Thursday, October 12, 2017

பாம்பு கடித்தால் உடனே செல்ல வேண்டியது அரசு மருத்துவமனைக்கு...

பாம்பு கடித்தால் உடனே செல்ல வேண்டியது அரசு மருத்துவமனைக்கு... சமீப காலமாக பாம்பு கடிபட்ட ஏழைகள் தனியார் மருத்துவ மனைக்கு வருவது அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தனியார் மருத்துவ மனைகளில் போதிய அளவு ஆன்டிவெனம் எனப்படும் விஷமுறிவு மருந்துகள் கையிருப்பு இருப்பதும் இல்லை. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் விஷமுறிவு மருந்துகளை பேசன்டிடமே வாங்கி தர சொல்லுவதும் (அதன் விலை 15000) அதன் பிறகு 30000 - 40000 வரை பில் போடுவதும் பெரும்பாலான ஏழைகளை மேலும் கடனாளியாக ஆக்கிவிடுகிறது. ஆனால் பாம்பு கடிக்கு தனியார் மருத்துவமனைகளில் இருப்பதைவிட உயரிய சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கிறது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து விதமான ஆன்ட்டிவெனம் மருந்துகளும் எப்போதும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாம்பு கடி பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் அழைக்கும் போது சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம். தங்களுக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களை ஒப்படைக்கும் போக்குதான் பரவலாக காணபடுகிறது. வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) பாம்பு கடிக்கும் இடங்களில் பணக்காரர்கள் வசிப்பது குறைவு என்பதால், பெரும்பாலும் பாம்பு கடி வாங்குபவர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள், சிகிச்சைக்கு போதிய அளவு பணம் இல்லாமல் அல்லாடும் போக்கே நிலவுகிறது. அப்படியான சிகிச்சை பெற வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) டிரஸ்ட் உதவுகிறது. அவர்கள் எந்த நேரமும் தொடர்பு கொண்டு (தொடர்பு எண் சரவனன் 9787257999) உதவி பெறலாம். இந்த நல்ல செய்தியை எல்லோருக்கும் பரப்புங்கள். இனிமேல் யாரையாவது பாம்பு கடித்தால் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வையுங்கள் நண்பர்களே...!! பொது நலன் கருதி இத்தகவலை வெளியிடுவோர் : Sanctuary Legal Bureau ( A Law Firm )

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...