Monday, November 21, 2016

என்றால் ஜலதோஷம், வெயில் காலம் என்றால் வெப்பம் இப்படி பருவகாலங்கள் மாறி, மாறி உடல் ஒரு நிலைக்கு வருவதற்குள் அப்பப்பா... கஷ்டம் தான்.
பருவ காலங்கள் மாறுவது ஒரு புறம் இருக்க... சிலருக்கு உடல் சூடு மட்டும் மாறாமல் இருக்கும். இதற்கு இவர்களது உடல் இயற்கையாகவே சூடாக இருப்பது தான் காரணம். இவர்களுக்காகவே இந்த சூப்பர் ஆலோசனைகள். தலைக்குளியல் போடுவதற்கு, 4 மணி நேரத்திற்கு முன் கீழ்வரும் செயல்களை செய்ய வேண்டும்:
* முதலில், ஒரு பாத்திரத்தில், நல்லெண்ணெய் வேண்டியளவு ஊற்றி, நன்கு காய வைக்க வேண்டும்.
* காய வைத்த நல்லெண்ணெயில், ஏழு அல்லது எட்டு மிளகை சேர்த்து, மீண்டும் அடுப்பில் வைத்ததும், டப்டப் ஒலி கேட்டவுடன் இறக்கி வைக்க வேண்டும்.
* காய வைத்த எண்ணெயை, காட்டன் துணியால் தொட்டு, முடியின் வேர்களில் படும்படி, நன்கு ஒத்தி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், எண்ணெயின் பயன் வேர்கள் வழியே உள்ளே சென்று சூட்டை தணிக்கும்.
* முக்கிய பிரச்னையாக பெண்களால் கருதப்பட்டு வரும், முடி கொட்டும் தொல்லையும் தீர்ந்துவிடும்.
* இரண்டு மணி நேரம் கழித்து, மிதமாக வெப்பப்படுத்திய தண்ணீரால், மீண்டும் காட்டன் துணியை கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
* அடுத்து, இரண்டு மணி நேரம் கழித்து, தலைக்கு குளித்தால், உடம்புக்கே ஒரு ரிலீப் கிடைத்தது போல் தோன்றும்.
இப்படி, வாரம் இரண்டு முறை செய்து வந்தால், உடல் சூடு குறைந்து, நலமும் வளமும் பெறும். அனைவரும் பின்பற்றுங்கள்... ஆரோக்கியம் மிளிரட்டும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...