Thursday, October 12, 2017

ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam

ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam                                                                                                தேவையான மருந்துகள்: 1.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) –ஹரீதகீபலத்வக்        - 10 கிராம் 2.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     - 10       “ 3.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                      - 10       “ 4.            மாசிக்காய் – மாசிபல                                  - 15       “ 5.            ஜாதிக்காய் – ஜாதீபல                                 - 15       “ 6.            சுக்கு – சுந்தீ                                           -10       “ 7.            மிளகு – மரீச்ச                                        - 10       “ 8.            திப்பிலி – பிப்பலீ                                     - 10       “ 9.            ஏலக்காய் – ஏலா                                   - 10       “ 10.          இலவங்கம் – லவங்கம்                             - 10       “ 11.          இலவங்கப்பட்டை –லவங்கத்வக்                  - 10       “ 12.          கற்பூரம் – கற்பூர                                 -10       “ 13.          நெற்பதர்ச்சாம்பல் –துஸபஸ்ம                    - 120    “ 14.          நாயுருவி -சமூலம் எரித்த சாம்பல்                                         -100  " செய்முறை:     சரக்குகளைத் தனித்தனியே பொடித்துச் சலித்துப் பின்னர் கற்பூரத்தைப் பொடித்துக் கலக்கவும். பிறகு சலித்த நெற்பதர்ச்சாம்பலை +நாயுருவி -சமூலம் எரித்த சாம்பல்   சேர்த்து பத்திரப்படுத்தவும். பயன்படுத்தும் விதம்: பற்பொடியாக உபயோகிக்கப்படுகிறது.  இந்துப்பை இதனுடன் கலந்து பல் துலக்குவதுண்டு. தீரும் நோய்கள்:  பல்லில் சீழ்வடிதல் (பூதிதந்த),வாய்துர்நாற்றம் (முகதௌர்கந்த்ய),பல்கூச்சம் (தந்தஹர்ஷ), பல்லாட்டம் (தந்தசலன) போன்ற பல்நோய்கள் (தந்தரோக) மற்றும் ஈறுசார்ந்த நோய்கள் (தந்தர்வேஷ்தரோக). இது பற்சிதைவைத் தடுத்து, வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. வாய்க்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. குறிப்பு -  நாயுருவி -வேரை கடித்து வாயில் மென்று -கல்லையும் ,கண்ணாடியையும் ,கடிக்க முடியாத பொருட்களையும் கடிக்கலாம் .இந்த நாயுருவி வேரை வைத்து சிலர் கருங்கல்லை கடித்து -மேஜிக் பண்ணிக்காட்டுவதுண்டு -

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...