Friday, March 26, 2021

அத்தி பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

 <SK>THAMIZHL INAIYAM

MADURAI
9842171532


💻இன்றைய இயற்கை மருத்துவம் 👉🏻

அத்தி பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு
பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.
இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.
உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.
வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.
மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய்,
மூட்டுவலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.
பயன்கள்: அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
>>>>>>>><<<<

குளியல் என்பது நம் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் அன்றாடம் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு செயல் முறையாகும்.

உடலை குளிர்வித்தல் என்னும் செயல்பாட்டின் அடிப்படையில் உருவானதே குளித்தல் குளியல் போன்ற சொற்கள். சூரிய வெப்பத்தால் உருவாகும் உடல் சூட்டை குறைக்கவும் வியர்வை நாற்றம் அழுக்கு போன்றவற்றை நீக்கவும் குளித்தல் என்பது நம்மூரில் அன்றாட செயல்பாட்டில் ஒன்றாக இருக்கிறது.

இன்றைய நவீன நாகரிக வாழ்வு  முறையில் உடலின் அழுக்கு நீக்கவும் மேனி நறுமணம் பெறவும் குளித்தலில் சோப்பை பயன்படுத்துவது என்பது தவிர்க்க முடியாத பழக்கமாக நம்மிடையே பரவி இருக்கிறது. செய்ற்கை ரசாயனங்கள் மற்றும் நுரை ஊக்கிகள் செயற்கை நறுமண உண்டாக்கிகள்  போன்றவற்றை சேர்த்து செயற்கையாக உருவாக்கப்படுவதே சோப்பு என்பது. தொடக்க நாளில் தொழிற்சாலையில் பணிபுரிவோரின் உடலில் சேரும் எண்ணெய் பிசுக்கைப் போக்கவே சோப்பு பயன்பட்டு வந்தது. பின்னாளில் குளியலின் போதும் அனைவராலும் பயன்படுத்தும் பழக்கம் பரவியது பொதுவில் சோப்பு தோலில் இயற்கையாய் இருக்கிற ஒரு விதமான எண்ணெய் பசையையும் போக்கிவிடுவதால் அதனால் தோல் வ்ரண்டு விடுகிறது. இதனால் உடல்நல கேடு உண்டாவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும் குளியல் சோப்பில் சேர்க்கக் கூடிய கொழுப்பின் க்லவை சதவீதத்தின் அடிப்படையில் சோப்பு உண்டாக்கும் கெடுதல் பற்றியும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். இப்படிப்பட்ட எச்சரிக்கைகள் பற்றிய பயமேதும் இல்லாமல் சில பல பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை நம்மூரில் இயற்கை பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட குளியல் பொடிகளையே குளியலுக்குப் பயன்படுத்தும் வழக்கம் பரவலாக இருந்து வந்தது. நலங்கு மாவு சீயக்காய் பொடி அரப்பு போடி பயறு பொடி போன்ற் பல்வேறு பொடிகள் தான் குளியலுக்குப் அனைவராலும் பயன் படுத்தப்பட்டு வந்தன. கூடவே பெண்கள் மஞ்சளையும் பயன்படுத்தும் வழக்கமும் இருந்தது. இவை எந்தவித  கேடும் உண்டாக்காமல் உடல்நலத்தை பேண துணை புரிந்தது. இவ்வாறன குளியல் பொடிகளை வைக்க அந்நாளில் எல்லா குளியல் அறைகளிலும் இரட்டை குழிவு கொண்ட மரவை பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த இரட்டை குழியில் ஒன்றில் குளியல் பொடியும் மற்றொன்றில் மஞ்சள் பொடியும் வைக்கும் பழக்கம் பொதுவில் இருந்து வந்தது. அவ்வாறான ஒரு ம்ரவையையே படத்தில் பார்க்கிறோம். இன்று குளியல் பொடியை புறம் தள்ளி விட்டு சோப்பும் ஷாம்பும் இடம் பெற்றுவிட்டன. அது போல மரவையின் இடத்தை சோப்பு டப்பாக்கள் பிடித்துக் கொண்டன. எல்லாம் காலத்தின் மாய மாற்றம்
_________

உடல் பருமன் குறைய எளிய அனுபவ வழி!!!

உடலில் ஏதாவது நோய் பின்னணி   இல்லாதவர்களுக்கு
(தைராய்டு போன்ற நோய்கள் )
சாப்பாடு மாறு பாடுகளால் ஏற்படும் உடல் பருமனுக்கு தீர்வு

தினமும் காலை ஆறு மணி  அளவில்

ஏதாவது கீரை சாறு
(கறிவேப்பிலை முருங்கைக் கீரை மல்லித்தழை  புதினா பசலைக் கீரை பொன்னாங்கண்ணி கரிசாலை போன்றவை )
இவற்றுடன் மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்த்து மோரில் கலந்து குடிக்க வேண்டும்

அல்லது

ஏதாவது ஒரு காய் கனி சாறு
( நெல்லிக்காய் வெண்பூசணி சுரைக்காய் காரட்டு கோவைக்காய் போன்றவை )
இவற்றுடன் இஞ்சி அல்லது பூண்டு சேர்த்து மோரில் கலந்து குடித்து வர வேண்டும்

இந்தக் கீரை  அல்லது காய் கறி சாறு குடித்து ஒரு மணி நேரத்திற்குப் பின் தான்
வேறு ஏதாவது உணவு எடுத்துக் கொள்ளலாம்

பொதுவாக நாம் காய் கறிகளை வேக வைத்துத்தான் சாப்பிடுவோம்
இப்படி பச்சையாகச்  சாப்பிடும்போது
அவை பக்குவப் பட
நம் உடலிலிருந்து
உஷ்ணத்தை எடுத்துக் கொள்வதால்
உடல் பருமன் குறையும்

இது சித்த மருத்துவர் செல்வ சண்முகம் அவர்கள் கூறியது

தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பரிந்துரைத்து
அனுபவத்தில் பலன் கண்டது ஆகும்
பலபேர் பயன் அடைந்ததால். பரிந்துரைத்தது ஆகும்

BY

M.SARAVANAKUMAR@SK
<SK>THAMIZHL INAIYAM
MADURAI
WHAT'S APP NO
9842171532

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...