Saturday, January 12, 2019

குழந்தை பிறப்பதில் பிரச்சனையா? அப்ப துரியன் பழம் சாப்பிடுங்க

குழந்தை பிறப்பதில் பிரச்சனையா? அப்ப துரியன் பழம் சாப்பிடுங்க

தற்போது துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடைய துரியன் பழம் மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளது. இந்த துரியன் பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இதிலும் பழங்கள் ம்டுமின்றி இலைகளும் பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. அதே சமயம் சில நேரங்களில் இப்பழங்களை சாப்பிட்டால், உடலில் நோய்கள் ஏற்கடும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது.

உண்டையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் துரியம் பழம் சாப்பிடுவதால், உடலில் இரத்த அழுத்தம் மற்றும் கொரஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பதால் தான் அவ்வாறு கூறுகின்றனர். இருப்பினும் போதிய அளவு துரியன் பழத்தை சாப்பிட்டால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

ஏனெனில் துரியன் பழத்தின் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் வாழைப்பழத்தை விட 10 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. சரி, இப்போது தூயன் பழத்தால் உடலுக்கு கிடைக்கும் சில நன்மைகளைப் பார்ப்போம்.

மஞ்சள் காமாலை:

துரியன் பழத்தின் சதைப் பகுதியை சாப்பிட்டால், மஞசள் காமாலை நோயை குணப்படுத்தலாம்.

நகங்களில் நோய்த்தொற்று:

நகங்களில் பிரச்சனை இருக்கும் போது துரியன் பழத்தின் வேர்களைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

நீரழிவு:

துரியன் பழத்தின் மாங்கனீசு அதிகம் இருப்பதால் அதனைச் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.

காய்ச்சல்:

துரியன் மரத்தின் வேர் மற்றும் இலைகளை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால் காய்ச்சலில் இருந்து குணம் பெறலாம்.

ஆரோக்கியமான மூட்டுகள்:

துரியன் பழத்தின் உள்ள வைட்டமின்கள் பி, பொட்டாசியம் மற்றும் கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

கொசுக்கடி:

துரியன் பழத்தின் தோல், கொசுக்கடியைத் தடுக்க உதவும்.

இரத்த சோகை:

துரியன் பழத்தின் இரும்பு மற்றும் போலிக் ஆசிட் அதிகளவு இருப்பதால் இதனைச் சாப்பிட இரத்த சோகையை குணமாகும்.

முதுமை தோற்றம்:

இளமையிலேயே முதுமை தோற்றத்தில் காணப்படுபவர்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், அரில் உள்ள வைட்டமின் சி சத்தால் முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம்.

மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம்:

மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுன் துரியன் பழம் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் ஃபைரிடாக்ஸின் என்னும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது.

தைராய்டு:

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.

குறைந்த இரத்த அழுத்தம்:

இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தமானது அதிகரிக்கும்.

ஒற்றை தலைவலி:

ஒற்றைத் தலைவலியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, துரியன் பழம் ஒரு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். ஏனெனில் இதில் ஒற்றைத் தலைவலியப் போக்கும் ரிபோஃப்ளேவின் அதிகம் நிறைந்துள்ளது.

பல் பிரச்சனைகள்:

துரியன் பழத்தின் பாஸ்பரஸ் அதிகம் நிறைந்திருப்பதால், அதனைச் சாப்பிட பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

மலச்சிக்கல்:

துரியன் பழத்தின் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தலாம்.

பலவீனமான கருப்பை:

பொதுவாக கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்க முடியாது ஒருவேளை கருத்தரித்தாலும், சில நாட்களில் கலைந்துவிடும். எனவே இத்தகைய பிரச்சனை உள்ள பெண்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், கருப்பை பலமாகி, ஆரோக்கியமாக ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

விந்தணு குறைபாடு:

ஆண்கள் துரியன் பழத்தை சாப்பிட்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பசியின்மை:

பசியின்மை பிரச்சனை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள தயமின் மற்றும் நியாசின் பசியைத் தூண்டும்.

சொறி சிரங்கு:

சொறி சிரங்கு பிரச்சனை இருந்தால், துரியன் பழத்தின் தோலை அரைத்து தடவினால் குணமாகும்.
நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. ஆரோக்கியம் தரும் துரியன் பழம் பல உடல் சுகாதார நலன்களை கொண் டுள்ளது. பழங்கள் மட்டும் மருத்துவ பலன்களை கொண் டுள்ளாமல் இலைகளும் மருத்துவ பலன்களை கொண்டு செயல்படுகிறது. சில துரியன் பழம் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது என கருத்தும் வெளியாகிறது.

உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை துரியன் பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் மற்றும் உயர்நிலை கொழுப்பை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். போதுமான அளவு துரியன் பழம் எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான உடல் நிலைக்கு மிகவும் நல்லது. துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட் டின், கொழுப்பு, இரும்பு, ரிபோப்லாவின், கார்போ ஹைட்ரேட், தாமிரம், போலிக் அமிலம், வைட்டமின் சி, நார்ச்சத்து , துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் உள்பட பல சத்துகளை கொண்டுள்ளது.

வாழை பழத்தை விட 10 மடங்கு இரும்பு, பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது. ஒரு 100 கிராம் துரியன் பழத்தில் 520 கிராம் உற்பத்தி திறன், 1 கிராம் நார்ச்சத்து, கொழுப்பு 2.5 கிராம், புரதம் 28 கிராம், கார்போஹைட்ரேட் மற் றும் நீர் 66 கிராம் கொண்டுள்ளது. துரியன் பழத்தின் சதை மஞ்சள் காமாலை நோ யால் அவதிபடுபவர் களுக்கு சிறந்த தீர் வாக உள்ளது. துரியன் பழத்தின் வேர்கள் நகம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு மருந்தாவும் பயன்படு கிறது. துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு நிலையான இரத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

துரியன் பழம் கொண்டுள்ள பி வைட்டமின், பொட் டாசியம், கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. துரியன் பழத்தின் தோல் கொசுக்கடியை தடுக்க உதவுகிறது. துரியன் பழம் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த சோகையை சரிசெய்கிறது.

கருப்பை பலவீனமாக இருந்தால் கருத் தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் சில வாரங்களில் கலைந்துவிடும். இத்தகைய பிரச்சினை உடைய பெண்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும்.

துரியன் பழம் குன்னூரில் கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்கப்படுகிறது இது குழந்தை பேறு தருவதாக நம்பப்படுகிறது.
இதை வாங்க குன்னூர் தோட்ட கலை துறையிடம் மற்றும் தனியார் கடைகளில் மூன்று ஆயிரத்துக்கம் மேலானோர் முன்பதிவு செய்துள்ளனராம்.
இது சிறிய அளவிலான பலாப்பழத்தைப்போலத் தோற்றமளிக்கும் இப்பழங்களைப் பிரித்துப் பார்த்தால் உள்ளே அதிகபட்சமாக 7 சுளைகள் வரை தென்படும்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ள பர்லியாரில் அரசு தோட்டக்கலை துறை பண்ணை உள்ளது. இங்கு 32 துரியன் மரங்கள் உள்ளன. தனியார் தோட்டங்களில் 100 க்கும் அதிகமான மரங்கள் உள்ளன. இம்மரத்தின் பழத்தை சாப்பிட்டால் குழந்தைபேறு இல்லாதவர்கள் கருத்தரிப்பார்கள் என்பதால் இந்த பழத்தை வாங்க கூட்டம் அலை மோதுகிறது .

ஆண்டுதோறும் ஜூன் 15 முதல் ஆகஸ்ட் கடைசி வரை துரியன் பழம் அறுவடை செய்யப்படும். தற்போது அறுவடை துவங்கியுள்ளது. துரியன் பழங்களை வாங்க அரசு பண்ணையில் 250 பேரும் ,மற்ற கடைகளில் 3 ஆயிரத்துக்கு அதிகமானவர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.

தோட்டக்கலை துறை பழ பண்ணையில் ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும்,
மற்ற கடைகளில் ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரையும் விற்கப்படுகிறது.
தனியார் தோட்டங்களில் வரத்து அதிகரித்துள்ளதால், கடைகளுக்கு அதிகளவில் வந்துள்ளன. அரசு தோட்டக்கலை பண்ணையில் ஜூலை முதல் வாரத்தில் வரத்து அதிகரிக்கும். அப்போது விலை குறையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

துரியன் பழத்தின் பயன்கள் –

100 கிராம் துரியன் பழத்தில் 147 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறதாம்.
துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து,பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், ரிபோஃப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம் என பல சத்துக்கள் நிறைந்துள்ளதாம்.

பழுக்காத துரியன் காய்கள், பல குழம்புகளில் காய்கறி போல சேர்த்து சமைக்க பயன்படுகிறது. துரியன் பழ விதைகள், பலாக் கொட்டைபோல அவித்தும், வறுத்தும் சாப்பிடலாமாம்.

அது மட்டுமில்லாது துரியன் பழத்தின் சதைப் பகுதியை சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தலாம் மற்றும் இதில் வாழைப்பழத்தை விட 10 மடங்கு இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளதாம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...