வீட்டுக்கொரு முருங்கை வளர்த்து தவறாது பூவும், கீரையும், காயும் உண்டுவந்திருந்தால் " ஆண்மை பிரச்சனையா கவலைப்படாதே வா... அந்தரங்க சந்தேகமா கேள்... " என்று தொலைக்காட்சியில் கூவிக்கூவி வியாபாரம் செய்யும் நிலை வந்திருக்காது.
கூப்பிட்டு வர வைத்து நல்ல மருந்துகளை கொடுத்து அனுப்பினாலும் பரவாயில்லை... கண்ட கண்ட மாத்திரியையும், பெட்டியையும் கொடுத்து குழப்பி மன நோயாளியாகவே மாற்றிவிடுகின்றனர். யாரும் எங்கேயும் போக வேண்டாம்.
இயற்கை முறையில் விளைவிக்கப்படும் முருங்கை கிடைத்தால் , பூ, கீரை கிடைத்தால் தவறாமல் சாப்பிடவும். இதுபோல இன்னும் நம் வீட்டருகே உதவாத களை என்று ஒதுக்கப்படும் பல மூலிகைகள் உள்ளன. எங்கே? வீட்டை சுற்றி கட்டிடமும், சாக்கடையும், குப்பையும், கூலமும்தான் இருக்கிறது என்கின்றீர்களா?
அதை யார் போட்டது? நாம்தானே? வேறு கிரகத்திலிருந்தா வந்து கொட்டுகிறார்கள்? ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் இங்கே அடிப்படை மாற்றம் நிகழ வேண்டும். குறிப்புகள் இங்கே நிரம்பி உள்ளன. நாம் இனி வாசித்துக்கொண்டே இல்லாமல் வாழ்க்கைக்கு நடைமுறைப்படுத்துவோம்.
முருங்கையின் மகிமையை மேன்மைதாங்கிய மருத்துவ முனிவர், பெருஞ்சித்தர் அகத்தியர் அருளிய பாடலைக் கவனிக்கவும்.
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புசுட்டி யாகும் - எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
- அகத்தியர் குணபாடம்
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*
கூப்பிட்டு வர வைத்து நல்ல மருந்துகளை கொடுத்து அனுப்பினாலும் பரவாயில்லை... கண்ட கண்ட மாத்திரியையும், பெட்டியையும் கொடுத்து குழப்பி மன நோயாளியாகவே மாற்றிவிடுகின்றனர். யாரும் எங்கேயும் போக வேண்டாம்.
இயற்கை முறையில் விளைவிக்கப்படும் முருங்கை கிடைத்தால் , பூ, கீரை கிடைத்தால் தவறாமல் சாப்பிடவும். இதுபோல இன்னும் நம் வீட்டருகே உதவாத களை என்று ஒதுக்கப்படும் பல மூலிகைகள் உள்ளன. எங்கே? வீட்டை சுற்றி கட்டிடமும், சாக்கடையும், குப்பையும், கூலமும்தான் இருக்கிறது என்கின்றீர்களா?
அதை யார் போட்டது? நாம்தானே? வேறு கிரகத்திலிருந்தா வந்து கொட்டுகிறார்கள்? ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் இங்கே அடிப்படை மாற்றம் நிகழ வேண்டும். குறிப்புகள் இங்கே நிரம்பி உள்ளன. நாம் இனி வாசித்துக்கொண்டே இல்லாமல் வாழ்க்கைக்கு நடைமுறைப்படுத்துவோம்.
முருங்கையின் மகிமையை மேன்மைதாங்கிய மருத்துவ முனிவர், பெருஞ்சித்தர் அகத்தியர் அருளிய பாடலைக் கவனிக்கவும்.
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புசுட்டி யாகும் - எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
- அகத்தியர் குணபாடம்
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*