Saturday, January 12, 2019

இயற்கை முறையில் தற்சார்பு வாழ்வியல் முறைக்கு மாறுவோம்

தமிழர் திருநாளாம் தை  திருநாள் பொங்கல் நன்னாளில் இருந்து நாம் மீண்டும் இயற்கை முறையில் தற்சார்பு வாழ்வியல் முறைக்கு மாறுவோம்

நவீன மருத்துவம் நோய் வந்த பிறகு அதை குணப்படுத்துவதிலும், கட்டுக்குள் வைத்திருப்பதிலும் மட்டும் தான் செய்யும். ஆனால், நம் பாரம்பரிய வாழ்வியலில் உடலை நோய் அணுகாமல் காத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல எளிய வழிமுறைகள் உண்டு.
இதில் ‘வாரம் இரு நாள் எண்ணெய்க் குளியல்’ என நம் பண்பாட்டில் ஆரோக்கியம் பேணும் வகையில் வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்து வந்த வழக்கம், இன்று வெறும் தீபாவளிச் சடங்காக மாறிவிட்டது.

எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடல் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் பலன் கொடுக்கும் மற்றும் தலைக்கு எண்ணெய் தேய்த்து நீராடினால் மன வருத்தம் குறையும்.
இன்று எண்ணெய் குளியல் மேற்கொள்ளும் அனேகர் தலைக்கு செயற்கையான இரசாயனபொருட்கள் நிறைந்த ஷேம்பு மற்றும் சோப்பை உடலுக்கும் பயன்படுத்துகின்றனர். இதனால் நம் உடலில் தடவிய எண்ணெய் முழுவதும் வழிக்கபட்டு உடல் வறன்டுவிடுகிறது. இதன்மூலம் நாம் எதிர்பார்த்த நன்மையைவிட தீமையே அதிகம் வருகிறது. இதை தவிர்க்க தலைக்கு சீயக்காய்யும் உடலுக்கு இயற்கையான குளியல் மாவையும் தேய்த்து அலசலாம்.

பாரம்பரிய முறையில் வீட்டில் தயார் செய்த இயற்கை மூலிகை குளியல் பொடி, இயற்கை மூலிகை சிகைக்காய், மற்றும் இயற்கை மூலிகை எண்ணெய் விற்பனைக்கு உள்ளது தேவைப்படுவோர் தொடர்புகொள்ளாம்.

*25 அதி உன்னத மூலிகைகள் கொண்ட இயற்கை மூலிகை குளியல் பொடி*

மூலபொருட்கள்:

1.சந்தனம்,
2.அகில்,
3.அதிமதுரம், மரிக்கொழுந்து,
4.துளசி,
5.குப்பை மேனி,
6.கீழாநெல்லி,
7.கஸ்தூரி மஞ்சள்,
8.ரோஜா இதழ்கள்,
9.வெட்டி வேர்,
10.ஜாதிக்காய்,
11.மாசிக்காய்,
12.கடுக்காய்,
13.திரவியப்பட்டை,
14.மகிழம் பூ,
15.ஆவரம் பூ,
16.வேம்பு,
17.செம்பருத்தி பூ,
18பூலான் கிழங்கு,
19.கோரைக்கிழங்கு,
20.கார்போகரசி,
21.கருஞ்சீரகம்,
22.விளாமிச்சை,
23.ஆரஞ்சு பழத்தோல்,
24.பச்சை பயறு மற்றும்
25.கடலை பருப்பு.

பயன்கள்:

1. இயற்கை மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளித்துவந்தால் முகப்பருக்கள் மற்றும் முகபருவினால் ஏற்படும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் மென்மையாக மாறும்.
2. இக்குளியல் மாவை தினமும் தேய்த்துக் குளிக்கும்போது உடல் பளிச்சென மின்னும்,
3. முகமும் உடலும் பொலிவு பெறுவதோடு மனமும் உற்சாகமடையும்.
4. தோல் நோய்கள், தேமல், வியர்வை நாற்றம், போன்றவற்றை நீக்கும்
5. சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலில் வரி வரியாக, தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். தினமும் இதனை உபயோகித்து குளித்து வர சிறு கட்டிகளும் வரிகளும் மறைந்து போகும்.
6. வியர்வையினால் உண்டாகும் வியர்வை நாற்றத்தைப் போக்கி நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியது.
7. மழைக்காலங்களில் வரும் சேற்று புன் வராமல் தடுக்கும்.
8. இயற்கை மூலிகை குளியல் பொடியை பாலில் கலந்து பசைபோல் செய்து முகம், கழுத்து போன்ற கருமையான பகுதிகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி முகம் வென்மையாக காணப்படும்.
9. இந்த இயற்கை குளியல் மாவானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் மிகவும் ஏற்றது

