்கும். அதன் பிறகு பாத்திரத்தை இறக்கி வடிகட்டிக்கொள்ளவும். இதில் தேன், லவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் பருகலாம்.

உடல் எடையை குறைக்க வீட்டு மருத்துவமே போதுங்க!!!

உடல் எடையை குறைக்க வீட்டு மருத்துவமே போதுங்க!!! 

வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம் தெரிந்து கொள்ளுங்கள்.

உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட இதோ சில முக்கியமான குறிப்புகள்.

1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.

காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும். தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

பிரஷ்ஷான தக்காளியுடன் வெங்காயத்தை சாப்பிட்டு பிறகு எலுமிச்சை சாற்றை குடிக்கவும். இஞ்சியை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதை கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்த பிறகு எலுமிச்சை துண்டங்களை சேர்க்கவும். இதனை சூடாகவோ அல்லது ஆறிய பிறகு பாட்டிலில் ஊற்றி வைத்து போகும் இடங்களுக்கு கொண்டு செல்லலாம். இது பசியை ஆற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் எடை குறையும்.

ஆரஞ்சு பழத்தை விட விதையில் இவ்வளவு சத்தா?

அடேங்கப்பா! ஆரஞ்சு பழத்தை விட விதையில் இவ்வளவு சத்தா?
 
பழங்கள் என்றால் நாம் அனைவரும் அன்றாடம் விரும்பி உண்ணும் ஒரு உணவு தான். அதிலும் குறிப்பாக சில பழங்களை நமக்கு விருப்பமாக தேர்ந்தெடுத்து உண்பது அனைவருக்கும் வழக்கம். அதிலும் ஆரஞ்சு பழம் என்றால் பிடிக்காதவர்கள் இருக்கவா செய்வார்கள்.

இந்த பழத்தில் பல நன்மைகள் உள்ளது. சிலர் பழத்தின் நன்மை தீமை அறியாமலே உண்கிறார்கள். அனைத்து பழங்களிலும் பொதுவாகவே ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சாது நிறைந்து காணப்படும். அதிலும் ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளது, இதனால் உடலில் பிரீ ராடிக்கல் செல் அழிவு மற்றும் ஆக்ஸிடேஷன் ஏற்படாமல் காப்பதோடு மட்டுமல்லாமல், உங்களை இளமையாக வைக்க உதவும்.

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
இந்த பழத்திலுள்ள அதிக அளவு நார்சத்து உங்கள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையினை குறைக்க உதவுகின்றது.பழத்தில் மட்டுமல்ல இதன் விதையிலும் அளவற்ற சத்துக்கள் உள்ளது.

விதையின் நன்மைகள்:

ஆரஞ்சு பழத்தில் விதைகளில் சிறந்த மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன. எனவே, இதனை சாப்பிடுவதால் புத்துணர்ச்சி அளிக்கிறது. இந்த விதைகள் உடல் சோர்வை போக்கி சுறுசுறுப்பாக இருக்க உதவும் .மேலும் இந்த விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் முடிக்கு ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படும் .மேலும் முடியின் வலிமையை அதிகரிப்பதோடு, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது .

இது தலையில் ரத்த ஓட்டம் சீராக செயல்படவும் உதவுகிறது . மேலும், இந்த விதையில், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ளதால் உடலில் நச்சுத்தன்மையை சரி செய்கிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான மிக முக்கிய மருத்துவக் குறிப்புகள் :

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான மிக முக்கிய மருத்துவக் குறிப்புகள் :

நீரிழிவு நோயாளிகள் உடம்பில் அதிகம் நீர்ச்சத்து இழக்காமல், தண்ணீர் தாகம் அதிகம் இல்லாமல், நாவு வறட்சி இல்லாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும். கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை எல்லாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.

ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை தொடர்ந்து கொதிக்கவைத்து கசாயமாக சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும். இது மிக எளிமையான வழிமுறை ஆகும்.

