Friday, December 7, 2018

நாள்தோறும் வாழைப்பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றம்–1*

*நாள்தோறும் வாழைப்பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றம்–1*

நாம் தொடர்ந்து ஒரு சில உணவுபொருட்களை சாப்பிட்டு வந்தால், நிச்சயம் அதனால் ஏற்பட கூடிய பலன் பல மடங்கு அதிகமாக இருக்கும். குறிப்பாக, பழ வகைகள், காய்கறிகள் ஆகியவை இதில் அடங்கும். பொதுவாகவே பாதாம், அத்திப்பழம், முட்டை போன்றவற்றை தினமும் சாப்பிடுவது ஏராளமான பயன்களை தர வல்லது.

இந்த வகையில், தினமும் 2 வாழை பழம் சாப்பிட்டு வந்தால், பல மாற்றங்கள் உடலில் ஏற்படுமாம். எப்படிப்பட்ட மாற்றங்கள் என்பதை இப்போது பார்ப்போம்...

மஞ்சள் நிற பழம் என்றால், நம் எல்லோருக்கும் சட்டென நினைவுக்கு வருவது இந்த வாழைப்பழம் தான். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இந்த பழத்தின் முழு தன்மைக்கும் முக்கிய காரணம். வாழைப் பழத்தில், பொட்டாசியம், வைட்டமின்–எ, வைட்டமின்–சி, கால்சியம், பாஸ்பரஸ், போலேட், மெக்னீசியம் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளதாம்.

ரத்த சோகைக்கு...

பலருக்கு எப்போதும் சோர்வாகவும், உடல் முழுவதும் வெளுத்து போனது போன்றும், சுவாச பிரச்சினையாகவும் இருக்க கூடும். இவை ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதாலே ஏற்படுகிறது. இதை ரத்த சோகை என்போம். தினமும் 2 வாழைப்பழம் சாப்பிடுவதால், ரத்தத்தின் அளவு அதிகரித்து ரத்த சோகையை குணப்படுத்தலாம்.

வாழைப்பழத்தில் அதிக அளவில் நார்சத்து உள்ளது. எனவே, இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்களின் உடல் எடை மிக சீக்கிரத்திலே குறைய பல வாய்ப்புகள் உள்ளதாம். இவற்றில் உள்ள ஸ்டார்ச், அடிக்கடி பசி எடுப்பதை தவிர்க்கிறது. அத்துடன் உங்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் இது குறைகிறதாம்.

எதை சாப்பிட்டாலும் நெஞ்சிலே இருப்பது போன்றும், ஜீரணம் ஆகாதது போன்றும் இருப்பது அதிகமாகி விட்டது. இதனை சரி செய்ய, வெறும் 2 வாழைப்பழம் போதும். உங்களின் குடல் சார்ந்த பலவித பிரச்சினைகளுக்கு, வாழைப்பழம் சிறந்த தீர்வை தருகிறது. மேலும், மலச்சிக்கலை எளிதில் குணப்படுத்த தினமும் 2 வாழைப்பழமே போதும்.

.                      🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...