*25 இயற்கை மூலிகை சிகைக்காய் பொடி (100% Herbal)*
மூலபொருட்கள்:
1.வெட்டி வேர்,
2.அதிமதுரம்,
3.கார்போகரசி,
4.வெப்பாலை அரிசி,
5.மரிக்கொழுந்து,
6.ஆவரம் பூ,
7.நெல்லிக்காய்,
8.கருஞ்சீரகம்,
9.வெந்தயம்,
10.கடுக்காய்,
11.பூலான் கிழங்கு,
12.செம்பருத்தி பூ,
13.கரிசலாங்கண்ணி,
14.பொன்னாங்கண்ணி,
15.புதினா,
16.மருதாணி,
17.கருவேப்பிலை,
18.வேம்பு,
19.துளசி,
20.பச்சை பயறு,
21.ஆரஞ்சு தோல்,
22.பூந்திகொட்டை
23. அவுரி
24. பொடுதலை மற்றும்
25.சிகைக்காய்.

பயன்கள்:

1. பொடு மற்றும் தலையில் உள்ள பேண்களை ஆழிக்கும்.
2. முடியின் வேர்க்கால்கள் வலுவடைய செய்யும்.
3. முடி உதிர்வதை தடுக்கும்.
4. இயற்கையில் தலையில் சுரக்கும் எண்ணெயை எந்தவிதத்திலும் பாதிக்காது.
5. முடி வளர்ச்சியைத் தூண்டும்.
6. கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
7. இதை தலையில் தேய்த்து குளித்துவர தலை மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
8. இளநரை ஏற்படுவதை தடுக்கும்.
9. தொடர்ந்து பயன்படுத்துவதால் உடல் உஷ்ணம், பித்தம் குறையும்.
10. இதனை உடலில் தேய்த்து குளித்துவர உடலில் ஏற்படும் சொரி, சிரங்கு, சோரியாசிஸ் மற்றும் படர்தாமரை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும்

இயற்கை கூந்தல் பொடியை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை தலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து குளித்து வந்தால் நிரந்தர தீர்வு காணலாம்.

*இயற்கை மூலிகை கூந்தல் எண்ணெய் (100% Herbal)*

மூலபொருட்கள்:

1.வெட்டி வேர்,
2.மரிக்கொழுந்து,
3.ஆவரம் பூ,
4.நெல்லிக்காய்,
5.கற்றாழை,
6.கடுக்காய்,
7.செம்பருத்தி பூ,
8.செம்பருத்தி இலை,
9.கரிசலாங்கண்ணி,
10.பொன்னாங்கண்ணி,
11.அவுரி,
12.மருதாணி,
13.கருவேப்பிலை,
14.வேம்பு,
15.துளசி,
16.அதிமதுரம்,
17.கார்போகரசி,
18.வெந்தயம்,
19.கருங்சீரகம்,
20.தேங்காய் எண்ணெய்,
21.விளக்கெண்ணெய் மற்றும்
22.நல்லெண்ணெய்

பயன்கள்:

1. தலைமுடி உதிர்வதை தடுக்கும்.
2. பொடுகு மற்றும் பேண்களை ஒழிக்கும்.
3. தலைமுடியை உறுதியாக்கும்
4. தலைக்கும் உடலுக்கும் குளுமையை தரும்.
5. இதனை உடலில் ஏற்பட்ட சிறு தீ காயங்களின் மேல் தடவிவர தீ காயம் குணமாகும் மற்றும் தீ தழும்புகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
6. இதில் உள்ள (antibiotics) நோய் நுண்ணுயிர் கொல்லிகள் உடலில் ஏற்பட்ட காயங்கள், புண்கள் மற்றும் கொப்புலங்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.
7. படற்தாமறை மற்றும் அக்கி போன்றவற்றை குணமாக்கும்
8. மழைகாலங்களில் உண்டாகும் சேற்று புண்ணை குணமாக்கும்.

"இந்த பொங்கல் முதல் எண்ணெய் குளியலை மறுபடி உங்கள் வாழ்க்கையில் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்''
நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய் சத்தானது அவசியம்.
இந்த இயற்கை குளியல் மாவானது பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.
நம் சந்ததியினராவது செயற்கையை தவிர்த்து இயற்கையானதை பயன்படுத்தட்டும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻நட்புடன் வெங்கட்ராமன் 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...