தேநீர் சாப்பிடக் கூடிய அதே சுவை இதிலேயும் இருக்கும். ஆவாரம்பூ தேநீர் சாப்பிட்டுப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். இன்னும் சர்க்கரை நோய்க்கு சிறுகுருஞ்சான், நாவல் கொட்டை, மருதம்பட்டை, வேப்பம்பட்டை இவற்றை சம அளவு கலந்து, பொடி செய்து வைத்துகொண்டு காலை, இரவு நேரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் இருக்கும்.

உணவில் நிறைய பிஞ்சுக் காய்கறிகளான முருங்கைப் பிஞ்சு, பீர்க்கங்காய்ப் பிஞ்சு , புடலங்காய்ப் பிஞ்சு, பீன்ஸ், அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வாருங்கள்.

இளநீரில் அத்தனை கால்சியமும் இருக்கிறது. அச்சத்தில் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. ஒரு தட்டுச் சாப்பாட்டில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்ஸ் இளநீரில் கிடையாது. இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுவதால், சர்க்கரை நோய் முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.

அதே மாதிரி மருதம் பட்டையைக் கசாயம் செய்து தொடர்ந்து சாப்பிடும் பொழுது நல்ல பலன் கிடைக்கும். நீரிழிவால் வரக்கூடிய கால் புண்ணானது குழிப் புண்ணாக மாறிவிடும். அந்தப் புண்ணுக்கு ஆங்கில மருத்துவத்தில் டின்ஜர், டெட்டால், மற்றும் சில மருந்துகளையும் சேர்த்து குணப்படுத்துகிறோம் பேர்வழி என்று சொல்லி, பிறகு காலையே வெட்டக் கூடிய ஒரு நிலை வருகிறது.

இதற்கு ஆவார இலையை அவித்து அந்த புண்ணில் வைத்து கட்டி வந்தால், ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அப்புண் குணமாகும்.

முதுமை இல்லாத முகம் வேண்டுமா? இதை முயற்சி செய்து பாருங்கள்…

முதுமை இல்லாத முகம் வேண்டுமா? இதை முயற்சி செய்து பாருங்கள்…

முகத்தில் சுருக்கங்கள் இல்லாத இளமையான தோற்றம் என்பது வெகுசிலருக்கு இயற்கையிலேயே அமைந்திருக்கும். அனைவருக்கும் அதுபோன்ற தோற்றம் வேண்டும் என்றால் அதற்கு பராமரிப்பும் அவசியம்.

உங்கள் சருமத்தில் மெல்லிய சுருக்கங்களை கவனிக்காமல் விட்டால் மிக சில வருடங்களில் அவை அழுத்தமாக பதிந்து பிறகு முதுமையான தோற்றத்தை தந்துவிடும்.

அவ்வாறு சுருக்கங்கள் உங்கள் முகத்தில் உள்ளதென்றால் இந்த வழியைப் பயன்படுத்திப் பாருங்கள்.

வழி…

ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலக்குங்கள். இந்த கலவையை முகத்தில் மெல்லிய படலமாக போடவும். முழுவதும் காய்ந்ததும் முகத்தை கழுவுங்கள்.

பிறகு, ஒரு பெரிய வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மசித்து முகத்தில் போடுங்கள். அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவவும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆலிவ் எண்ணெயை எடுத்து அதில் சில துளி எலுமிச்சை சாறு கலக்கவும். இந்த கலவையை முகத்தில் போட்டு அரை மணி நேரம் பிறகு முகத்தை கழுவவும்.

இந்த குறிப்புகள் அனைத்தும் செய்வதற்கு மிக எளியது. நேரமும் குறைவு. ஆனால் பலன்கள் நீங்கள் எதிர்ப்பார்ப்பதை விட அதிகம்.

2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்.!! ஈஸி வழி இதோ!

2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்.!! ஈஸி வழி இதோ!

 
நம்மில் பலருக்கும் இதுபோன்ற மஞ்சள் நிறத்தில் பற்கள் இருப்பது வழக்கம். அதிகமாக புகை பிடித்தல், பாண் பராக் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் இதுபோன்ற மஞ்சள் நிற பற்கள் நம்மை மற்றவர்கள் முன் தலைகுனிய வைக்கிறது.

இதை சரி செய்ய முடியுமா? வீட்டில் இருந்தே சரி செய்ய ஏதாவது வழி இருக்கா? நிச்சயம் இருக்கு. வாங்க பாக்கலாம்.

