நிலவாகைச் சூரணம்.
வயிற்றில் உள்ள அத்தனை நோய்களும் போகும்.
நிலவாகை இலைப்பொடி 35 கிராம். சுக்கு 35 கிராம், மிளகு 35 கிராம், வாய்விளங்கம் 35 கிராம், ஓமம் 35 கிராம், இவைகளை பொடி செய்து நன்றாக் சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு 175 கிராம் நாட்டுச் சர்க்கரையுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.
அளவும் அனுபானமும்:-
காலை மாலை வெறுகடியளவு வெந்நீரில் சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள்:-
1.வாயு எல்லாம் போகும். 2. பித்தமெல்லாம் தீரும். 3. உஷ்ண நோய்கள் அனைத்தும் ஓடும். 4. வயிற்று பொருமல் 5. கப நீர் நோய்கள் 6. விக்கல் 7. வாந்தி 8. உடல் எரிவு 9.சிறுநீர்க் கட்டு 10. சுவாச காசம் 11. மலக்கட்டு 12. குன்மம் 8ம் தீரும். 13. மகோதரங்கள் 14. பெண்களுக்கு தோன்றும் கர்ப்ப வலி, 15.கர்ப்ப ரோகம் (கர்ப்பம் தரியாமை) மற்றும் வயிற்றில் உள்ள புழுக்கள் எல்லாம் மடியும். **********************