இருதயம் மற்றும் மூளை கூட்டு மருந்து.
Heart and Brain Special Medicine
இந்த மருந்தினால் ஏற்படும் பயன்கள்:-
மூளைக்கு நன்றாக இரத்த ஓட்டத்தைக் கொடுக்கின்றது. அதனால் பிராண வாயு தேவையான அளவு மூளைக்கு செல்கிறது. அதிமேதாவியாக இருக்கச் செய்கிறது. மூளை சரியான நிலையில் இருக்கவும், இயங்கவும் செய்கின்றது. மூளை சில சமயங்களில் சீர்கெடும். அதனால் ஏற்படும் பாரிசவாயு, தலை சுற்றல், காக்கை வலிப்பு, பித்த மயக்கம், சித்த பிரமை முதலிய நோய்களை குணப்படுத்தும். மூளையை பலப்படுத்தினால் ஆயுள் பெருகும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
இருதயத்தில் உண்டாகும் வியாதிகளை நீக்கி சுகம் தருகின்றது.
வியாதிகள்:
அதிக துடிப்பு, குறைந்த துடிப்பு, வீக்கம், சுருக்கம், ரணம், காற்றின் அளவு குறைவு மற்றும் அதிகம், கபாட பந்தம், கபாடம் உடைபடல் முதலியவைகளுக்கு கஷாயமிட்டு பருக உடனே உணர்ந்து கொள்ள முடியும். 48 நாள் தொடர்ந்து பருகிவர இருதய் வியாதிகள் முழுவதும் ஆச்சர்யம் ஆகும்படி திருவருளால் குணமடையும். மற்றும், சர்க்கரை நோயினால் ஏற்படும் கால் பாதம், விரல்கள் கருப்பாதலில் இருந்து தடுக்கின்றது. கருமை ஆகிவிட்டாலும் குணப்படுத்துகின்றது. சர்க்கரை நோயினால் கால் பாதங்கள் உணர்ச்சியற்ற தன்மையிலிருந்து மாற செய்கின்றது. பக்கவாதம் ஏற்படுதலில் இருந்து பாதுகாக்கின்றது.
மருந்து எடுத்துக் கொள்ளும் முறை:-
1 ஸ்பூன் பொடியை எடுத்து 1¼ டம்ளர் தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து 1/2 டம்ளராக வற்ற வைத்து (சுருக்கி) வெதுவெதுப்பான சூட்டில் காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். குடித்த 1 மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக் கூடாது.
பொட்டணத்தில் உள்ள போடியை அதிலேயே போதுமான அளவு நெய் விட்டு கலந்து காலை இரவு 2 வேளை உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். **********************