முதலில் பச்சரிசியை சிறிது எடுத்துக்கொண்டு நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

அரைத்த பச்சரிசி மாவில் இருந்து கால் டீஸ் பூண் பச்சரிசி மாவை எடுத்து அதில் கால் டீஸ் பூண் மஞ்சள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் இரண்டையும் ஒன்றாக கலந்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து பேஸ்ட் போல் மாற்றவேண்டும். பேஸ்ட் தயாரானதும் அதை எடுத்து வழக்கம்போல் பல்துலக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மஞ்சள் நிற பற்கள் விரைவில் மறைந்து பல் பளபளக்க ஆரம்பித்துவிடும்.

நீங்கள் புகைப்பிடிப்பதை கைவிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

நீங்கள் புகைப்பிடிப்பதை கைவிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

இரத்த அழுத்தம்:-

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதனால், உடலுக்கு உடனடி நன்மைகள் முதல் நீண்ட கால நன்மைகள் வரை பல கிடைக்கும். அதில் முதன்மையானது, அதிகமாக உள்ள இரத்த அழுத்தம் 20 நிமிடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

ஆக்ஸிஜன் சீராகும்:-

இரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு மெதுவாக குறைந்து, 8 மணி நேரத்தில் ஆக்ஸிஜன் அளவு சீராக மாறிவிடும்.

சுவை மற்றும் மனம் திரும்பும்:-

இரண்டு நாட்களில் உடம்பில் பரவியுள்ள நிக்கோட்டின் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் பொருட்களின் மீதான சுவை மற்றும் மனம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

ஆக்கத்திறன் அதிகரிக்கும்:-

4 நாட்களில் உடலில் உள்ள மூச்சு குழாய்கள் அனைத்தும் அமைதியாகி, ஆக்கத் திறனை அதிகரிக்கும்.

இரத்த ஓட்டம் சீராகும்:-

2 வாரங்களில் இரத்த ஓட்டம் முன்னேறி, அடுத்த 10 வாரங்களில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

சுவாசக் கோளாறுகள் நீங்கும்:-

9 மாதங்களில் அனைத்து சுவாசக் கோளாறுகளும் சரி ஆகும். மேலும் சுவாசப்பையின் கொள்ளளவு 10% அதிகரிக்கும்.

இதய நோய் மற்றும் புற்றுநோய் வராமல் இருக்கும்:

5 வருடங்களில் இதயமும், நுரையீரலும் புகைப்பிடிக்காதவரை போலவே இயங்கத் தொடங்கிவிடும். அதனால் நெஞ்சு வலி மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயம் குறையும்.

செரிமான மாறுதல்கள்:-

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால், அசிடிட்டி, செரிமானமின்மை மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். மேலும் வயிற்றுப் பொருமல், லேசான வயிற்று போக்கு, மலச்சிக்கல் மற்றும் குமட்டலும் ஏற்படும்.

சுவாச மாறுதல்:-

தீய நஞ்சுத் தன்மையால் உடல் இனி மாசுபடாததால், சுவாச அமைப்பு மீண்டும் மீளவுயிர்ப்பிக்கும். இது சைனஸ், சளி, தொண்டை புகைச்சல் மற்றும் தொண்டை கட்டுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

இரத்த ஓட்டத்தில் மாறுதல்:-

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இனி இதயம் வேகமாக துடிக்க தேவையில்லை. இயல்பான இரத்த ஓட்டமாக மாறும் போது, விரல்களில் சிலிர்ப்பு, தலைச்சுற்று, தசை இறுக்கம் மற்றும் நீர் தேங்குதல் போன்ற பக்க விளைவுகளை உடம்பில் ஏற்படுத்தும்.

மனநிலை மாறுதல்:-

இரத்த நாளங்கள் சம்பந்தமான தொகுப்புகளை சுருங்கச் செய்யும் தன்மையை கொண்டவை நிக்கோட்டின். அதனால் இதயம் இயல்பு நிலையை விட, அதிகமாக துடிக்க வேண்டியிருப்பதால், அது வலுவிழந்து போகும். மேலும் புகைப்பழக்கத்தை கைவிடுவதால், இப்போது இதயம் இயல்பு நிலைக்கு திரும்பும். அதனால் சோர்வு மற்றும் தலைச்சுற்று ஏற்படும்.

