காலையில் நசுக்கிய கடுக்காயையும் கிராம்பை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்துக் குடித்தால் . . .
பல பிணிகளுக்கு வீட்டிலேயே எளிய மருத்துவமும், சமைலறையில் மருந்தும் இருக்கும்போது ஏன்
பெரியபெரிய மருத்துவமனைக்கு ஓடி, பணத்தை விரயம் ஆக்க வேண்டும். இதோ ஒரு எளிய மருத்துவம்.
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்பிணிகளால் பாதிக்கப்பட் டவர்கள், 15 கி. அளவு தரமான கடுக்காய்களை எடுத்து அதன் தோலை மட்டும் எடுத்து நன்றாக நசுக்கி, 15கி. அளவு கிராம்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போடுங்கள். அதில் ஒருடம்ளர் தண்ணீர் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அது ஆறியபின் அதிகாலை வேளையில் குடித்தால் 5(அல்)6 முறைக்குமேல் பேதியாகும். அதன்பிறகு மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் முற்றிலும் நீங்கி முழு நிவாரணம் கிடைக்கப் பெறுவர் என்கிறார்கள் சித்தமருத்துவ ம். (இதன் விதை… விஷமாக கருதப்படுவதால் இதனை தூக்கி எறிந்திட வேண்டும்.)
தென்றல்