Thursday, January 10, 2019

சளி இருமல் காய்ச்சல் குணமாக இயற்கை மருத்துவம்**சளி,கபம், நெஞ்சு சளி,குணமாக

*சளி இருமல் காய்ச்சல் குணமாக இயற்கை மருத்துவம்*

*சளி,கபம், நெஞ்சு சளி,குணமாக*

*வேப்பிலையுடன் ஓமவல்லி இலையை அரைத்து நெற்றியில் தடவிவர சளி சரியாகும்*                                   
*தூதுவளை ஆடாதோடா கண்டங்கத்திரி இலையுடன் சுக்கு மிளகு திப்பிலி கலந்து கஷாயம் செய்து தேனுடன் கலந்து சாப்பிட நாள்பட்ட கட்டிய சளியும் கரையும்.*                                
*கருந்துளசியை பிழிந்து சாரு எடுத்து தினமும் காலை மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட சளி – கபம், மார்பு சளி குணமாகும்.*                                           
*ஆடாதோடா இலையை போடி செய்து தேன்கலந்து தினமும் சாப்பிட்டு வர இருமல் சளி நிற்கும்*                                   
*கடுக்காய் பொடியுடன் நெல்லி பொடியையும் கலந்து தேனில் கலந்து சாப்பிட்டால் சளி கபம் நீங்கும்.*                                   
*குழந்தைகள் சளியினால் மூச்சு விட சிரமபட்டால் சிறிது தேங்காய் எண்ணெய் மூக்கில் தடவிட சிரமம் குறையும்*                
*அமுக்கிராங்கிழங்கு பொடி செய்து தினமும் இரவில் பாலுடன் சாப்பிட்டு வந்தால் கபம் போகும்*                                 
*தூதுவளை ரசம் அல்லது தூதுவளை சூப் குடித்தால் சளி போய்விடும்*                          
*தேங்காய் எண்ணையை கற்பூரம் சேர்த்து சுடவைத்து நெஞ்சில் தடவினால் நெஞ்சு சளி குணமாகும்.*                        
*ரோஜா பூவை முகர்ந்து பார்த்தல் மூக்கடைப்பு நீங்கும்*                                    
*அருகம்புல் சாரு சளிக்கு மிகவும் நல்லது.*                                  
*மாதுளம் பழம் சளிக்கு மிகவும் நல்லது. மாதுளம் பழச்சாறை எலுமிச்சம் சாருடன் கலந்து சாப்பிட்டால் சளி சரியாகும்.*                            
*கற்பூரவள்ளி*                              *இலையை சூடாக்கி* *நெற்றியில் பற்று போட்டால் நெற்றியில்*                           
*கோத்திருக்கும் நீர் வெளியேறும்*
*காய்ச்சல் குணமாக இயற்கை மருத்துவம்*

*நிலவேம்பு குடிநீர் அணைத்து விதமான காய்ச்சலையும் குணபடுத்தும்.*
*ஈர பசையுடன் உள்ள வேப்பமர பட்டையை இடித்து அதில் கால் பங்கு சீரக பொடியுடன் பசும்பாலில் கலந்து சாப்பிட காய்ச்சல் குணமாகும்.*                        
*திப்பிலியுடன் குப்பைமேனி செடியை பொடிசெய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி இருமலுடன் கூடிய காய்ச்சல் சரியாகும்*                              
*துளசி வில்வ இலை வெப்ப இலை சந்தனம் கடுக்காய் மிளகு சிற்றரத்தை ஆகியவை பொடியாக அரைத்து காயவைத்து கொண்டால் காய்ச்சல் வரும் சமயம் 1 தேக்கரண்டி வென்னீரில் கலந்து காலை மாலை குடித்து வர சுரம் குணமாகும்*
*வேப்பிலையை வறுத்து  அடியில் வைத்து படுத்தால் சுரம் போய்விடும்.*                        
*உத்தாமணி-வல்லாரை இலைகளை மிளகுடன் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் காய்ச்சல் சரியாகும்.*                            
*சளி இருமல் குணமாக இயற்கை மருத்துவம்*                           

*சீரகத்தை வறுத்து பொடிசெய்து கல்கண்டுடன்u சாப்பிட்டால் இருமல் குணமாகும்*                          
*பொன்னாரை விதையை பசும்பால் விட்டு நன்றாக அரைத்து குழந்தைக்கு கொடுத்து வர கக்குவான் இருமல் சரியாகும்.*                            
*நாட்பட்ட இருமல் நிற்க முற்றின வெண்டைக்காயை சூப் பண்ணி சாப்பிட்டால் சிறிது சிறிதாக குணம் ஆகும்*                                       
*சுக்கு மிளகு திப்பிலி சம அளவில் கலந்து போடி செய்து தினமும் 3 வேலை தேனுடன்  கலந்து சாப்பிட தொண்டை வலி சரியாகும்.*                             
*மூச்சிறைப்பு குணமாக இயற்கை மருத்துவம்*                            
*விஷ்ணுகிராந்தி பொடியை வென்னீரில் கலந்து சாப்பிட்டால் சளியினால் வரும் மூச்சிறைப்பு                        சரியாகும்*                               
*கரிசலாங்கண்ணி இலையை அரிசி திப்பிலியுடன் பொடி செய்து சாப்பிட கபத்தினால் வரும் மூச்சிறைப்பு சரியாகும்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...