தூக்க மாறுதல்:-

தூங்கும் முறையில் கூட மாற்றங்களைக் காணலாம். லேசாக கண் அயரும் நேரத்தில் கண் அசைவு இருந்து கொண்டே இருக்கும். மேலும் கெட்ட கனவுகளும் வந்து கொண்டே இருக்கும். மன அழுத்தத்தை நீக்கும் புகைப்பழக்கத்தை நீங்கள் கைவிடுவதால், பகலில் ஏற்படும் டென்ஷன் மற்றும் பிரச்சனைகளை இவ்வகை கனவுகள் தான் கையாளும். அதனால் சிறிது எரிச்சலும் கூட ஏற்படும்.

முழங்கையை இடித்துக் கொண்டால், ஷாக் அடித்தது போல் இருப்பது ஏன் தெரியுமா

*🥗தகவல்📩 களஞ்சியம் 👩‍🍳*

*இன்றைய   17-06-2020   மருத்துவ குறிப்பு!*

*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

*முழங்கையை இடித்துக் கொண்டால், ஷாக் அடித்தது போல் இருப்பது ஏன் தெரியுமா.?!*



ஸ்கூல் படிக்கும் போது அடிக்கடி பின்னாடி இருக்கிற பெஞ்சுல இடுச்சுக்குவோம். அப்படியே வலி ஜிவ்வுனு இருக்கும். ‘நமக்கு மட்டும் தான் இந்த அனுபவமா’னு நினைக்கும் போது க்ளாஸ்ல இருக்கிற பாதி பேருக்கு இது பழக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் வளர்ந்த பின்னரும் கூட ‘இது எதனால் ஏற்படுது’னு நாம் சிந்திக்க மாட்டோம். சமீபத்தில் காமெடி சேனல் பார்த்துக்கொண்டிருக்க, சந்தானம் துணை நடிகர் ஒருவரது முழங்கையில் சுண்டிவிட்டு ‘என்ன ஷாக் அடுச்சுதா’ என கேலி செய்வார். சிரிக்கமட்டுமில்லை, சிந்திக்கவும் வைத்துவிட்டார் சந்தானம். நம்மில் பலருக்கு ஏற்பட்ட அந்த ஷாக் உணர்வு ஏன் ஏற்படுகிறது?


ulnar nerve எனும் நரம்பு கழுத்தில் தொடங்கி முன் கை,மணிக்கட்டுக்குள் நுழைந்து மோதிர விரலில் முடிவடையும் நீண்ட நரம்பு. இங்குள்ள எலும்பின் பெயர் Funny Bone. இந்த ulnar nerve உடன் இணைந்த எலும்பு ஹியூமரஸ். இது நமது முழங்கைக்கு மேலே உள்ளதாம். ஹியூமரஸ் எலும்புக்கும் முன்கைக்கும் இடையில் ஒரு வெற்றிடம் இருக்கும்.. இது கியூபிடல் சுரங்கம் என்று மருத்துவ பாஷையில் அழைக்கப்படுகிறது. இந்த கியூபிடலில் தான் வம்பு உள்ளது. அதாவது எளிதில் பாதிப்படைய கூடியது.

நாம் எங்காவது இடித்துக்கொள்ளும் போது இந்த பாதுகாப்பற்ற நரம்பானது எலும்போடு சேர்த்து அழுத்தப்படுகிறது. அந்த நேரம் ulnar nerve ஆனது பாதுகாக்கும் பொருட்டு அலைகளை தூண்டி மின்சார அதிர்ச்சியை தருகிறது. அதனாலே இடித்துக் கொள்ளும் போது “நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்” என்றபடி நிற்கிறோம்.


