Tuesday, January 24, 2017

*மூட்டுவலியை போக்கும் மருத்துவ முறைகள்*



சமையலறையில் இருக்க கூடியதும், எளிதில் கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு எவ்வித பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், வெந்தயம், கழற்சிக்காய், தனியா, வெள்ளரி ஆகியவற்றை கொண்டு கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு தீர்வுகாண்பது குறித்த செய்முறைகளை பார்க்கலாம்.
மூட்டுகளில் வலி இருந்தால் கட்டை விரலை மடக்க முடியாத நிலை, சிவந்த நிலை, வீக்கம் காணப்படும். கால் கட்டை விரல்களில் வலி, வீக்கம் இருக்கும்.

வெந்தயத்தை கொண்டு மூட்டு வலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்:

வெந்தயம், மஞ்சள் பொடி, இஞ்சி. வெந்தயத்தை நீர்விட்டு ஊறவைத்து அரைத்து எடுக்கவும்.

இதனுடன் சிறிது மஞ்சள் பொடி, இஞ்சி சாறு சேர்க்கவும். லேசாக சூடு பண்ணவும். இது வெந்தவுடன் எடுத்து ஆறவைத்து முட்டி, கட்டை விரலில் வைத்து கட்டி வைத்தால் மூட்டு வலி, வீக்கம் குணமாகும். வெந்தயத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. மூட்டுவலியை போக்கும் மருந்தாக விளங்குகிறது.

கழற்சிக்காயை கொண்டு மூட்டு வலிக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

கழற்சிக்காய், எலுமிச்சை. கழற்சிக்காயை வெயிலில் காயவைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுக்கவும். பருப்பை காயவைத்து அரைத்து பொடியாக்கவும். இந்த பொடியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் இதை மேல்பூச்சாக போடும்போது வலி, வீக்கம் குணமாகும்.

வீக்கத்தை வற்றச்செய்யும் தன்மை கழற்சிகாய்க்கு உண்டு. மூட்டுவலி உள்ளவர்கள் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவில் உப்பு குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.தனியாவை கொண்டு மூட்டு வலிக்கான தேனீர் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

தனியா, உலர்ந்த திராட்சை. தனியா மற்றும் உலர்ந்த திராட்சையை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதை தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி காலை, மாலை வேளைகளில் குடிக்கலாம்.

இது சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. யூரிக் அமிலம் வெளியேறுவதால் மூட்டுவலி, வீக்கம் குணமாகும். உடல் எடையை குறைப்பதால் மூட்டு வலி சரியாகும். வெள்ளரியை பயன்படுத்தி மூட்டு வலிக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

 வெள்ளரி, இஞ்சி, எலுமிச்சை. 50 மில்லி வெள்ளரி சாறு, 2 ஸ்பூன் இஞ்சி சாறு, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து காலை வேளையில் குடித்துவர மூட்டுவலி குறையும்.

பல்வேறு நன்மைகளை கொண்ட வெள்ளரி, சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலியை போக்கும் தன்மை வெள்ளரிக்கு உண்டு. முகப்பருவை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். கடுக்காய் பொடி, மஞ்சள் பொடியை நீர்விட்டு நன்றாக கலந்து முகப்பருக்களின் மீது போட்டுவர முகப்பரு வடு தெரியாமல் மறைந்து போகும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...