Saturday, August 20, 2016

கடுமையான வயிற்று வலி குணமடைய எளிய தேன் வைத்தியம் :
செய்முறை விளக்கம்.....
கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் தண்ணீரை எடுத்து அதனுள் ஒரு டீ ஸ்பூன் தேனை கலந்து ஆற்றி மிதமான தாங்கக்கூடிய சூட்டுடன் அந்த தேன் கலந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்று வலி நின்று விடும்.
வயிற்றில், குடலில் புண் :
வயிற்றில், குடலில் புண்்இருப்பவர்கள் உணவு உண்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு 2 டீ ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். இப்படி பத்து நாட்கள் அருந்த வேண்டும். பிறகு 10 நாட்கள் மேலே குறிப்பிட்டுள்ளவாறு சுடு நீரில் தேனை கலந்து மிதமான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமா அருந்தி வர குடல் புண்கள் ஆறிவிடும்.
வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல்:
 
வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டீ ஸ்பூன் தேனை நீரில் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிறில் ஏற்ப்படும் எரிச்சல், இரைச்சல் குணமடையும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...