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

மூட்டு வீக்கத்தினை தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்!*

*🥗தகவல்📩 களஞ்சியம் 👩‍🍳*

*இன்றைய   17-06-2020   மருத்துவ குறிப்பு!*

*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

*மூட்டு வீக்கத்தினை தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்!*


மூட்டு வீக்கத்தினை ஏற்படுத்தும் சில பாதிப்பு உணவுகளை அறிந்தால் அதனை தவிர்ப்பதன் மூலம் நம் ஆரோக்கியத்தினை நாம் பாதுகாக்க முடியும். சர்க்கரை: அதிக சர்க்கரை என்றாலே பல் சொத்தை, உடல் எடை கூடுதல், வீக்கம், எடை கூடுவதால் ஏற்படும் ஒரு பாதிப்பாக சர்க்கரை நோய். உடலில் கெட்ட பாக்டீரியாக்களால் தாக்குதல்கள் ஏற்பட்டு வீக்கம் ஏற்படுகின்றன. செயற்கை இனிப்பை அவசியம் தவிர்க்க வேண்டும். பலருக்கு பால், பால் சார்ந்த உணவுகள் ஒத்துக் கொள்ளாது. இந்த அலர்ஜியால் வீக்கம் உண்டாக்கி வயிறு கோளாறு, மூச்சு வாங்குதல் போன்றவை ஏற்படலாம். தேங்காய் பால், பாதாம் பால் இவற்றினை வீட்டிலேயே தயாரித்து அளவான முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

பதப்படுத்தப்பட்ட அசைவ உணவினை தவிர்ப்பது நல்லது.

* மது பழக்கம் கூடும்போது புற்று நோய் வரை கொண்டு சென்று விடும். மதுவினை அடியோடு தவிர்ப்பதே நல்லது.

* முழு தானிய உணவினை மட்டுமே உண்ண வேண்டும்.

* அதிகம் சுத்திகரிக்கப்பட்ட உப்பினை தவிர்க்க வேண்டும்.

* காய்கறி, பழங்கள், முழு தானிய உணவு, வேளைக்கு முறையான உணவு என்று கையாண்டால் ஆரோக்கியம் நம் கையில்.

சிலர் 60 வயதில் 40 வயது போல் தெளிவாய் இருப்பர். சிலர் 20 வயதில் 60 வயது போல் ஆரோக்கியமற்று, முதுமையாய் தோற்றமளிப்பர். இந்த கூடுதல் முதுமைக்கு காரணம் காலை முதல் இரவு வரை உள்ளது. காலையில் நாம் செய்ய வேண்டிய 20 நிமிட நடைபயிற்சியை விட்டு விடுவது முதல், இரவு தூங்குவதற்கு முன்பு கொறிக்கும் தவறான உணவு வரை நீண்ட பல காரணங்கள் உள்ளது. இது வெளித்தோற்றம், மறதி, மறதி நோய் என பல தாக்குதல்களை ஏற்படுத்தி விடுகின்றது.

* மது, புகை இவை மூளையையும், உடலையும் மிக கூடுதலாக பாதிக்கும்.

* மன உளைச்சலை ஒதுக்கி தானே சரியாகி விடும் என அதனுள்ளேயே மூழ்கி இருப்பது.

* கடும் வெய்யிலில் பாதுகாப்பின்றி சுற்றுவது.

* அதிக காபி குடிப்பது

* மிருதுவான தலையணை உறை இல்லாமல் சுரசுரப்பான உறையின் மீது உறங்குவது.

* கூன் போட்டு லேப்டப்பில் வேலை செய்வது.

* துரித உணவு எனப்படும் உணவுகளை சாப்பிடுவது.

* தேவைப்படும் போது வெய்யிலில் கறுப்பு கண்ணாடி அணியாது இருப்பது.

* அளவுக்கு மீறி உண்பது

* தன்னை அவ்வப்போது எடை மிஷினில் எடை பார்த்துக் கொள்ளாது இருப்பது.

* அதிக மேக்&அப்

* ஏதேனும் ஒரு பொழுது போக்கு பழக்கம் இல்லாது இருப்பது.

* லிப்டினை உபயோகித்து படிகளில் ஏறாமல் இருப்பது போன்றவை வெளித் தோற்றத்திலும் மூளையின் உள்ளும் முதுமையைக் கூட்டி விடும்.

