*குளிர் மரச்செக்கு எண்ணெய் என்றால் என்ன*
பண்டைய காலத்தில் செய்தது போல செக்கினால் எண்ணெயைப் பிழிந்தெடுக்கும் முறையில் செய்வதே குளிர் மரச்செக்கு எண்ணெய் ஆகும் .மரச்செக்கில் விதைகளைஆட்டி அதிலிருந்து எண்ணெயைப் பிழிந்தெடுக்கும் முறையே பாரம்பரிய முறை . மரச்செக்கை இழுக்க காளைகளை பயன்படுத்தினர். இப்பரம்பரிய முறையில் விதைகளை சூடாக்குவதில்லை . வேறு எந்த பொருளையும் சேர்ப்பதுமில்லை . மரச்செக்கு எண்ணெயில் விதையின் அனைத்து சத்துகளும் , ஆன்டி ஆக்சிடென்டுகளும் காப்பாற்றப்படுவதோடு , அவற்றின் இயற்கை தன்மையும் காக்கப்படுகின்றன.நம் முன்னோர்கள் ஆரோக்கியமான எண்ணெயைப் பயன்படுத்தியதால் நீடுழி வாழ்ந்தனர். குளிர் மரச்செக்கு என்னை எண்ணற்ற ஆன்டி ஆக்சிடென்டுகளைக் கொண்டிருப்பதால் சமையலில் சுவையைக்கூட்டி வாழ்நாளையும் அதிகரிக்கிறது.
💫
குளிர் மரச்செக்கு எண்ணெயை எப்படி செய்கிறார்கள் ?
செக்கின் குழியில் எண்ணெய் விதைகளை நிரப்பி மர உரலைக் கொண்டு அதை அரைக்க காளை மாடுகளைப் பயன்படுத்தினார்கள் . குளிர் மரச்செக்கு எண்ணெய் தென் இந்தியாவில் பிரசித்தி பெற்றதாகும் . மரச்செக்கின் அழுத்தத்தால் விதைகள் கூழாக மாறி பின்னர் எண்ணெய் பிழிந்தெடுக்கப்படுகிறது. இம்முறையில் விதைகள் சூடாக்கப்படுவதில்லை.அதனால் இது குளறி மரச்செக்கு எண்ணெய் என்றழைக்கப்படுகிறது.எண்ணெயைப் பிழிந்தபின் உள்ள எஞ்சிய சக்கையே விலங்குகளுக்கு உணவாகும் பிண்ணாக்கு ஆகும் .
குளிர் மரச்செக்கு எண்ணெயின் பலன்கள்
💥
சூடாக்கப்படாமல் தயாரிப்பதால் மரச்செக்கு எண்ணெயில் ஆரோக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்டுகள் பாதுகாக்கப்படுகின்றன . இந்த ஆன்டி ஆக்ஸிடன்டுகள் இரத்தத்தில் உள்ள தனித்த எலக்ட்ரான்களை சமன்படுத்துவதால் டி.என். ஏ அமைப்பு மாற்றங்களைத் தடுத்து பல்வேறு நாட்பட்ட மற்றும் கொடிய வியாதிகளிலிருந்து காப்பாற்றுகின்றன. ஆன்டி ஆக்ஸிடன்டுகளின் இடைவிடாத வரத்து இருந்தால் மட்டுமே அவற்றின் முழுமையான பலன்களை அனுபவிக்க முடியும்.
💥
குளிர் மரச்செக்கில் சூடு இல்லாத காரணத்தால் கொழுப்பு அமில பிணைப்புகள் அழிக்கப்படுவதில்லை. இதனால் எண்ணெயின் இருதயத்தை காக்கும் பண்புகள் காக்கப்படுவதுடன், ஊட்டச்சத்துக்களும் தாதுச்சத்துக்களும் உடலுக்கு கிடைக்கிறது.
💥
குளிர் மரச்செக்கு கடலெண்ணெயில் அதிக அளவில் நயாசின் ( வைட்டமின் பி ) சத்து உள்ளதால் இரத்த சர்க்கரையைக் குறைக்கிறது.
💥
குளிர் மரச்செக்கில் எண்ணெய் எடுக்க கேடு விளைவிக்கும் பொருட்கள் சேர்க்கப்படாததால் வர்த்தக முறையில் செய்யப்படும் எண்ணெய்களை விட உடலுக்குப் பாதுகாப்பானது .
💫 தற்கால எண்ணெய் எடுக்கும் முறைகள்
தற்கால முறைகளில் சூடு மற்றும் உயரழுத்த முறையில் கேடு விளைவிக்கும் சேர்ப்பான்களைக் கொண்டு எண்ணெய் பிழிந்தெடுக்கப்படுகிறது. எண்ணெய் விதைகளை நொறுக்கப்பட்டு பின்னர் அந்த கூழ் உயர் அழுத்தத்தில் சூடாக்கப்படுகிறது. 230டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் சூடாக்கப்படுவதால், எண்ணெயின் இயற்கை குணங்கள் அனுகூலமில்லாத வகைகளில் மாற்றப்பட்டு ஊட்டச்சத்துக்கள் முழுவதுமாக நீக்கப்படுகின்றன. இதல்லாமல் நீண்ட நாட்களுக்கு உபயோகிக்க ஏதுவாய் இருக்க பதப்பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய கருவிகளைக் கொண்டு எண்ணெய் எடுக்கும் முறைகள் பரிந்துரைக்கத்தக்கதல்ல , எண்ணெயும் ஆரோக்கியமானதல்ல.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் உபயோகித்தல் ஆரோக்கியமானதல்ல,ஏன்?
💥
எண்ணெய் பல்வேறு வேதியியல் பொருட்கள் மற்றும் நிறம் நீக்கிகளைக் கொண்டு சுத்திகரிக்கப்படுகிறது .இதனால் நிறைசெறிவூட்டப்பெறாத கொழுப்பு அமிலங்கள் டிரான்ஸ் கொழுப்பாக உயிரகமேற்றமடைவதால் பல கேடுகளை விளைவிக்கின்றன.
💥
இறந்த உயிரணுக்களை ஈடு செய்ய புதிய உயிரணுக்களை மனித உடல் இடையறாது உருவாக்கிக்கொண்ட இருக்கும். இவ்வுயிரணுக்களை உருவாக்கத் தேவையான மூலப்பொருட்கள் இரத்த ஓட்டத்திலிருந்து பெறப்படுகிறது. எண்ணெயிலிருந்து வரும் நச்சுக்கள் இரத்தத்தில் கலப்பதால் புதிய உயிரணுக்கள் உருவாவது குறைகிறது
💥
எண்ணெயிலிருந்து வரும் நச்சுக்கள் இரத்தத்தில் கலப்பதால் புதிய உயிரணுக்கள் உருவாவது குறைகிறது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மக்கள் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர் .
💥
வேதியியல் முறையில் இணைப்படுத்தப்பட்ட பொருட்கள் சமையல் எண்ணெயில் இருப்பதால் நூற்றுக்கணக்கான கோடிக்கணக்கான நுண்மையான வாழும் உயிரணுக்களின் உயிர் வேதியியலை பாதித்து புற்றுநோய், சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், ஒவ்வாமை, நுரையீரல் வளிப்பை வீக்கம், வயிற்றுப்புண், காலத்துக்கு முற்பட்டு வயதாகுதல், ஆண்மைக்கு cறைவு, இரத்தசர்க்கரை குறைபாடு, மூட்டுவாதம் போன்ற பல நோய்களை உண்டாக்குகிறது
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹நட்புடன் வெங்கட்ராமன் 🌹🌹🌹