எதுவும் நாட்டம் இல்லாமல் இருந்தால், தூக்கம் 7 மணி நேர அளவு இல்லாமல் இருந்தால், அதிக தவறான உணவுகளில் நாட்டம் இருந்தால் உங்கள் உடல், மன நலத்தினை சரி செய்து கொள்ள வேண்டும் என அறிவோமாக.


*🥗தகவல்📩 களஞ்சியம் 👩‍🍳*


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்!*

*🇮🇳🥭👼👶🐚🕉️🙌🌾🦚💐உள்ளத்தில் நல்ல உள்ளம்🇮🇳🥭💐🦚🌾🙌🕉️🐚👶👼*
*புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்!*

*இயற்கையா விளையுறத சாப்பிட்டு வந்தால் நோய் நொடியில்லாம வாழறதுக்கான வழி மட்டுமில்லல் வந்த நோய்களை விரட்டி அடிக்கறதுக்கான வழியும் கிடைக்கும்.

*உதாரணத்துக்கு எத்தனையோ விஷயங்கள பட்டியல் போட முடியும். இந்தக் கோதுமை இருக்கே கோதுமைல் அதுல உள்ள சக்தி, நிறைய நோய்களுக்கு தீர்வா இருக்குங்கறது தெரியுமோ?

*கோதுமையை நல்லா கழுவி முளைகட்ட வைக்கணும். முதல் நாள் சாயங்காலம் முளைகட்டி, மறுநாள் காலையில எடுத்து அதோட கொஞ்சம் தண்ணிவிட்டு நல்லா அரைச்சி பால் எடுக்கணும். அதுல கொஞ்சம் தேங்காய்ப்பால், சுவைக்கு தேன் சேர்த்துச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்ல பலம் கிடைக்கும்.

*இது, வாத நோயை குணமாக்கும். வெள்ளை அணுக்களோட எண்ணிக்கையை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, மூக்குல நீர் வடியறது உள்ளிட்ட சின்னச் சின்ன தொந்தரவுகளையும் அண்ட விடாது. இன்னும் சொல்லப்போனா, புற்றுநோயைக் எதிர்க்கக்கூடிய சக்திகூட இருக்கு இந்த கோதுமைப்பாலுக்கு.

*இதைச் சாப்பிடும்போது சிலருக்கு வயிற்றுப்போக்கு வந்தாலும் வரும். அப்படி வந்தால் குடிக்கறத நிறுத்திடணும். வயிற்றுப்போக்கு நின்னதும், ஒருநாள்விட்டு கோதுமைப்பாலைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடம்பு ஏத்துக்கும்.

*பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பல் மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும். மற்ற கீரைகளைப்போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.

*மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.

*தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.

மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு,

*🇮🇳🥭💐🦚🌾🙌🕉️🐚👶👼உள்ளத்தில் நல்ல உள்ளம்🇮🇳🥭👼👶🐚🕉️🙌🌾🦚💐*

*நோய்களுக்கு தீர்வு தரும் சித்த மருத்துவ குறிப்புகள்*

மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

* தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

* ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும்.

* இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் சாப்பிடலாம்.

* அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

* எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

* உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

குடல்புழுக்களை வெளியேற்ற உணவான நம் மருந்து மட்டுமே தீர்வு...*

*♻️♻️♻️இயற்கை மருத்துவம் வழங்கும் இயற்கை மருந்துகள்♻️♻️♻️* 


 *#குடல்புழுக்களை வெளியேற்ற உணவான நம் மருந்து மட்டுமே தீர்வு...* 

நம் குடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது என்று கேட்கலாம்.

நிச்சயம் அதற்கும் அறிகுறிகள் உள்ளன.
அவை வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை.

 *சிறு குடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மருந்து என்ன ?* 

இரத்த சோகை சத்துக் குறைபாடு செரிமானக் கோளாறுகள் அலர்ஜி மலச்சிக்கல் வயிற்ருப் போக்கு ஆகிய பிரச்சினைகள் தீர்ந்து குடல் இயக்கம் சீர் படும்.

 *🍁 மருந்து ஒன்று:* 

சுண்டைக்காய்ப் பொரியல்
பச்சை சுண்டைக்காயை நைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றி சீரகம் வெந்தயம் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து நைத்து வைத்து இருக்கும் சுண்டைக்காயைப் போட்டுக் கிளறி மஞ்சள் தூள் போட்டுக் கிளறி, மிளகுத் தூள், கல் உப்புப் போட்டு பொரியல் ஆக்கி இறக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் நீங்கும்.

 *🍁 மருந்து இரண்டு:* 

பாகற் காய் மசியல் கூட்டு செய்ய வேண்டும்.நாட்டு பாகற்காய் மட்டுமே பயன் படுத்த வேண்டும். பொறித்து சாப்பிட்டேன் என தம்பட்டம் அடிப்பது வீண்.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் பெருங்காயம் பாகல் காய் துவரம்பருப்புடன் பூண்டு சேர்த்து வேக வைத்து எடுத்த பருப்பு மசியல் ஆகியவற்றை சேர்த்து கூட்டாக செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்.

 *🍁 மருந்து மூன்று:* 

அகத்திக் கீரை சாறு - ஒரு தேக்கரண்டி
பூண்டு சாறு - ஒரு தேக்கரண்டி
தூய தேன் - அளவாக
மூன்றையும் கலந்து தினமும் காலையில் ஒரு வாரம் மட்டும் குடித்து வர குடலில் தங்கி இருக்கும் புழுக்கள் வெளியேறும்.

 *🍁 மருந்து நான்கு:* 

வாய் விடங்கம், ஓமம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, கல் உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக பொன் நிறமாக வறுத்து ஆற வைத்து ஒன்றாக சேர்த்து அரைத்துப் பொடியாக எடுக்க வேண்டும்.

இந்த வாய் விடங்கப் பொடியை தோசை இட்லி, சோறு போன்ற உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்.

வாய் விடங்கம் அல்லது வாய் விளங்கம் என்பது மிளகு போன்ற ஒரு பொருள் எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் அந் தமிழ் நாட்டு அடுக்களையில் மிளகு போல தவறாமல் இடம் பிடித்திருந்த நாம் மறந்து விட்ட பொருள் இது

 *🍁 மருந்து ஐந்து:* 

சிலர் வேப்ப இலைக் கொளுந்துகளை அரைத்துக் குடிப்பர்.
கசப்பு காரணமாக சிலர் குடிக்கவும் மறுப்பார்கள்.

அப்படிப் பட்டவர்கள் கீழ்க்கண்டவாறு வேப்பிலை உருண்டைகள் செய்து விழுங்கலாம்.

வேப்பங் கொழுந்து,
கறிவேப்பிலை,
பூண்டு,
மிளகு,
ஓமம்,
சுக்கு

ஆகிய பொருட்களைத் தேவையான அளவு எடுத்து நாட்டுப் பசு நெய்யில் பொன் நிறமாக வறுத்து இறக்கி ஆற வைத்து கல் உப்பு சேர்த்து அரைத்து துவைலாக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விழுங்கி தண்ணீர் குடிக்க குடல் புழுக்கள் வெளியேறும்.

 *🍁 மருந்து ஆறு:* 

குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 தேக்கரண்டி ஸ்பூன் அளவு எடுத்து தூய தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி.
அளவு குடித்து வர பெரியவர்களின் குடல் புழுக்கள் வெளியேறும்

 *🍁 மருந்து ஏழு:* 

சின்ன வெங்காயம் - இரண்டு

நல்ல மிளகு - இரண்டு

சீரகம் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி - சிறிய துண்டு

தேவையான அளவு - கீரை (தண்டுக்கீரை அல்லது அகத்திக்கீரை)
பூண்டு - 1 பல்

சேர்த்து சூப் செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் மாலை வேளையில் அருந்தி வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்.

 *🍁 மருந்து எட்டு:* 

யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.

 *🍁 மருந்து ஒன்பது* 

புழுத் தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மல வாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத் திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தூய தேன் உடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றுப் புழுக்கள் மலத்துடன் வெளியேறும்

 *🍁 மருந்து பத்து* :

குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும்.

 *🍁 மருந்து பதினொன்று:* 

குடலில் புழுக்கள் தங்கி்இருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்க வைத்து வடி கட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்....

 *நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...